Jump to content

அவுஸ்திரேலியாவில்... ஆட்டு இறைச்சி சாப்பிடும், விநாயகர் விளம்பரத்தால் சர்ச்சை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆட்டுக்கறி சாப்பிடும் விநாயகர்... ஆஸ்திரேலிய நிறுவனத்தின் விஷமத்தால் சர்ச்சை!

ஆஸ்திரேலியாவின் இறைச்சி நிறுவனம் ஒன்று இறைச்சி குறித்து வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இந்து மதக் கடவுளான விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனம் ஆட்டு இறைச்சி விளம்பரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், இயேசு, புத்தர், ஜுலியஸ் சீசர் என பலரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகின்றனர்.

அப்போது இறுதியில் இறைச்சி சாப்பிடுவோம் என்று சொல்வது போல அந்த விளம்பரம் படமாக்கப்பட்டுள்ளது. சுமார் 2.09 நிமிடங்கள் ஓடும் இந்த விளம்பரத்தில் கடவுள்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர். இறுதியில் அனைவரும் ஒட்டுமொத்தக் குரலில் லேம்ப் சாப்பிடுவோம் என்று சொல்வது போல விளம்பரம் உள்ளது.

ஆதாயத்திற்காக கொச்சைப்படுத்துவதா?

இந்து கடவுள் விநாயகரை அவமதிப்பதாக விளம்பரம் உள்ளது என ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் முகநூல் பக்கத்தில் தன்னடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில் ஆஸ்திரேலிய இறைச்சி மற்றும் லைவ்ஸ்டாக் நிறுவனம் ஆட்டுக்கறி நுகர்வை விளம்பரப்படுத்துவதற்காக இந்துக் கடவுள் விநாயகரை பயன்படுத்தியிருக்கிறது.

உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன, ஆஸ்திரேலியாவிலும் இந்து மதத்தினர் குறிப்பிட்ட காலத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர். ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக அனைத்து மதக் கடவுளையும் பயன்படுத்தி ஆதாயம் அடைய விரும்புகின்றனர்.

கடும் கண்டனம்

இது போன்ற விளம்பரங்களால் எழும் எதிர்ப்புகள் விளம்பரத்தை ஏற்படுத்தும், ஆனால் இந்த விஷயத்தில் நடக்காது என்றும், தேவையில்லாத இந்த விளம்பரம் நீக்கப்பட வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கார்த்திக் அரசு என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சில நிமிட விளம்பரத்திற்காக மற்ற மதத்தினரின் நம்பிக்கை மதிக்கத் தவறி விட்டதாக அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் இது போன்று இந்துக் கடவுள்கள் தவறாக சித்தரிக்கப்படுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டுமானால் ஆட்டுக்கறியை புறக்கணிப்போம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

- தற்ஸ்  தமிழ். -

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.