Jump to content

அம்பாறையில் தமிழ்க் கிராமத்தை தத்தெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த யாழ். இளைஞன்


Recommended Posts

அம்பாறையில் தமிழ்க் கிராமத்தை தத்தெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த யாழ். இளைஞன்

 
அம்பாறையில் தமிழ்க் கிராமத்தை தத்தெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த யாழ். இளைஞன்
 

அம்பாறை மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டில் 52 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தை ஜெர்மனியைச் சேர்ந்த இலங்கையர் ஒருவர் தத்தெடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த மகான்கோடீஸ்வரன் என்பவரே திராய்க்கேணி கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இவர் யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஜெர்மனியக் கிளையின் உறுப்பினராவார்.

மகான்கோடீஸ்வரன் மற்றும் ஜெர்மனியக் கிளைத்தலைவர் கிளாரன்ஸ் செல்லத்துரை ஆகியோர், அம்பாறை மாவட்ட சமூகசேவையாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்த அழைப்பை ஏற்று கடந்த மாதம் திராய்க்கேணி கிராமத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்கள்.

அதன்பின் ஜெர்மன் சென்ற இவர்கள், திராய்க்கேணியை தாம் தத்தெடுப்பதாகவும், இதன் முதற்கட்டமாக 16 வீடுகளை கட்டிக்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்ற நிலையில், தற்போது 5 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

ஏனைய வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. அதன் திறப்பு நிகழ்வில் ஜெர்மனிலிருந்து மகான்கோடீஸ்வரன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

gbhfgh.png

 

dgdgf.png

http://newuthayan.com/story/25369.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல செயல் .....வாழ்த்துக்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ....:100_pray::100_pray:இப்படியான செயல்கள் தொடரவேண்டும்....(முக்கிய குறிப்பு: நீர் போய் செய்யுமன் என்று யாரும் கேட்காதீர்கள் நான் செய்யபோவதில்லை:100_pray:....)

நான் படிச்ச பள்ளியில் தான் அவரும் படிச்சிருக்கிறார்
 

Link to comment
Share on other sites

39 minutes ago, putthan said:

வாழ்த்துக்கள் ....:100_pray::100_pray:இப்படியான செயல்கள் தொடரவேண்டும்....(முக்கிய குறிப்பு: நீர் போய் செய்யுமன் என்று யாரும் கேட்காதீர்கள் நான் செய்யபோவதில்லை:100_pray:....)

நான் படிச்ச பள்ளியில் தான் அவரும் படிச்சிருக்கிறார்
 

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல செயல்.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வந்தியத்தேவன் said:

வாழ்த்துக்கள்

அப்படியே ஒரு பச்சையை குத்துரது தானே. :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரர் அம்பாறை யில் பல தமிழ் கிராமங்கள்  அழிந்து ஒண்டு செல்கின்றன அதில் ஒரு கிராமம் இந்த திராய்க்கேணி கிராமமும் பல உயிர்கள் காவு வாங்கப்பட்டு இன்று ஒரு சில நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இரு பகுதியிலும் முஸ்லீம்களால் சூழப்பட்ட  ஒரு சிறிய கிராமம் இது போன்ற நடவடிக்கைகளே அந்த மக்களை அங்கே நிலைநிறுத்த செய்யும் மீண்டும் வாழ்த்துக்கள் இதுரைக்கும் அங்கே வாக்குகள் கேட்கச்செல்லும் அரசியல் வாதிகள் அந்த கிராமத்தில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பெரிதாக பெயர் சொல்லுமளவுக்கு செய்ததில்லை 

பல பேர் தங்கள் இடங்களை விற்று விட்டு வெளியேறி விட்டார்கள் அதில் ஒன்று அட்டைப்பள்ளம் என்கிற ஊர் மக்களூம் சில ரே இருக்குறார்கள்  இன்னும் அங்கே 

 

மீண்டும் வாழ்த்துக்கள்  சகோதரா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

வாழ்த்துக்கள் ....:100_pray::100_pray:இப்படியான செயல்கள் தொடரவேண்டும்....(முக்கிய குறிப்பு: நீர் போய் செய்யுமன் என்று யாரும் கேட்காதீர்கள் நான் செய்யபோவதில்லை:100_pray:....)

நான் படிச்ச பள்ளியில் தான் அவரும் படிச்சிருக்கிறார்
 

எங்கடை சனம் பெயரான பள்ளிக்கூடங்களின்ரை பேரைச்சொல்லி பொம்புளை/மாப்பிளை எடுத்து முடிஞ்சுது.....இப்ப இது வேறை......:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் பெயரான பள்ளிக்கூடங்களின்ரை பேரைச்சொல்லி பொம்புளை/மாப்பிளை எடுத்து முடிஞ்சுது.....இப்ப இது வேறை......:grin:

 

அந்த ஆள் ...என்ன பொம்பிளையா கேட்டது?

 

வெறும் பச்சை தானே கேட்டது...!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மகான்

கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதை விட இது மேலான காரியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்மாதிரி. tw_blush:

உள்நோக்கம்.. கிள்நோக்கம் இல்லாமல்.. மக்கள் நலன்.. மண் நலன் என்றிருந்தால்.. இன்னும்.. நல்லம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு எடுத்துக்காட்டான விடயம். வாழ்த்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2017 at 3:08 PM, nedukkalapoovan said:

நல்ல முன்மாதிரி. tw_blush:

உள்நோக்கம்.. கிள்நோக்கம் இல்லாமல்.. மக்கள் நலன்.. மண் நலன் என்றிருந்தால்.. இன்னும்.. நல்லம். 

நிட்சயமாக இருக்காது என நம்புவோம் ஆனால் ஜெயசிறில் என்பவர் தமிழரசு கட்சியின் விசுவாசி மற்றும் பிரதேச சபை தேர்த்தலிலும் நின்றவர் வெற்றி பெறவில்லை  ஆனால் அந்த அமைப்பில் அதாவது ஜேர்மனின் நம்பிக்கை ஒளி சில நல்ல காரியங்களை செய்து வருகிறார் மக்களை பொறுத்தவரைகும் ஏழை மக்களுக்கு யார் செய்து கொடுத்து பாராட்டலாம் ஊக்கு விக்கலாம் அவர்கள் நம் மக்கள் :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இது வவுனியாவில் நான் சொன்னது இதுதான் ஒருவருக்கு கிடைக்கும் அதே சமயத்தில் இன்னொருவருக்கு கிடைக்காது காத்துக்கொண்டிருக்க வேண்டும் மாதமாகலாம் வருடமாகலாம் பொருத்து வீட்டுப்பகுதியில் இணைக்க தேடினேன் அந்த திரி கண்ணில் படவில்லை நிர்வாகம் வேண்டுமானால் மாற்றிவிடலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு எடுத்துக்காட்டான விடயம். வாழ்த்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7.9.2017 at 11:33 AM, வாத்தியார் said:

நன்றி மகான்

கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதை விட இது மேலான காரியம்

தமிழர் பிரதேசங்களில் மூலைக்கு மூலை அவசியமில்லாத இடங்களில் விகாரைகள் முளைக்கும் போது நமது கோவில்களின் புனருத்தாரணமும் அவசியமாகவே தெரிகின்றது.

இன்று ஆசியாக்கண்டத்தில் உள்ள பலநாடுகளில் எமது இனம் பழமைவாய்ந்த இனம்/பரந்துபட்டு வாழ்ந்த இனம் என்பதற்கு சான்றுகளாக கோவில்களும் முக்கியபங்கு வகிக்கின்றன.அங்கு தமிழ்மொழி அதிகபட்சமாக தெரியப்படுத்தப்படுகின்றது.


அன்னிய மொழியையும் அன்னிய கலாச்சாரத்தையும் தோளில் சுமந்துகொண்டு.... நடைப்பிணமாக இருக்கும் எமது மதத்தை அழிக்க/சீரழிக்க இடமளியோம்.tw_angry:


வாத்தியார்! நீங்கள் வேறுமதத்தை சார்ந்தவர் என நினைக்கின்றேன், இருந்தாலும் நீங்கள் விரும்பினால் வாருங்கள். இதயபூர்வமாக உள்நாட்டு வெளிநாட்டு  மதம் சம்பந்தப்பட்ட விடயங்களை விவாதிக்கலாம்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

 


வாத்தியார்! நீங்கள் வேறுமதத்தை சார்ந்தவர் என நினைக்கின்றேன், இருந்தாலும் நீங்கள் விரும்பினால் வாருங்கள். இதயபூர்வமாக உள்நாட்டு வெளிநாட்டு  மதம் சம்பந்தப்பட்ட விடயங்களை விவாதிக்கலாம்.:)

என்னுடைய பெயர் தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள்
ஆனாலும் நான் மதம் சார்ந்தவன் அல்ல  அல்ல  அல்ல  
ஆலயங்கள் இருக்கலாம். ஆனால் அதுவே எல்லாம் அல்ல அல்ல அல்ல:11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

என்னுடைய பெயர் தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள்
ஆனாலும் நான் மதம் சார்ந்தவன் அல்ல  அல்ல  அல்ல  
ஆலயங்கள் இருக்கலாம். ஆனால் அதுவே எல்லாம் அல்ல அல்ல அல்ல:11_blush:

பார்த்தீர்களா??? பெயரை சொன்னாலே அதிர்ந்து விடுவீர்கள் என்கிறீர்கள். அந்தளவிற்கு பெயர் பல பங்கு வகிக்கின்றது. அது போல்தான் இதுவும்.

நான் கோவில்களில் நடக்கும் மூட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவன். அதுவும் புலம்பெயர் தேசங்களில் கோவில்களை ஆத்மதிருப்தி எனும் கண்ணோடு பார்ப்பவன்.
ஆனால் எமது நாட்டில் எதிரி எதை செய்ய முற்படுகின்றானே அந்த விடயத்திலும் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 

 அதுவும் புலம்பெயர் தேசங்களில் கோவில்களை ஆத்மதிருப்தி எனும் கண்ணோடு பார்ப்பவன்.
 

புலம்பெயர் தேசங்களில் ஆத்ம திருப்தியா?
கோவில் கட்டுபவர்கள் ஆட்டையைப் போடும் நினைப்பில் தான் இருக்கின்றார்கள்.
இந்தக் கோவில்களை விட கிறிஸ்தவத் தேவாலயங்கள் மக்களிற்கான பணிகளைத் திறம்படக் செய்கின்றார்கள் அண்ணை:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

புலம்பெயர் தேசங்களில் ஆத்ம திருப்தியா?
கோவில் கட்டுபவர்கள் ஆட்டையைப் போடும் நினைப்பில் தான் இருக்கின்றார்கள்.
இந்தக் கோவில்களை விட கிறிஸ்தவத் தேவாலயங்கள் மக்களிற்கான பணிகளைத் திறம்படக் செய்கின்றார்கள் அண்ணை:100_pray:

அவர்களின் நோக்கம் தெரியும். பணம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லைத்தானே? எங்கும் கட்டாயப்படுத்தவில்லை.மத வரியும் அறவிடவில்லை.

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் உண்டியல் குலுக்குகின்றார்கள் தானே? எங்கே இல்லையென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
 

அவர்கள் திறம்பட செய்கின்றார்கள் என்பதை விட கிறிஸ்தவ அமைப்புகள் உலகளாவியது....சட்டபூர்வமானது என முன்னிலைப்படுத்தி விட்டார்கள்..சகலதும் சுலபமாகவே அரசுபோல் செயல்படுகின்றார்கள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12.9.2017 at 0:48 AM, குமாரசாமி said:

அவர்கள் திறம்பட செய்கின்றார்கள் என்பதை விட கிறிஸ்தவ அமைப்புகள் உலகளாவியது....சட்டபூர்வமானது என முன்னிலைப்படுத்தி விட்டார்கள்..சகலதும் சுலபமாகவே அரசுபோல் செயல்படுகின்றார்கள்.:)

அப்படியான முறையில் இந்து ஆலயங்களால் ஏன் செயற்படமுடியவில்லை. தேவாலயங்கள் மதம் இனம் பார்க்காமல் மற்றவர்களுக்குச் செய்யும் பணிகளை இந்து மத ஆலயங்களால் செய்ய முடிவதில்லையே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

அப்படியான முறையில் இந்து ஆலயங்களால் ஏன் செயற்படமுடியவில்லை. தேவாலயங்கள் மதம் இனம் பார்க்காமல் மற்றவர்களுக்குச் செய்யும் பணிகளை இந்து மத ஆலயங்களால் செய்ய முடிவதில்லையே .

வாத்தியார்..இந்து மதம் என்று திரும்பத் திரும்பக் கூறுவதால்....நாம் ஏதோ ஒரு விதத்தில்...எம்மையறியாமலே ஆரிய அழுக்குகளுக்குள் புதைந்து போகின்றோம்!

நாங்கள் சைவர்கள்....சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள்! உருத்திரன் எமது கடவுளல்ல! அவர் எமது மதத்துக்குள் திணிக்கப்பட்டவர்களில் ஒருவர்! முருகன் எமது கடவுள் எனினும் கந்தனும், பிள்ளையாரும் எம்மீது திணிக்கப் பட்டவர்கள்! அம்மன் எமது கடவுள்...ஆனால் துர்க்கை எம்மீது திணிக்கப் பட்டவர்!

வரி அறவிடுதல், பொதுச்சேவை செய்தல் போன்றவற்றை...அரசோ...அரச அதிகாரிகளோ பார்த்துக்கொண்டார்கள்!

மாதமும்...மாரி பெய்தது..! எம்மக்களிடம் வறுமை இருக்கவில்லை!
எமது மதம்...ஆண்..பெண் என்ற வேறுபாட்டைக் காட்டியதில்லை!
காமத்தை விலக்கி வைக்கவில்லை! தாலி கட்ட வேண்டும்! திருமணத்தின் அடையாளமாகப் பெண்ணுக்குக் 'குறி' சுட வேண்டும் என்று கூறியதில்லை!
அவை அனைத்துமே ஆரியச் சடங்குகளே! சோமன் ( சந்திரன்)....இந்திரன் போன்றவர்கள் நுகர்ந்த பின்னர்...அவர்களின் அனுமதியோடு...தான் ...நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப் படுகிறோம்! அந்த மந்திரங்களை....அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிந்து ஆராய்ந்தால்....எவ்வாறு ஆரியம் எங்கள் மீது குதிரை ஒட்டியுள்ளது என்பது நன்றாகப் புரியும்!

நாவுக்கரசர், சம்பந்தர் காலத்திலிருந்தே எமது மதத்தின் பெயரால் பல அன்னதான மடங்களும், பாடசாலைகளும்...கல்லூரிகளும் நடத்தப் பட்டன! நடத்தப் படுகின்றன!
இன்றும் கூட...திருக்கேதீஸ்வரத்துக்கோ, செல்வச் சந்நிதிக்கோ...அல்லது நயினா தீவுக்கோ போனால்...நான் அந்த மடங்களில் சாப்பிட்டுத் தான் வருவேன்!
ஒரு தடவை....நயினாதீவில் சாப்பிட்டு வரும்போது...எனது மகள் கேட்டாள்! 
பணம் கொடுக்க வேண்டாமா என்று!
இல்லை...நீ ..பேசாமல் வா...! நாங்கள் கோவில் உண்டியலில் போடுவோம் என்று கூறினேன்!
அப்போது அவள்...சிங்களவர்களுடன் பிரச்சனை என்று கூறினீர்களே...அவர்களும் வந்து ஒன்றாகச் சாப்பிட்டு விட்டும் போகின்றார்களே என்றும் கேட்டாள்!
நான் அது வேறு....இது வேறு என்று கூறிச் சமாளித்து விட்டேன்!
எனவே எமது மதம்...பல சேவைகளைச் செய்கின்றது!
வெளி நாடுகளில்...எமது மதத்தின் பெயரால்....ஆரியம் வளர்க்கப்படுகின்றது என்பதே எனது கருத்து!
Wollongong  என்னுமிடத்தில்...எம்மவர்கள் காணி வாங்கி....சந்திர மௌலீஸ்வரருக்கு ஒரு கோவில் கட்டினார்கள்! அதற்குள் எவ்வாறோ...விஷ்ணு கோவிலோன்றைப் புகுத்தி விட்டார்கள்! பின்னர் சிவன் கோவில் அரைவாசியில் நிற்க....விஷ்ணு கோவில் முதலில் கட்டி முடிக்கப்பட்டது! சிவன் கோவில் உண்டியல் மூலம் சேர்க்கப்பட்ட பணம்....விஷ்ணு கோவிலுக்குப் பயன் படுத்தப் பட்டது! இப்போது எம்மவர்கள்...இரண்டு கோவிலுக்கும் போகின்றார்கள்! அங்கே இருக்கிற அனுமானுக்கும் ஒரு வணக்கம்.....இராம லட்சுமணருக்கும் ஒரு வணக்கம்....கருடனுக்கும் ஒரு வணக்கம்!
எனது அவதானங்கள் தவறாக இருந்தால்...யாராவது விளக்கம் தாருங்கள்!
சிட்னி முருகன்....கிட்டத்தட்ட ஒரு வியாபாரியாகவே மாறி விட்டார்!
வடைக் கடை, தோசைக்கடை, சைவக் கடை என்று ....கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவைத் தான் நினைவு படுத்துகின்றார்!

இறுதியாக எமது மதம்....வாழ்க்கைக்கான வழியைக் காட்டியுள்ளது!
பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம்...சந்நியாசம்.......!
வாழ்க்கை அவ்வளவு தான்.....வாத்தியார்!
இருக்கும் போது நல்ல காரியங்களை...முடிந்தால் செய்வோம்!
தீயவைகளிளிருந்து...முடிந்தவரை ஒதுங்குவோம்!

கொலை...களவு.....கள் ....காமம்...சூது...அனைத்தையும் பஞ்சமா பாதகங்கள் என்றது எமது மதம்!
மக்கள் சேவையே ...மகேசன் சேவை என்றதும் எமது மதம்!
ஆவுரித்துத் தின்றுழலும் புலையனேனும் .....அவனும் சிவனுக்கு அன்பனே...என்றதும் எமது மதம்!

மழித்தலும்....நீட்டலும் வேண்டாம்....உலகம் பழித்தது ஒழித்து விடின்!

அவ்வாறு வாழ்வோமெனின் ...எமக்குக் கோவில்கள் தேவையில்லை!
காயமே....கோயிலாகக்...கடி மனம் அடிமையாக....வாய்மையே...தூய்மையாகுவோம்!   

நன்றி  !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/09/2017 at 8:54 AM, புங்கையூரன் said:

Wollongong  என்னுமிடத்தில்...எம்மவர்கள் காணி வாங்கி....சந்திர மௌலீஸ்வரருக்கு ஒரு கோவில் கட்டினார்கள்! அதற்குள் எவ்வாறோ...விஷ்ணு கோவிலோன்றைப் புகுத்தி விட்டார்கள்! பின்னர் சிவன் கோவில் அரைவாசியில் நிற்க....விஷ்ணு கோவில் முதலில் கட்டி முடிக்கப்பட்டது! சிவன் கோவில் உண்டியல் மூலம் சேர்க்கப்பட்ட பணம்....விஷ்ணு கோவிலுக்குப் பயன் படுத்தப் பட்டது! இப்போது எம்மவர்கள்...இரண்டு கோவிலுக்கும் போகின்றார்கள்! அங்கே இருக்கிற அனுமானுக்கும் ஒரு வணக்கம்.....இராம லட்சுமணருக்கும் ஒரு வணக்கம்....கருடனுக்கும் ஒரு வணக்கம்!
எனது அவதானங்கள் தவறாக இருந்தால்...யாராவது விளக்கம் தாருங்கள்

தவறா ....உங்கள் அவதானத்தில் ...
இரததோற்சவம்  சிவனுக்கு 
பிறமோற்சவம் வெங்கேடஸ்வருக்கு
 இரண்டு  தேர்திருவிழா, ஒருவருடத்தில் ஒரே ஆலய வளவில், இந்துக்கள் என்ற அடையாளத்துடன் நம்மவர்களும் சென்று வருகின்கின்றனர் ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.