Jump to content

நெருப்புடா திரை விமர்சனம்


Recommended Posts

 
card-bg-img
 

விக்ரம் பிரபு ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கு இவர் தன் சொந்த தயாரிப்பில் தானே நடித்து அசோக் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் நெருப்புடா. இந்த நெருப்புடா அவருக்கு வெற்றியை தந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

சிறு வயதில் தன் ஏரியாவில் நடக்கும் தீ விபத்தை அனைத்தவர்களை பார்த்து ஒரு தீயனைப்பு வீரனாக வேண்டும் என்று நினைக்கின்றார் விக்ரம் பிரபு. அவருடன் சேர்ந்து 4 நண்பர்களும் இந்த வேலைக்கு வர விரும்புகிறார்கள்.

ஊரில் எங்கு தீப்பிடித்தாலும் இவர்கள் டீம் அங்கு இருக்கும், எல்லாம் நல்ல படியாக போக தேர்வு நாளும் நெருங்குகின்றது. தேர்வுக்கு முந்தைய நாள் விக்ரம் பிரபுவின் நண்பர் ஒருவரை ஒரு ரவுடி வம்புக்கு இழுக்க, அவர் அந்த ரவுடியை கீழே தள்ளிவிடுகின்றார்.

அந்த ரவுடி கீழே விழும் போது தலையில் அடிப்பட்டு இறந்துபோகின்றார். அதை தொடர்ந்து தான் தெரிய வருகின்றது அந்த ரவுடி சென்னையை கலக்கும் புலியத்தோப்பு ரவியின் நண்பர் என்று.

இதன் பிறகு விக்ரம் பிரபு அவருடைய நண்பர்கள் அந்த ரவுடியிடம் இருந்து தப்பித்தார்களா? தீயனைப்பு வீரர்கள் ஆனார்களா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விக்ரம் பிரபு வரவர கதைத்தேர்வில் மிகவும் கவனம் இழப்பது போல் தெரிகின்றது. தான் 10 பேரை அடிக்க வேண்டும் என்று சொன்னால் ஓகே சொல்லிவிடுவார் போல, இதுநாள் வரை கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என கதையின் நாயகனாக இவர் நடித்தது தான் வெற்றி பெற்றுள்ளது. அதை கொஞ்சம் அவர் மனதில் கொண்டு அடுத்த படத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்.

படம் ஆரம்பித்து 5 நிமிடம் நெருப்புடா செம்ம சூடாக செல்கின்றது, அதன் பின் நிக்கி கல்ராணியை பார்த்தவுடன் காதல், மொட்டை ராஜேந்திரனின் சிரிப்பே வராத காமெடி என படம் பொறுமையை சோதிக்கின்றது.

ஒரு வழியாக புலியத்தோப்பு ரவி தன் நண்பனை கொன்றவனை கொன்றே தீருவேன் என சபதம் எடுக்க, இனி படம் பட்டையை கிளப்பும் என இரண்டு காட்சிகள் நகர்ந்தால் மூன்றாவது காட்சி பழையப்படி புஸ் என்று ஆகின்றது.

படத்தின் டுவிஸ்ட் கொஞ்சம் கவனம் ஈர்க்கின்றது, ராஜசேகரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றது, ஷான் ரோல்டன் பின்னணி இசை சூப்பர்.

க்ளாப்ஸ்

கிளைமேக்ஸ் டுவிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் ஒர்க்.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை.

பல்ப்ஸ்

படத்தின் கதை ஓகே என்றாலும் திரைக்கதை நகர முடியாமல் மெதுவாகவே செல்கின்றது.

மொத்தத்தில் டைட்டிலில் உள்ள நெருப்பு படத்தின் திரைக்கதையில் இல்லவே இல்லை.

http://www.cineulagam.com/films/05/100860?ref=review_section

Link to comment
Share on other sites

தனியார் தீயணைப்பு படை தீயாக வேலை செய்திருக்கிறதா? - நெருப்புடா விமர்சனம்

 
 

`தீயணைப்பு வீரனாக வேண்டும்' என்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக்கொண்ட ஐந்து இளைஞர்கள். அவர்களது லட்சியம் நிறைவேறியதா அல்லது தாறுமாறாகத் தடம் மாறியதா என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறது `நெருப்புடா'.

நெருப்புடா

 

சென்னை சிலேட்டர்புரத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரம்பிரபுவும் அவரின் நான்கு நண்பர்களும். சிறுவயதிலேயே ஐவருக்கும் தீயணைப்பு வீரர்களாக வேண்டும் என்ற ஆசை, மனதில் தீயாய்ப் பற்றி எரிகிறது. வளர்ந்து வாலிபர்களான பிறகு, தனியாகத் தீயணைப்பு வண்டிவைத்து தன்னார்வமாகத் தீயணைக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். தீயணைப்புத் துறை வேலைக்கும் விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான தேர்வு எழுதுவதற்கு முதல் நாள் திடீரென ஒரு `விபத்து' நடக்கிறது. எதிர்பாராத ஒரு கைகலப்பில் பிரபல ரௌடியான மதுசூதனன் ராவின்  நண்பன் வின்சென்ட் அசோகன் இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு ரெளடி - நண்பர்கள் இடையிலான துரத்தல்கள்தான் கதை. 

விக்ரம்பிரவுக்கு, கதாநாயகனாக இது 10-வது படம். நடிப்பில் அதற்கேற்ற முதிர்ச்சியும் தெரிகிறது. `எங்க வேலை ஒரு உசுர எடுக்கிறது இல்லை; உசுர காப்பாத்துறது' என சில நேரங்களில் அடங்கிப்போவதும், தன் நண்பர்களின்மேல் யாரேனும் கை வைத்தால் முஷ்டியை முறுக்கிக்கொண்டு கிளம்புவதுமாக ரணகளப்படுத்தியிருக்கிறார். விக்ரம்பிரபுவின் நண்பர்களாக வரும் வருண், `கயல்' வின்சென்ட், ராஜ்குமார் ஆகியோர் வந்துபோகிறார்கள். 

`மாநகரம்', `பண்டிகை' வரிசையில் இந்தப் படத்திலும் அதே `தாதா' கதாபாத்திரம் மதுசூதனன் ராவுக்கு. சமயங்களில் தெலுங்குப் பட வில்லனைப்போல ஓவராக சவுண்டுவிடுகிறார். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் வருவதைப்போல இரண்டு டூயட் ஆடி, க்ளைமாக்ஸில் ஹீரோ காப்பாற்றுவதற்காகக் கைகள் கட்டப்பட்டுக் காத்துக்கிடக்கிறார் நிக்கி கல்ராணி. துப்புரவுத் தொழிலாளியாகவும் விக்ரம்பிரபுவின் அப்பாகவும் பொன்வண்ணன் பாவமோ பாவம். `நான் கடவுள்' ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். `ஆடுகளம்' நரேன், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் படத்தில் `ஆஜர் சார்' சொல்கிறார்கள். 

ஷான் ரோல்டனின் பின்னணி இசை, பொதுவான கமர்ஷியல் பட ஃப்ளேவரிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம், காட்சிக்குக் காட்சி தீயாக வேலைசெய்திருக்கும் ராஜசேகரின் ஒளிப்பதிவுதான். தீப்பற்றி எரியும் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார். ஆனால், நண்பர்கள் ஐவரையும் ஒரே ஃப்ரேமில் அடக்க நினைத்து, ஒரே மாதிரியான ஆங்கிள்கள் ரிப்பீட் அடித்திருக்கின்றன. படத்தின் ஓட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காதவண்ணம் வேலைபார்த்திருக்கிறது படத்தொகுப்பாளர் தியாகுவின் கத்தரி. சூப்பர் சுப்பராயன் மற்றும் திலீப் சுப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. 

நெருப்புடா

எல்லா காட்சிகளும் வித்தியாசமாக ஆரம்பித்து, வேறுவிதமாகப் பயணித்து, தமிழ் சினிமாவின் ஆண்டாண்டு கால மரபுப்படியே ஏதேனும் ஒரு க்ளிஷேவில் முடிவது, தட் `ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு, ஃபினிஷிங் சரியில்லையே' மொமன்ட். படத்தின் வில்லன் புளியந்தோப்பு ரவி (மதுசூதனன் ராவ்)க்கு போலீஸ், ரௌடி என எல்லோரும் வசனம் பேசியே செம பில்டப் ஏற்றுகிறார்கள். ஆனால்  அவரோ, ஆவேசமாக காரைக் கிளப்பி, புளியமரத்தில் மோதுகிறார்; விக்ரம்பிரபுவின் ஒரே அடிக்குக் கீழே விழுகிறார்; எதிர்பாராத `வில்லன்' கதாபாத்திரத்தால் எதிர்பாராமல் தீர்த்துக்கட்டப்படுகிறார். என்னதான் ஆச்சு இந்த வில்லனுக்கு?

இதற்கிடையில், ``தலைமறைவாக இருக்கும் புளியந்தோப்பு ரவி வெளியே வரட்டும், என்கவுன்டர்ல போட்டுடுவோம்" என்று அடிக்கடி சொல்லும் போலீஸ் அதிகாரி நரேனோ, ரூமைவிட்டு வெளியே வரவேயில்லை. `புளியந்தோப்பு ரவி'யோ சென்னையின் பல இடங்களில் தாராளமாகச் சுற்றித் திரிவதோடு, மொட்டைமாடிக்கு வந்து நடுராத்திரி விக்ரம்பிரபுவை மிரட்டிவிட்டும் போகிறார்.  தமாசு... தமாசு! வில்லனின் நண்பன் இறந்துவிடுவதால்தான் அவர் `வெளியே' வருவார் என்கிறார் போலீஸ் ஆபீஸர் நரேன். ஆனால், மதுசூதனனோ செத்த நண்பனுக்கே சுடுகாட்டில் கொள்ளி போடுகிறார். ஆனால், அங்கே போலீஸ் மிஸ்ஸிங், லாஜிக்கும்கூட. 

ஒட்டுமொத்த படத்துக்குள் குறைந்தது ஐந்து இடங்களிலாவது `சுபம்' போட்டு முடிக்கலாம். ஒரு கதைக்குள்ளேயே பல கதைகள் ஆரம்பித்து முடிகின்றன. எப்போது எழுந்து வந்தாலும் படம் முடிந்திருக்கும் ஃபீல்தான். அத்தனை க்ளைமாக்ஸ் படத்தில். ``எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு தெரிஞ்சு வெச்சு அடிச்சிருக்கான்டா", ``நான் சொல்லலை... இந்த ரிப்போர்ட் சொல்லுது'', ``என் இத்தனை வருஷ சர்வீஸ்ல..." என்று பழைய வசனங்களில் சுள்ளி கொளுத்தி விளையாடியிருக்கிறார்கள். 

விக்ரம்பிரபுவும் அவரது நண்பர்களும் தனியாக ஒரு தீயணைப்பு வண்டி வைத்து, யூனிஃபார்மும் போட்டுக்கொண்டு தீயணைக்கப்போவது எல்லாம் எந்த நாட்டில் சார் நடக்கும்? க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஆனால், அதில் அர்த்தமும் இல்லை; அழுத்தமும் இல்லை. 

 

பரபரப் பட்டாசாக வெடிக்காமல் புஸ்வாணமாகப் போய்விடுவதால், நெருப்பு இல்லாமல் புகைய மட்டுமே செய்கிறது. 

http://cinema.vikatan.com/movie-review/101732-neruppuda-movie-review.html

Link to comment
Share on other sites

திரை விமர்சனம்: நெருப்புடா

 

 
neruppudareviewjpg

சிறு வயதில் இருந்தே, தீயணைப்பு வீரர் ஆகும் கனவோடு வளர்கிறார் விக்ரம் பிரபு. அவரது 4 நண்பர்களும் அப்படியே. சொந்தமாக தீயணைப்பு வண்டியை வைத்துக்கொண்டு, எங்கு தீப்பிடித்ததாக தகவல் கிடைத்தாலும் உடனே ஓடிச்சென்று அணைக்கின்றனர். இதை வெகுவாகப் பாராட்டும் தீயணைப்பு அதிகாரி நாகிநீடு, இவர்களுக்கு தீயணைப்புத் துறையில் வேலை வாங்கித்தர விரும்புகிறார். கூடவே, நாகிநீடுவின் மகளான நிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு மீது காதலும் மலர்கிறது. இந்நிலையில் விக்ரம் பிரபுவின் நண்பர் வருண், எதேச்சையாக ஒரு ரவுடியுடன் மோதுகிறார். அதில், ரவுடி இறக்க, விக்ரம் பிரபு அன் டீம் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அவர்களது கனவு, காதல் நிறைவேறியதா? என்பது கதை.

ஆக்சன் பின்னணியில் காதல், பாசம், சேவை மனப்பான்மை என்று சுழலும் திரைக்கதை. தீயணைப்பு வீரர்களின் பணி எவ்வளவு ஆபத்தானது என்பதை முதல் காட்சியில் அழகாகச் சொல்லிவிடுகிறார் அறிமுக இயக்குநர் அசோக் குமார். பற்றியெரியும் குடிசைகளில் இருந்து குழந்தைகள், முதியவர்களை விக்ரம் பிரபு காப்பாற்றும்போது பரபரப்பும், பதற்றமும் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. ஆனால், அந்தக் காட்சியோடு, பரபரப்பும், சுவாரசியமும் நம்மிடம் இருந்து விடைபெற்றுவிடுகின்றன.

தனது உயரம், ஆக்சனால் பாத்திர வார்ப்புக்குச் சரியாகப் பொருந்துகிறார் விக்ரம் பிரபு. நண்பர்களுக்காக வாழ்வது, ரவுடியுடன் நெஞ்சை நிமிர்த்தி மோதுவது, பார்த்தவுடன் காதல் நெருப்பு பற்றிக்கொள்வது என ஸ்கோர் செய்கிறார். மருத்துவ மாணவியாக வரும் நிக்கி கல்ராணிக்குக் காதலிப்பதைத் தவிர வேறு வேலையை இயக்குநர் கொடுக்கவில்லை. விக்ரம் பிரபுவின் அப்பா பொன்வண்ணன், கழிவுநீர் அகற்றும் தொழிலாளியாக சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். அவர்கள் இடையிலான தந்தை – மகன் காட்சிகள் நெகிழ வைக்கின்றன.

படத்தின் க்ளைமாக்ஸில் திருநங்கையாக வந்து வெடிக்கிறார் சங்கீதா. தோற்றம், பாவனை, உடல்மொழியில் பாத்திரத்துக்கு நன்கு பொருந்தி நடித்திருக்கிறார். ஆனால், அத்தனை ரவுடிகளையும் ஓரே இடத்தில் கொலை செய்வது நம்பும்படி இல்லை. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இன்னும் எத்தனை காலத்துக்குதான் மொக்கை காமெடிகளை செய்யப்போகிறாரோ தெரியவில்லை. ‘ஆடுகளம்’ நரேன் விரைப்பான போலீஸ் கமிஷனராக வருகிறார். ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்யவேண்டும் என முடிவெடுக்கும் அவர், ஒரு அறைக்குள் அமர்ந்துகொண்டு வெறும் பேச்சளவிலேயே இதைப் பேசிக் கடத்துவது, படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. திடீர் மோதலில் இறக்கும் ரவுடி, அவருக்காக துடிதுடிக்கும் மற்றொரு ரவுடி என்று படத்தில் திருப்பம் கொடுக்க முயற்சித்து உள்ளே வரும் புதிய கதாபாத்திரங்கள் அனைத்தும் சுவாரசியமின்றி நகர்வது பெரிய பலவீனம்.

ஷான் ரோல்டனின் இசையில், ‘ஆலங்கிளியே..’ பாடல் தாளம் போட வைக்கிறது. தீ ஜுவாலையை உஷ்ணம் குறையாது படம்பிடித்துள்ளார்ஆர்.டி. ராஜசேகர். சிலேட்டர்புரம் ஏரியா பின்னணியில் ஆங்கிலேயர் கால மணிக்கூண்டு கோபுரத்தை வடிவமைத்த கலை இயக்குநர் எம்.பிரபாகரனின் உழைப்பும், ரசனையும் அழகு.

‘பற்றியெரிகிற நெருப்பு என்னத்த வேணாலும் எடுத்துட்டுப் போகலாம். ஆனா ஒரு உயிரைக்கூட எடுத்துக்கிட்டுப் போக விடமாட்டோம்’ என்று நெருப்போடு பயணிக்கும் இளைஞர்களின் வேகம், அரைமணி நேரத்துக்கு ஒருமுறை வலிய திணிக்கப்பட்ட ட்விஸ்ட்களால் வேகம் இழந்து நகர்கிறது. தலைப்பில் இருந்த ‘நெருப்பை’ திரைக்கதையே தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டது!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19654839.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.