Jump to content

உட்கட்சி விவகாரம் என்று நான் சொல்லவே இல்லை!


Recommended Posts

மிஸ்டர் கழுகு: உட்கட்சி விவகாரம் என்று நான் சொல்லவே இல்லை!

 

தினகரனிடம் பல்டி அடித்த கவர்னர்

 

p42d.jpgரண்டு நாள்கள் இரவு பகலாக தினகரனின் பெசன்ட் நகர் வீட்டை வட்டமடித்த கழுகார், தூக்கமில்லாமல் சிவந்த கண்களுடன் அலுவலகம் வந்தார். திடீரென போனில் அழைப்பு வர, ‘‘ஒரு மணி நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய கழுகார், சொன்னதுபோலவே வந்தார். ‘‘ஒன்றுமில்லை... கவர்னரை தினகரன் சந்தித்த நேரத்தில் கிண்டி கவர்னர் மாளிகையை வட்டமடித்துவிட்டு வந்தேன்’’ என்றார்.

‘‘தினகரனின் ஆட்டம் வேகம் பிடித்துள்ளதே?”

‘‘கடந்த வாரம் முழுவதும் தினகரன் தீவிர ஆலோசனையில் இருந்தார். தனக்கு நெருக்கமானவர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்து பல விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அடியையும் மிக நிதானமாக வைப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.”

‘‘என்ன சொன்னார்களாம் தினகரனின் ஆலோசகர்கள்?”

‘‘நடைமுறை சாத்தியங்களை வரிசையாக விளக்கி உள்ளார்கள் ஆலோசகர்கள். ‘எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் முரண்பாடுகள், உள்குத்துக்கள், மனக்கசப்புகள் இருப்பது உண்மைதான். அவற்றை எல்லாம் தாண்டி, அதிகாரத்தை அவர்கள் பகிர்ந்து வைத்துள்ளனர். ஆனால், உங்களை எதிர்ப்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். உள்குத்துக்களை ஒதுக்கிவிட்டு இருவரும் ஒன்றாக நிற்பார்கள். இப்படியே, இன்னும் மூன்றரை வருடங்களுக்கு அவர்களை விட்டுவைத்தால், உங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக எழ விடாமல் அமுக்கி விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். அதற்குள் நீங்கள் முந்திக்கொள்ள வேண்டும்’ என எச்சரித்துள்ளனர்.”

‘‘ம்!”

‘‘மேலும், தினகரனை ஆதரிப்பவர்களுக்கு வரும் நெருக்கடிகளையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ‘எடப்பாடி பழனிசாமி, போலீஸை உங்களுக்கு எதிராகப் பிரயோகிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார். பல மாவட்டங்களில் உங்களுக்கு ஆதரவாகப் பேட்டி கொடுப்பவர்கள் மீது, ஏதேதோ காரணங்களைச் சொல்லி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்குப் போகும் துணிச்சலை இப்போதே எடப்பாடி பெற்றுவிட்டார். ஆரம்பமே இப்படி என்றால், இன்னும் முழுதாக மூன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. போகப்போக நிலைமை இன்னும் மோசமாகிவிடும். நம்மிடம் இப்போது 22 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக தெம்பாக இருக்கிறோம். ஆனால், இதுவும் கடைசிவரை நீடிக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், எடப்பாடி எப்போது வேண்டுமானாலும் இவர்களுக்குத் தகுந்த விலையை வைப்பார். இவர்களில் சிலரும், அமைச்சர் பதவி கிடைத்தால் உடனே எடப்பாடி பக்கம் சாய்ந்துவிடுவார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.”

p42c.jpg

‘‘தினகரனின் ரியாக்‌ஷன் என்னவாம்?”

‘‘இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, மிகுந்த குழப்பத்தில் இருந்தார் தினகரன். நான்கு நாள்களுக்கு முன்பு மிக ரகசியமாகப் போய் சசிகலாவைச் சந்தித்துள்ளார் தினகரன். அவரிடம் எல்லா விஷயங்களையும் தெளிவுபடுத்தி உள்ளார். அதைக் கேட்டு கடும் விரக்தி அடைந்த சசிகலா, ‘வெளியில் உள்ள சூழ்நிலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக என்னிடம் சொல்கிறார்கள். கட்சி நம் கையை விட்டுப் போய்விடக்கூடாது. எனவே, சூழ்நிலைக்கு ஏற்ப எல்லா முடிவுகளையும் நீயே எடுத்துக் கொள்’ என க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்!’’

‘‘ஓஹோ!”

‘‘அதன்பிறகுதான் சட்ட ஆலோசகர்களை வரவழைத்து, ‘எடப்பாடியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான சிக்கல்களைச் சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது’ என தினகரன் கலந்து பேசினார். அதில்தான், ‘தினகரன் நேரடியாக கவர்னரைச் சந்தித்து வலியுறுத்துவது’ எனப் பேசப்பட்டது. ‘கவர்னர் இதை உட்கட்சி விவகாரம் என்ற ரீதியில் புரிந்துவைத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அதை அவரிடம் சரியாகத் தெளிவுபடுத்த வேண்டும். அதன்பிறகும் அவர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுத்து, நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு உத்தரவிடவில்லை என்றால், நீதிமன்றத்தை நாட வேண்டும்’ என அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்பிறகு ஒரு முடிவுக்கு வந்த தினகரன், ‘இந்த முறை கவர்னரிடம் கொடுக்கும் கடிதத்தை வேறு மாதிரியாக எழுதவேண்டும்’ எனச் சொல்லியுள்ளனர்.”

‘‘தினகரன் நேரில் போய்க் கொடுத்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருந்ததாம்?’’

‘‘கடந்த முறை 19 எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த கடிதத்தில், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்; எனவே, அவருக்குக் கொடுத்திருந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். அவரை மாற்ற வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்த முறை தினகரன் நேரடியாகக் கொண்டு சென்று கொடுத்த கடிதத்தில், ‘ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்’ எனத் தொனி மாற்றப்பட்டதாம். மிக விரிவாக எழுதப்பட்டு இருந்த கடிதத்தில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவார் என்ற நம்பித்தான் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியை ஒப்படைத்தோம். ஆனால், அவர் இந்த அரசாங்கத்தை வேறு வழியில் கொண்டு செல்கிறார். நீட், ஜி.எஸ்.டி போன்ற ஜெயலலிதா எதிர்த்த அனைத்தையும் இவர் ஏற்றுக்கொண்டார். இந்த அரசு எங்களுக்குக் கொடுத்த நம்பிக்கைக்கு விரோதமாகச் செயல்படுகிறது. இதன் காரணமாக, இந்த அரசாங்கத்தின் மீது 22 எம்.எல்.ஏ-க்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான என்னுடன் அவர்கள் உள்ளனர். இந்தச் சூழ்நிலையால் கலக்கம் அடைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், பண பலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே, உடனடியாக எடப்பாடியைச் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு உத்தரவிடுவதுதான் சரியான ஜனநாயக நடவடிக்கை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். தன் பலம் கூடியுள்ளதை உணர்த்த, தன் பக்கம் புதிதாகச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களையும், கூட்டணி எம்.எல்.ஏ-வான கருணாஸையும், புதிதாக அடைக்கலமான இரண்டு எம்.பி-க்களையும் இதற்காகத்தான் அவர் அழைத்து சென்றார்.”

‘‘கவர்னர் என்ன சொன்னாராம்?”

‘‘கடிதத்தைக் கவனமாகப் படித்த கவர்னர், ‘நான் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’ என தினகரனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தினகரன், ‘இது அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரம் அல்ல. அப்படி நீங்கள் எந்த அடிப்படையில் சொன்னீர்கள்?’ என்று நேரடியாகவே கேட்டுள்ளார். ‘நான் அப்படி எங்கேயும் சொல்லவே இல்லையே’ எனச் சட்டென பதில் சொல்லி தினகரன் வாயை அடைத்துவிட்டாராம் கவர்னர். அவர் இப்படிச் சொன்னதாக திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வெளியில் சொல்லி வரும் நிலையில், ‘நான் அப்படிச் சொல்லவே இல்லை’ என்று கவர்னர் பல்டி அடித்தது தினகரனுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியையும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது!”

‘‘தினகரனுக்கு இதுவே உற்சாகம் கொடுத்திருக்குமே?”

‘‘கவர்னர் மாளிகை முன்பு குவிந்திருந்த தினகரன் ஆதரவாளர்கள், ‘கட்சியைக் காப்போம்! ஆட்சியை மீட்போம்!’ எனக் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். எல்லோரின் சட்டைப் பைகளிலும் தினகரனின் புகைப்படம் இருந்தது. கவர்னர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு, குறிப்பிட்ட கால அவகாசம் இருக்கிறது. அதனால், அதுவரை காத்திருப்பார்கள். அதன்பிறகும் கவர்னரிடம் இருந்து உரிய பதில் வரவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடுவார்களாம். இதற்கிடையில் பன்னீர், எடப்பாடி ஆட்களுக்குக் குடைச்சல் கொடுக்கும் சில காரியங்களையும் தினகரன் செய்ய இருக்கிறாராம்!”

p42b.jpg

‘‘அது என்ன?”

‘‘ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்கள்மீது கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகள் இருக்கின்றன. அவற்றைக் கிளறுவது ஒரு திட்டம். அதுபோல, ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் மாவட்டங்களில் என்ன சொத்துக்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் தோண்டி எடுக்கச் சொல்லி இருக்கிறாராம் தினகரன். எடப்பாடியின் அதிரடிகளைச் சமாளிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கைகளாம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனைத் தொடர்பு கொண்ட எடப்பாடி தரப்பு, ‘பார்த்து கவனமாக இருந்துகொள்ளுங்கள். உங்கள் மீது கொலை வழக்குப் போடுவதற்கே வாய்ப்பு எல்லாம் இருக்கிறது’ என்றெல்லாம் சொன்னதாம். அதற்கு பழனியப்பன், ‘யாரோ ஒருவர் என் பெயரை எழுதி வைத்துவிட்டுச் செத்தால், நான் கொலை செய்ததாகிவிடுமா?’ எனச் சூடாகக் கேட்டாராம். நாமக்கல் கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை விவகாரம்தான் அது. இந்த உரையாடலுக்குப் பிறகு, சுப்பிரமணியன் தற்கொலை வழக்கு விசாரணைக்கு வரச் சொல்லி சி.பி.சி.ஐ.டி போலீஸ், பழனியப்பனுக்குத் தொடர்ந்து பிரஷர் கொடுக்கிறதாம். இதை அவர் தினகரனிடம் தெரிவித்துள்ளார்.’’

‘‘ஓஹோ!’’

‘‘சென்னையில் தினகரன் வீட்டு வாசலில் பேட்டி கொடுக்கும்போது, திருச்சி எம்.பி குமாரை விமர்சனம் செய்தார் நடிகர் செந்தில். ‘தினகரன் தூண்டிவிட்டுத்தான் செந்தில் இப்படிப் பேசினார்’ என திருச்சி போலீஸில் புகார் செய்துள்ளார் குமார். இதைத் தொடர்ந்து தினகரன், செந்தில் இருவர் மீதும் அவதூறு வழக்கு போட்டுள்ளது போலீஸ். ஆனால், வழக்கு விஷயம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து வழக்குகள் போட்டு, மொத்தமாக எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு ஒரு அதிரடி நிகழ்த்தவும் தயாராக உள்ளனராம் எடப்பாடி தரப்பினர்.’’

‘‘அடுத்த சில நாள்களுக்கு அதிரடி தகவல்கள் கொட்டும் போலிருக்கிறதே?”

‘‘ஆம். இன்னொரு அதிரடித் திட்டமும் தயாராக உள்ளது. அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய அஸ்திரம், ‘ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்’ என்பதுதான். தினகரனை எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்த வைத்துவிட்டு, கடைசியாக ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் மரணத்தில் சசிகலா குடும்பத்துக்குப் பங்கிருக்கிறது’ என்று மீண்டும் பழைய செய்திகளைக் கிளப்பி விடுவதன் மூலம் சசிகலா மற்றும் தினகரன் இமேஜை டேமேஜ் செய்வதும், அது தொடர்பான விசாரணைகளுக்கு வரச் சொல்லி தினகரனைச் சுற்றில் விடுவதும்தான் அவர்களின் திட்டம்.”

p42.jpg‘‘கடைசி நேரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஜக்கையன் எடப்பாடி பக்கம் தாவிவிட்டாரே?”

‘‘ஜக்கையன் மட்டுமல்ல. இன்னும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் கூட அணி மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், அவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் மாறவேமாட்டார்கள் என்கிறது விபரம் அறிந்த வட்டாரம். ‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் மிகப்பெரிய கவனிப்பு நடந்துள்ளது. ஆனால், எவ்வளவோ முயன்றும் கடைசியில் ஒரு சிலருக்கு அவரால் அதிக ‘கவனிப்பு’ செய்ய முடியவில்லை. அவர்கள்தான் தேவையில்லாமல் அரசை எதற்காக பகைத்துக்கொள்ள வேண்டும் என்று கம்பியை நீட்டுகிறார்கள்’ என்கிறார்கள். எனவே, மற்றவர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாகியுள்ளார்கள்.’’

‘‘தி.மு.க தரப்பு என்ன சொல்கிறது?”

‘‘ஏற்கெனவே தி.மு.க தரப்பில் கொடுத்ததைவிட இன்னும் கடுமையான கடிதத்தை கவர்னரிடம் தர இருக்கிறார் ஸ்டாலின். தி.மு.க தரப்பில் பல விஷயங்களைத் தீவிரமாக யோசிக்கிறார்கள். ‘எடப்பாடி ஆட்சிக்கு மெஜரிட்டி இல்லை என்றாலும், மத்திய அரசின் முழுமையான ஆதரவு இருக்கிறது. எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என நாம் கேட்பதே, தினகரன் தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி பக்கம் தாவச் செய்துவிடாதா?

அ.தி.மு.க-வில் எந்த அணியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதில் இஷ்டமில்லை’ எனப் பலரும் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள். தினகரன் தரப்பிலிருந்தும் தி.மு.க பக்கம் தூது வந்திருக்கிறது. ‘மொத்தமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்யுங்கள். அதன்பின் நாங்களும் முடிவெடுப்போம்’ என அவர்களுக்குப் பதில் கிடைத்ததாம்.”

‘‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வார்களா?’’

‘‘இருக்கும் பதவியையும் இழந்துவிட்டு தெருவில் நிற்க அவர்கள் தயாராக இல்லை” என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டைப் படம்: எம்.விஜயகுமார்
படங்கள்: ஆ.முத்துக்குமார், கே.ஜெரோம்


அமித் ஷாவிடம் என்ன பேசினார் தம்பிதுரை?

டந்த வியாழக்கிழமை... மத்திய அமைச்சரவை மாற்றங்கள் குறித்து இறுதி முடிவெடுப்பதில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா பிஸியாக இருந்த நேரத்தில், அவர் வீட்டுக்குத் திடீரென வந்தார் தம்பிதுரை. ‘இந்த நேரத்தில் இவர் ஏன் இங்கு வந்தார்’ என டெல்லி மீடியாக்கள் பரபரப்புடன் விவாதித்த நேரத்தில், ‘‘அமித் ஷா, ராஜ்ய சபா எம்.பி-யாக பதவி ஏற்றபோது நான் டெல்லியில் இல்லை. அவர் என் நீண்டகால நண்பர். அவருக்கு வாழ்த்துச் சொல்லவே வந்தேன்’’ என தம்பிதுரை நிருபர்களிடம் சொன்னார். 

p42a.jpg

பி.ஜே.பி சீனியர் தலைவர்களே அமித் ஷா வீட்டுக்குச் செல்லத் தயங்கிய அந்த பரபரப்பு நிமிடங்களில் சாதாரணமாக ‘வாழ்த்து’ சொல்ல வந்ததாக தம்பிதுரை சொன்னதை, அவருடன் வந்தவர்களே நம்பியிருக்க மாட்டார்கள். மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க-வைச் சேர்ப்பதற்கான கடைசி முயற்சியே இந்தச் சந்திப்பு எனப் பேச்சு இருக்கிறது. ஆனால், ‘‘தம்பிதுரை அ.தி.மு.க சார்பாக அமித் ஷாவை சென்று சந்திக்கவில்லை. தனிப்பட்ட முறையில்தான் போனார்’’ என ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி-க்கள் வலிய வந்து டெல்லி மீடியாக்களுக்கு விளக்கம் சொன்னார்கள்.

‘அ.தி.மு.க-வை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவே அமைச்சரவை மாற்றத்தை பி.ஜே.பி தாமதித்தது. ஆனால், உட்கட்சிப் பிரச்னைகள் தீராத நிலையில் சேர்த்தால் பிரச்னையாகிவிடும் என்பதாலேயே அ.தி.மு.க-வைத் தவிர்த்தார்கள். இவர்களால் நிதிஷ் குமார் கட்சியையும் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள்’ என டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் சொல்கிறார்கள். 

http://www.vikatan.com/juniorvikatan/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.