Jump to content

உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்!


Recommended Posts

உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்!

 

இலங்கையின் மலையகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த, தொடருந்து ஒன்றில் பயணித்த தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பதுளை நோக்கிச் செல்லும் ’உடரட்ட மெனிக்கே’ என்ற பெயரைத் தாங்கிய தொடருந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொடருந்தினுள் தமிழ் பெண் ஒருவர் நடந்துகொண்ட பண்பினை வியந்தே மேற்படி தென்னிலங்கை சிங்கள இனத்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த உடரட்ட மெனிக்கே தொடருந்தில் கொழும்பை சேர்ந்த ஒருவர் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளார். அந்த வேளையில் கூட்டம் அதிகமாக இருந்ததனால் அவர் பிள்ளையுடன் அவதியுறுவதைப் பார்த்த குறித்த தமிழ்ப் பெண், அவரது பிள்ளையினை வாங்கி தனது மடியில் வைத்திருந்தார்.

உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்!

இவ்வாறு மடியில் பிள்ளையை வைத்துப் பயணம் செய்துகொண்டிருந்தபோது தொடருந்தின் வேகத்தினால் உள்ளே காற்று பலமாக வந்துகொண்டிருந்தது. இதனால் அந்த பெண், தனது மடியில் வைத்திருந்த பிள்ளையின் மீது காற்றுப் படாதவாறு கைகளை அணைத்து கொண்டு நீண்ட தூரம்வரை பயணித்துள்ளார்.

இதனைக் கண்ணுற்று கொழும்பில் இருந்து சென்ற சிங்களவர் தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“இன்று காலை உடரட்ட மெனிக்கே தொடருந்தில் தமிழ் தாய் ஒருவர் எனது பிள்ளையை தனது கரங்களில் பெற்றுக் கொண்டார்” என புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவைப் பார்த்த அவரது பேஸ்புக் சிங்கள நண்பர்கள் பலர், குறித்த தமிழ்ப் பெண்ணுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துள்ளதுள்ளனர். அத்துடன் தமிழர்கள் மிகவும் அன்பானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை தூண்டிவிடுவதில் இந்த நாட்டு அரசியல்வாதிகளே முன்னிற்கின்றனர் என பலர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை மேலும் அழகாக பதிவிட்டு பலருக்கு இதனை சுட்டிக்காட்டியிருக்கலாம் என பெரும்பாலான சிங்கள நண்பர்கள் தங்களின் ஆதங்கத்தை குறித்த பதிவின்கீழ் வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடருந்து பயணத்தில் நீண்ட தூரம் இன்னொருவரது பிள்ளையை தனது மடியில் வைத்துப் பயணிக்கும்போது உள்ள அசௌகரியத்தினையும் பொருட்படுத்தாது இந்த அவசரமான உலகத்திலும் பிறர் பிள்ளையையும் தன் பிள்ளை போல பார்த்துக்கொண்ட அந்த தமிழ்ப் பெண் தமிழர் பண்பாட்டின் பெருமைமிகு ஒர் எடுத்துக்காட்டாவார்!

உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tamil-girl-who-reveals-motherhood

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.