Jump to content

ஒரே இளைஞருக்கு 2 பெண்களுடன் திருமணம்


Recommended Posts

ஒரே இளைஞருக்கு 2 பெண்களுடன் திருமணம் நிறுத்தப்பட்டது: விருதுநகர் அருகே பரபரப்பு - சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் நிர்பந்தம்

 

02maman-pettitionjpg

ராமமூர்த்திக்கு ஒரு பெண்ணை மட்டும் திருணம் செய்து வைப்பதாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்திடம் விளக்கக் கடிதம் அளித்த மணமகன், மணமகள் குடும்பத்தார்.

02maman-marriage1%20jpg

ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.

02maman-marriagejpg

இரு பெண்களை ராமமூர்த்தி திருமணம் செய்து கொள்வதாக உறவினர்களுக்கு வழங்கப்பட திருமண அழைப்பிதழ்.

02maman-pettitionjpg

ராமமூர்த்திக்கு ஒரு பெண்ணை மட்டும் திருணம் செய்து வைப்பதாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்திடம் விளக்கக் கடிதம் அளித்த மணமகன், மணமகள் குடும்பத்தார்.

02maman-marriage1%20jpg

ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.

விருதுநகர் அருகே இளைஞர் ஒருவர் இரு பெண்களை திருமணம் செய்ய இருந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.

திருச்சுழி அருகே உள்ள ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). இவர் படிக்கவில்லை என்பதால் ஆடு மேய்த்து வருகிறார். இவரது பெற்றோர் இறந்துவிட்டதால் அக்கா கலைச்செல்வி வீட்டிலேயே வளர்ந்துள்ளார்.

இவருக்கு கலைச்செல்வியின் மகள் பி.காம்., பட்டதாரியான ரேணுகாதேவி(21) என்பவரையும், மற்றொரு அக்கா அமுதவள்ளியின் மகள் காயத்திரி(20) என்பவரையும் வரும் 4-ம் தேதி திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டது.

இதற்காக திருமண பத்திரிகை உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன. இதில், காயத்திரி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், ஒரு இளைஞர் ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் திருமண பத்திரிகையுடன் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ராமமூர்த்திக்கு ரேணுகாதேவியை மட்டும் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ராமூர்த்தியின் மாமாவும், மணமகள் ரேணுகாதேவியின் தந்தையுமான அழகர்சாமி மற்றும் உறவினர்கள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்தை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ராமமூர்த்தித்துக்கு ரேணுகாதேவியைதான் திருமணம் செய்து வைக்க இருந்தோம். ஆனால் அவருக்கு இருதார தோஷம் இருப்பதாக ஜோசியர் கூறியதால் முதலில் மனநலம் பாதித்த காயத்திரிக்கு தாலி கட்டிய பிறகு ரேணுகாதேவிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்த இருந்ததாகவும், தோஷம் கழிப்பதற்காகவே இருவருக்கு தாலி கட்டி திருமணம் செய்ய இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் மட்டும் திருமணம் நடத்துவது என மற்றொரு பத்திரிகையை அச்சடித்து வந்து விளக்கக் கடிதத்துடன் கொடுத்தனர். அதைப் பெற்ற சமூக நலத் துறை அலுவலர் ராஜம், இரு பெண்களை திருமணம் செய்வது ஏற்புடையது அல்ல. இது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

ராமமூர்த்திக்கு திருமணம் நடைபெறும்போது அங்கு சென்று கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக சமூக நலத் துறை அலுவலர்களும், போலீஸாரும் தெரிவித்தனர்.

இது குறித்து, மத்திய அரசு வழக்கறிஞர் கஜேந்திரன் கூறுகையில், இரு மணப்பெண்களும், குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தாலும் சட்டப்படி இத்திருமணத்தை பதிவு செய்ய முடியாது. இது குறித்து வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19608331.ece

Link to comment
Share on other sites

இரு பெண்களை மணக்கும் திட்டத்தை கைவிட்டார்: பட்டதாரி பெண்ணை கரம்பிடித்தார் ஆடு மேய்க்கும் திருச்சுழி இளைஞர்

 

 
5-MA-MANMarriage%20Photo-2

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.வெள்ளையாபுரத்தில் நடைபெற்ற ராமமூர்த்தி - ரேணுகாதேவி திருமணம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஓர் இளைஞருக்கு இரு பெண்களை திருமண செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள தகவல் வாட்ஸ்அப்பில் பரவியதால் பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே ஒரு பெண்ணை மட்டும் மணந்தார்.

திருச்சுழி அடுத்த ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). ஆடு மேய்க்கும் இவர், பெற்றோர் இறந்துவிட்டதால் அக்கா கலைச்செல்வி வீட்டில் வளர்ந்து வந்தார். இவருக்கும், கலைச்செல்வி மகளான பி.காம். படித்து முடித்த ரேணுகாதேவி(21) என்பவரையும், மற்றொரு அக்கா அமுதவள்ளியின் மகளையும் ஒரே மேடையில் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன.

இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ராமமூர்த்திக்கு ரேணுகாதேவியை மட்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராமமூர்த்தி-ரேணுகாதேவி திருமணம் குடும்பத்தார், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நேற்று காலை நடைபெற்றது.

இத்திருமணத்தை சமூக நலத் துறை களப்பணியாளர்கள் கண்காணித்து மாவட்ட சமூக நலத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பாக பேசப்பட்ட ராமமூர்த்தி திருமணத்தை பார்க்க அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19623722.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு.

அதென்னெ.. பட்டதாரி என்பதற்காக.. அந்தப்  பெண்ணுக்கு இல்லாததுகள் ஏதாவது புதிசா இருக்குமா.. கல்யாணத்திற்கும் பட்டத்திற்கும் என்ன சம்பந்தம்..?! :rolleyes:

மேலும்.. ஆடு மேக்கிறது.. தொழில் இல்லையோ.. எதுஎது மற்றவருக்கு பாதிப்பில்லாமல்.. நமக்கு.. வருமானத்தைக் கொண்டு வருமோ.. அதெல்லாம் நல்ல தொழிலே.

எனக்கு ஆடு மாடு மேக்க சரியான ஆசை.  ஆட்டுக்குட்டி.. கன்றுக்குட்டின்னு.. தூக்கி விளையாட.. அதுங்க..  ஓடி வந்து முதுகில.. ஏறி நின்று கூத்துப் போட.. அதெல்லாம்..  அனுபவிச்சா தான் தெரியும். tw_blush:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு கூட்டணி அமைத்ததன்  பிறகு  தனித்து  நிற்கும் போது  எல்லா கட்சிகளினும் ஆதரவு குறைத்து உள்ளது   உதாரணம் வைகோ   விசயகாந்த்.        இவர்களுக்கு கூட்டணி அமைக்க முதல் இருந்த ஆதரவு வீதம்   கூட்டணி உடைந்த பிற்பாடு  இல்லை  சடுதியாக மிகவும் குறைத்து விட்டது   சீமானும். கூட்டணி அமைத்து   அதன் பின் கூட்டணி உடைத்து தனியாக நிற்கும் போது  ஆதரவு குறையும்     இதை தான் சொன்னேன்   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது    அப்படி அமைக்கப்படும் போது  சீமான் கட்சியின் ஆதரவு குறையாது    சீமான் அல்லது வேறு கட்சி தலைவர்கள்   இன்னொரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து   அது உடைத்து அடுத்து வரும் தேர்தலில் தனியாக போட்டி இடும் போது  பொதுவாக  அனைத்து கட்சியின் ஆதரவு குறையும்     கூட்டணி அமைத்து  உடைந்த பிற்பாடு  சின்ன கட்சிகளின் எதிர்காலம்  எப்படி இருக்கும்?? இருக்கிறது?? 
    • ஆகா தில்லை எனக்கு 21 வயது ஐஸ்வரியாவை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. ஐஸ்வரியா வரியா வரியா.
    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.