Jump to content

மற்றைய அணிகளிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் : சங்கக்கார


Recommended Posts

மற்றைய அணிகளிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் : சங்கக்கார

 
r
kumar2-696x464.jpg
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

தற்போது வெற்றிகரமாக அமையாத இலங்கை கிரிக்கெட் அணி குறித்து பலராலும் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும்,  நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவும் தற்போதைய தனது தாயக அணி தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழும் அனைத்து அணிகளினதும் வரலாற்றை எடுத்துப்பார்க்கும்போது, அனைத்து அணிகளுக்கும் ஒரு மோசமான காலம் காணப்பட்டிருக்கின்றது. அனைத்து நாடுகளும் அந்த மோசமான காலகட்டத்தினை கடந்தே இன்று சாதனை அணிகளாக மாறியுள்ளன.

இப்படியாக சாதித்த அணிகளை இலங்கை முன்னுதாரணமாக எடுக்கும் எனில், மீண்டும் சவால் மிக்க ஒரு அணியாக வலம் வர முடியும் என குமார் சங்கக்கார மேற்கிந்திய தீவுகளில் இருந்து இலங்கையின் செய்தி நாளிதழ்களில் ஒன்றான தி சன்டே டைம்ஸ் (The Sunday Times) இற்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.  

இந்தியா போன்ற நாடுகள் மோசமான நிலைமை ஒன்றில் காணப்பட்டிருந்த போது சில மாற்றங்களை மேற்கொண்டது. அந்த மாற்றங்கள் அந்நாட்டினை இன்று ஒரு எடுத்துக்காட்டான அணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது என்னும் விதத்தில் கருத்து தெரிவித்த சங்கா, இவ்வாறு மேலும் பேசியிருந்தார்.

அவர்கள் (இந்திய அணியினர்), தங்களது கிரிக்கெட்டின் முழுக்கட்டமைப்பிலும் மாற்றங்களை கொண்டு வந்தனர். அவுஸ்திரேலிய அணியும் அவ்வாறே, இங்கிலாந்தும் அப்படியே. நாம் ஏன் அவர்களுக்குப் பின்னால் நிற்கின்றோம்? நாம் உதாரணங்களை பார்த்து பழகுபவர்களாயின்  நல்ல உதாரணங்களை பார்த்து அவற்றினை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.“ எனக் குறிப்பிட்டு தற்போதைய இலங்கை அணி, வெற்றிகரமாக செயற்படும் அணிகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியத்தினையும் உணர்த்தியிருந்தார்.

திறமைமிக்க வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கு அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது அணியினை பலப்படுத்துவதோடு மட்டுமன்றி அவர்களை மிகவும் சிறந்த வீரர்களாக மாற்ற வழிவகைகள் செய்யும் என்றும் சங்கா குறிப்பிட்டார்.

அவ்வாறான திறமையான வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டு மீண்டும் அவர்களை நிரூபிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பது மிகவும் சிறந்த செயல் என்னும் வகையிலும் குறித்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.

சந்திமால் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என நினைக்கின்றேன். டெஸ்ட் அணித் தலைவரான அவர் தற்போது குழாத்தில் இருப்பதும் மகிழ்ச்சியான விடயம் ஒன்றே. ஒரு நாள் போட்டிகளில் ஆடுவது அவருக்கு அவ்வளவு சிரமமான ஒரு விடயம் இல்லை. “

அவரது அண்மைய பதிவுகள் சற்று மோசமாக அமைந்திருக்கலாம். இருப்பினும் இவ்வாறான வீரர்கள் இனம்காணப்படுமிடத்து, நாம் அவர்களுக்கு நிலையான இடமொன்றை வைத்து தொடர்ந்தும் வாய்ப்பளிக்க வேண்டும். திரிமான்னவும் அவ்வாறே. இவ்வாறான வீரர்கள் உயர்தரமான ஆட்டத்தினை காட்டக்கூடியவர்கள் என சங்கக்கார குறிப்பிட்டிருந்தார்.

இன்னும் , இலங்கை அணி சார்பாக ஒரு தொழில்சார் கிரிக்கெட் வீரராக அதிக ஓட்டங்களை குவித்திருக்கும் சங்கக்கார, சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் இலங்கை அணி இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் சாதிக்காது போயிருந்தமை பற்றி எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதில் வழங்கியிருந்தார். அதில், இலங்கையின் இளம் வீரர்களுக்கு இத்தொடர் அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு களமாக அமைந்திருந்தாகவும், இவ்வாறான அதிகமான டெஸ்ட் போட்டிகளில் கிடைக்கும் அனுபவங்கள் எதிர்காலத்தில் சாதிக்க அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றவாறு கூறி, இலங்கை அணி வரும் காலங்களில் நல்ல முடிவுகளை காட்டும் என நம்பிக்கையினையும் வெளியிட்டிருந்தார்.

 

அனுபவமற்ற இளம் வீரர்களையே தற்போதைய குழாத்தில் கொண்டிருக்கும் இலங்கை அணி மீண்டெழ, உபாதைக்கு உள்ளாகியிருக்கும் சில முக்கிய வீரர்களின் மீள்வருகையும் தேவையாக இருக்கின்றது. காயமடைந்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் பிரதீப் மற்றும் தம்மிக்க பிரசாத், சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன, அதிரடி ஆட்டக்காரர் குசல் பெரேரா ஆகியோர் இல்லாமல் போயிருந்தது சமீபத்திய காலங்களில் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக காணப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னும், இலங்கை அணி தோல்விகளை சந்திக்கும் போது, இரசிகர்கள் மற்றும் வீரர்கள் அடையும் ஏமாற்றம் தனக்குத் தெரியும் என முன்னர் வெளியிட்ட கருத்து ஒன்றில் கூறியிருந்த  சங்கா, அவ்வாறான தருணங்களில் அனைவரும் அணிக்கு அதிக ஆதரவும், அன்பும் வழங்கி விடயங்கள் சரியான இடத்தில் வைக்கப்படும் வரை பொறுமை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.