Jump to content

எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை!


Recommended Posts

எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை!

 

எண்பது வயதான தமிழ் ஆசிரியை ஒருவர் முதுகலைமானி பட்டம் பெற்ற பெருமைமிகு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்பது வயது நிரம்பிய குறித்த ஆசிரியை தனது விடாமுயற்சியின் பயனால் மூத்த வயதிலும் முதுகலைமானி பட்டப்படிப்பை நிறைவு செய்து தாயகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியின் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த, திருமதி யோகரட்ணம் செல்லையா எனும் பெயர்கொண்ட குறித்த ஆசிரியை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார்.

கடந்த வாரம் இறுதிப் பகுதியில், அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாகத்தினரின் பட்டமளிப்பு விழா யோர்க்வூட் நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்படி, ரொறன்ரோ, 1785 பின்ச் அவெனியூவில் உள்ள யோர்க்வூட் நூல் நிலையத்தில் நடைபெற்ற குறித்த பட்டமளிப்பு விழாவில் திருமதி யோகரட்ணம் ஆசிரியை பட்டம் பெற்றார்.

மூத்த வயதிலும் முதுமானி பட்டம்பெற்ற யோகரட்ணம் ஆசிரியை, திருக்குறளிற்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் விளக்கவுரை தந்த ஒருவராவார். அத்துடன் பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம் - 4 (மீசாலை) நூலை வெளியிட்டதோடு, மறைந்த முத்தமிழ் வித்தகர் திரு. அ.பொ. செல்லையா அவர்களின் மனைவி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை!

எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை!

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-achievement-of-a-senior-Tamil-teacher

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தும் வயதில்லை வணங்குகின்றேன் தாயே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணங்குகின்றேன் தாயே.....அசாத்தியமான செயல் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்து பாரக்கவே முடியவில்லை. எப்படியம்மா?

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

40 வயசாகிட்டுது இனி Masters செய்வது சரிவராது என்று சோம்பல் பட்டுக் கொண்டு இருந்த எனக்கு இவர் செயல் உற்சாகமூட்டுகின்றது. வாழும் உதாரணம் இவர்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மணி..!

416304_rozy_krasnye_buket_cvety_lentochk

 

12 minutes ago, நிழலி said:

40 வயசாகிட்டுது இனி Masters செய்வது சரிவராது என்று சோம்பல் பட்டுக் கொண்டு இருந்த எனக்கு இவர் செயல் உற்சாகமூட்டுகின்றது..

நான் முதுநிலை பட்டம் பெற்றபோது என் வயது 39. குடும்பப் பொறுப்புகளில் கவனம் சிதறினாலும், மனதை ஒருநிலைப்படுத்தி முயன்றால் வெற்றி சாத்தியமே..!  lirebougie.gif

மனமிருந்தால் மார்க்கமுண்டு..! Good luck..news1.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் என்றாலே எனக்கு பிடிக்காது ஆனால் படிப்பு ஒரு மனிதனை பூரணப்படுத்துகிறதா படிக்காத மேதைகள் என்று எழுத்தில் மட்டும் ஏன் சொல்லுகிறார்கள் அப்போ பட்டம் பெற்றவர்கள் மட்டும் தானா மேதைகள் அறிஞர்கள் எல்லாம் சின்ன டவுட்டு  

வாழ்த்துக்கள் பாட்டி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏட்டுச்சுரக்காய் எம் மக்கள் மத்தியில் நன்றாக ஊறிவிட்டது.என்டாலும் வாழ்த்துக்கள் அம்மனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க ...வாழ்த்துக்கள் ...அம்மா...உண்மையான பட்டம் பெற்றவர்களின் மதிப்பையும் கனடிய இந்திய கல்வி முறை மதிபிழக்க வைக்கிறதோ என்றூ சிந்திக்க வைக்கிறது பட்டமளீப்பு முறை...ஊரிலை ஓ.எல் தாண்டாதவனும் M.A  பட்டமெடுக்கிறார்...college students..பேராதனை,மொரட்டுவை என்கினம்.....எதையப்பா நம்புறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்பதிலை நான் உங்களை மாதிரி எழுந்துநிக்கவே திராணியிருக்குமோ தெரியலை
நீடுழி வாழ்க என வாழ்த்துகிறேன் தாயே- உங்களின் இந்த முயற்சி அதி உச்ச அர்ப்பணிப்பு.
மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.