Jump to content

செப்­ரெம்­பர் மாதம் எட்­டாம் திகதி உலக எழுத்­த­றிவு தினம்


Recommended Posts

எழுத்தறிவு உடையோர் விகிதாசாரத்தில் உயர் மட்டம் பேணும் இலங்கை

 
 
எழுத்தறிவு உடையோர்  விகிதாசாரத்தில்  உயர் மட்டம் பேணும்  இலங்கை
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வரு­டா­வ­ரு­டம் செப்­ரெம்­பர் மாதம் எட்­டாம் திகதி உலக எழுத்­த­றிவு தின­மாக கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது. பொது­வாக எழுத்­த­றி­வென்­பது எழு­த­வா­சிக்­கத் தெரிந்து கொண்­டுள்ள திறன் என அர்த்­தப்­ப­டுத் தப்படு­கின்­றது.

இன்று உல­கில் எண்­பது கோடி வளர்ந்­த­வர்­க­ளுக்­கும் ஏழு கோடி சிறு­வர் க­ளுக்கும் எழுத்­த­றிவு கிடை­யாது. இவர்­க­ளுக்­குப்­பா­ட­சா­லை­கள் இல்லை. அல்­லது பாட­சா­லை­க­ளில் கற்­பித்­த­லுக்­குக் கட்­ட­ணம் அற­வி­டு­வ­த­னால் அவர்­க­ளால் பாட­சாலை செல்ல முடி­ய­வில்லை. இவை­மட்­டு­மன்றி இதற்­கு­வேறு பல கார­ணங்­க­ளும் உண்டு.

இலங்­கை­யில் வாழும் மக்­கள் அதிர்ஷ்ட­சா­லி­கள் என்றே கூற வேண்­டும். இங்கு இல­வ­சக்­கல்வி வச­தி­யி­ருப்­ப­தால் எல்­லோ­ரும் பாட­சா­லைக்­குச் செல்ல முடி­கின்­றது.

எழுத்­த­றிவு என்­பது வெறு­மனே எழுத்­துக்­களைத் தெரிந்து கொள்­வது மட்­டு­மல்­ல,­வாழ்க்­கை­யோடு தொடர்­பான சக­ல­வி­ட­யங்­க­ளை­யும் அறிந்து கொள்­வ­தா­கும்.

இதனை ஆங்­கி­லத்­தில் பங்ச­னல்லிற்ரெர்சி (Functional Literacy) என்று கூறு­கி­றார்­கள். இத­னை செய­லாற்­றல் எழுத்­த­றிவு என மொழி­பெ­யர்க்­க­லாம். செய­லாற்­றல் எழுத்­த­றிவு என்­பது, வாழ்க்கை தொடர்­பான விட­யங்­களைத் தொடர்ச்­சி­யாகக் கற்­றுக் கொள்­வ­தா­கும்.

அதா­வது எழுத்­த­றிவு வெறு­மனே பாட­சா­லைக் கல்­வி­யோடு முடிந்து விடு­வ­தில்லை. அது வளர்ந்­த­வர்­கள் வாழ்­வி­லும், குறிப்­பாக கல்­வித்­து­றை­யி­லும் பின்­தங்­கி­யுள்ள சமூ­கத்­தி­ன­ரி­டையே வாழ்­நாள் முழு­வ­தும் நீடித்­தி­ருக்க வேண்­டிய ஒன்­றா­கும்.

எழுத்தறிவை மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்க பன்னாட்டு ரீதியில் முயற்சிகள்

worth-writing.jpgwriterwritingpixabaypublicdomain.jpg

உல­கில் வாழும் மக்­க­ளில் 80 கோடிக்கு மேற்­பட்­ட­வர்­கள் அடிப்­படை எழுத்­த­றிவு இல்­லா­த­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எழுத்­த­றி­வற்­ற­வர்­க­ளில் 52 கோடிப் பேர் பெண்­க­ளா­வர்.

1965 ஆம் ஆண்­டுக்கு முன்­னர் வாசித்­த­றி­தல், எழுத்­த­றிவு என்­பவை உல­க­மக்­கள் மத்­தி­யில் பின்­தங்­கிய நிலை­யி ­லேயே இருந்­தது. 1965 ஆம் ஆண்­டுக்குப் பின்­னர் புத்­த­கத்தை நாடு­தல், வாசித்­த­றி­தல், நூல்­நி­லை­ யங்­க­ளைப் பயன்­ப­டுத்­தல், எழுத்­த­றி­வைப் பெற்­றுக் கொள்­ளு­தல் என்­பவை ஒரு மனி­த­னுக்கு முக்­கி­ய­மான தேவை என பன்­னாட்டு ரீதி­யில் உண­ரப்­பட்­ட­தன் கார­ண­மாக, வாசிப்­புத் தி­னம், புத்­த­க­தி­னம், எழுத்­த­றி­வுத்­தி­னம், போன்­ற­வற்றை பன்­னாட்டு ரீதி­யில் அறிவித்து உல­கம் முழு­வ­தி­லும் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

உல­கத்­தில் எந்­த­வொரு மனி­த­னா­வது தமது அன்­றாட வாழ்க்­கை­யில் ஒன்றை அறிந்து கொள்­வ­தற்­கும் அத­னைப் புரிந்து கொள்­வ­தற்­கும் எழுத்து மூலம் தொடர்பு கொள்­வ­தற்­கும் இய­லாத நிலை­யி­லும், வாசித்­த­றிய இய­லாத நிலை­யி­லும் காணப்­ப­டின், அந்த மனி­தன் எழுத்­த­றி­வில்­லா­த­வன் என்றே சமூ­கம் மதிப்­பி­டு­கின்­றது. எழுத்­த­றி­வும், வாசிப்பு அறி­வும் எந்­த­வொரு மனி­த­னுக்­கும் இரண்டு கண்­கள் போன்­றவை.

அடிப்­படை எழுத்­த­றிவை ஒரு சரா­சரி மனி­தன் கற்­றுக் கொள்ள வேண்­டி­ய­தன் அவ­சி­யம்பற்றி மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை உண்­டாக்­கும் வகை­யில் எழுத்­த­றி­வைப் பெற்­றுக் கொள்­ளா­மல் அதனை இழந்­த­வர்­க­ளுக்­கான வளர்ந்த பரா­யத்­தி­ன­ருக்­காக முறை சாராக்­கல்­வித்­திட்­டத்­தின் கீழ் எழுத்­த­றி­வைக் கற்­பிக்­கின்ற நோக்­கத்­து­டன் ஒவ்­வொரு வரு­ட­மும் செப்­ரம்­பர் மாதம் எட்­டாம்­தி­கதி உலக எழுத்­த­றி­வுத் தினம் கடைப் பிடிக்கப்பட்டு வரு­கின்­றது.

எழுத்தறிவு குறித்து நிர்ணயம்

IMG_3197.jpg

எழுத்­த­றி­வைப் பற்றி ஐ.நா.சபை­யின் ஐக்­கி­ய­நா­டு­கள் கல்வி அறி­வி­யல் பண்­பாட்டு நிறு­வ­னம் பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது.

எழுத்­த­றிவு என்­பது பல்­வேறு சூழ்­நி­லை­க­ளு­டன் தொடர்­பு­டைய அச்­சி­டப்­பட்ட அல்­லது எழுத்­தப்­பட்­ட­வற்­றைப் பயன்­ப­டுத்தி அடை­யா­ளம் காண்­ப­தற்­கும், புரிந்து கொள்­வ­தற்­கும் ,விளங்­கிக் கொள்­வ­தற்­கும், ஆக்­கு­வ­தற்­கும், தொடர்பு கொள்­வ­தற்­கும் கணிப்­ப­தற்­கு­மான திற­னைக் குறிக்­கும்.

எழுத்­த­றிவு ஒரு தனி நப­ருக்­குத் தன்­னு­டைய இலக்கை அடை­வ­தற்­கும் தனது அறி­வை­யும் தகு­தி­யை­யும் வளர்த்­துக் கொள்­வ­தற்­கம் பரந்த சமு­தா­யத்­தில் இவற்றை முழு­மை­யா­கப் பற்­று­வ­தற்­கு­மான ஆற்­ற­லைப் பெறு­வ­தற்கு உத­வு­கி­றது.

எந்த மொழி­யி­லும் இல­கு­வான வசன சொற் தொ­டர்­களை எழு­த­வும் ,படிக்­க­வும், தெரி­யாமை எழுத்­த­றி­வின்­மை­யா­கும்’’ என்று ஐ.நா.வின் சாச­னம் எழுத்­த­றி­வின்­மையை வரை­யறை செய்­கின்­றது.
பொது­வாக எழுத்­த­றிவு என்­பது ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, அத­னைக் கேட்­டுப் புரிந்து கொள்­ளக்­கூ­டிய ஆற்­ற­லைக் குறிக்­கும்.

இன்று எழுத்­த­றிவு பல்­வ­கைப்­பட்ட தொடர்­பா­டல் முறை­க­ளைப் பின்­பற்றி ஒரு எழுத்­த­றி­வுள்ள சமூ­கத்­து­டன் இணை­யா­கப் பங்­க­ளிக்­கக்­கூ­டிய ஆற்­றலை வழங்­கு­கி­றது.

உலக மக்கள் மத்தியில் எழுத்தறிவை ஊக்குவிக்க யுனெஸ்கோ நிறுவனம் பங்களிப்பு

1965 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 8ஆம் திகதி ‘தெஷ்ரான்’ நக­ரில் உல­கத்து நாடு­க­ளின் கல்வி அமைச்­சர்­களை ஒன்று கூட்டி மாநா­டொன்­றினை ‘யுனெஸ்கோ நிறு­வ­னம்’ ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

உல­க­ளா­விய ரீதி­யில் எதிர்­கா­லத்­தில் ஒரு பகுதி மனித குலத்­துக்கு எழுத்­த­றி­வின்­மை­யால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்­க­ளுக்­குத் தீர்­வி­னைக் காண வேண்­டும் என்ற வேண்­டு­கோள் அந்த மாநாட்­டில் முன்­வைக்­கப்­பட்­டது.

பன்­னாட்டு கல்­வி­ய­மைச்­சர்­கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பல முக்­கிய தீர்­மா­ னங்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. அவற்­றில், ஒவ்­வோர் ஆண்­டும் செப்­ரெம்­பர் மாதம் 8 ஆம் திக­தியை எழுத்­த­றிவு தின­மாக உலக மக்­கள் கடைப் பிடிக்க வேண்­டும் என முன்வைக்கப் பட்ட பிரேரணை ஏற்­றுக் கொள்­ளப்­பட்டு ஐ.நா.சபை அதனை அங்­கீ­க­ரித்­தது.

1966 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 8 ஆம் திக­தி­யி­லி­ருந்து உல­கி­லுள்ள சகல நாடு­க­ளும் உலக எழுத்­த­றிவு தினத்தை அனுஷ்டித்து வரு­கின்­றன. எழுத்­த­றிவு ஒரு மனி­த­னுக்கு எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­ப­தைத் தனி­ம­னி­த­னுக்­கும் பல்­வேறு வகுப்­பி­னர்க்­கும் பிற சமு­தா­யத்­தி­ன­ருக்­கும் எடுத்­து­ரைப்­பதை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­தா­ன­தாக அமைந்த நாளே உலக எழுத்­த­றிவு தின­மா­கும்.

எழுத்­த­றிவு பெறு­வது ஒரு மனி­த­னுக்­கு­ரிய கட்­டாய தேவை­யா­கும். அடிப்­படை மனித உரி­மை­யு­மா­கும். எழுத்­த­றி­ வென்­பது மனித முன்­னேற்­றத்­திற்கு மிக அவ­சி­ய­மான தொன்­றா­கும். எழுத்­த­றிவு என்­ப­தி­லி­ருந்து ஒரு மனி­தன் இன்­றைய நாக­ரிக உல­கில் வில­கி­யி­ருக்க முடி­யாது.

52 ஆண்­டு­க­ளில் எழுத்­த ­றிவு பெற்ற மக்­க­ளைக் கொண்­ட­வை­யாக உலக நாடு­கள் பல காணப்­பட்­டா­லும், வேறு பல நாடு­க­ளில் இடம்­பெற்று வரு­கின்ற உள்­நாட்­டுப் போர்­கள், இன­மோ­தல்­கள், வறுமை, நாடோடி வாழ்க்கை, கல்­வி­யில் அக்­க­றை­யின்மை, அக­தி­க­ளாய் இடம்­பெ­யர்ந்து வேறு­நா­டு­க­ளில் வாழ்­வது, போசாக்­கின்மை பல்­வே­று­பட்ட அர­சி­யல் நெருக்­க­டி­க­ளுக்­குள் அகப்­பட்­டுக் கொள்­ளல் போன்­ற­வற்­றால் உல­கில் 80 கோடி மக்­கள் எழுத்­த­றி­வி­னைப் பெற்­றுக் கொள்­ளா­த­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.

ஒரு மொழி­யில் புரி­த­லு­டன் சரி­யான முறை­யில் உரை­யா­ட­வும், எழு­த­வும் தெரிந்­தவரே எழுத்­த­றிவு பெற்­ற­வ­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார். எழுத்­த­றிவை முழு­மை­யா­கப் பெறு­வ­தற்கு அவர் உயர் கல்­வித்­த­ரா­த­ரம் வரை படித்­தி­ருக்க வேண்­டு­மென்று நிர்­ண­யம் செய்­யப்­ப­ட­வில்லை. தனது மொழி­யில் தெளி­வா­கப் பேச­வும் , வாசிக்­க­வும் , முறை­யாக எழு­த­வும் , கற்­றுக்­கொண்­டாலே ஒரு மனி­தர் தமது அடிப்­படை உரி­மையை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­கின்­றார்.

எழுத்தறிவு பெற வேண்டியது இன்றைய உலகின் அவசியம் மிக்கதொரு செயற்பாடு

எழுத்­த­றிவு பெறு­வது ஒரு­வ­ரின் கட்­டா­யக் கட­மை­யா­கும். ஆயுள் வரை ஒரு மனி­த­னோடு உற­வா­டும் அடிப்­ப­டைக் கல்­வி­யின் இத­ய­மாக இருப்­பது எழுத்­த­றி­வா­கும். படித்­தல், வாசித்­தல் மட்­டும் ஒரு மனி­தனை உயர்த்­தி­வி­டாது. அத­னால் தான் தனி­ந­பர் ஆளு­மை­யி­ல்­இருந்து சமூக மனி­த­வள அபி­வி­ருத்தி மற்­றும் கல்­விச் செயற்­பா­டு­கள் மற்­றும் அதற்­கான சந்­தப்­பங்­கள் யாவும் எழுத்­த­றி­வி­லேயே தங்­கி­யுள்­ளன.

எழுத்­த­றி­வைப் பூர­ண­மா­கப் பெற்­றக் கொண்­ட­வர்­க­ளுக்­குக் கல்வி வாய்ப்­புக்­களை இல­கு­வா­கப் பெற்­றுக் கொள்­ளக்­கூ­டிய சந்­தர்ப்­பங்­கள் கிடைக்­கின்­றன. ஒரு­வர் சமூக பொரு­ளா­தார ரீதி­யில் வளர்ச்சி பெறு­வ­தற்­கும் எழுத்­த­றிவு மிக அவ­சி­ய­மா­கும்.

இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் எழுத்­த­றி­வில் மேன்­மை­யற்­ற­வர்­க­ளாக கூடிய சத­வி­கி­தத்­தி­னர் இருக்­கின்­ற­னர் என்­பதை அண்­மைக்­கால ஆய்­வு­கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. தெற்­கா­சிய நாடு­க­ளோடு ஒப்­பி­டப்­ப­டு­கின்ற போது எழுத்­த­றிவு வீதத்­தில் இலங்கை முத­லி­டத்­திலே இருக்­கின்­றது.

90.8 சத­வீ­த­மான இலங்கை மக்­கள் எழுத்­த­றிவு கொண்­ட­வர்­க­ளாக உள்ளனர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

30 ஆண்­டு­க­ளாக இடம்­பெற்ற போர் வேளை­யி­லும் தமிழ் மக்­க­ளின் மீதான எழுத்­த­றி­வுக் கல்வி பாதிக்­கப்­ப­ட­வில்லை. இலங்கை நாட்டு மக்­க­ளின் எழுத்­த­றிவு திருப்­தி­க­ர­மா­கவே காணப்­ப­டு­வ­த­னால் எழுத்­த­றி­வுக்­கல்­விக்கு மேற்­கொண்டு ஊக்­கம் கொடுக்­கப்­பட வேண்­டும்.

எழுத்­த­றிவு பெற்­றால்­தான் ஜன­நா­ய­கத்­தின் உரி­மை­களை நிலை­நாட்­ட­மு­டி­ யம். எழுத்­த­றிவு மூல­மான விழிப்­பு­ ணர்வு அதற்­கான செயற்­பா­டு­கள் ஊக்­கம் என்­பவை நாட்டு மக்­கள் மத்­தி­யில் மேன்­மே­லும் ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும்.

இன்­றைய பெற்­றோர்­கள் தமது குழந்­தை­க­ளின் எழுத்­தாற்­ற­லில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டும். இன்­றைய நவீன காலத்­தில் குழந்­தை­கள் சிறு­வர்­கள் மாண­வர்­கள் தொலை­பேசி இணை­யத்­தி­னூ­டா­கத் தங்­க­ளது நேரத்­தைச் செல­வி­டு­வ­த­னால் சிறு­வ­ய­து­க­ளில் எழுத்­த­றி­வுக் கல்­வி­யைப் பூர­ண­மா­கக் கற்­றுக் கொள்ள முடி­யா­த­தொரு சூழ்­நிலை உள்­ளது.

எனவே அவர்­க­ளுக்­கான எழுத்­த­றிவை ஊக்­கு­விக்க வேண்­டும். இன்­றைய எழுத்­த­ றிவு தினத்­தி­லி­ருந்­தா­வது அதற்­காக அக்­கறை காட்­டிச் செயற்­ப­டு­வோம்

http://newuthayan.com/story/26722.html

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, sitzt und Text

அறிவுடையார் எல்லாம் உடையார்...! (இன்று உலக எழுத்தறிவு தினம்)

அறிவு ஒரு கூர்மையான ஆயுதம்... அறிவுடையார் எல்லாம் உடையார். அவ்வகையில், எழுத்தறிவுதான் இந்தச் சமூகத்தின் ஆணிவேர் ஆகும். எழுத்தறிவின்மையை, ஒரு குற்றம் என்று கூறியுள்ளார் காந்தியடிகள். இதெல்லாம் எதற்கு இப்போது என யோசிக்கிறீர்களா? இன்று, (செப்-8) உலக எழுத்தறிவு தினம்.

எழுத்தறிவு தினம்!

ஐ.நா. அமைப்பின் அங்கமாகிய யுனிஸ்கோ எழுத்தறிவுப் பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லா உலகை உருவாக்கவும் 1965-ம் ஆண்டு, முதன்முதலில் உலக எழுத்தறிவு தினத்தினை செப்டம்பர் 8-ம் தேதி நடத்தியது. அந்த மாநாட்டில்தான் உலக எழுத்தறிவின்மையை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டியவை பற்றிய அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 1966 செப்டம்பர் 8 முதல் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும் உணரவைப்பதே இந்தத் தினத்தின் நோக்கம்.

எழுத்தறிவின்மை!

ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று கூறப்படுகிறது. உலகின் பலதரப்பட்ட விவரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கும் வேளையில், எழுத்தறிவின்மையால் அவற்றை உணர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எழுத்தறிவு பிரச்னைதான் கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய சமூகப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. 2011-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் எழுத்தறிவுப் பெற்றவர்களாக உள்ளனர். இதில் 82 சதவிகிதம் ஆண்களும், 65 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். இதன்படி எழுத்தறிவில், கேரளா முதல் இடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. யுனெஸ்கோவின், ‘அனைவரும் கல்வி பற்றிய உலக அறிக்கை’யின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.

எழுத்தறிவின்மையும், பிரச்னைகளும்!

எழுத்தறிவைப் பெறமுடியாததற்கான சமூக நிலை தொடர்பானவைகளில் கவனம் செலுத்தப்பட்டது. வறுமை, ஆரோக்கியமின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகளில் இன்றும் எழுத்தறிவின்மை காணப்படுகிறது. எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஓர் அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்விச் செயல்பாடுகள், அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை வாசிக்க, எழுதத் தெரியாமை என்பதையும் தாண்டி, நாட்டின் பல்வேறு முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரையில், பொருளாதாரம் போன்றவற்றுக்குக் கல்வியே பிரதானம். எனினும், கடந்த தலைமுறையில் இருந்து கல்வியால் முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம். பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, பேச, கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.

எழுத்தறிவு மிகவும் முக்கியம்!

எழுத்தறிவு, ஒரு தனியாளுக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் உதவுவது. ஆகையால், எழுத்தறிவு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவு என்பது உண்ணும் உணவைவிடவும், பார்க்கும் கண்ணைவிடவும் முக்கியம் பெறுகிறது. கல்வியும் எழுத்தும் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழவேண்டும். கல்விக்கும் எழுத்துக்களுக்கும் முடிவே கிடையாது...

- ஜெ.நிவேதா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.