Jump to content

கடவுளின் நகரம் – காசி


Recommended Posts

asthi-visarjan-in-kashi-1000x520.jpg

 

எப்போதும்போல பயணம் செய்யப் போகும் இடத்தின் பேரை வீட்டிலோ நண்பர்களிடமோ பகிரும்போது ஒரே பதில் தான் எப்போதும் கிடைக்கும். அது, “ஏன்டா இப்புடி தேவை இல்லாம சுத்துற!.” என்பதே. ஆனால் முதல் முறையாக இத்தனை வித்தியாசமான பதில்கள் கிடைத்தது எனக்கே வியப்பாகத்தான் இருந்தது. நீ அங்க போவணு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரம் போவணு தெரியாது, அங்க போற வயசாடா இது!, எதுவும் லவ் பெய்லியரா தம்பி, திரும்பி வருவியா? இவ்ளோ கேள்விகளைக்  கேட்க வைத்த அந்த ஊரின் பெயர்.. ‘’காசி’’. அப்படி என்னதான் அங்கு இருக்கிறது என்ற ஆவல் அதிகரிக்க நானும் நண்பன் பிரபாகரனும் கிளம்பினோம். (அலுவலகத்தில் தனக்கு திருமண நிச்சயம் என்று 10 நாட்கள் விடுப்பு எடுத்து வந்தான் உயிர்த்தோழன், நமக்கு அந்த கவலைதான் இல்லையே)

asthi-visarjan-in-kashi-701x561.jpg

படம் – asthivisarjan.com

மதியம் 3.30க்குத்தானே இரயில், என்று பொறுமையாக கிளம்பியவனை மழை வச்சு செய்தது. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் வண்டியை துரத்திப்  பிடித்து அன்ரிசர்வில் ஏறும் போது, பாரம் தாங்காமல் தோல்பையின் ஒரு பக்கம் அருந்தது. ஒருவேளை இதெல்லாம் சிவனின் திருவிளையாடலோ என்று நண்பனைப்  பார்க்க, அதிகத்  துணிகளை தூக்கி வந்ததும், தாமதமாக கிளம்பிய உன் சோம்பேறித்தனமும்தான் காரணம் என்று கழுவி ஊற்றினான். (குறிப்பு: அவனுக்கு ஹிந்தி தோடா  தோடா மாலும். எனக்கு, அதுவா அது பண்டிகை காலத்துல கோவிலுக்கு வெளிய வச்சு விப்பாங்கனு வடிவேல் சொல்லுவாரே அவ்ளோதான் வரும்…)

சென்னையில் இருந்து 36 மணிநேர பயணம். வாரணாசிக்கு. எங்களைத்  தவிர எங்களுடன் பயணித்த அனைவரும் ஹிந்திவாலாக்களே, இந்தியன் ரயில்வே உணவு சாப்பிட கூடியதா என்று தெரியவில்லை. ஆனால் விழுங்குவதற்கு மிகவும் கடினமானவை. என் கல்லூரி விடுதி சமையல் தெய்வமாகத்  தெரிந்தது. கூடப் பயணிப்பவர்கள் இரண்டு நாளைக்குமே சப்பாத்தி சுட்டுக்  கொண்டு வந்துள்ளனர். ஒரு வார்த்தைக்கு சாப்டுறீங்களானு கேக்கலையே பாவிங்க. பெரும்பாலும் உண்ண, உறங்க என்று பொழுது போனாலும் இயற்கை காட்சிகள் நம் கண்களைக்  கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

6228672459_03300944f3_b-701x465.jpg

படம் – staticflickr.com

அது மூன்றாம்நாள் காலைப்பொழுது, டேய் கங்கை ஆறுடா! நண்பனின் குரல் என்னை எழுப்பியது. எங்களின் இரயில் மிக மெதுவாக கங்கையின்மேல் கட்டப்பட்ட பாலத்தின்வழியே சில நிமடங்களே சென்றது எனலாம்!. அவ்ளோ பெரிய ஒரு நதியை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை!. இயற்கை எப்போதுமே நம் கற்பனைகளைவிட பிரம்மாண்டமானவை என்பதை உணர்ந்த  தருணம் அதுதான். அடுத்த சிறிது நேரத்தில் காசி வந்தது, ஆனால் ஒரு அறிவு ஜீவி வாரணாசியில்தான் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது என்று சொன்னதைக்  கேட்டு வாரணாசி சென்றோம்.. (ஆனால் மறுபடியும் அங்கிருந்து காசி வந்ததும் அந்த ஜீவனை, தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் அபிசேகம் செய்தோம்)

நீங்கள் புதுவரவு என்பதைத்  தெரிந்ததும் உங்களைக்  கோழி அமுக்குவது போல் அமுக்க ஒரு ஊரே அங்கு இருக்கிறது. தெரிந்த தோட தோட ஹிந்தியை வைத்தே நண்பன் ஷேர்ஆட்டோ பிடித்துக்  காசிக்குப்  போக வழிசெய்தான். காசி போனதும் ஒரு பெரியவரிடம், “குளிக்க இங்கு பாத்ரூம் இருக்கா” என்று கேட்க அவர் என் பின்புறம் கைகளைக்  காட்டி நக்கலாய் ஏதோ சொன்னார். அது என்னவென்று நண்பனைக்  கேட்க,  உலகமே இதுல தலை முழுகுனா பாவம் போகும்னு நெனைக்கிற கங்கையைப்  பின்னாடி வச்சுகிட்டு பாத்ரூம் கேக்கறீங்களேன்னு சொன்னாராம். ஆம்  சில அடி தூரத்தில்தான்  அந்த மாபெரும் கங்கை நதி ஓடிக்கொண்ருடிந்தது.

1920-img_8620-mr-701x394.jpg

படம் – news.bbcimg.co.uk

‘ஏன்டா! அப்ப ஒனக்கு எவ்ளோ திமிர். அப்டின்னு தானே கேக்கறீங்க?’ சத்தியமா அந்தத்  தண்ணி அவ்ளோ குப்பைகள் நிறைந்திருந்தது. மொத்த ஊரின் கழிவுகளையும் சுமக்கும் இடமாக கங்கை அங்கு இருந்தது. அடிமனதில்  “அடப் பாவிங்களா! இதுவும் எங்க ஊர் கூவம் மாதிரி  ஆகிவிடக் கூடாது” என்று நினைத்துக்கொண்டே முதல் முழுக்கு போட்டேன். அருகில் பிரபா இதுவரை அடித்த பியரை கூட இனி தொடுவதில்லை என்று முங்கிக்கொண்டிருந்தான். அங்கிருந்து நதியின் வழியே கோவிலை அடைவதுதான் எளிது ஆனால் வழக்கம் போல் நம்மை கவுக்க கூட்டம் தயாராக இருக்கும்! இங்கேயும்  நண்பன் தயவால் 50 ரூபாய்க்கே படகில் போனோம். அவர்கள் எங்களிடம் ஆரம்பத்தில் கேட்டது 600 ரூபாய் மக்களே! மொத்தம் 82 படித்துறைகள் அங்கு உள்ளனவாம், அதில் ‘’அஷ்வமேத’’ என்ற படித்துறையின் அருகில்தான் கோவில் உள்ளதாக படகோட்டி கூறினார்.

அது தவிர்த்து மணிகர்னிக்கா மற்றும் ஹரிச்சந்திரா படித்துறைதான் மிக முக்கிய படித்துறைகள் என்றார். காரணம் அங்குதான் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. போகும் வழியில் அதையும் பார்த்தோம். ஒரு வழியாக கோவில் போன ஒருவரைப்  பின்தொடர்ந்து கோவிலை நெருங்கிய போது கைபேசி, துணிப்பை என்று எதுவும் கோவிலில் அனுமதி இல்லை, இங்கு கடையில் வைத்து விட்டுச் செல்லுங்கள்  என்றனர். “ஏதும் பணம் அதற்குக்  கொடுக்க வேண்டுமா?” என்றோம், அதெல்லாம் தேவை இல்லை பூசை சாமான் மட்டும் வாங்கிச்  செல்லுங்கள் என்றனர். இவ்ளோ நல்ல மக்களை சந்தித்து எவ்ளோ நாள் ஆச்சு என்று நினைக்கும் போதே, நம்ம ஊர் பூசைத்  தட்டை விடக்  கொஞ்சம் பெரிய தட்டை கையில் வைத்து 501 குடுங்கள் என்றார்கள்!. (பாவிங்களா காசிக்கு ரயில் டிக்கெட்டே 700 ரூபாய்தாண்டா!)

Kashi03-701x526.jpg

படம் – pilgrimaide.com

அதுக்குப்  படித்துறையிலேயே பையை வைக்கலாம்போல என்று கோவிலுக்குச்  செல்லாமல் படித்துறையை நோக்கி நடந்தோம். சிறிது நேரம்ப டித்துறையிலேயே  இருவரும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு வெளிநாட்டுகாரர் ஒரு படகோட்டியைத்  திட்டிவிட்டுப்  போனார். அவரைப்  பார்த்துச்  சிரிக்க, எங்கள் அருகில் வந்து அமர்ந்து படகு சவாரி வருகிறீர்களா? என்றார். நாங்கள் வேண்டாம் என்று மறுத்து, ஏன் அந்த வெளிநாட்டுக்காரர் கோபப்பட்டார்? என்று கேட்டோம். வந்ததில் இருந்து தொல்லை செய்கிறோம் என்றும் அதிக அளவு பணம் வாங்கி ஏமாற்றுகிறோம் என்றும் எல்லா படகோட்டிகளையும் திட்டுவதாக ஆங்கிலத்தில் சொன்னார். எப்படி இவ்ளோ நல்லா  ஆங்கிலம் பேசுகிறீர்கள் என்றதற்கு , பேசினால்தானே சோறு சாப்பிட முடியும். நான் பள்ளிக்கூடம் போனதே இல்லை 10 வயதில் இங்கு வந்தேன் எப்படி என் ஆங்கிலம் என்று சிரித்தார். தல இந்த ஆங்கிலம் கத்துக்க நான் MBA வரை படிக்கவேண்டியதாப்போச்சு. என்ன விட நல்லா பேசுறீங்க என்றேன். பலமாகச்  சிரித்துவிட்டு அவரின் அப்பா, தாத்தாவும் இங்குதான் படகு ஓட்டுகிறார்கள் என்று அவர்களைக் காட்டினார். நமக்கு வரலாறு சொல்ல ஆள் கிடைத்தாகி விட்டது என்று நானும் பிரபாவும் குஷி ஆனோம்.

வாரண், ஆசி என்ற இரண்டு ஆறுகளும் இந்த இடத்தில் கங்கையில் கலப்பதால் இந்த ஊரை வாரணாசி என்று சொல்றாங்க. ஆனால் (வாரணாசி, காசி என்று இரண்டு நிறுத்தங்கள் உள்ளன இப்போது) இத பனாரஸ், காசினும் சொல்வாங்க என்றார். 3000 வருசத்துக்கு மேல இந்த ஊர் இருக்குனு சொல்வாங்க. (கி.மு 900 முன்பே காசி இருந்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன) இங்க இருக்கற  சிவன் கோவில் ரொம்பவெல்லாம்  பழசு கிடையாது. பழைய கோவில் முகலாயர்களின்   படையெடுப்புல தரை மட்டம் ஆகியிருச்சு. இப்ப இருக்கற  கோவில் எப்ப கட்டினதுனு சரியாய்த்  தெரியல . (இப்போ இருக்கும் கோவில் கி.பி 1800க்குப்  பிற்பாடு கட்டப்பட்டதே)

telangana-pushkaralu-701x467.jpg

படம் – blogspot.com

அப்போ அங்க இருந்த சிவலிங்கத்தைக்  காப்பாற்ற  அங்கு இருந்த ஒரு பெரியவர் அந்த லிங்கத்தோட பக்கத்துல இருந்த கிணற்றில் விழுந்துட்டாராம். பிறகு அந்த லிங்கத்தை யாரும் எடுக்கவே இல்லை. இப்போவும் அந்த கிணறுக்கு பூசைலாம் நடக்குதுன்னு சொன்னதும் கிணற்றை பார்க்க ஆசை வந்தது . (காரணம் முகலாயர்கள் மட்டும் அல்ல சமண சைவ சண்டைல்  பெரிய கோவில்களெல்லாம் அழிக்கப்பட்டபோது  அங்கிருந்த  மூலவர் சிலைகள் சிறிய கோவில்களிலோ பாதாள அறையிலையோ பாதுகாக்கபட்டதாகவும், அதில் பாதி சிலைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் படித்த ஞாபகம்)

‘சரி அப்படி  என்ன இங்க இருக்கற  கங்கைல சிறப்புனு இவளோ பேர் இங்க வந்து தெவசம் பண்றாங்க?’  என்று நான் கேக்க நெனச்சேன் நண்பன் பிரபா கேட்டுவிட்டான். பெரியவர் தொடர்ந்தார், பகரீதன் என்னும் அரசன் தன் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்க தேவலோகத்தில் ஓடுன கங்கையை நோக்கிப்  பலநூறு வருசம் தவம் பண்ண, வந்த கங்கை நான் நேரடியா பூமிக்கு வந்தா பூமி தாங்காது, என்னைத் தடுத்து அனுப்ப சிவனை நோக்கி தவம் பண்ணுனு சொல்ல, மறுபடியும் சிவனை நோக்கி தவம் பண்ணி சிவனை அழைத்தார் பகரீதன்.

9656a90a0907eb6a9d93ce7ceb5f8da7-ganga-l

படம் – pinimg.com

சிவனும் தன் சடைமுடியால் கங்கையின் வேகத்தைக்  குறைத்து பூமிக்கு அனுப்ப, தன் முன்னோர்களின் சாம்பல் இருந்த பகுதிகளின் வழியே கங்கையை அனுப்பி அவர்களுக்கு முக்தியை கொடுக்கிறான் பகரீதன். இதனால்தான் இங்கு தங்களின் கும்பத்தாரின் அஸ்தியைக்  கரைத்து அவர்களுக்கு முக்தி அளிக்கிறார்கள் அதுமட்டும் இல்லை நிறைய வயதானவர்கள் வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் வந்து இங்கு தங்கி இங்கேயே தங்கள் உயிர் பிரிவதை புண்ணியமாகக்  கருதுகிறார்கள். அதற்கு இங்கு நிறைய மடங்கள் உள்ளன என்றார். சாவை எதிர்நோக்கி ஒரு காத்திருப்பு அதுவும் இறைவன் அருளோடு என்ற அந்த சிந்தனையே புதிதாகப்பட்டது. இங்கு இருக்கும் ப்ரோகிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள், பூசை முடிந்ததும் பணம், நகை என்று பிடு ங்கிய கதை இங்கு நிறைய உள்ளது. வீடு, நிலம் எல்லாம் எழுதிக்கொடுத்தவன் எல்லாம் உண்டு எல்லாம் புண்ணியத்துக்கு என்று அவர் சொன்னதும் தலையே சுத்துச்சு. ஆமா இந்த அஹோரிங்க பத்தி….

காசி இரவுக்கான நகரம் என்று கூறுவார்கள் அது எந்த அளவு உண்மை என்று தொடர்ச்சியில் பார்க்கலாம்..

https://roar.media/tamil/travel/kashi-the-city-of-god/

 

Link to comment
Share on other sites

அகோரிகளின் நகரமா காசி?

காசிக்கு நீங்கள் எப்பொழுது சென்றாலும், காசி உங்களுக்கு பல புல்லரிக்கும் அனுபவத்தைக்  கொடுக்கும். அதற்கு  நீங்கள் ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம்  இல்லை. அப்படிப்பட்ட அனுபவம் எங்களுக்கும் கிடைத்து. மணி 7 ஆகும்போது போய் ‘’கங்கா ஆர்த்தி’’  பாருங்க கண்டிப்பா உங்களுக்குப்  புடிக்கும்னு படகோட்டி தாத்தா சொல்ல, நானும்  நண்பனும் ‘’கங்கா பூஜா கரானாகே’’ என்று ஹிந்தியில் வழிகேட்டு , ஒரு வழியாய் கங்கா படித்துறைக்குச்  சென்றோம் . நல்ல கூட்டம் பாதிக்குப்  பாதி வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்தான் கையில் ஒரு கேமராவோடு  இருந்தார்கள். அந்த பூஜையை கங்கை ஆற்றின் மீது படகில் இருந்தபடியே பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். இருந்தாலும் நமக்கு அது கட்டுப்படி ஆகாது என்பதால் கூட்டத்தோடு ஐக்கியமாகி நின்றோம் ( இங்கும் 2௦௦ கேக்குறாங்க ,நிக்கிற படகுக்குமாடா ! ).

ganga_varanasi-701x359.jpg

வாரணாசி. pixabay

நான்கு இளம்வயது பூசாரிகள் ஒரே மாதிரி பட்டுடை அணிந்து, அவர்களுக்கென  இருந்த இடத்திற்கு வந்து நின்றார்கள். அவர்களின் முன் பூசை பொருட்கள் இருந்தது . நால்வரும் மண்டியிட்டு கங்கையை வணங்கி அவர்களிடம் இருந்த சங்கை ஒவ்வொன்றாக ஊதினார்கள் . அந்த ஓசை நதிக்கரையின் மறுபுறம் பட்டு எதிரொலித்த அந்த உணர்வு உண்மையில் புல்லரித்துதான் போனது. பின் ஏதோ ஒரு ஹிந்தி சாமி பாடல் ஒளிபரப்பானது , அதற்கு தகுந்த வண்ணம் மந்திரம் ஓதிக்கொண்டே பூசையைத்  துவங்கினார்கள் அப்படியென்றால் அது கடவுள் மந்திரம் செபிக்கும் பாடல்தான் என்று புரிந்து கொண்டோம். அருகில் இருந்த  வெளிநாட்டுக்காரர் எதற்கு இப்படி உடல் அசைவுடன் கூடிய ஒரு வழிபாடு என்று அவரின் வழிகாட்டியிடம் ஆங்கிலத்தில் கேட்க ,நடனத்தின் கடவுளே சிவன் தான் என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த வழிகாட்டி.

901c819fab654b428eca1e151f5d91af15fdd041

கங்கா ஆர்த்தி.  pixabay

முதலில் சாம்பிராணி , மயிலிறகு ,பின் ஒரு மெல்லிய துணி என்று ஒவ்வொரு பொருளைக் கொண்டும் நான்கு புறமும் பூசை செய்ய ஆரம்பித்தார்கள் ,பின் பல அடக்கு தீபத்தைக்  கொண்டு கங்கையைப்  பூசித்தார்கள், ஒவ்வொரு முறையும் பூசை முடிந்த பின்பு  பயன்படுத்திய  அந்த பொருளை நீர் விட்டு சுத்தம் செய்தபின்தான் வைத்தார்கள் .இப்போது அனைவரும் உற்சாகமாக  “ஹர ஹர மஹா தேவா” என்று ஒற்றை குரலில் சொல்ல நாக வடிவிலான  தீபத்தால் பூசை செய்தார்கள் ,அவர்கள் நெருப்புடன் ஒரே நேர் கோட்டில் நின்று, பின் குனித்து, சுற்றி என செய்த அனைத்தும் பக்தியைத்  தாண்டி ரசிக்கும்படியும் இருந்தது .நெருப்பு கையில் இருந்தும் இசைக்கு தகுந்தாற்போல் நான்கு புறமும் அதை அவர்கள் கையாண்ட விதமும் சுத்தி இருக்கும் பக்தர்களின் ஒற்றை கோஷமும் என அந்த இடம் தரும் அனுபவம் முற்றிலும் புதிதுதான்.பூசை முடிந்ததும்  அனைவரும் தீபங்களை வாங்கி ஆற்றில் விட ஆரம்பித்தார்கள். வழக்கம்போல் 2௦ரூபாய் தீபத்தை கொடுத்து 20௦ என வெறி ஏத்திக்கொண்டிருந்தனர். பொட்டுவைக்கவோ , சடங்குகளை பின்பற்றவோ வெளிநாட்டவர் எந்த தயக்கமும் காட்டவே இல்லை நண்பன் ஆங்கிலத்தில் ஒரு வெள்ளைக்காரப்  பெண்ணிடம் இதைக்  கேட்டும் விட்டான் ( அடப்பாவி ஆரம்பத்துல இருந்து ,அது என்ன பாத்து சிரிச்சுட்டே இருந்துசு. இவன் பேசிட்டானே என்ற கடுப்பில் நான் அருகில் இருந்தேன் ) கடவுள் எல்லாம் ஒருத்தர்தான், நாமதான் நமக்கு பிடிச்சமாதிரி கும்புடுறோம்னு கண்களை சிமிட்டியபடி சொல்லி பறந்தது அந்த வெளிநாட்டு பறவை .

main-qimg-7f0261f7bce972ad9083c88f6d941b

கங்கா ஆர்த்தி-2. pixabay

இரவு கார்ணிக்கா படித்துறைக்கு (மயானம்) அருகில் இருக்கும் குறைந்த விலை விடுதி ஒன்றில் அறை எடுத்தோம்( வெறும் 4௦௦ ரூபாய்தான்) . அந்த விடுதியை எங்களுக்குக்  காட்டிய நபர் உங்களுக்கும் புகைக்க வேண்டும் என்றால் கீழே வாருங்கள் என்று புன்னகைத்தார். “ஆம் கஞ்சாவே தான், காசியில் இதற்கு அனுமதி உண்டு, பயப்பட வேண்டாம் என்றும் சொன்னார்”. நான் நண்பனைப்  பார்க்க பெரிய கும்புடு போட்டு என்னை அழைத்துச் சென்றான். விடுதி வாசலைத்  தாண்டினால் மயானம், போய்தான் பார்ப்போமே என்று வந்தோம். ஆர்பாட்டமே இல்லாமல் பிணம் ஒன்றை முழுவதும் துணியால் சுற்றிக் கொண்டு வந்தார்கள். நதிக்கரையில் வைத்துதான் எரிக்கிறார்கள் நான்கு பிணம் எரிந்துகொண்டிருந்தது. நண்பன் வழக்கம்போல் போட்டோ எடுக்க ஆரம்பித்தான் .அப்போது ஒரு கை என் தோளைத்  தொடவே, திடுக்கிட்டு திரும்பினேன் , அதே கஞ்சா ஆசாமி நின்றார் புகைத்துக்கொண்டே.

 

Manikarnika-Ghat-701x511.jpg

எரிக்கப்படும் பிணங்கள்

“ஒரு நாளைக்கு எத்தனை பிணம் எரியும்?”என்றேன் .கணக்கு இல்லை என்றார். ஆனால் அதிலும் சில கட்டுப்பாடு இருக்கிறது ,1௦ வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் , அகோரிகள் ,சிவனடியார்களை எரிக்க மாட்டர்களாம் அவர்கள் சிவனின் அங்கமாகப்  பார்க்கிறார்கள். நாங்கள் பேசுவதைக்  கேட்ட எரிக்கும் நபர் “இப்போது இங்கும் மின்மயானம் வந்துவிட்டது, இருந்தும் இந்த நெருப்பு அனைவதே இல்லை” என்றார். ஆண்களின் மார்புப்  பகுதியும், பெண்களின் இடுப்புப்  பகுதியும் நீண்ட நேரம் எரியுமாம். சில நேரம் அதை ஆற்றில் விட்டுவிடுவோம் என்றார் .( இது தெரியாம 2, 3 தடவ குழுச்சுட்டேனே ! ) அது போன்று மேல் சொன்ன சிவ வடிவமாக பார்க்கும் நபர்களையும் அப்படியே ஆற்றில் விட்டுவிடுவார்களாம். இது தவிர்த்து ஹரிசந்த்ரா படித்துறையும் மயானமாக உள்ளது என்றார்.

852fdba99529240dfcfc59a5e75c1287-701x394

கங்கையில் விடப்படும் பிணம்

( ராஜா ஹரிச்சந்திரா இந்த நாட்டை ஆண்ட மன்னன் எனவும், அவரும் விதி வசத்தால் வெட்டியானாக இருந்தார் எனவும், அதனால் அந்த இடத்திற்கு  அவர் பெயர் எனவும் கூறுகிறார்கள். நமக்கு நம்ம ஊர் அரிச்சந்திர மயான காண்டம் நினைவுக்கு வருது..)

“ஆமா அகோரிங்கள எங்க பாக்கலாம்?” என்றேன். பலமாகச்  சிரித்துவிட்டு “அகோரிங்க சாதாரணமாக சாமியார்  மாதிரிதான் சுத்துவாங்க, தங்களை அகோரின்னு காட்டிக்க மாட்டங்க. நாம அவங்கள பின் தொடர்வது பிடிக்காமதான், அவுங்க உடைகள் இல்லாம திருநீற பூசி சுடுகாட்டுல இருக்காங்க. ஆனா நாம அப்படியும் அவுங்கள விடுறது இல்லை”னு சொல்லி மீண்டும் சிரித்தார். “மனுஷ கரி சாப்பிடறது உண்மையா அத பாக்க முடியுமா ?” என்றேன். “இங்க வரவங்கலாம் இப்படித்தான், இங்க இருக்க அகோரி  எல்லாரும் மனித மாமிசம் சாப்டுவாங்கனு நினைக்குறீங்க. ஆனா உண்மை என்னன்னா மிகவும்  கம்மியான அகோரிங்க மட்டும்தான் அப்படிப்  பண்றாங்க அதுவும் ஒரே ஒரு பிரிவு அகோரிங்க மட்டும் தான். ( தங்களை யாரும் அணுகக்  கூடாது என்பதற்காக, இறந்த அந்த நபருக்கு மோட்சம் கொடுக்க என்று பல கதைகள் சொல்லப்படுகிறது.) பெரும்பாலும் கால பைரவரை முதன்மையாகக்  கொண்டு இயங்கும் நாக அகோரிகள்தான் அப்படிச்  சாப்பிடுவது” என்று கூறினார்.

Kumb-Mela-The-Aghori-Way-of-Life.jpg

அகோரி. pixabay

‘சென்ற மாதம் உங்க தமிழ்நாட்டுல இருந்துகூட ஒரு அகோரி வந்தார் ,அவரும் இப்படித்தான் விளக்கம் சொன்னார்’ என்று  நம்ம கஞ்சா ஆசாமி ஆரம்பித்தார். இங்க திடீருன்னு கும்பலா , தனியானு  வருவாங்க நதிக் கரைக்கு அந்த பக்கம் தங்கி நதியில வர பிணத்தை வச்சோ, சுடுகாட்லயோ பூசை பன்னுவாங்க. ஆனா யாரையும் தொந்தரவு செய்யமாட்டங்க என்றார். ‘நண்பா போடோஸ்லாம் செம ! ஒரு வாரத்துக்கு பேஸ்புக் செத்துச்சு’ என்று வந்தான் பிரபா. திரும்பினால் கஞ்சாஆசாமியோ, எரிகாட்டில் இருந்த நபரோ யாரும் இல்லை. அங்கு பிணம் மட்டும்  தீ சுவாலையில் எரிந்துகொண்டிருந்தது. வந்தவங்க அகோரியா  இருக்குமோ? என்று யோசிக்கும்போது, “அறையில் பைகளை வைத்துவிட்டு நாளை காலையாவது சாமியைப்  பார்க்கவேண்டும் வா!” என்று .அறைக்கு இழுத்துச்  சென்றான் நண்பன். என் கண்கள் அவர்களையே தேடியது.

காலை ,கோவிலை நோக்கிச்  சென்றோம் .வழியெல்லாம் ஒரே  லஸ்ஸி கடைகள் தான் ,வித விதமான லஸ்ஸிகள். 1௦ ரூபாயில் இருந்து 1௦௦ ரூபாய் வரை இருந்தது .கண்டிப்பாகப் பருகலாம், மிகச் சிறந்த ருசி. மிகக்  குறுகிய பாதையின்  வழியாக கோவிலுக்குச்  சென்றோம் .பெண்களை சோதிக்க பெண் போலீஸ் இருந்தாலும் தனி வரிசையோ தனி இடமோ இல்லை அவர்கள் பெண்களைச்  சோதிப்பதை பார்க்கும்போது அத்தனை கோபம் வந்தது. மிகச் சிறிய கோவிலாகத்தான் இருந்தது ( தொடர் படையெடுப்பில் அழிந்துவிட்டது அல்லவா) அங்கேயும் தனி பூசைகள் செய்ய பூசாரிகள் வரிசையாக உள்ளனர் . மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்தில் இருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார்.லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத்  தகடு உள்ளது. லிங்கத்தின்மேல் ஒரு பாத்திரம் கட்டித்  தொங்க விட்டுள்ளார்கள் .அதிலிருந்து கங்கா தீர்த்தம் சொட்டுச்  சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிசேகம் செய்கிறது. இங்கிருக்கும் லிங்கம் மிகவும் புனிதமான லிங்கமாக கருதப்படுகிறது.

kashi-vishwanath-shivling.jpg

காசி விசுவநாதர். indianmandirs

மோட்சத்தின் கடவுளை அருகில் இருந்து பார்த்தாகி விட்டது என பிரபா சொன்னான் ,அன்பே சிவம் என்று நான் சிரிக்க .அன்று இரவு பஞ்சாப்பில் இருக்கும் பொற்கோவிலை பார்க்க ரயில் புக்கிங் உறதியாகிவிட்டது என்று நண்பன் நினைவூட்ட அறையை நோக்கிச்  சென்றோம். இப்போதும் சொல்லிவைத்தார் போல் பிணம் எங்களுக்கு முன் சென்றது. ஏன்டா நம்ம ஊர்லலாம் பிணம் வீட்டத்  தாண்டி போனா  குடம் நெறைய தண்ணியக்  கொண்டுவந்து வீட்டு வாசல்ல ஊத்துவாங்க . இங்கலாம் என்ன பண்ணுவாங்கடா ! யோசிப்பது போல் முகத்தை வைத்துகொண்டு கேட்டான் பிரபா. மரணத்தை வரவேற்கும் ஊரு பங்காளி இதுவும் கடந்துபோகும்னு போயிருவங்கனு சொல்ல மீண்டும் புகைபடம் எடுக்க ஓடினான் .

இரவு பஞ்சாப்பிற்கு  ரயில் ஏறனும். மீண்டும் 1௦௦௦ கி.மீ பயணம் அங்கு எங்களுக்கு நடக்கபோகும் சில சம்பவங்கள் பற்றி கொஞ்சமும் தெரியாமல் பயணத்திற்கு தயாரானோம். விடுதியின் வாசலை அடைந்ததும் ,அப்போதுதான்  ஒரு பிணத்திற்குக்  கொல்லி வைத்துச்  சத்தமாக சங்கை ஊதிப்  பாடத்  தொடங்கினார்  வெட்டியான். இறப்பு உறுதி என்று தெரிந்தும் ஆடும் மனிதா இறந்த பின்னாவது அமைதிகொள் . ஹர ஹர மஹா தேவ்….

( அவர் ஹிந்தியில் தான் பாடுனாரு மொழிபெயர்ப்பு நம்ம தோடா தோடா ஹிந்தி மாலும் நண்பன் பிரபா)

 

https://roar.media/tamil/travel/kashi-agori/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் காசியை வாசித்து சுவாசிக்கிறோம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அலங்கோலங்களையும் சுமக்கின்ற கங்கை...நிச்சயம் பூசிக்கப் படவேண்டியவள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் நரகம் என வாசித்து வந்து பார்த்தால் அது உண்மையோ என தோன்றுகிறது..!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.