Jump to content

செப்­ரெம்­பர் மாதம் எட்­டாம் திகதி உலக எழுத்­த­றிவு தினம்


Recommended Posts

எழுத்தறிவு உடையோர் விகிதாசாரத்தில் உயர் மட்டம் பேணும் இலங்கை

 
 
எழுத்தறிவு உடையோர்  விகிதாசாரத்தில்  உயர் மட்டம் பேணும்  இலங்கை
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வரு­டா­வ­ரு­டம் செப்­ரெம்­பர் மாதம் எட்­டாம் திகதி உலக எழுத்­த­றிவு தின­மாக கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது. பொது­வாக எழுத்­த­றி­வென்­பது எழு­த­வா­சிக்­கத் தெரிந்து கொண்­டுள்ள திறன் என அர்த்­தப்­ப­டுத் தப்படு­கின்­றது.

இன்று உல­கில் எண்­பது கோடி வளர்ந்­த­வர்­க­ளுக்­கும் ஏழு கோடி சிறு­வர் க­ளுக்கும் எழுத்­த­றிவு கிடை­யாது. இவர்­க­ளுக்­குப்­பா­ட­சா­லை­கள் இல்லை. அல்­லது பாட­சா­லை­க­ளில் கற்­பித்­த­லுக்­குக் கட்­ட­ணம் அற­வி­டு­வ­த­னால் அவர்­க­ளால் பாட­சாலை செல்ல முடி­ய­வில்லை. இவை­மட்­டு­மன்றி இதற்­கு­வேறு பல கார­ணங்­க­ளும் உண்டு.

இலங்­கை­யில் வாழும் மக்­கள் அதிர்ஷ்ட­சா­லி­கள் என்றே கூற வேண்­டும். இங்கு இல­வ­சக்­கல்வி வச­தி­யி­ருப்­ப­தால் எல்­லோ­ரும் பாட­சா­லைக்­குச் செல்ல முடி­கின்­றது.

எழுத்­த­றிவு என்­பது வெறு­மனே எழுத்­துக்­களைத் தெரிந்து கொள்­வது மட்­டு­மல்­ல,­வாழ்க்­கை­யோடு தொடர்­பான சக­ல­வி­ட­யங்­க­ளை­யும் அறிந்து கொள்­வ­தா­கும்.

இதனை ஆங்­கி­லத்­தில் பங்ச­னல்லிற்ரெர்சி (Functional Literacy) என்று கூறு­கி­றார்­கள். இத­னை செய­லாற்­றல் எழுத்­த­றிவு என மொழி­பெ­யர்க்­க­லாம். செய­லாற்­றல் எழுத்­த­றிவு என்­பது, வாழ்க்கை தொடர்­பான விட­யங்­களைத் தொடர்ச்­சி­யாகக் கற்­றுக் கொள்­வ­தா­கும்.

அதா­வது எழுத்­த­றிவு வெறு­மனே பாட­சா­லைக் கல்­வி­யோடு முடிந்து விடு­வ­தில்லை. அது வளர்ந்­த­வர்­கள் வாழ்­வி­லும், குறிப்­பாக கல்­வித்­து­றை­யி­லும் பின்­தங்­கி­யுள்ள சமூ­கத்­தி­ன­ரி­டையே வாழ்­நாள் முழு­வ­தும் நீடித்­தி­ருக்க வேண்­டிய ஒன்­றா­கும்.

எழுத்தறிவை மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்க பன்னாட்டு ரீதியில் முயற்சிகள்

worth-writing.jpgwriterwritingpixabaypublicdomain.jpg

உல­கில் வாழும் மக்­க­ளில் 80 கோடிக்கு மேற்­பட்­ட­வர்­கள் அடிப்­படை எழுத்­த­றிவு இல்­லா­த­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எழுத்­த­றி­வற்­ற­வர்­க­ளில் 52 கோடிப் பேர் பெண்­க­ளா­வர்.

1965 ஆம் ஆண்­டுக்கு முன்­னர் வாசித்­த­றி­தல், எழுத்­த­றிவு என்­பவை உல­க­மக்­கள் மத்­தி­யில் பின்­தங்­கிய நிலை­யி ­லேயே இருந்­தது. 1965 ஆம் ஆண்­டுக்குப் பின்­னர் புத்­த­கத்தை நாடு­தல், வாசித்­த­றி­தல், நூல்­நி­லை­ யங்­க­ளைப் பயன்­ப­டுத்­தல், எழுத்­த­றி­வைப் பெற்­றுக் கொள்­ளு­தல் என்­பவை ஒரு மனி­த­னுக்கு முக்­கி­ய­மான தேவை என பன்­னாட்டு ரீதி­யில் உண­ரப்­பட்­ட­தன் கார­ண­மாக, வாசிப்­புத் தி­னம், புத்­த­க­தி­னம், எழுத்­த­றி­வுத்­தி­னம், போன்­ற­வற்றை பன்­னாட்டு ரீதி­யில் அறிவித்து உல­கம் முழு­வ­தி­லும் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

உல­கத்­தில் எந்­த­வொரு மனி­த­னா­வது தமது அன்­றாட வாழ்க்­கை­யில் ஒன்றை அறிந்து கொள்­வ­தற்­கும் அத­னைப் புரிந்து கொள்­வ­தற்­கும் எழுத்து மூலம் தொடர்பு கொள்­வ­தற்­கும் இய­லாத நிலை­யி­லும், வாசித்­த­றிய இய­லாத நிலை­யி­லும் காணப்­ப­டின், அந்த மனி­தன் எழுத்­த­றி­வில்­லா­த­வன் என்றே சமூ­கம் மதிப்­பி­டு­கின்­றது. எழுத்­த­றி­வும், வாசிப்பு அறி­வும் எந்­த­வொரு மனி­த­னுக்­கும் இரண்டு கண்­கள் போன்­றவை.

அடிப்­படை எழுத்­த­றிவை ஒரு சரா­சரி மனி­தன் கற்­றுக் கொள்ள வேண்­டி­ய­தன் அவ­சி­யம்பற்றி மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை உண்­டாக்­கும் வகை­யில் எழுத்­த­றி­வைப் பெற்­றுக் கொள்­ளா­மல் அதனை இழந்­த­வர்­க­ளுக்­கான வளர்ந்த பரா­யத்­தி­ன­ருக்­காக முறை சாராக்­கல்­வித்­திட்­டத்­தின் கீழ் எழுத்­த­றி­வைக் கற்­பிக்­கின்ற நோக்­கத்­து­டன் ஒவ்­வொரு வரு­ட­மும் செப்­ரம்­பர் மாதம் எட்­டாம்­தி­கதி உலக எழுத்­த­றி­வுத் தினம் கடைப் பிடிக்கப்பட்டு வரு­கின்­றது.

எழுத்தறிவு குறித்து நிர்ணயம்

IMG_3197.jpg

எழுத்­த­றி­வைப் பற்றி ஐ.நா.சபை­யின் ஐக்­கி­ய­நா­டு­கள் கல்வி அறி­வி­யல் பண்­பாட்டு நிறு­வ­னம் பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது.

எழுத்­த­றிவு என்­பது பல்­வேறு சூழ்­நி­லை­க­ளு­டன் தொடர்­பு­டைய அச்­சி­டப்­பட்ட அல்­லது எழுத்­தப்­பட்­ட­வற்­றைப் பயன்­ப­டுத்தி அடை­யா­ளம் காண்­ப­தற்­கும், புரிந்து கொள்­வ­தற்­கும் ,விளங்­கிக் கொள்­வ­தற்­கும், ஆக்­கு­வ­தற்­கும், தொடர்பு கொள்­வ­தற்­கும் கணிப்­ப­தற்­கு­மான திற­னைக் குறிக்­கும்.

எழுத்­த­றிவு ஒரு தனி நப­ருக்­குத் தன்­னு­டைய இலக்கை அடை­வ­தற்­கும் தனது அறி­வை­யும் தகு­தி­யை­யும் வளர்த்­துக் கொள்­வ­தற்­கம் பரந்த சமு­தா­யத்­தில் இவற்றை முழு­மை­யா­கப் பற்­று­வ­தற்­கு­மான ஆற்­ற­லைப் பெறு­வ­தற்கு உத­வு­கி­றது.

எந்த மொழி­யி­லும் இல­கு­வான வசன சொற் தொ­டர்­களை எழு­த­வும் ,படிக்­க­வும், தெரி­யாமை எழுத்­த­றி­வின்­மை­யா­கும்’’ என்று ஐ.நா.வின் சாச­னம் எழுத்­த­றி­வின்­மையை வரை­யறை செய்­கின்­றது.
பொது­வாக எழுத்­த­றிவு என்­பது ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, அத­னைக் கேட்­டுப் புரிந்து கொள்­ளக்­கூ­டிய ஆற்­ற­லைக் குறிக்­கும்.

இன்று எழுத்­த­றிவு பல்­வ­கைப்­பட்ட தொடர்­பா­டல் முறை­க­ளைப் பின்­பற்றி ஒரு எழுத்­த­றி­வுள்ள சமூ­கத்­து­டன் இணை­யா­கப் பங்­க­ளிக்­கக்­கூ­டிய ஆற்­றலை வழங்­கு­கி­றது.

உலக மக்கள் மத்தியில் எழுத்தறிவை ஊக்குவிக்க யுனெஸ்கோ நிறுவனம் பங்களிப்பு

1965 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 8ஆம் திகதி ‘தெஷ்ரான்’ நக­ரில் உல­கத்து நாடு­க­ளின் கல்வி அமைச்­சர்­களை ஒன்று கூட்டி மாநா­டொன்­றினை ‘யுனெஸ்கோ நிறு­வ­னம்’ ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

உல­க­ளா­விய ரீதி­யில் எதிர்­கா­லத்­தில் ஒரு பகுதி மனித குலத்­துக்கு எழுத்­த­றி­வின்­மை­யால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்­க­ளுக்­குத் தீர்­வி­னைக் காண வேண்­டும் என்ற வேண்­டு­கோள் அந்த மாநாட்­டில் முன்­வைக்­கப்­பட்­டது.

பன்­னாட்டு கல்­வி­ய­மைச்­சர்­கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பல முக்­கிய தீர்­மா­ னங்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. அவற்­றில், ஒவ்­வோர் ஆண்­டும் செப்­ரெம்­பர் மாதம் 8 ஆம் திக­தியை எழுத்­த­றிவு தின­மாக உலக மக்­கள் கடைப் பிடிக்க வேண்­டும் என முன்வைக்கப் பட்ட பிரேரணை ஏற்­றுக் கொள்­ளப்­பட்டு ஐ.நா.சபை அதனை அங்­கீ­க­ரித்­தது.

1966 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 8 ஆம் திக­தி­யி­லி­ருந்து உல­கி­லுள்ள சகல நாடு­க­ளும் உலக எழுத்­த­றிவு தினத்தை அனுஷ்டித்து வரு­கின்­றன. எழுத்­த­றிவு ஒரு மனி­த­னுக்கு எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­ப­தைத் தனி­ம­னி­த­னுக்­கும் பல்­வேறு வகுப்­பி­னர்க்­கும் பிற சமு­தா­யத்­தி­ன­ருக்­கும் எடுத்­து­ரைப்­பதை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­தா­ன­தாக அமைந்த நாளே உலக எழுத்­த­றிவு தின­மா­கும்.

எழுத்­த­றிவு பெறு­வது ஒரு மனி­த­னுக்­கு­ரிய கட்­டாய தேவை­யா­கும். அடிப்­படை மனித உரி­மை­யு­மா­கும். எழுத்­த­றி­ வென்­பது மனித முன்­னேற்­றத்­திற்கு மிக அவ­சி­ய­மான தொன்­றா­கும். எழுத்­த­றிவு என்­ப­தி­லி­ருந்து ஒரு மனி­தன் இன்­றைய நாக­ரிக உல­கில் வில­கி­யி­ருக்க முடி­யாது.

52 ஆண்­டு­க­ளில் எழுத்­த ­றிவு பெற்ற மக்­க­ளைக் கொண்­ட­வை­யாக உலக நாடு­கள் பல காணப்­பட்­டா­லும், வேறு பல நாடு­க­ளில் இடம்­பெற்று வரு­கின்ற உள்­நாட்­டுப் போர்­கள், இன­மோ­தல்­கள், வறுமை, நாடோடி வாழ்க்கை, கல்­வி­யில் அக்­க­றை­யின்மை, அக­தி­க­ளாய் இடம்­பெ­யர்ந்து வேறு­நா­டு­க­ளில் வாழ்­வது, போசாக்­கின்மை பல்­வே­று­பட்ட அர­சி­யல் நெருக்­க­டி­க­ளுக்­குள் அகப்­பட்­டுக் கொள்­ளல் போன்­ற­வற்­றால் உல­கில் 80 கோடி மக்­கள் எழுத்­த­றி­வி­னைப் பெற்­றுக் கொள்­ளா­த­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.

ஒரு மொழி­யில் புரி­த­லு­டன் சரி­யான முறை­யில் உரை­யா­ட­வும், எழு­த­வும் தெரிந்­தவரே எழுத்­த­றிவு பெற்­ற­வ­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார். எழுத்­த­றிவை முழு­மை­யா­கப் பெறு­வ­தற்கு அவர் உயர் கல்­வித்­த­ரா­த­ரம் வரை படித்­தி­ருக்க வேண்­டு­மென்று நிர்­ண­யம் செய்­யப்­ப­ட­வில்லை. தனது மொழி­யில் தெளி­வா­கப் பேச­வும் , வாசிக்­க­வும் , முறை­யாக எழு­த­வும் , கற்­றுக்­கொண்­டாலே ஒரு மனி­தர் தமது அடிப்­படை உரி­மையை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­கின்­றார்.

எழுத்தறிவு பெற வேண்டியது இன்றைய உலகின் அவசியம் மிக்கதொரு செயற்பாடு

எழுத்­த­றிவு பெறு­வது ஒரு­வ­ரின் கட்­டா­யக் கட­மை­யா­கும். ஆயுள் வரை ஒரு மனி­த­னோடு உற­வா­டும் அடிப்­ப­டைக் கல்­வி­யின் இத­ய­மாக இருப்­பது எழுத்­த­றி­வா­கும். படித்­தல், வாசித்­தல் மட்­டும் ஒரு மனி­தனை உயர்த்­தி­வி­டாது. அத­னால் தான் தனி­ந­பர் ஆளு­மை­யி­ல்­இருந்து சமூக மனி­த­வள அபி­வி­ருத்தி மற்­றும் கல்­விச் செயற்­பா­டு­கள் மற்­றும் அதற்­கான சந்­தப்­பங்­கள் யாவும் எழுத்­த­றி­வி­லேயே தங்­கி­யுள்­ளன.

எழுத்­த­றி­வைப் பூர­ண­மா­கப் பெற்­றக் கொண்­ட­வர்­க­ளுக்­குக் கல்வி வாய்ப்­புக்­களை இல­கு­வா­கப் பெற்­றுக் கொள்­ளக்­கூ­டிய சந்­தர்ப்­பங்­கள் கிடைக்­கின்­றன. ஒரு­வர் சமூக பொரு­ளா­தார ரீதி­யில் வளர்ச்சி பெறு­வ­தற்­கும் எழுத்­த­றிவு மிக அவ­சி­ய­மா­கும்.

இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் எழுத்­த­றி­வில் மேன்­மை­யற்­ற­வர்­க­ளாக கூடிய சத­வி­கி­தத்­தி­னர் இருக்­கின்­ற­னர் என்­பதை அண்­மைக்­கால ஆய்­வு­கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. தெற்­கா­சிய நாடு­க­ளோடு ஒப்­பி­டப்­ப­டு­கின்ற போது எழுத்­த­றிவு வீதத்­தில் இலங்கை முத­லி­டத்­திலே இருக்­கின்­றது.

90.8 சத­வீ­த­மான இலங்கை மக்­கள் எழுத்­த­றிவு கொண்­ட­வர்­க­ளாக உள்ளனர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

30 ஆண்­டு­க­ளாக இடம்­பெற்ற போர் வேளை­யி­லும் தமிழ் மக்­க­ளின் மீதான எழுத்­த­றி­வுக் கல்வி பாதிக்­கப்­ப­ட­வில்லை. இலங்கை நாட்டு மக்­க­ளின் எழுத்­த­றிவு திருப்­தி­க­ர­மா­கவே காணப்­ப­டு­வ­த­னால் எழுத்­த­றி­வுக்­கல்­விக்கு மேற்­கொண்டு ஊக்­கம் கொடுக்­கப்­பட வேண்­டும்.

எழுத்­த­றிவு பெற்­றால்­தான் ஜன­நா­ய­கத்­தின் உரி­மை­களை நிலை­நாட்­ட­மு­டி­ யம். எழுத்­த­றிவு மூல­மான விழிப்­பு­ ணர்வு அதற்­கான செயற்­பா­டு­கள் ஊக்­கம் என்­பவை நாட்டு மக்­கள் மத்­தி­யில் மேன்­மே­லும் ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும்.

இன்­றைய பெற்­றோர்­கள் தமது குழந்­தை­க­ளின் எழுத்­தாற்­ற­லில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டும். இன்­றைய நவீன காலத்­தில் குழந்­தை­கள் சிறு­வர்­கள் மாண­வர்­கள் தொலை­பேசி இணை­யத்­தி­னூ­டா­கத் தங்­க­ளது நேரத்­தைச் செல­வி­டு­வ­த­னால் சிறு­வ­ய­து­க­ளில் எழுத்­த­றி­வுக் கல்­வி­யைப் பூர­ண­மா­கக் கற்­றுக் கொள்ள முடி­யா­த­தொரு சூழ்­நிலை உள்­ளது.

எனவே அவர்­க­ளுக்­கான எழுத்­த­றிவை ஊக்­கு­விக்க வேண்­டும். இன்­றைய எழுத்­த­ றிவு தினத்­தி­லி­ருந்­தா­வது அதற்­காக அக்­கறை காட்­டிச் செயற்­ப­டு­வோம்

http://newuthayan.com/story/26722.html

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, sitzt und Text

அறிவுடையார் எல்லாம் உடையார்...! (இன்று உலக எழுத்தறிவு தினம்)

அறிவு ஒரு கூர்மையான ஆயுதம்... அறிவுடையார் எல்லாம் உடையார். அவ்வகையில், எழுத்தறிவுதான் இந்தச் சமூகத்தின் ஆணிவேர் ஆகும். எழுத்தறிவின்மையை, ஒரு குற்றம் என்று கூறியுள்ளார் காந்தியடிகள். இதெல்லாம் எதற்கு இப்போது என யோசிக்கிறீர்களா? இன்று, (செப்-8) உலக எழுத்தறிவு தினம்.

எழுத்தறிவு தினம்!

ஐ.நா. அமைப்பின் அங்கமாகிய யுனிஸ்கோ எழுத்தறிவுப் பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லா உலகை உருவாக்கவும் 1965-ம் ஆண்டு, முதன்முதலில் உலக எழுத்தறிவு தினத்தினை செப்டம்பர் 8-ம் தேதி நடத்தியது. அந்த மாநாட்டில்தான் உலக எழுத்தறிவின்மையை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டியவை பற்றிய அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 1966 செப்டம்பர் 8 முதல் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும் உணரவைப்பதே இந்தத் தினத்தின் நோக்கம்.

எழுத்தறிவின்மை!

ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று கூறப்படுகிறது. உலகின் பலதரப்பட்ட விவரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கும் வேளையில், எழுத்தறிவின்மையால் அவற்றை உணர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எழுத்தறிவு பிரச்னைதான் கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய சமூகப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. 2011-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் எழுத்தறிவுப் பெற்றவர்களாக உள்ளனர். இதில் 82 சதவிகிதம் ஆண்களும், 65 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். இதன்படி எழுத்தறிவில், கேரளா முதல் இடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. யுனெஸ்கோவின், ‘அனைவரும் கல்வி பற்றிய உலக அறிக்கை’யின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.

எழுத்தறிவின்மையும், பிரச்னைகளும்!

எழுத்தறிவைப் பெறமுடியாததற்கான சமூக நிலை தொடர்பானவைகளில் கவனம் செலுத்தப்பட்டது. வறுமை, ஆரோக்கியமின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகளில் இன்றும் எழுத்தறிவின்மை காணப்படுகிறது. எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஓர் அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்விச் செயல்பாடுகள், அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை வாசிக்க, எழுதத் தெரியாமை என்பதையும் தாண்டி, நாட்டின் பல்வேறு முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரையில், பொருளாதாரம் போன்றவற்றுக்குக் கல்வியே பிரதானம். எனினும், கடந்த தலைமுறையில் இருந்து கல்வியால் முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம். பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, பேச, கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.

எழுத்தறிவு மிகவும் முக்கியம்!

எழுத்தறிவு, ஒரு தனியாளுக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் உதவுவது. ஆகையால், எழுத்தறிவு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவு என்பது உண்ணும் உணவைவிடவும், பார்க்கும் கண்ணைவிடவும் முக்கியம் பெறுகிறது. கல்வியும் எழுத்தும் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழவேண்டும். கல்விக்கும் எழுத்துக்களுக்கும் முடிவே கிடையாது...

- ஜெ.நிவேதா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.