Jump to content

இரட்டை இலை துளிர்த்த கதையும் துவண்ட கதையும்!


Recommended Posts

இரட்டை இலை துளிர்த்த கதையும் துவண்ட கதையும்!

 

 
TWO%20LEAF

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளரின் செல்வாக்கு, சாதி பலம் என்பன உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிட்டுப் பார்த்த எம்ஜிஆர், மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார்.

அப்போது தனக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகினார் வேட்பாளர் மாயத்தேவர். அப்போது அவரிடம் 16 சுயேச்சை சின்னங்கள் காட்டப்பட்டன. அவற்றிலிருந்து இரட்டை இலையைத் தேர்வுசெய்தார் மாயத்தேவர். அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போது அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது.

இரட்டை இலை அதிகாரபூர்வமான சின்னமாக மாறியதும் அதைச் சுவர்களில் வரைந்து மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தினர் தொண்டர்கள். மக்களைச் சந்திக் கும் போது கைகூப்புவதுபோல இரட்டை விரல்களைக் காட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டார் எம்ஜிஆர். அதே வேகத்தில் 1974-ல் கோவை மேற்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, அதிமுக வேட்பாளரான அரங்கநாயகம் இரட்டை இலையில் வெற்றிபெற்று முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 1977-ல் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது அஇஅதிமுக.

 

எம்.ஜி.ஆரையே வீழ்த்திய இரட்டை இலை

இந்த இடத்தில் இரட்டை இலை சின்னத்தின் வீரியத்தைப் புரிந்துகொள்ள ஒரு சம்பவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அலங்கியம் பாலகிருஷ்ணனை அறிவித்திருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அய்யாசாமி என்பவருக்கு இரட்டை இலை சின்னத்துக்கான அதிகாரபூர்வக் கடிதம் சென்றுவிட்டது. அதனால் அய்யாசாமி அதிமுக வேட்பாளராகவும் பாலகிருஷ்ணன் சுயேச்சை வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.

விஷயத்தைத் தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், தனது வேட்பாளர் அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னத்தில் வாக்களியுங்கள்… இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் முடிவுகள் வெளியானபோது, இரட்டை இலையில் போட்டியிட்ட அய்யாசாமியே வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர். நிறுத்திய பாலகிருஷ்ணன் தோற்றுப்போனார்.

எம்.ஜி.ஆரையே வீழ்த்தும் வல்லமை கொண்டது இரட்டை இலை. அதனால்தான் கட்சியின் வேட்பாளருக்குச் சின்னம் ஒதுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே என்று அதிமுகவின் அமைப்பு விதி கறாராக உருவாக்கப்பட்டது. இந்த விதிதான் சமீபத்தில் அரவக்குறிச்சி உள்ளிட்ட இடைத்தேர்தல்களின்போது, ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகையைப் பதியவைத்து, சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிற்காமல் சென்றுகொண்டிருந்த இரட்டை இலையின் வெற்றிப் பயணம் 1980 மக்களவைத் தேர்தலில் தடம் புரண்டது. அந்தத் தேர்தலில் கருணாநிதி - இந்திரா காந்தி கூட்டணி இரட்டை இலையை அடியோடு துடைத்துப் போட்டது. ஆம், 24 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவுக்கு வெறும் இரண்டு தொகுதிகளே கிடைத்தன.

 

இரட்டைப் புறாவும் சேவலும்

எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு அதிமுக ஜானகி பிரிவு, ஜெயலலிதா பிரிவு என்று இரண்டாக உடைந்தது. 1989 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு அணிகளுமே இரட்டை இலை சின்னத்துக்குச் சொந்தம் கொண்டாடின. அப்போது இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், ஜானகி பிரிவுக்கு இரட்டைப் புறாவையும் ஜெயலலிதா பிரிவுக்கு சேவலையும் சின்னமாகக் கொடுத்தது. இரட்டை இலை இல்லாத அந்தத் தேர்தலின் முடிவுகள் ஜானகி, ஜெயலலிதா இருவருக்கும் பாதகமாகவே வந்தன. அதிலும் ஜானகி அணி படுதோல்வியைச் சந்தித்தது.

எதிர்காலத்தை யோசித்து, இரண்டு அணிகளும் அதிகாரபூர்வமாக இணைந்தன. இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத் தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப் பட்டன. இரட்டை இலை சின்னம் மீண்டும் அஇஅதிமுகவுக்கே தரப்பட்டது. சின்னம் மீண்டும் கிடைத்த பிறகு நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றது. பின்னர் நடந்த 1991 சட்டமன்றத் தேர்தலிலும் அந்த வெற்றி தொடர்ந்தது.

ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் நினைவிடத்தை மாற்றியமைத்ததோடு, அதன் நுழைவாயிலில் பிரம்மாண்ட இரட்டை இலை சின்னத்தை வைத்தார். என்ன ஒன்று, தலையைக் கவிழ்த் துப் பார்த்தால் மட்டுமே அந்த இரட்டை இலையைப் பார்க்க முடியும். இரட்டை இலை சின்னத்தில் அருப்புக்கோட்டை, மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி என்று மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். மூன்று முறையும் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், ஜெயலலிதா இரண்டாவது தேர்தலிலேயே பர்கூரில் தோல்வியடைந்திருந்தார்.

 

எல்லா தொகுதிகளிலும் இலை

அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை அதிமுக வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் ஒதுக்குவது ஜெயலலிதா காலத்தில் தீவிரம் பெற்றது. குறிப்பாக, 2011 சட்டமன்றத் தேர்தலில் சரத்குமார், தனியரசு, செ.கு.தமிழரசன் போன்றோர் இரட்டை இலையிலேயே வெற்றிபெற்றனர்.

பின்னர் 2014 மக்கள வைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் தேர்த லில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் இருக்கும் வகையில் அதிமுக வேட்பாளர்களையே நிறுத்தினார். எம்.ஜி.ஆர். காலத்தில்கூட எடுக்கப்படாத இந்தத் துணிச்சலான முயற்சிக்குத் தமிழக மக்கள் பிரம்மாண்ட மான ஆதரவைக் கொடுத்தனர். 39 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

 

இலைக்கு மரியாதை

அப்படியொரு பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த இரட்டை இலைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், எம்.ஜி.ஆர். சமாதியில் இருந்த கவிழ்க்கப்பட்ட இரட்டை இலையை நீக்கிவிட்டு, சற்றே உயரத்தில் இரட்டை இலையை இடம்பெறச் செய்தார் ஜெயலலிதா. அப்போது அரசியல் கட்சியின் சின்னத்தை அரசு செலவில் பொறித்ததற்கு எதிராகப் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதில் ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், “எம்ஜிஆர் சமாதியில் பொருத்தப்பட்டிருப்பது இரட்டை இலை சின்னம் அல்ல. பறக்கும் குதிரை. அந்தக் குதிரையின் மேம்படுத்தப்பட்ட சிறகுகளைத்தான் இரட்டை இலை என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்” என்றார். இன்றுவரை புரிபடாத புதிர் இது.

2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தமாகா உள்ளிட்ட பல கட்சிகளும் விரும்பின. ஆனால், இரட்டை இலையில் போட்டியிடத் தயங்கி ஒதுங்கின. இறுதியாக, 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னமே இருக்கும் வகையில் வேட்பாளர்களை அறிவித் தார் ஜெயலலிதா. அந்தப் பட்டியலில் கூட்டணிக் கட்சியினரும் இடம்பெற்றனர். அந்தத் தேர்தலில் அபார வெற்றி யைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அதிமுகவுக்குள் சிக்கல்கள் முளைத்தன. முதலில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். பிறகு சிக்கல்கள் முளைக்கவே, ஓபிஎஸ் ராஜினாமா செய்து, சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரினார். திடீரென சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவே, சசிகலாவுக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். பின்னர் ஓபிஎஸ் தனி அணியாகச் செயல்படத் தொடங்கினார்.

ஜெயலலிதா மரணத்தால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஓ.பி.எஸ் தரப்பினர் இரட்டை இலைக்கு உரிமைகோரினர். அதற்கு சசிகலா தரப்பு மறுப்பு தெரிவிக்கவே, கால அவகாசத்தைக் காரணம் காட்டி இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.

அத்தோடு, சசிகலா பிரிவுக்கு அஇஅதிமுக (அம்மா) என்றும் ஓ.பன்னீர்செல்வம் பிரிவுக்கு அஇஅதிமுக (புரட்சித்தலைவி அம்மா) என்றும் பெயர் கொடுத்தது. இரு பிரிவுகளுக்கும் முறையே தொப்பி, இரட்டை மின்கம்பம் சின்னங்களைக் கொடுத்தது. பின்னர் பணப்பட்டுவாடாவைக் காரணம் காட்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

 

இலைக்கு வந்த இடியாப்பச் சிக்கல்

முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்க வேண்டுமானால், இரு அணிகளும் இணைய வேண்டும் அல்லது இரட்டை இலையை ஒருவர் பயன்படுத்திக்கொள்ள இன்னொருவர் சம்மதிக்க வேண்டும். இந்தச் சமயத்தில், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்துவிட்டதாகச் சொல்லி, இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தரப்பட்டிருந்த பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெறத் தயாராகிவிட்டனர் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும்.

இந்த இடத்தில்தான் அரசியலும் சட்டமும் எதிரெதிர் முனைகளில் நிற்கின்றன. இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்குக் கொடுக்க வேண்டும் என்றால், சின்னத்துக்கு உரிமை கோரிய சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என்ற இரண்டு தரப்பினரும் தத்தமது பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப்பெற வேண்டும் அல்லது இருவரில் ஒருவர் பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெற்று, அடுத்தவருக்குச் சின்னம் கிடைக்க வழிவிட வேண்டும்.

இங்கே சிக்கல் என்னவென்றால், ஓ.பி.எஸ். மட்டும் பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற்றால், இரட்டை இலை சின்னம் இன்னொரு பிரிவுக்குப் போகும். அந்த இன்னொரு பிரிவு, சசிகலா பிரிவு. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஏற்க மாட்டார்கள். மாறாக, எடப்பாடி பழனிசாமியும் அவருடைய ஆதரவாளர்களும் பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப்பெற்றாலும், சசிகலா உள்ளிட்டோர் திரும்பப்பெறாததால், அது முழுமையான திரும்பப்பெறலாகக் கருதப்படாது. ஆகவே, சின்னம் விடுவிக்கப்படாது. அதிமுகவின் அமைப்பு விதிகளும் தேர்தல் ஆணையச் சட்டங்களும் சின்னங்கள் தொடர்பான சட்டங்களும் தெளிவாக இருக்கும் நிலையில், இரட்டை இலை எப்படி மீட்கப்படும் என்பது பெருங்கேள்வி. இந்த இடத்தில்தான் ‘டெல்லி தொழில்நுட்பம்’ தேவைப்படுகிறது. இங்கே ‘டெல்லி’ என்று நாம் குறிப்பிடுவது இந்தியத் தேர்தல் ஆணையத்தை மட்டும்தான்!

-ஆர்.முத்துக்குமார்,
எழுத்தாளர். ‘தமிழக அரசியல் வரலாறு’, ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

http://tamil.thehindu.com/opinion/columns/article19600127.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.