Jump to content

பெண்களை கௌரவப்படுத்தும் சர்வதேச மகளிர் தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை கௌரவப்படுத்தும் சர்வதேச மகளிர் தினம்

*மகளிர் தின சிறப்புக் கட்டுரை

ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு வரும் வியாழக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட இந்த நாளன்று பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் பெண்களால் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளை நினைவுகூர்ந்து பாராட்டவும் பெண்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காணவும் இந்த நாளில் முயற்சி மேற்கொள்ளும் வகையில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நம் நாட்டையும் அயல்நாடான இந்திய நாட்டையும் பொறுத்தவரை வளமான நாடாக உருமாற்றுவதற்கு பெண்கள் ஆற்றிவரும் அரும்பணிகளை இந்த தினத்தில் முன்னிலைப்படுத்தி எடுத்துரைக்கலாம். வேளாண் நிலங்களில் நாற்று நடவு தொடங்கி தற்போதைய நவீனயுகத்தில் விண்கலங்களில் சென்று விண்வெளி மையங்களை பழுதுபார்ப்பது வரை பெண்களின் தொழில்நுட்ப நிபுணத்துவ இறக்கைகள் பரந்து விரிந்திருப்பதைப் பார்க்கிறோம்.

பல்வேறு நாடுகளிலும் பெண்கள் தினம் சுமார் ஒருவார காலத்திற்கு கொண்டாடப்படுகின்றது. உலகம் முழுவதும் உள்ள ஏறக்குறைய அனைத்து பெண்கள் அமைப்புகளும் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

பெண்கள் தங்கள் நாடு, மதம், மொழி கலாசாரம், பாரம்பரியம் மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் கடைப்பிடிக்கும் ஒரே நாள் மகளிர் தினம் என்றால் மிகையில்லை.

மகளிர் தினத்தையொட்டி பல்வேறு முக்கிய நகரங்களிலும் பெண்ணியம், பெண் சுதந்திரம் போன்ற தலைப்புகளில் சிறப்புக் கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன.

இதற்கெல்லாம் முன்னோட்டமாக சர்வதேச பெண்கள் தினத்தைக் கடைப்பிடிப்பதற்காக நிகழ்த்தப்பட்ட பேரணிகள், போராட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.

பெண்களுக்கு சம உரிமை, வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களின் அடிப்படையில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. முந்தைய கிரீ நகரில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல்ரீதியான ஆண்களின் தாக்குதல்களுக்கு எதிராக முதல்முறையாக லீசி டிராட்டா என்பவர் குரல் கொடுத்தார்.

தொடர்ந்து பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் பெண்களுக்கு சுதந்திரம், சம உரிமை, மத சகோதரத்துவம் போன்றவற்றை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பார்சிய பெண்கள் வலியுறுத்தினர்.

நிற அடிப்படையிலான கொள்கைகள், மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் உலக அளவில் தொழில் வளர்ச்சி தொடங்கிய காலகட்டம் அது. இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான உரிமைகள் குறித்த போராட்டம் பல்வேறு நாடுகளிலும் தொடங்கலாயிற்று.

1909 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 ஆம் ஆண்டு வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் தினத்தைக் கடைப்பிடித்து வந்தனர். கோபன்ஹேகனில் 1910 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் தினத்தை உலக அளவில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு அடுத்த ஆண்டில் (1911) மார்ச் மாதம் 19 ஆம் திகதி டென்மார்க் ஆடிரியா, ஜெர்மனி, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் மகளிர் தின பேரணிகள் நடைபெற்றன. வாக்களிக்கும் உரிமை, பணியாற்றும் உரிமை, பெண்களுக்கும் தொழிற்பயிற்சி, பணிகளில் பாகுபாடின்மை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர். பேரணி நடைபெற்ற வாரத்திற்குள் அதாவது 1911 மார்ச் 25 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டடிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து வந்தவர்கள்.

இந்த சம்பவமே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வாகிவிட்டது. தொடர்ந்து சர்வதேச பெண்கள் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.

1913-1914 ஆம் ஆண்டுகளில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் அமைதி இயக்கமாகவோ அல்லது போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக மகளிர் தின பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் பெப்ரவரி 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜூலியன் கலண்டரிலும். ஜியார்ஜியா கலண்டரில் அதுவே மார்ச் 8 ஆம் திகதியாகவும் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

பின்வந்த நாட்களில் ஐ.நா.பெண்கள் அமைப்பு சார்பில் சர்வதேச பெண்கள் தினம் கடைப்பிடிப்பது எனவும், சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் வகையிலும் பெண்களின் உரிமைகள் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த நாளை கொண்டாடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் உலக பெண்கள் தினம் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

ஆண்களுக்கு நிகராக பொப் தலைமுடி வெட்டிக் கொள்ளலாம். ஆனால் ஆண்களைப் போல ஜீன்ஸ் பாண்ட மாட்டிக் கொள்வதும். டீ சேர்ட் போட்டுக் கொள்வதுமே பெண் சுதந்திரம் என்று கருதி விடக் கூடாது. சமூகத்தில் நிலவும் பிற்போக்கு கருத்துகளை புறந்தள்ளி விட்டு புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என்பதே பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைய வேண்டும்.

பெண்கள் பல ஆண்டுகளாக சம உரிமை, சமூகநீதி, அமைதி மற்றும் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை இந்த நாளில் நினைவு கூர்வதுடன் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட பெண்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பது போல சமுதாயத்தில் ஒவ்வொரு வீட்டின் கண்களாகத் திகழும் பெண்களைப் போற்றும் தினமாக இதனைக் கொண்டாடுவோம்.

ஆண் பிள்ளையை அடித்து வளருங்கள், பெண்களைப் போற்றி வளருங்கள் என்பதுபோல மகளிர் தினத்தில் மனித குலத்திற்கு ஆதாரமாகத் திகழும் பெண்களைக் கௌரவிப்போம் போற்றுவோம்.

http://www.thinakkural.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பிள்ளைகளை அணைத்து வளருங்கள். பெண் பிள்ளைகளை மிதித்து வளருங்கள் என்பதுதான் சரி. :rolleyes::lol:

அதுசரி பெண்களை கெளரவப்படுத்த அவங்க என்ன விசித்திரமான பிறவிகளா..??! பெண்களே தாங்கள் தங்களை இன்னும் மனிசரா அடையாளம் காணேல்லைப் போல இருக்கே..!

மகளிர் தினம் என்பதிலும் மகளிர் சுய விழிப்பெழு தினம் என்பதே சாலப் பொருந்தும். :P

Link to comment
Share on other sites

ஆண் பிள்ளைகளை அணைத்து வளருங்கள். பெண் பிள்ளைகளை மிதித்து வளருங்கள் என்பதுதான் சரி. :lol::lol:

அதுசரி பெண்களை கெளரவப்படுத்த அவங்க என்ன விசித்திரமான பிறவிகளா..??! பெண்களே தாங்கள் தங்களை இன்னும் மனிசரா அடையாளம் காணேல்லைப் போல இருக்கே..!

மகளிர் தினம் என்பதிலும் மகளிர் சுய விழிப்பெழு தினம் என்பதே சாலப் பொருந்தும். :P

நெடுக்கு உங்க அட்ரஸைத் தரமுடியுமா?

கனபேர் தேடித்திரிகிறார்கள்.

ஒன்றுமில்லை பலவீட்டில் துடப்பக்கட்டைக்கு அலுவல் இல்லாமல் இருக்காம்.

இதை நான் சொல்லேல்லை மூக்காயிதான் சொன்னவா. :P :P :P

Link to comment
Share on other sites

நெடுக்கு உங்க அட்ரஸைத் தரமுடியுமா?

கனபேர் தேடித்திரிகிறார்கள்.

ஒன்றுமில்லை பலவீட்டில் துடப்பக்கட்டைக்கு அலுவல் இல்லாமல் இருக்காம்.

இதை நான் சொல்லேல்லை மூக்காயிதான் சொன்னவா. :P :P :P

ஆதி ஏன் உம் வீட்டு அட்ரஸை கொடுக்கிரது, நீங்களும் வேலை வெட்டியில்லாம இருக்குறீங்க என்டு கேள்விப் பட்டேன் :P

Link to comment
Share on other sites

ஆதி ஏன் உம் வீட்டு அட்ரஸை கொடுக்கிரது, நீங்களும் வேலை வெட்டியில்லாம இருக்குறீங்க என்டு கேள்விப் பட்டேன் :P

யாருப்பா இப்படி நோட்டீஸ் அடிச்சு விட்டது? :lol:

வீட்ல சும்மா இருக்கல்லைப்பா வீட்டுக்காரிக்கு வேலைக்காரனாக வேலை செய்து கொண்டுதான் இருக்கன். :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

யாருப்பா இப்படி நோட்டீஸ் அடிச்சு விட்டது? :lol:

வீட்ல சும்மா இருக்கல்லைப்பா வீட்டுக்காரிக்கு வேலைக்காரனாக வேலை செய்து கொண்டுதான் இருக்கன். :angry: :angry: :angry:

வீட்டுக்காரிக்கிட விளக்குமாத்தால வாங்காம ஒழுங்கா வேலைய்ப் பாத்து நல்ல பேரு வாங்கிறத விட்டுட்டு இப்படி வாலாட்டுறீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி ஏன் உம் வீட்டு அட்ரஸை கொடுக்கிரது, நீங்களும் வேலை வெட்டியில்லாம இருக்குறீங்க என்டு கேள்விப் பட்டேன் :P

நிச்சயம் கொடுக்கலாம்.ஆனால் துடைப்பக் கட்டோட வாறவ துண்டக் காணம் துணியக் காணம் என்று ஓடும் நிலைக்கு வருவினம் என்று அறிவிச்சுப் போட்டுக் கொடுங்கோ. :lol:

நாங்க வன்முறைகளுக்கு மிக மோசமாக வன்முறைகளால் பதிலளிக்க பிந்நிற்கம். அன்பு வழியின்னா அன்பு வழி. வன்முறையின்னா வன்முறை. பெண் என்பவளை மனிதனாப் பார்கிறமே தவிர விசித்திரமாப் பார்க்கல்ல. அவர்கள் மனிதத்தோடு நடந்தால் மனிதம் பதிலளிக்கும். மிருகத்தனமா நடந்தால் மிருகம் பதிலளிக்கும்.ஆண்களே அன்புக்கு மதிப்பளியுங்கள் பதிலுக்கு அன்பை அளியுங்கள். பெண்களின் வாய் வன்முறை தொடங்கி அனைத்துவிதமான வன்முறைகளுக்கும் அவர்கள் புரிந்து கொள்ளும் படி காட்டமான பதிலடி கொடுக்கத் தயங்காதீர்கள். அவர்கள் வன்மை வாத நிலையில் இருந்து வெளிவர வேண்டும். அன்பு வழிக்கு திரும்ப வேண்டும். அதுவரை அணுமுறைகளை தேவைக்கு ஏற்ப மாற்றுங்கள். அடங்கி ஒடுங்கி அவர்களின் ஆதிக்கத்துக்கு உங்கள் சுயத்தை இழக்காதீர்கள். அன்புக்கு அன்பைப் பொழியுங்கள் சுயத்தை இழக்காதீர்கள். வன்முறைகளைப் பிரயோகிக்காத பெண்கள் மீது வன்முறை வேண்டாம். உங்களைப் புரிந்து கொள்ள நினைக்கும் பெண்ணை புரிந்து கொள்ளுங்கள். சமாதானம் கொள்ளுங்கள் விட்டுக் கொடுங்கள் உங்கள் சுயத்துக்கு பாதிப்பு வராத அளவுக்கு. மனிதாபிமான உதவிகளை ப்பெணணெண்று நோக்காமல் வழங்குங்கள். பெண் என்பதற்காக பின்னால் அலையாதீர்கள் அடிபணியாநீர்கள்.மற்றும் படி எதுவும் சொல்ல இல்லை ஆண்களுக்கு. :P :lol:

Link to comment
Share on other sites

நிச்சயம் கொடுக்கலாம்.ஆனால் துடைப்பக் கட்டோட வாறவ துண்டக் காணம் துணியக் காணம் என்று ஓடும் நிலைக்கு வருவினம் என்று அறிவிச்சுப் போட்டுக் கொடுங்கோ. :D

நாங்க வன்முறைகளுக்கு மிக மோசமாக வன்முறைகளால் பதிலளிக்க பிந்நிற்கம். அன்பு வழியின்னா அன்பு வழி. வன்முறையின்னா வன்முறை. பெண் என்பவளை மனிதனாப் பார்கிறமே தவிர விசித்திரமாப் பார்க்கல்ல. அவர்கள் மனிதத்தோடு நடந்தால் மனிதம் பதிலளிக்கும். மிருகத்தனமா நடந்தால் மிருகம் பதிலளிக்கும்.ஆண்களே அன்புக்கு மதிப்பளியுங்கள் பதிலுக்கு அன்பை அளியுங்கள். பெண்களின் வாய் வன்முறை தொடங்கி அனைத்துவிதமான வன்முறைகளுக்கும் அவர்கள் புரிந்து கொள்ளும் படி காட்டமான பதிலடி கொடுக்கத் தயங்காதீர்கள். அவர்கள் வன்மை வாத நிலையில் இருந்து வெளிவர வேண்டும். அன்பு வழிக்கு திரும்ப வேண்டும். அதுவரை அணுமுறைகளை தேவைக்கு ஏற்ப மாற்றுங்கள். அடங்கி ஒடுங்கி அவர்களின் ஆதிக்கத்துக்கு உங்கள் சுயத்தை இழக்காதீர்கள். அன்புக்கு அன்பைப் பொழியுங்கள் சுயத்தை இழக்காதீர்கள். வன்முறைகளைப் பிரயோகிக்காத பெண்கள் மீது வன்முறை வேண்டாம். உங்களைப் புரிந்து கொள்ள நினைக்கும் பெண்ணை புரிந்து கொள்ளுங்கள். சமாதானம் கொள்ளுங்கள் விட்டுக் கொடுங்கள் உங்கள் சுயத்துக்கு பாதிப்பு வராத அளவுக்கு. மனிதாபிமான உதவிகளை ப்பெணணெண்று நோக்காமல் வழங்குங்கள். பெண் என்பதற்காக பின்னால் அலையாதீர்கள் அடிபணியாநீர்கள்.மற்றும் படி எதுவும் சொல்ல இல்லை ஆண்களுக்கு. :P :lol:

:D:D:D:D :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண் பிள்ளைகளை அணைத்து வளருங்கள். பெண் பிள்ளைகளை மிதித்து வளருங்கள் என்பதுதான் சரி. :lol::D

அதுசரி பெண்களை கெளரவப்படுத்த அவங்க என்ன விசித்திரமான பிறவிகளா..??! பெண்களே தாங்கள் தங்களை இன்னும் மனிசரா அடையாளம் காணேல்லைப் போல இருக்கே..!

மகளிர் தினம் என்பதிலும் மகளிர் சுய விழிப்பெழு தினம் என்பதே சாலப் பொருந்தும். :P

<<<<<

மகளிர் சுய விழிப்பெழு தினம் என்பதெல்லாம் நல்லாத் தான் இருக்கு. அது என்ன பெண் பிள்ளளயளை மிதித்து வளர்க்க வேணும் என்று சொல்லுறியள்..இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிப்போட்டன்!

பெண்கள் கொஞ்சம் தலை தூக்கினால் காணும் அதைப் பொறுத்துக்கொள்ளாத மனோபாவம் தான் ஆண்களிடம் நிறைஞ்சு போய் இருக்கு.

இப்ப உள்ள தலைமுறை எல்லாம் பெண்களூக்கு மதிப்பளிச்சு சம உரிமை கொடுத்து அவர்களின் உணர்வுகளை புரிஞ்சுகொள்றவையாத் தான் இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உள்ள தலைமுறை எல்லாம் பெண்களூக்கு மதிப்பளிச்சு சம உரிமை கொடுத்து அவர்களின் உணர்வுகளை புரிஞ்சுகொள்றவையாத் தான் இருக்கினம்.

உண்மைதான். இப்ப உள்ள தலைமுறை.. பெண்களுக்கு நல்லா மதிப்பு மட்டுமில்ல மப்பும் அளிக்குது. அம்மா தாயே எங்களுக்கு உலகம் எப்படி உருண்டிட்டு இருக்கென்று நல்லாவே தெரியும் அப்பத்த இப்பத்த தலைமுறைக் கதைகளை நம்கிட்ட அளக்காதீங்க.

பெண்களை மதிக்கனும் என்றது ஒன்றும் எழுதாத சட்டமில்லை. மனிதனை மனிதன் மதிக்கனும். பெண்கள் மனிதத்தோட இருந்தா எல்லோரும் மதிப்பினம். இப்பத்த தலை முறை மதிக்குதோ மிதிக்குதோ அதுவல்ல பிரச்சனை பெண்கள் மனிதர்களாக உள்ளார்களா என்பதுதான் வினவலே..! பல பெண்கள் சக மனிதனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூட தகுதியற்ற ஜடங்களாக இருக்கும் போது இப்பத்த தலைமுறை என்ன பெண்களை போதைவஸ்தாகக் கருதி மதிக்குதா..??! இல்ல மனிதராத்தான் காணுதா..?! :unsure:

பெண்களுக்கு பிரச்சனை அவர்களே அன்றி வேறு யாருமில்லை. அவர்கள் சுயமா விழித்தெழும் பொழுது விடியவும் அவர்கள் மனிதர்களாக மனிதம் பேணவும் வேண்டுவோமாக...!!!

உலகை அலங்கோலமாக்கிக் கொண்டிருக்கும் இப்பத் தலைமுறையிடம் எதிர்கால சந்ததியின் அங்கத்துவனான வேண்டுகோள். அழகிய உலகை எதிர்கால சந்ததியிடம் கையளியுங்கள். அதற்காய் மனிதர்களாக வாழுங்கள். இயற்கைச் சூழலை பாதுகாக்கப் பாடுபடுங்கள். மனிதரையும் அழித்து இயற்கையையும் அழிக்கும் கைங்கரியத்தை நிறுத்துங்கள். எத்தனையோ நிகழ்காலப் பெண்களின் சூலகங்களில் கருத்தடை மாத்திரைகளோடு போராடும் ஒரு உயிராக நான் என் வேண்டுகோளை முன்வைக்கின்றேன். :P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

:Dஅடக்கடவுளே...இதே வேலையாத்தான் திரியுறீங்களா? :D :D :D:(:o :o :o

ஹா ஹா சகி.............. ஏதோ ரொம்ப பெண்ணால் கஸ்டப்பட்டுட்டார் போல..... ஹிஹி நானும் இப்பத்தான் இந்த தலைப்புப் பார்த்தன்... இதுல நெடுக்ஸ் எழுதினதைப் பார்க்க கோவம் வரல, சிரிப்புத்தான் வந்தது. :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.