Jump to content

முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் வைகோ


Recommended Posts

முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் வைகோ

 

 
murasoli

சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது.

இந்த விழாவில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர்(காங்.), ஜவாஹிருல்லா (ம.ம.க.), க.வீரமணி(தி.க), காதர் மொய்தீன் (இ.யூ.மு.லீ) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறுகிறார் வைகோ. முரசொலி பவள விழாவில் மாணவி அனிதா மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.

ஆனால், பலத்த மழை பெய்ததால் பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் இன்று நடைபெற்றது. 

http://www.dinamani.com/latest-news/2017/sep/05/முரசொலி-பவளவிழா-பொதுக்கூட்டம்-11-ஆண்டுகளுக்குப்-பிறகு-திமுக-மேடையில்-வைகோ-2767843.html

Link to comment
Share on other sites

கருணாநிதி உரையாற்றுவதை தமிழ்ச் சமூகம் காண வேண்டும்: முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உருக்கம்

 

 
06CHRGNDMKMEET

சென்னை கொட்டிவாக்கத்தில் நேற்று நடந்த முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ, திருநாவுக்கரசர், இரா.முத்தரசன், துரைமுருகன் உள்ளிட்டோர்.   -  படம்: ஜி.கிருஷ்ணசுவாமி

திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றுவதை தமிழ்ச் சமூகம் காண வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யின் 75-வது ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டம், சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

இந்த நேரத்தில், கருணாநிதியுடனான பழைய நினைவுகள் என் கண்முன் நிற்கின்றன. நெருக்கடி காலத்தில் நான் சிறையில் இருந்தபோது முரசொலி 3 நாட்கள் தாமதமாகத்தான் எங்கள் கைகளில் கிடைக்கும். நான் உரத்தக்குரலில் முரசொலியை வாசிப்பேன். மற்ற தோழர்கள் சுற்றியிருந்து கேட்பார்கள். கடந்த 2004-ம் ஆண்டு பொடா வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது கருணாநிதி என்னை 2 முறை வந்து பார்த்தார். அப்போது முரசொலியில், என்னைப் பற்றியும் என் கொள்கை உறுதியைப் பற்றியும் அவர் குறிப்பிட்டதை மறக்கவே முடியாது. இப்போது பவளவிழா கொண்டாடும் முரசொலிக்கு நூற்றாண்டு விழா நடக்கும். கருணாநிதி நலமுடன் வாழ வேண்டும். அவர் உரையாற்றுவதை தமிழ்ச் சமூகம் காண வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: தமிழகத்தில் தற்போது மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. முதல்வர் கே.பழனிசாமி தனக்கு பெரும்பான்மை இருப்பதாக நினைத்தால், சட்டப்பேரவையைக் கூட்டி அதை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: முரசொலி ஓர் ஏடு அல்ல. அது ஓர் இயக்கம், கருத்தியலை, அடிப்படையாகக் கொண்டது. முரசொலியைப் படித்தவர்கள் அதில் இருந்து விடுபட முடியாது. நானே அதற்கு ஒரு சாட்சி. நூலகங்களில் காத்துக்கிடந்து அந்த நாளிதழைப் படித்திருக்கிறேன். மாநில சுயாட்சியையும், மாநில உரிமைகளையும், மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் போன்றோரையும் முரசொலி மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நாட்டின் விடுதலைக்கு தலைமை தாங்கிய மகாத்மா காந்தியை குண்டுகளால் துளைத்த கூட்டம் இன்று மத்தியில் ஆட்சியில் உள்ளது. அவர்களிடம் மண்டியிட்டு கிடக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. இதை எதிர்த்துப் போராட வேண்டும். முரசொலி படிக்காதவர்கள் அரசியல்வாதிகளாக இருக்க முடியாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: முரசொலியின் வரலாற்றை, கருணாநிதியின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது. கருணாநிதியின் வரலாற்றை முரசொலியின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது. சமூக நீதி, மாநில உரிமைகளை பாதுகாக்க கருணாநிதி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாரோ, அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க ஜனநாய சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பேராயர் எஸ்றா சற்குணம், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் பி.என்.அம்மாசி, தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் என்.சேதுராமன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

திமுக செயல் தலைவரும் முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார். முன்னதாக, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்று நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார். விழாவில் கனிமொழி எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19628781.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.