Jump to content

கடமை தவ­றக்­கூ­டாது தமிழ்க் கூட்­ட­மைப்பு


Recommended Posts

 

 

கடமை தவ­றக்­கூ­டாது தமிழ்க் கூட்­ட­மைப்பு

 

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தயா­ரா­கி­விட்­டது. இந்த மாதம் 21ஆம் திகதி அது நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­ட­லாம் என்­கிற உறு­தி­யான எதிர்­பார்ப்­பும் உள்­ளது.

அதன் மீது விவா­தம் நடத்­தப்­பட்டு இறுதி செய்­யப்­பட்­டு­ விட்­டால், புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இறுதி வரைவு தயா­ரா­கி­வி­டும். அதா­வது தமி­ழர் தரப்­பும் இணைந்து தயா­ரிக்­கும் இலங்­கை­யின் முத­லா­வது அர­ச­மைப்­புத் தயா­ரா­கி­வி­டும்.

இந்த நிலை­யில் அந்த அர­ச­மைப்பு தமிழ் மக்­க­ளின் எதிர்­பார்ப்பை, வேண­வாவை, கடந்த 70 ஆண்­டு­கால அர்ப்­ப­ணிப்­புக்­க­ளுக்­கான பெறு­ம­தியை, 30 வருட போர்க் கால இழப்­புக்­க­ளுக்­கான அர்த்­தத்தை கொடுக்­கி­றதா என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது ஒவ்­வொரு தமி­ழர்­க­ளி­ன­தும் கடமை. இது தமது அர­சி­யல் பிர­தி­நி­தி­ க­ளின் பணி என்று அதனை அவர்­க­ளி­டம் மட்­டுமே ஒப்­ப­டைத்­து­விட்டு ஒதுங்­கி­யி­ருப்­பது ஆபத்­தா­னது.

புதிய அர­ச­மைப்­பில் குறிப்­பி­டப்­ப­டும் சொற்­க­ளும் பதங்­க­ளும் எது­ வாக இருந்­தா­லும், அதன் பொருள்­க­ளும் வர்­ண­னை­க­ளும் வியாக்­கி­யா­ன­மும் சரி­யான தீர்வை நோக்கி நகர்­வ­தாக இருக்­க­வேண்­டும். தமி­ழர்­க­ளின் 70 ஆண்­டு­கால உரி­மைப் போராட்­டத்­தை­யும் கோரிக்­கை­க­ளை­யும் தகர்க்கக் கூ­டி­ய­வையாக அவை இருக்­கக்­கூ­டாது.

இடைக்­கால அறிக்கை தொடர்­பில் கசிந்­தி­ருக்­கக்­கூ­டிய தக­வல்­கள், வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்­புக்கு அதில் இட­மில்லை என்­ப­தைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பு இல்­லை­யென்­றால் தமி­ழர்­க­ளின் தாய­கக் கோட்­பாடு சிதைக்­கப்­பட்­டு­வி­டும்.

திம்பு முதற்­கொண்டு அனைத்­துப் பேச்­சுக்­க­ளி­லும் தமி­ழர் தரப்­பால் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்த கோட்­பாடு மற்­றும் கோரிக்கை அது. தாய­கத்தை இழந்­து­விட்­டால் அதன் வழி வரும் சுயாட்­சி உரி­மை­யை­யும் இழக்க வேண்டி வரும் அல்­லது அது வடக்­குக்­குள் மட்­டுமே கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டும் நிலை வரும். இது எதிர்­கா­லத்­தில் தமி­ழர்­க­ளின் இருப்­புக்கு கிழக்­கில் மட்­டு­மல்ல வடக்­கி­லும் ஆபத்­தா­ன­தாக மாறி­வி­டும்.

வடக்கு கிழக்கு இணைப்பை, தமி­ழர்­க­ளின் தாய­கக் கோட்­பாட்டை, அதன் வழி­யான சுயாட்சி உரி­மையை தமி­ழர்­க­ளுக்­குப் பெற்­றுத் தரு­வ­தாக வாக்­க­ளித்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, இடைக்­கால அறிக்­கை­யில் அத­னைச் சேர்க்க முடி­ய­வில்லை என்­பது அதன் தோல்வி என்­பதை, இந்த விவ­கா­ரத்­தில் முற்­றி­லும் பங்­க­ளித்த தலை­வர் இரா.சம்­பந்­த­னும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ர­னும் ஏற்­றுக்­கொள்­ளத்­தான் வேண்­டும்.

வடக்கு கிழக்கு இணைப்­பைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யது என்ற விட­யம் இடைக்­கால அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­றா­லும், அது ஒரு முடிவு அல்ல. மாகா­ணங்­க­ளின் இணைப்பு சாத்­தி­ய­மா­காத நிலையே இடைக்­கால அறிக்­கை­யில் காணப்­ப­டு­கி­றது. தமிழ் மக்­க­ளின் கோரிக்­கையை அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் முன் எடுத்து வைப்­பது மட்­டுமே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பணி அல்ல.

அத­னைச் சாத்­தி­ய­மாக்­கிக் காட்­டு­வ­தற்­கான கட்­ட­ளையே மக்­க­ளால் கூட்­ட­மைப்­புக்கு வழங்­கப்­பட்­டது. எனவே அத­னைச் சாத்­தி­ய­மாக்­கிக் காட்­ட­வேண்­டி­யது அத­னது கட­மை­யும் பொறுப்­பும்­கூட.

இடைக்­கால அறிக்­கைக்­குப் பின்­ணி­ணைப்­பாக வழங்­கப்­பட்ட ஆவ­ணத்­தில், வடக்கு கிழக்கு இணைந்த தமி­ழர் தாய­கத்­தில் அதி­க­பட்ச அதி­கா­ரப் பகிர்வு என்­பதை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது. அப்­ப­டித் தான் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது என்­ப­தை அது மக்­க­ளி­டம் வெளிப்­ப­டுத்­தி­யும் இருக்­கி­றது.

ஆனால், அந்த இணைப்­பில் கூறப்­பட்­டுள்­ள­வை­கள் இறுதி அறிக்­கை­யில் சேர்க்­கப்­ப­டும் என்­ப­தற்கு எந்த உத்­த­ர­வா­த­மும் இல்லை. அவை கைவி­டப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்­களே அதி­கம் உள்­ளன.

கூட்­ட­மைப்­பின் பின்­ணி­ணைப்­பில் உள்­ள­வற்றை இறுதி அறிக்­கை­யில் சேர்த்­துக்­கொண்­டால் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, மகிந்த அணி, ஐக்­கிய தேசி­யக் கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்­சி­கள் வழங்­கிய பேரி­ன­ வாத நிலைப்­பா­டு­களை உள்­ள­டக்­கிய பின்­ணி­ணைப்­பு­க­ளை­ யும் இறுதி அறிக்­கை­யில் சேர்க்­க­வேண்­டி­யி­ருக்­கும் என்று பயங்­காட்­டியே தமி­ழர்­க­ளின் கோரிக்­கை­க­ளைப் பேரி­ன­வாத அர­சி­யல் நிரா­க­ரித்­து­வி­டும்.

எனவே தமிழ் மக்­க­ளுக்­குத் தேவை­யா­னது எல்­லாம் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எதை வலி­யு­றுத்­தி­யது என்­ப­தல்ல.

அது எத­னைச் சாதித்­தது என்­பதே முக்­கி­யம். இப்­போ­தும் காலம் தாழ்ந்­து­வி­ட­வில்லை, கூட்­ட­மைப்­புக் கூறி­ய­தைப் போலவே அது நடத்­தி­வ­ரும் இந்த இரா­ஜ­தந்­தி­ரப் போரில் வெல்­வ­தற்­கான முயற்­சி­க­ளை­யும் சாத்­தி­யங்­க­ளை­யும் அது அதி­க­ரித்­தாக வேண்­டும்.

தமி­ழர்­க­ளின் 70 வருட காலக் கோரிக்­கை­க­ளுக்­கான குறைந்­த­பட்­சத் தீர்­வை­யா­வது பெற­வேண்­டும். அப்­ப­டி­யல்­லாத தீர்வை நிச்­ச­ய­மா­கத் தமிழ் மக்­கள் நிரா­க­ரிப்­பார்­கள்.

வர­லாறு முழு­வ­தும் அவர்­கள் அதைச் செய்­தி­ருக்­கி­றார்­கள். அவ்­வப்போது வந்த அரை­கு­றைத் தீர்­வு­களை எல்­லாம் அவர்­கள் நிரா­க­ரித்து துன்­பத்­தைத் தாங்கி நின்­ற­தன் நோக்­கம் முழு­மை­யான, சரி­யான, ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு தீர்­வுக்­கா­கவே. அதை­னப் பெற்­றுக்­கொ­டுப்­ப­து­தான் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­யாய கடமை.

 
 
 
 
 
 

http://newuthayan.com/story/27192.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மட்டுமல்ல எப்போதுமே நம்பிக்கெட்டவன் தான் தமிழன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.