Jump to content

இலங்கைத் தம்பதி மீதான குற்றச்சாட்டை திரும்பப் பெற்றது கனடிய நீதிமன்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது.  2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது.  2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது.

   
தம்பதியருக்கு எதிரான ஆதாரங்களை முழுமையாக மீளாய்வு செய்த பின்னர், 57 வயதான சிவகுமார் குமாரவேலு மற்றும் 54 வயதான நகுலேஸ்வரி சிவகுமார் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மீளப்பெற்று கொள்வதாக Crown நீதிமன்ற அரச வழக்கறிஞர் Matthew Bloch தெரிவித்துள்ளார். மொழி ஒரு தடையாக இருந்ததுடன், என்ன நடக்கிறது என்பதை இருவரும் அறிந்திருந்தார்களா, என்பது குறித்து உண்மையில் வருத்தமாக உள்ளதென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் ஆரம்பத்தில் தண்டனைக்குரிய நியாயமான காரணங்கள் இருந்த போதிலும், Crown நீதிமன்ற மீளாய்வின் பின்னர் அவ்வாறான ஒன்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . 2015ஆம் ஆண்டு Scarborough பகுதியில் உள்ள Warden மற்றும் Sheppard Aves என்ற இடத்திற்கு அருகில் உள்ள அடமான தரகர் அலுவலகம் ஒன்றிற்கு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சென்றுள்ளனர்.

சொத்து ஒன்றினை இரண்டாவது முறையாக அடகு வைத்து 200,000 டொலர் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்காகவே இருவரும் சென்றுள்ளனர். இதன் போதே குறித்த இருவரும் Toronto பொலிஸாரிடம் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். பின்னர் இந்த தம்பதி, தரகர் மற்றும் இலங்கை மொழிக்காக மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் வழக்கறிஞர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அந்த சொத்தின் மீதான இரண்டாவது அடமானத்தில் 200,000 டொலர் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில மாதங்கள் கழித்து, உண்மையான வீட்டு உரிமையாளர், தான் வீட்டை அடமானம் செய்யவில்லை எனவும், அவ்வாறு அறிவிக்கவில்லை எனவும் கூறி நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் பின்னர் இந்த அடமான மோசடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“எனது கட்சிகாரர்கள் அப்பாவியானவர், தற்போது அவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்” என குறித்த தம்பதியின் வழக்கறிஞர் அக்னி பாலசந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வேறு இரண்டு நபர்கள் எனது கட்சிகாரர்களின் அடையாளத்தை அவர்களின் சம்மந்தம் இன்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனது கட்சிகாரர்கள் இரு முறை பாதிக்கப்பட்டவர்களாகும். ஒரு முறை குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர், இரண்டாவது முறை ஊடகங்களினால் குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர். செய்யாத குற்றத்திற்காக அவர்களின் பெயர்களும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அக்னி பாலசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் உடல் குறைபாடுடையவர் மற்றும் மனைவி வேலையற்றவர். எனினும் அவர்கள் இதனை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பாலச்சந்திரனின் அறிக்கைக்கு Crown நீதிமன்றம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. அந்த தரகர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் Collett Comrie என்ற பெண் தரகர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் அவரும் அவரது கணவரும் Keystone என்ற நிதி சேவை நிறுவனத்தை மூடிவிட்டு 2015 ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவில் இருந்து, ஜமைக்காவுக்கு சென்றுள்ளனர்.

44 வயதான Collett Comrie மற்றும் 40 வயதான Khurt Comrie ஆகிய இருவரும் பலரது பணத்தினை மோசடி செய்தவர்கள் Toronto பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவகுமார் குமாரவேலு மற்றும் நகுலேஸ்வரி சிவகுமார் தம்பதியினர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=189630&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழரசு said:

அந்த தரகர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் Collett Comrie என்ற பெண் தரகர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் அவரும் அவரது கணவரும் Keystone என்ற நிதி சேவை நிறுவனத்தை மூடிவிட்டு 2015 ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவில் இருந்து, ஜமைக்காவுக்கு சென்றுள்ளனர்.

44 வயதான Collett Comrie மற்றும் 40 வயதான Khurt Comrie ஆகிய இருவரும் பலரது பணத்தினை மோசடி செய்தவர்கள் Toronto பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவகுமார் குமாரவேலு மற்றும் நகுலேஸ்வரி சிவகுமார் தம்பதியினர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=189630&category=TamilNews&language=tamil

இவ்வளவு தமிழ் ஆக்கள் இருக்கும் போது, ஏன் ஜமைக்கர்களிடம் சென்றார்கள் இவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

இவ்வளவு தமிழ் ஆக்கள் இருக்கும் போது, ஏன் ஜமைக்கர்களிடம் சென்றார்கள் இவர்கள்?

 

1 hour ago, தமிழரசு said:

-----“எனது கட்சிகாரர்கள் அப்பாவியானவர், தற்போது அவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்” என குறித்த தம்பதியின் வழக்கறிஞர் அக்னி பாலசந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வேறு இரண்டு நபர்கள் எனது கட்சிகாரர்களின் அடையாளத்தை அவர்களின் சம்மந்தம் இன்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனது கட்சிகாரர்கள் இரு முறை பாதிக்கப்பட்டவர்களாகும். ஒரு முறை குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர், இரண்டாவது முறை ஊடகங்களினால் குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர். செய்யாத குற்றத்திற்காக அவர்களின் பெயர்களும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அக்னி பாலசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் உடல் குறைபாடுடையவர் மற்றும் மனைவி வேலையற்றவர். எனினும் அவர்கள் இதனை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பாலச்சந்திரனின் அறிக்கைக்கு Crown நீதிமன்றம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. அந்த தரகர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் Collett Comrie என்ற பெண் தரகர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் அவரும் அவரது கணவரும் Keystone என்ற நிதி சேவை நிறுவனத்தை மூடிவிட்டு 2015 ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவில் இருந்து, ஜமைக்காவுக்கு சென்றுள்ளனர்.

இவர்கள்  "ஜமைக்கர்களிடம்" உதவி கேட்டுப் போகவில்லை.
"ஜமைக்காவுக்கு" தப்பிப்  போயிருக்கலாம். பின் அங்கு சூழ் நிலை சரி இல்லை என்றவுடன் திரும்பி வந்திருப்பார்கள்.
இவர்களின் சட்டத்தரணி...   அக்னி பாலசந்திரன் திறமையானவர் போலுள்ளது. ஆட்களை சேதாரமில்லாமல், காப்பாற்றி விட்டார்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.