Jump to content

குட்டிக் கோடம்பாக்கம்


Recommended Posts

IMG_6466-1-1180x520.jpg

அரங்குகளுக்குள் சுற்றிச், சுற்றிச் சுழன்று வந்த காமிராவை  1977இல் இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன் முதலில் வெட்ட  வெளிக்குச்  சுமந்து வந்த காலம்தொட்டு தமிழ் சினிமா காமிராக்கள் படம்பிடித்த பெரும்பகுதி  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுமே என்பதில் சந்தேகமேயில்லை. ஆண்டுக்கு 10000 ஏக்கருக்கு மேல் நெல் மட்டும் அறுவடை செய்யப்படுவதோடு  மஞ்சள், வாழை, கரும்பு என அனைத்தும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில்  பயிரிடப்பட்டு பசுமை சுமந்து நிற்கிறது இப்பகுதி. எழில் கொஞ்சும் இப்பசுமை வெளிக்குக்  காரணம் பவானி ஆறும் ,அதன் கிளைக் கால்வாய்களும்தான்.  ஆகவே மண்மணம் மாறாத கதைக்களம் தொட்டே பயணிக்கத் தொடங்கிய  1980 களின் தமிழ் சினிமா அனைத்திற்கும் இந்த பசுமை நகரமே விருப்பமான இடமாகிப் போனதில் என்ன வியப்பிருக்க முடியும்?  மண்ணின் மைந்தரான கே. பாக்கியராஜ் கொடுத்த பல வெற்றிப் படங்களும் இந்தப் பகுதியில் உருவானதே.  தமிழ் சினிமாவின் பல பஞ்சாயத்துகளை இந்தப் பகுதி ஆலமரங்கள் கண்டிருக்கிறது. இளைய திலகம் பிரபுவின் ‘சின்ன தம்பி’யும், சரத்குமாரின்   ‘நாட்டாமை’யும்,   கேப்டன் விஜயகாந்தின் ‘சின்ன கவுண்டர்’ திரைப்படமும் ஒட்டுமொத்த தமிழுலகையே இந்நகரம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. ரஜினி, கமல், சத்தியராஜ், கார்த்திக், விஜயகாந்த் முதல் இன்றைய விஷ்ணு வரை இங்கு வராத நடிகர்களும் இல்லை, அம்பிகா, இராதா, குஷ்பு முதல் ஹன்சிகா வரை இங்கு வராத நடிகைகளும் இல்லை. இதனாலேயே இந்நகரம் ‘குட்டிக் கோடம்பாக்கம்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.

IMG_6345-1-1180x726.jpg

பசுமை நகருக்கு வரவேற்கும் எழில் கொஞ்சும் நுழைவாயில்

IMG_6349-1-1180x787.jpg

நெல்லும், வாழையும் அதிகம் பயிரடப்பட்டு அறுவடைக் காலங்களில் சாலைக்கு மேல் குறைந்தது நான்கு அடி உயரம் வளர்ந்து நிற்கும் அழகிய நெற்கதிர்கள் கொண்ட பசுமையான வயல்வெளிகள் நிறைந்த தூக்க நாயக்கன்பாளையம் சாலை

IMG_6392-1-1180x787.jpg

பல திரைப்படங்களில் வரும் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தின் மேற்புறப்பகுதி

DSCN3701-2-1180x743.jpg

குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திற்கு வரும் அரியவகைப் பறவை இனங்கள்

 

IMG_6398-2-1180x773.jpg

மூன்றுபுறமும் சுற்றிலும் மலை சூழ்ந்த குண்டேரிப்பள்ளம்
நீர்த்தேக்கத்தின் அழகிய தோற்றம். சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதி இதற்கு வெகு அருகில்தான் உள்ளது.

IMG_6414-1-1180x787.jpg

 

குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தின் தென்கரைப் பகுதி. அக்கறையில் வனப்பகுதியின் எல்லை ஆரம்பிக்கிறது.

 

IMG_6435-1-1180x738.jpg

குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தின் மீன்பிடிச் சந்தை

 

IMG_6485-1-1180x787.jpg

சாலையின் இருமருங்கிலும் தோரண வாயில் போல் தொடர்ச்சியான மரங்களோடு காட்சியளிக்கும் கொடிவேரி சாலை.

 

IMG_6472-1-1180x770.jpg

பெரும்பாலான தமிழ் சினிமா பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட கொடிவேரி நீர்த்தேக்கம்.

 

IMG_6468-1-1180x787.jpg

கொடிவேரி நீர்த்தேக்கத்தின் மேற்கே இருக்கும் பொதுப்பணித்துறைஅலுவலகம். சின்னத்தம்பி திரைப்படத்தில் கதாநாயகன் பிரபுவின் வீடு.

IMG_6439-1-1180x787.jpg44

செவ்வாழை அதிகம் பயிரிடப்படும் கள்ளிப்பட்டி சாலை.

 

IMG_6538-1-1180x787.jpg

கள்ளிப்பட்டி சாலையோரத்தில் இருக்கும் செவ்வாழைத் தோப்பு .

 

IMG_6505-1-1180x753.jpg

 

200 ஆண்டுகள் பழமையான சி.கே.எஸ் பங்களாவின் வெளிப்புறத் தோற்றம்.  கடந்த 50 ஆண்டுகளாகத் திரைப்படத்திற்கு வாடகைக்கு விடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 8000 ரூபாய் என வாடகை வசூலிக்கப்படுகிறது.

IMG_6509-1-1180x787.jpg

சி.கே.எஸ் பங்களாவின் முகப்புத் தோற்றம். இங்கு படமெடுப்பது தவிர யாருமே தங்க அனுமதிக்கப்படுவதில்லை.

 

IMG_6523-1180x787.jpg

கொங்கு மண்டலப் பகுதியில் தொட்டி கட்டு வீடு என்று அழைக்கப்படும் சி.கே.எஸ் பங்களாவின் உட்புறத் தோற்றம்

 

IMG_6514-1-1180x787.jpg

     சி.கே. எஸ் பங்களாவில் தொட்டிகட்டு அமைப்பின் மையப் பகுதி

 

IMG_6540-1-1180x787.jpg

பல திரைப்படங்களில் வரும் நகரின் மையப் பகுதியில் சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி

IMG_6543-1-1180x839.jpg

அதே சத்தியமங்கலம் சாலையில் திரைப்படத்திற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட அரசுக் கட்டிடமான பயணியர் விடுதி.

 

IMG_6549-1-1180x787.jpg

‘கோயில் காளை’ என்ற விஜயாகாந்த் திரைப்படம் முழுவதுமே படமாக்கப்பட்ட பாரியூர் அம்மன் கோவில். நகரப் பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயம் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்றது.இந்தக் கோவில் குண்டம் (தீமிதி) திருவிழாவும், சத்தியமங்கலம் அடுத்து இருக்கும் பண்ணாரி  அம்மன் குண்டமும் மிகவும் புகழ்பெற்றது.

IMG_6552-1-1180x787.jpg

பல பிரபலத் திரை நட்சத்திரங்கள் விரும்பித் தங்குகிற எமரால்ட் விடுதி. ஈரோடு சாலையில் அமைந்துள்ளது.

https://roar.media/tamil/travel/mini-kodambakkam/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்க்க, கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது.
கோபிசெட்டிப் பாளைய நகரத்தின், பகிர்வுக்கு நன்றி ஆதவன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.