Jump to content

சக நாட்டு வீரரின் சாதனைக்கு முட்டுக்கட்டையாக இருந்த பொல்லார்ட்


Recommended Posts

ரந்தீவை ஞாபகப்படுத்திய பொலார்ட்
 

image_709a4e64b9.jpg

கரீபியன் பிறீமியர் லீக் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற போட்டியொன்று, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவின் செய்கைகளை ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றது.

பிரிட்ஜ்டௌணில் இடம்பெற்ற இந்தப் போட்டி, பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கும் சென். கிற்ஸ் மற்றும் நெவிஸ் பட்ரியட்ஸ் அணிக்குமிடையில் இடம்பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய, பொலார்ட் தலைமையிலான ட்ரைடென்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் டியோன் வெப்ஸ்டர் 32 (25) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கார்லொஸ் பிறத்வெய்ட் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தப்ராஸ் ஷம்ஸி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பட்ரியட்ஸ் அணி, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியது. 7 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 128 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணிக்கு ஓர் ஓட்டமே தேவைப்பட்டதோடு, 31 பந்துகளில் 97 ஓட்டங்களுடன் காணப்பட்ட எவின் லூயிஸுக்கு, சதத்துக்காக 3 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

எனினும், 8ஆவது ஓவரின் முதலாவது பந்தை வீசிய பொலார்ட், அதை முறையற்ற பந்தாக வீசினார். அது, முறையற்ற பந்தாக அறிவிக்கப்பட்டிருக்கா விட்டாலும் கூட, அகலப்பந்து என அறிவிக்கப்படும் அளவுக்கு, அகலமாகவும் வீசப்பட்டது. நடுவர் அதை, முறையற்ற பந்து என அறிவிக்க, சதம் பெறுவதற்கான லூயிஸின் வாய்ப்பு இல்லாது போனது.

2010ஆம் ஆண்டு, இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டியில், இந்திய அணி ஓர் ஓட்டத்தைப் பெற வேண்டியிருந்த போது, விரேந்தர் செவாக்குக்கு, சதத்துக்காக ஓர் ஓட்டம் தேவைப்பட்டது. ஆனால், முறையற்ற பந்தொன்றை வீசிய ரந்தீவ், செவாக், சதம் பெறுவதைத் தடுத்தார்.

அதே நடவடிக்கையையே, தற்போது பொலார்க்கும் மேற்கொண்டுள்ளார் என்று கருதப்படுகிறது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ரந்தீவை-ஞாபகப்படுத்திய-பொலார்ட்/44-203248

Link to comment
Share on other sites

சக நாட்டு வீரரின் சாதனைக்கு முட்டுக்கட்டையாக இருந்த பொல்லார்ட்

K-P-696x464.png
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

கரீபியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எவின் லுவிஸின் சாதனை வெறும் 3 ஓட்டங்களினால் கைநழுவிப் போனமைக்கு முக்கிய காரணியாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிரென் பொல்லார்ட் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

கரீபியன் பிரீமியர் லீக் T-20 போட்டித் தொடரின் இறுதி லீக் போட்டி நேற்று முன்தினம் பார்படோஸின் பிரிட்ஜ்டொவுண் மைதானத்தில் நடைபெற்றது. குறித்த போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ் ட்ரிடென்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக டியோன் வெப்ஸ்டர் 32 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கார்லொஸ் பிறத்வெய்ட் 4 விக்கெட்டுக்களையும், தப்ரிஸ் ஷம்ஸி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய பேட்ரியட்ஸ் அணி, எந்தவொரு விக்கெட்டையும் இழக்கமால் போட்டியின் 7 ஓவரில் வெற்றியிலக்கை அடைந்தது.

அவ்வணிக்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லுவிஸ் ஜோடி களமிறங்கியது. 32 பந்துகளுக்கு முகங்கொடுத்த லுவிஸ், நான்கு பௌண்டரிகள் மற்றும் பதினொரு சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பேட்ரியட்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 105 ஓட்டங்களைப் பெற்று கரீபியன் லீக் வரலாற்றில் பவர் ப்ளே ஓவரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற அணியாகவும் இடம்பிடித்தது.  

எனினும் போட்டியின் 7ஆவது ஓவர் நிறைவில் அவ்வணி 128 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெறுவதற்கு ஓர் ஓட்டம் மாத்திரமே தேவைப்பட்ட நிலையில், 31 பந்தில் 97 ஓட்டங்களைக் குவித்தி லுவிஸுக்கு சதம் பெற 3 ஓட்டங்களே தேவைப்பட்டது.

ஆனால் 8ஆவது ஓவரின் முதலாவது பந்தை வீசிய பொல்லார்ட், அதை வேண்டுமென்றே முறையற்ற பந்தாக (நோபோல்) வீசியதுடன், மறுபுறத்தில் அது அகலப்பந்தாகவும் (வைட்) அமைந்ததது. இதனால் நடுவரால் அது முறையற்ற பந்து என அறிவிக்க லுயிஸின் சதம் பெறும் வாய்ப்பு பொல்லார்ட்டால் வீணடிக்கப்பட்டதுடன் T-20 அரங்கில் 2ஆவது அதிவேக சதம் பெறும் வாய்ப்பையும் தட்டிப் பறித்தார்.

முன்னதாக .பி.எல் போட்டிகளில் பங்குபற்றி கிறிஸ் கெய்ல், 30 பந்துகளில் சதம் குவித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பொல்லார்ட், சக நாட்டு வீரர் எவின் லுவிஸின் சதம் பெறும் வாய்ப்பை தட்டிப் பறித்தமை, கனவான்களின் விளையாட்டாக கருதப்படுகின்ற கிரிக்கெட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதி என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டிகளின் போது பொல்லார்ட் எதிரணி வீரர்களை சீண்டுவதும், ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சம்பவங்கள் அதிகம் உள்ளன. இதில் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென். லூசியாஸ் ஸ்டார்ஸ் அணியின் சகலதுறை வீரர் ரஹ்கீம் கோர்ன்வேலை, பெல்லார்ட் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த சம்பவமும் அதிகளவில் பேசப்பட்டது.

அப்போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 195 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். லூசியா அணிக்காக அதிரடியாக விளையாடிய ரஹ்கீம், 44 பந்துகளுக்கு முகங்கொடுத்து 78 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் காயம் காரணமாக இடைநடுவில் மைதானத்திலிருந்து வெளியேறிய போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பொல்லார்ட், அவருடைய அருகாமையில் வந்து கைவிரலை நீட்டியவாறு ஆவேசமாக ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார்.

முன்னதாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற .பி.எல் போட்டித் தொடரின் போது அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை நோக்கி கோபத்துடன் பொல்லார்ட் துடுப்பு மட்டையை எறிந்திருந்தமை நினைவுகூறத் தக்கது.

http://www.thepapare.com

 

Link to comment
Share on other sites

கிரன் பொலாட் செய்த காரியத்தால் உலக சாதனையை பறிகொடுத்த வீரர் (வீடியோ இணைப்பு)

 

 

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி சகலதுறை வீரர் கிரன் பொலாட் வீசிய நோபோல் (No ball) பலரது அவதானத்தை திருப்பியுள்ளது.

பார்படோஸ் அணியின் தலைவராக விளையாடிய பொலாட், எதிரணி வீரரான ஏவின் லூயிஸ் சதம் பெறுவதை தடுப்பதற்காக வேண்டுமென்றே நோபோல் பந்தை வீசியதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

பார்படோஸ் அணியிற்கும்  செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பற்றியொட்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிக்காக ஒரு ஓட்டம் பெறவிருந்த நிலையில், பார்படோஸ் அணியின் தலைவராக விளையாடிய பொலாட் நோபோல் (No ball) வீசியுள்ளார்.

 

 

இந்நிலையில், அதிரடியாக துடுப்பாடி கொண்டிருந்த ஏவின் லூயிஸ்  32 பந்துகளில் 97 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், பொலாட் வீசிய இந்த பந்தில்  4 அல்லது 6 ஓட்டங்களை பெற்றிருந்தால் உலகில் இருபதுக்கு 20 போட்டியில் இரண்டாவது வேகமான சதமாக இது அமைந்திருக்கும்.

எனினும் இதன்போது பொலாட் நோபோல் (No ball) வீசிய காரணத்தால் அவரின் சாதனை பறிபோனது.

இதேவேளை, இருபதுக்கு 20 போட்டியில் வேகமான சதத்தை பெற்ற கிரிஸ் கெய்லும் குறித்த போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது .

 

 

http://www.virakesari.lk/article/24074

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.