Jump to content

மே.இ.தீவுகள் அணியும் கிரிக்கெட்டை நேர்மையாக ஆடவில்லை: சம்பவங்களுடன் பிரையன் லாரா சாட்டையடி


Recommended Posts

மே.இ.தீவுகள் அணியும் கிரிக்கெட்டை நேர்மையாக ஆடவில்லை: சம்பவங்களுடன் பிரையன் லாரா சாட்டையடி

 
 
holding

நடுவர் மீதான அதிருப்தியில் ஸ்டம்பை உதைக்கும் ஹோல்டிங்.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

Lara%202

பிரையன் லாரா.   -  கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ்.

 

 

லார்ட்ஸில் எம்.சி.சி. கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கான கவுட்ரி சொற்பொழிவாற்றிய பிரையன் லாரா, முன்னணி அணிகள் ஆட்டத்தின் நேர்மையைப் பாதுகாக்க உத்தரவாதம் அளித்து ஆட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் 90-களில் மே.இ.தீவுகள் அணி நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்றும் ஒரு முன்னிலை அணி அவ்வாறு நடந்து கொண்டது இளம் வீரரான தனக்கு மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்ததாக மிகவும் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார் பிரையன் லாரா.

1980களிலும் 90-களின் ஆரம்பங்களிலும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் உலகை ஆதிக்கம் செலுத்தினாலும் சில வேளைகளில், “வீர்ர்கள் ஆடிய விதம் ஒரு ஆட்டத்தை எப்படி ஆடக்கூடாதோ அந்த உணர்வில் இருந்தது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது” என்றார்.

குறிப்பாக 1980-ல் நியூஸிலாந்தில் நடைபெற்ற மே.இ.தீவுகள் ஆடிய டெஸ்ட் தொடர் கிரிக்கெட் உலகில் அப்போது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இன்று பிரையன் லாரா அதனைக் குறை கூறினாலும் அந்தத் தொடரில் நியூஸிலாந்து நடுவர்கள் நடந்து கொண்ட விதம் எந்த ஒரு பொறுமைசாலியையும் நிலைதடுமாறச் செய்யக்கூடியதுதான்.

ரிச்சர்ட் ஹாட்லிக்கு மட்டும் ஒரு இன்னிங்ஸில் 9 அவுட்கள் தரப்படவில்லை என்பது ரெக்கார்டில் உள்ளது. ஆனால் லாரா அப்போதைய மே.இ.தீவுகள் வீரர்களின் நடத்தையை இன்றைய பார்வையிலிருந்து அலசுகிறார்.

கோலின் கிராஃப்ட் ஓடி வந்து நடுவரின் தோளில் இடித்தார், மைக்கேல் ஹோல்டிங் ஸ்டம்பை எட்டி உதைத்தார். அது சர்ச்சைக்குரிய நடத்தைதான் இருந்தாலும் நடுவர் மோசடிகளைத் தட்டிக் கேட்பது யார்? ஆனால் லாராவுக்கு கொலின் கிராப்ட், மைக்கேல் ஹோல்டிங் நடத்தைப் பிடிக்கவில்லை. இந்தத் தொடரோடு 1988 பாகிஸ்தான் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான 1990ம் ஆண்டு தொடர்களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு அப்போதைய மே.இ.தீவுகள் அணியின் நடத்தை அணுகுமுறைகளை விளாசினார் பிரையன் லாரா:

“நான் மே.இ.தீவுகள் அணி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் நுழைந்தேன். 1980-லிருந்து 15 ஆண்டுகள் மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. இதற்கு முன்பாகத்தான் கொலின் கிராப்ஃட் நியூஸிலாந்து நடுவர் பிரெட் குடாலை மோதித்தள்ளினார். மைக்கேல் ஹோல்டிங் தான் ஒருபோதும் கிரிக்கெட் வீரனல்ல, கால்பந்து வீரன் என்பது போல் ஸ்டம்புகளை எட்டி உதைத்தார். அந்தக் காலத்தில் இத்தகைய சம்பவங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தின.

மே.இ.தீவுகள் வெற்றி மேல் வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்தாலும் அந்தக் காலக்கட்டம் பெருமைக்குரியதாக இல்லை. சில நடத்தைகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தின. 1988-ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இம்ரான் கான் பந்தில் விவ் ரிச்சர்ட்ஸ் ஒரு எல்.பி. தீர்ப்பில் அவுட் தரப்படாமல் இருந்தது அவரது அதிர்ஷ்டம், அப்துல் காதிர் பந்தில் ஜெஃப் டியூஜான் கேட்ச் முறையீட்டுக்கு தப்பித்தது அதிர்ஷ்டம். வீரர்கள் தாங்கள் அவுட் என்று தெரிந்தால் தாங்களே வெளியேற வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்ற பிரையன் லாரா, 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மே.இ.தீவுகள் நடத்தையை சிறிதும் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

“அனைவரும் கூறினர் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பேயில்லை என்று. ஆனால் ஜமைக்காவில் வென்றனர். டிரினிடாடில் மழைக்குப் பிறகும் கூட சிறிய இலக்கை விரட்டி வெல்லக்கூடிய அளவுக்கு கால அவகாசம் இருக்கவே செய்தது. ஆனால் மைதான பராமரிப்பாளர்களும் மைதான நிர்வாக அதிகாரிகளும் ஆட்ட நாயகன் விருதுக்காக போராடியது போல்தான் இருந்தது அவர்கள் செய்த காரியம். தாமதப்படுத்திக் கொண்டே சென்றனர், அதாவது இந்தப் போட்டி நடைபெற்று விடக்கூடாது என்பதில் அனைவரும் தீவிரமாக செயல்பட்டது போல் மந்தமாக நடந்து கொண்டனர்.

ஆனால் 2 மணி நேர ஆட்டம் சாத்தியமானது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் கால அவகாசம் இருந்தது. ஆனால் நாங்கள் என்ன செய்தோம் ஒரு மணி நேரத்தில் 7 ஓவர்களை மட்டுமே வீசி எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதப்படுத்தினோம். ஒரு மணி நேரத்தில் 7 ஓவர்களையே வீசியதால் வானிலை மோசமடைய வெளிச்சமில்லாமல் போனது, இதனையடுத்து கிரகாம் கூச் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்றார். (151 ரன்கள் வெற்றி இலக்குக்கு எதிராக இங்கிலாந்து 120/5 என்று முடிந்து ஆட்டம் டிரா ஆன டெஸ்ட் போட்டியை லாரா குறிப்பிடுகிறார்).’’

ஒரு இளம் மே.இ.தீவுகள் வீரரான எனக்கு இது பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மே.இ.தீவுகள் அணி தோல்வியைத் தவிர்க்க காலத்தை விரயம் செய்ததைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது. ஆட்டத்தை எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடவில்லை.

நான் அந்தப் போட்டியில் 12-வது வீரர். எனக்குக் குற்ற உணர்வாக இருந்தது. நான் மைதானத்துக்குள் ஷுலேஸ்கள், வாழைப்பழம், தண்ணீர், இருமல் மாத்திரைகள் என்று எடுத்துச் சென்று கொண்டிருந்தேன் (தாமதப்படுத்துவதற்காக). ஆனால் எனக்கு உண்மையில் தர்மசங்கடமாக இருந்தது.

இன்னொரு சம்பவம் அதே தொடரில்.. பார்படாஸில் அடுத்த டெஸ்ட், இதுவும் சவாலாக ஆடப்பட்ட டெஸ்ட் போட்டி, ராப் பெய்லி ஆடிக்கொண்டிருக்கிறார், அவர் லெக் திசையில் ஒரு பந்தை ஆடினார், ஜெஃப் டியூஜான் (வி.கீ) டைவ் அடித்து பந்தை பிடிக்கிறார். அப்போது கேட்ச் முறையீடு எழுந்தது, முதல் ஸ்லிப்பிலிருந்து பீல்டர் ஒருவர் (நான் அவர் பெயரைக் கூறப்போவதில்லை) நடுவரிடம் சென்று அவுட் என்கிறார். நடுவர் யோசிக்கிறார் யோசிக்கிறார் யோசித்து யோசித்து கடைசியில் அவுட் என்று கையை உயர்த்துகிறார். பெய்லி வெளியேறுகிறார், ஆனால் அது உண்மையில் அவுட் இல்லை. நாட் அவுட்.

இங்கிலாந்து அந்த டெஸ்ட் போட்டியை இழந்து மே.இ.தீவுகள் ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றுகிறது.

ஒரு மேற்கிந்திய வீரனாக எனக்கு இது வேதனை அளிக்கிறது. இது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு தருணமாகும். உலகின் தலைசிறந்த அணியான மே.இ.தீவுகள் கிரிக்கெட்டை வித்தியாசமாக ஆட வேண்டும் என்றே நான் உணர்ந்தேன்.

இப்படி வெற்றி பெற்றதனால் அணியின் உண்மையான பலவீனம் மறைக்கப்பட்டது, தோற்றிருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். 1995-ம் ஆண்டு நாங்கள் தோற்றபோது மே.இ.தீவுகள் வீழ்ச்சி தொடங்கியதாக அனைவரும் கூறினார்கள், ஆனால் கிரேட் பிளேயர்கள் ஆடிய காலத்திலேயே சரிவு கண்டோம் என்றே நான் உணர்கிறேன்.

1988, 1990-ல் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றிருந்தால் மே.இ.தீவுகள் கிரிக்கெட்டைச் சரிவிலிருந்து காப்பாற்ற அப்போதே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். மூத்த வீரர்களும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார்கள், ஆனால் இது நடக்கவில்லை”

இவ்வாறு கிரேட் வெஸ்ட் இண்டீஸ் அணி மீது சாட்டையடி விளாசல் உரை நிகழ்த்தினார் பிரையன் லாரா.

 

http://tamil.thehindu.com/sports/article19624997.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.