Jump to content

2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள்


Recommended Posts

2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள்

 

 

ஆப்பிள் நிறுவனம் தனது 2017 மாடல் ஐபோனினை வெளியிட இருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஐபோன்களின் வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

 
 
 
 
2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள்
 
சான்பிரான்சிஸ்கோ:
 
சர்வதேச சந்தையில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் பத்தாவது ஆண்டுவிழா எடிஷன் ஐபோன் 8 செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆப்பிள் கடந்த சில ஆண்டுகளாக கட்டமைத்து வரும் புதிய வளாகத்தில் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது. 
 
ஐபோன் 8 மட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட ஐபோன் 7S மற்றும் ஐபோன் 7S பிளஸ் மாடல்களையும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் செல்லுலார் கனெக்டிவிட்டி கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் சாதனமும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.  
 
முந்தைய ஆண்டுகளை போன்று இல்லாமல் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்களின் டீசர் குறிப்புகளை விழா அழைப்பிதழ்களில் குறிப்பிட்டுள்ளது. 
 
வண்ணமயமான ஆப்பிள் லோகோ, ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறும் முதல் விழாவில் சந்திப்போம். அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். என்ற தகவலுடன், விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவை ஆப்பிள் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
201709011057184696_1_Apple-Invite._L_sty
 
வண்ணமயமான ஆப்பிள் லோகோ புதிய ஐபோன் பல்வேறு நிறங்களில் இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனினும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் விழாவில் ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் புதிய ஐபோனின் விலை முந்தைய மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐபோனில் 5.8 இன்ச் OLED பேனல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோன்ற திரை சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டது. அந்த வகையில் புதிய ஐபோன் திரை அளவு தெளிவாக அறியப்படாத நிலையில், இவை திரையை சுற்றி நிச்சயம் மெல்லிய பெசல் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
 
ஐபோன் 8-இல் வழக்கமான ஹோம் பட்டன் நீக்கப்படும் என்றும், டச் ஐடி சார்ந்து இருவித தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்றில் புதிய டச் ஐடி ஐபோனின் பின்புறம் இருக்கும் ஆப்பிள் லோகோவில் வழங்கப்படலாம் என்றும், மற்றொரு தகவலில் முன்பக்கம் இருக்கும் கிளாஸ்-இன் கீழ் பொறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/01105712/1105625/Apple-confirms-iPhone-8-launch-on-September-12.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நவீனன் said:

2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள்

......
 
வண்ணமயமான ஆப்பிள் லோகோ புதிய ஐபோன் பல்வேறு நிறங்களில் இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனினும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் விழாவில் ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் புதிய ஐபோனின் விலை முந்தைய மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது....
 
.....

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/01105712/1105625/Apple-confirms-iPhone-8-launch-on-September-12.vpf

ஐபோன் இதுவரை பயன்படுத்தியதில்லை..

என்னுடைய விருப்பு, இயக்குவதற்கு எளிதான சாம்சுங் ஆன்ட்ராய்ட் வகைகள்தான்..! பழுதை நீக்குவதும் எளிது மட்டுமில்லாமல் பராமரிப்பு செலவும் குறைவு. vil-appdent.gif

இந்த ராயல்(?) போன் ஆட்கள், தங்களின் புது மாடல்களை வெளியிடும்போது முந்தைய மாடல்களின் விலைகளையும் சொற்ப அளவிற்குமேல் குறைப்பதில்லை..!  கேட்டால் 'விற்பனை ராசதந்திரமாம்'..!!  Sick fellows.. va-taper.gif 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

ஐபோன் இதுவரை பயன்படுத்தியதில்லை..

என்னுடைய விருப்பு, இயக்குவதற்கு எளிதான சாம்சுங் ஆன்ட்ராய்ட் வகைகள்தான்..! பழுதை நீக்குவதும் எளிது மட்டுமில்லாமல் பராமரிப்பு செலவும் குறைவு. vil-appdent.gif

இந்த ராயல்(?) போன் ஆட்கள், தங்களின் புது மாடல்களை வெளியிடும்போது முந்தைய மாடல்களின் விலைகளையும் சொற்ப அளவிற்குமேல் குறைப்பதில்லை..!  கேட்டால் 'விற்பனை ராசதந்திரமாம்'..!!  Sick fellows.. va-taper.gif 

சாம்சுங் 8 நோட் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது ....

சில பாதுகாப்பு எச்சரிக்கைகளுக்காக மட்டுமே நான் ஐ போன் 
பாவிக்கிறேன்.

எதை பாவித்தாலும் அரசிடமும் கூகிளிடமும் அணு அளவும் அசைய முடியாது 
சில வைரஸ் மூன்றாம் நபர் ஊடறுப்பு போன்றவற்றுக்கு 
ஐபோன் பாதுகாப்பானது. 

இங்கு விலை $100 -150 தான் வித்தியாசம் 
புதிது எப்படியோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

..

எதை பாவித்தாலும் அரசிடமும் கூகிளிடமும் அணு அளவும் அசைய முடியாது 

சில வைரஸ் மூன்றாம் நபர் ஊடறுப்பு போன்றவற்றுக்கு 
ஐபோன் பாதுகாப்பானது. 

..

கைப்பேசியை பேசுவதற்கும், குறுஞ்செய்தி (வாட்ஸ்அப்) அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்துவதால் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கலாம் தானே?

மேலும் 'ஆன்டி வைரஸ்,ஃப்யர்வால்' மென்பொருளை நிறுவதாலும் இப்படியான ஊடறுப்புகளை அதிகபட்சம் தடுக்கமுடியுமென நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

கைப்பேசியை பேசுவதற்கும், குறுஞ்செய்தி (வாட்ஸ்அப்) அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்துவதால் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கலாம் தானே?

மேலும் 'ஆன்டி வைரஸ்,ஃப்யர்வால்' மென்பொருளை நிறுவதாலும் இப்படியான ஊடறுப்புகளை அதிகபட்சம் தடுக்கமுடியுமென நினைக்கிறேன்.

நான் எப்போதும் வங்கி கணக்குகளை திறந்தே வைத்திருக்கிறேன் 
போனில்தான் நிறைய வேலைகள் செய்வதுண்டு 

ஆன்ராய்ட் டில் நிறைய பின்வாசல்கள் உண்டு.


ஓ ஸ் ஸ் சிஸ்ட்டத்தில் உள்நுளைவது ரொம்ப கடினம். 

யாராவது எடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் இதுவரை பயன்படுத்தியதில்லை.  வாங்கும் எண்ணமும் இல்லை.

தற்போதைக்கு  Huawei Mate 9 நல்ல வசதிகளோடு தெரியுது.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் அறிமுக விழாவில் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஆப்பிள் வாட்ச் எல்டிஇ, புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்?
 
கலிபோர்னியா:

அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் நடைபெற இருக்கும் முதல் விழாவில் இந்த ஆண்டின் ஐபோன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. செப்டம்பர் 12-ம் தேதி காலை துவங்க இருக்கும் விழாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் X, ஆப்பிள் வாட்ச் எல்டிஇ, புதிய ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியிள்ளது.

ஐபோன்களின் பத்தாவது ஆண்டு பதிப்பு ஐபோன் X என அழைக்கப்படும் என டெவலப்பரான ஸ்டீவன் டிரஃப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். முன்னதாக புதிய ஐஓஎஸ் சார்ந்த தகவல்களையும் இவர் வெளியிட்டிருந்தார். புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனுடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் இம்முறை S ரக மாடல்களை வெளியிடாது என்றும் கூறப்படுகிறது.

புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் OLED ஸ்கிரீன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில் LCD  ஸ்கிரீன்களே வழங்கப்படுகின்றன. புதிய OLED ரக ஸ்கிரீன்கள் வெவ்வேறு நிறங்களையும் துல்லியமாக பிரதிபலிப்பதோடு, மின்சக்தியை குறைவாக பயன்படுத்தும். ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் LCD ரக ஸ்கிரீன்களே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

201709101522534014_1_iPhone%208%20pic._L

இம்முறை வெளியாக இருக்கும் ஐபோன்களில் ஒரு மாடலில் நிச்சயம் முக அங்கீகாரம் (facial recognition) எனப்படும் 'ஃபேஸ் ஐடி' தொழில்நுட்பம் கொண்டிருக்கும். புதிய தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன் திரையில் முகத்தை காண்பித்து அன்லாக் செய்ய முடியும்.

ஐபோன் X ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் பேனல், ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, டூயல் பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம், 3D சென்சிங் வசதி கொண்ட கேமராக்கள், ஃபேஷியல் ரெக்கஃனீஷன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சிறப்பான வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஆப்பிள் புதிய வளாகத்தில் நடைபெற இருக்கும் ஆப்பிள் கீநோட் நிகழ்ச்சி அமெரிக்க நேரப்படி காலை 10.00 (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்க இருக்கிறது. புதிய ஆப்பிள் வளாகம் கலிபோர்னியாவில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஐபோன்களின் விலை 1000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.63,690 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/10152252/1107295/Apples-2017-iPhone-lineup-details-leaks-online.vpf

Link to comment
Share on other sites

ஆப்பிள் ஐபோன் 8 அறிமுகம்: ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் வெளியாகும் முதல் ஐபோன் Live Updates #AppleEvent

 

 

10:45 PM:

apple iphone 8

ஐபோன் அறிமுகம் செய்யும் மேடைக்கு வந்தார் ஆப்பிள் சிஇஓ. ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமான அவரது புகைப்படம் ஸ்க்ரீனிங் செய்யப்படுகிறது.

10:30 PM

apple iphone

ஐபோன் அறிமுக நிகழ்ச்சிக்கு தயாராகும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர்

 

iphone 8

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் மாடலை இன்றைய ஆப்பிள் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்கிறது. இந்த ஐபோன் அறிமுக நிகழ்ச்சி ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடக்கிறது. இந்த அரங்கில் அறிமுகம் செய்யப்படும் முதல் ஐபோன் இது தான். ஐபோன் அறிமுகம் செய்யும் 10வது வருட நிகழ்ச்சியில் இன்று புதிய மாடல் ஐபோனை ஆப்பிள் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்வார். அரங்கினுள் அனைவரும் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரங்கினில் அமைக்கப்பட்டுள்ள லெதர் நாற்காலிகளின் விலை மட்டும் 14000 அமெரிக்க டாலராம். 

வழக்கமாக எண்களால் பெயரிடப்படும் ஐபோன் மாடல்களில் இருந்து மாறுபட்டு இந்த முறை ஐபோன் எக்ஸ் என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 8-ல் என்ன வசதிகளெல்லாம் இருக்கும் என்ற கணிப்புகள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. 

http://www.vikatan.com/news/information-technology/102061-apple-event-iphone-8-launch-live-updates.html

10:50 PM

iphone 8
ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 50 % அதிகம். ஆப்பிள் வாட்ச் ஒருவருக்கு சிறந்த நாளை தரும் என நம்புகிறோம் டிம் குக். ஆப்பிள் வாட்ச்கள் தான் தற்போது உலகின் நம்பர் 1 வாட்ச்...ரோலக்ஸை பின்னுக்கு தள்ளியது. வாடிக்கையாளர்களுக்கு 97 % திருப்தியை இந்த தயாரிப்புகள் தருகின்றன.

 

Link to comment
Share on other sites

11:00 PM

iphone 8

 

ஆப்பிள் வாட்ச்சின் விலை:

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 : 16000 ரூபாய்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 : 21000 ரூபாய்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 செல்லூலாருடன் : 25000 ரூபாய்

iphone 8

ஆப்பிள் வாட்ச் உலகின் இதய துடிப்பை அளக்கும் நம்பர் 1 வாட்ச். ஆப்பிள் வாட்ச் இயங்கு தளம் 4 செப்டம்பர் 19 வெளியாக உள்ளது. இனி ஆப்பிள் வாட்ச் ட்ரம்ப் போடும் ட்விட்டையும் காட்டும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3-ல் 40 மில்லியன் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்

Link to comment
Share on other sites

11:30 PM

iphone 8

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ்

apple-iphone-2017-20170912-11173_23275.j

வெளியானது ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ்

ஐபோன் 7-ஐ போன்ற தோற்றத்தில் வெளியானது ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ். எதிர் பார்த்தது போலவே டூயல் கேமராவுடன் வெளியாகியுள்ளது. 8 அடுக்கு கலர் ப்ராசஸுடன் வெளிவந்துள்ளது . இது தண்ணீர் மற்றும் தூசுலிருந்து பாதுகாப்பாக இருக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச். 

11:15  PM

ஆப்பிள்  டிவி 4K அறிமுகம்

apple-iphone-2017-20170912-10965_23103.j

இதுவரை ஆப்பிள் டிவிக்களில் இல்லாத சிறப்பம்சம் வாய்ந்த 4K மற்றும் HDR வசதியுடன் வெளியாகியுள்ளது. A10X பிராஸசர் மூலம் இரண்டு மடங்கு அதிகதிறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பைடர் மேன் படத்தை 4K-ல் கண்டு மகிழலாம். 4K  தொழில்நுட்பத்தில் திரைப்படங்கள் பழைய விலையிலேயே கிடைக்கும்.

Link to comment
Share on other sites

11:45 PM

செப்டம்பர் 15 முதல் இந்த ஐபோன்களை ப்ரி ஆர்டர் செய்ய முடியும். செப்டம்பர் 22 முதல் இந்த ஐபோன்கள் விற்பனைக்கு வருகின்றன..

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸின் விலை!

ஐபோன் 8 - 699$ - இந்திய மதிப்பில் சுமார் 44500 ரூபாய்

iphone 8

 

ஐபோன் 8 ப்ளஸ்- 799$ - இந்திய மதிப்பில் சுமார் 51100 ரூபாய்

apple-iphone-2017-20170912-11569_23486.j

iphone 8

இது தான் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸின் சிறப்பம்சங்கள்

Link to comment
Share on other sites

00:10 AM:

ஐபோன் X:

iphone X

ஐபோன் வரிசை போன்களில் மிகவும் சிறந்த வெளியீடு இது தான். விளிம்புகளற்ற டிஸ்ப்ளேயுடன் வெளிவந்துள்ளது ஐபோன் X. தண்ணீர் மற்றும் தூசுகளால் பாதிக்கப்படாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 8-ல் உள்ளது போலவே கண்ணாடியை போன்ற வெளிப்புற அமைப்பு. சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 458 ppi ஐபோன்களில் அதிகபட்ச பிக்சலை கொண்ட போன் இது.  ஹோம் பட்டன் இல்லாமல் இந்த ஐபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரை தட்டினாலே ஐபோன் ஆன் ஆகும். பாதுகாப்பு காரணிகளாக டச் ஐடி மற்றும் ஃபேஸ் ஐடி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை முறையே 50 ஆயிரம் மற்றும் 10 லட்சத்தில் ஒரு முறை தான் தவறாக அன்லாக் செய்யும். ஃபேஸ் ஐடி முக மாறுதல்கள் என்ன நடந்தாலும் அன்லாக் செய்யும். ஆனால் புகைப்படத்தை காட்டினால் அன்லாக் செய்யாது. ஒருவர் தூங்கும் போது முகத்துக்கு நேராக காட்டினால் ஐபோன் ஓப்பன் ஆகாது. கண்கள் திறந்த நிலையில் தான் அன்லாக் ஆகும். ஒருவேளை நீங்கள் அச்சுஅசல் தோற்றமுடைய இரட்டையராக இருந்தால் மட்டும் பாஸ்கோட் வைத்துக் கொள்வது நல்லது. A11 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐபோன் 7ல் பயன்படுத்தப்பட்டுள்ள ப்ராசஸரை விட 25% அதிக திறன் கொண்டது. 

 

அனிமேட்டட் எமோஜிக்கள் மூலம் இனி சாட் செய்யும் விதத்தில் அனிமோஜிக்களை வழங்கியுள்ளது. நமது முகபாவனைக்களுக்கு ஏற்றவாறு விலங்குகளில் முக பாவனைகளை மாற்ற முடியும். 

Link to comment
Share on other sites

00:25 AM:

iphone X

வொயர்லெஸ் சார்ஜர் மூலம் ஐபோனை சார்ஜ் ஏற்ற முடியும். ஐபோன் X-ன் விலை 64000 ரூபாயாக இருக்கும். அக்டோபர் 27 முதல் ப்ரி ஆர்டர் செய்யலாம். நவம்பர் 3ம் தேதி ஐபோன் X விற்பனைக்கு வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் 6,6s,plus6,7.....ஐபோன் 8....எத்தனை வந்தாலும் பிட்டு படம் பாக்குறவனுக்கு எல்லாமே ஒன்னுதான்....:grin:

DJj9LdoVwAIDWAK.jpg

Link to comment
Share on other sites

முக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் X

'எட்ஜ் டூ எட்ஜ்' திரைவசதி மற்றும் ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத தனது உயர்ரக ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐஃபோன் X

ஐபோன் X - என்பது இங்கு எண் பத்தை குறிக்கிறது. மேலும், இது தனது உரிமையாளரை கண்டறியும் வகையிலான பழைய கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை விடுத்து தற்போது முக அடையாள அமைப்பை முறையை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு FaceID என்று பெயரிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இம்முறையானது வெளிச்சம் இல்லாத இருட்டு பகுதியிலும், 30,000 இன்ஃப்ரா ரெட் புள்ளிகளை உருவாக்கி அதன் மூலம் பயனரை சரிபார்ப்பதால், இது பழைய TouchID தொழில்நுட்பத்தைவிட பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது.

இதுவரை ஆப்பிள் வெளியிட்டுள்ள செல்பேசிகளிலேயே இதுதான் விலை உயர்ந்ததாகும்.

 

நவம்பர் 3-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் 64 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் 999 அமெரிக்க டாலராகவும், 256 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் $1,149 அமெரிக்க டாலராகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 64 ஜிபி நினைவகம் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் நோட் 8 திறன்பேசி 930 அமெரிக்க டாலராக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக அடையாள அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐஃபோன் Xபடத்தின் காப்புரிமைAPPLE

"ஐபோன் X ஸ்மார்ட்ஃபோனானது அடுத்த தலைமுறைக்கான ஐபோன்களின் வன்பொருள் தொழில்நுட்பத்தின் மாதிரியை உருவாக்கும் ஒரு நீண்டகால முதலீடு" என்று சிசிஎஸ் இன்சைட் என்னும் திறன்பேசி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜியோப் பிளாபர் கூறியுள்ளார்.

"ஓஎல்இடி திரை மற்றும் புதிய வடிவமைப்பானது வருங்கால ஐபோன்களின் மாதிரியாக இருக்கும் என்னு கருதப்படும் அதே வேளையில், ஆப்பிள் முதலில் போதுமான பொருட்களைப் பெறுவதற்கான சவாலை சமாளிக்க வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய ஓஎல்இடி திரையுடன் வெளியிடப்பட்டிருக்கும் ஐபோனுக்கு மாறுவதன் மூலம் மிக துல்லியமான கருப்பு மற்றும் சரியான நிறங்களை முன்பிருந்ததைவிட காணவியலும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்களான LG மற்றும் சாம்சங் ஆகியவை இதுபோன்ற தொழில்நுட்பத்தை தங்கள் திறன்பேசிகளில் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன.

ஆப்பிளின் விலை மதிப்புமிக்க ஸ்மார்ட்ஃபோன்

இத்திறன்பேசி வெளியிடப்படும் வரை ஆப்பிளின் விலை மதிப்புமிக்க திறன்பேசியாக 969 அமெரிக்க டாலர்கள் விலையுள்ள ஐபோன் 7 இருந்தது.

தனது மற்ற போட்டியாளர்களைவிட பயன்பாட்டாளர்களை திறன்பேசியில் அதிகளவு செலவிட வைக்கும் ஆப்பிளின் இந்த திறனை "புத்திசாலித்தனமானது" என்று வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் Xபடத்தின் காப்புரிமைREUTERS

"தேவையை கட்டுப்படுத்துவது மற்றும் தயாரிக்கப்படும் எண்ணிக்கையை சமன் செய்வதற்காகவே அதன் விலையை அதிகமாக நிர்ணயிப்பதன் ஒரு காரணியாக இருக்கும்" என்று Strategy Analytics என்னும் நிறுவனத்தை சேர்ந்த நீல் மவ்ஸ்டோன் கூறுகிறார்.

"ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அடைய வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தும் பங்குதாரர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திறன்பேசிகளின் விலையை அந்நிறுவனம் கூட்டிகொண்டே வந்திருக்கிறது. குறிப்பாக $1000 மதிப்புள்ள ஒரு திறன்பேசியை உருவாக்குவதற்கான எண்ணத்தில் ஆப்பிள் நிறுவனம் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது."

"தங்களது முதன்மையான தயாரிப்பின் விலையை கூட்டுவது என்பது அந்த இலக்கை அடைவதற்கான ஒரு வழியாகும்" என்று அவர் கூறினார்.

தானியங்கி முக அடையாளம் :

FaceID என்னும் தானியங்கி முக அடையாள முறையை பயன்படுத்தி ஆப்பிள் பே'யில் பணம் செலுத்தவோ அல்லது ஸ்மார்ட் ஃபோனை இயக்க பயன்படுத்தவோ இருப்பதில் உள்ள பயன்பாட்டாளர்களின் முன்தயக்கங்களுக்கு ஆப்பிள் பதிலளித்துள்ளது.

ஆனால், முந்தைய தொழில்நுட்பமான டச் ஐடியில் 50,000த்தில் ஒரு தடவை உரிமையாளர் அல்லாத எவரோ ஒருவர் திறன்பேசியை திறக்கவியலும் என்றிருந்த நிலையில், இப்புதிய FaceID தொழில்நுட்பத்தில் அவ்வாய்ப்பு 10 இலட்சத்தில் ஒன்று என்ற பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளது.

ஐஃபோன் X வெளியீடு

இருந்தபோதிலும், ஐபோன் X திறன்பேசியில் FaceIDக்கு மாற்றாக TouchID அளிக்கப்படாதது பயன்பாட்டாளர்களிடையே சலலப்பை உண்டாக்கியுள்ளது என்று வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"இது பயன்பாட்டாளர்களுக்கு மிகக் கடுமையான தடை" என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கிரியேட்டிவ் ஸ்ட்ரடஜீஸ் நிறுவனத்தை சேர்ந்த கரோலினா மிலனேசி கூறியுள்ளார்.

"ஆப்பிள் நிறுவனம் தானியங்கி முக அங்கீகார அமைப்பு முறையை பாதுகாப்பானது மற்றும் எல்லா நேரங்களிலும் உபயோகிக்க இயலும் என்று உறுதிப்படுத்தும் வரை பயனாளர்கள் ஒருவித தயக்கத்துடனே இருப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்

"பயன்பாட்டாளர்களை பொறுத்தவரை டச்ஐடி முறையானது முடிந்த ஒன்றாக கருதப்படாத நிலையில், அதை மேலும் மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் ஏன் முயற்சிக்கவில்லை என்று அவர்கள் கேட்கலாம்." என்று அவர் தெரிவித்தார்.

Apple TVபடத்தின் காப்புரிமைAPPLE

ஐபோன் X ஸ்மார்ட் ஃபோனின் சிறப்பம்சங்கள்:

•5.8 (14.7) அங்குல திரையுடைய இது ஒரு அங்குலத்திற்கு 458 பிக்சல்களை கொண்டுள்ளது. இதன்மூலம் ஆப்பிளின் மிகவும் தெளிவான அதிக பிக்சல்களை கொண்ட திறன்பேசியாக இது உருவெடுத்துள்ளது. மேலும், இதற்கு "சூப்பர் ரெட்டினா" என்னும் புதிய பெயரும் அளிக்கப்பட்டுள்ளது.

•ஹோம் பட்டன் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் திறன்பேசியில் திரையின் கீழ் பகுதியில் தேய்ப்பதன் மூலம் செயலிகளை இயக்கும் அமைப்பும், மற்றும் பக்க பட்டன் ஒன்றை அழுத்துவதன் மூலம் மெய்நிகர் உதவியாளரான சிரியை இயக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

•போர்ட்ரைட் நிலையை பயன்படுத்தும்போது எடுக்கும் புகைப்படத்தின் பின்புறத்தை மங்க வைக்கும் மற்றும் முன்புற/பின்புற கேமராக்களை பயன்படுத்தும்போது ஒளியளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

•இது முந்தைய ஐபோன் 7 திறன்பேசியைவிட இரண்டு மணிநேரம் கூடுதல் பேட்டரி ஆயுளை அளிக்கும்.

http://www.bbc.com/tamil/global-41250264

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்தது

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களில் உள்ள பேட்டரி வெடித்து ஐபோன் பாதியாக பிளந்து கொள்ளும் சம்பவங்கல் சீனாவில் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்தது
 
பீஜிங்:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களில் பேட்டரியில் ஏற்பட்ட பிழை போனினை பாதியாக பிளக்க வைத்த சம்பவங்கள் தாய்வான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அரங்கேறி வந்தது. இந்நிலையில் புதிய ஐபோன்களில் இதே பிரச்சனை சீனாவிலும் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக தாய்வான் மற்றும் ஜப்பான் நாடுகளில் ஐபோன் 8 பிளஸ் மாடல்களில் பிழை ஏற்பட்ட சம்பவம் குறித்து முறையான ஆப்பிள் நிறுவனம் விசாரணையை துநங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.

சீனாவை சேர்ந்த வலைத்தளத்தில் லியூ என்ற வாடிக்கையாளர் தனது ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்து கொண்டதாக அக்டோபர் 5-ம் தேதி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபோன் வெடித்ததற்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையில் தனது ஐபோனினை உரிமையாளர் தான் வாங்கிய இடத்திலேயே திரும்ப வழங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்து கொள்ளும் சம்பவங்களை விசாரணை செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட போதும், இது குறித்து மற்ற தகவல்களை வழங்வில்லை. தற்சமயம் வரை ஐபோன் 8 சீரிஸ் முன்பதிவுகள் முந்தைய ஐபோன்களை விட குறைவாகவே காணப்படுகிறது.

எனினும் பெரும்பாலான ஐபோன் வாடிக்கையாளர்கள் பத்தாவது ஆண்டு ஐபோன் பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X வாங்க காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் X விற்பனை நவம்பர் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. இந்தியாவில் 64 ஜிபி ஐபோன் X விலை ரூ.89,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/07154357/1121859/Apple-iPhone-8-battery-bloating-swelling-issue-now.vpf

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்த அடி முக அடையாளம் டம்மியாக போனது மிச்ச த்துக்கு அதுக்கு ஏனையையா 1௦௦௦பவுண்டு ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.