Jump to content

சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி


Recommended Posts

சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி

Getty-Images-Sanga-696x473.jpg Image Courtesy - Getty Image
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வரும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ‘கரீபியன் பிரிமியர் லீக்’ T-20 தொடரில் பிளே ஒப் சுற்றிற்கு, குமார் சங்கக்கார தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி, சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினை வீழ்த்தியதன் 41 ஓட்டங்களால் வீழ்த்தியதன்  மூலம் தெரிவாகியுள்ளது.

இம்மாதம் (ஒகஸ்ட்) 4 ஆம் திகதி முதல் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் சேர்ந்த அணிகளின் பங்குபெற்றதலுடன் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் T-20 தொடரின், குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுபெறும் தருவாயினை தற்போது நெருங்கியுள்ளன. வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வீரர்களினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 10  போட்டிகளில் விளையாடி தொடரின் அடுத்த கட்டமான பிளே ஒப் சுற்றிற்கு வாய்ப்பினை பெறும்.

இத்தொடரின் பிளே ஒப் சுற்றிற்கு திரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஏற்கனவே தெரிவாகியுள்ள நிலையில்,  குமார் சங்கக்கார தலைமையிலான தொடரின் நடப்பு சம்பியன் ஆன ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி பிளே ஒப் வாய்ப்பினை உறுதி செய்ய, கிரிஸ் கெய்ல் தலைமையிலான சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினை தீர்க்கமான இன்றைய குழுநிலை ஆட்டத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

கிங்ஸ்டன் நகரத்தின் சபீனா பார்க் மைதானத்தில் தொடங்கியிருந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிரிஸ் கெயில் தரப்பு முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை ஜமெய்க்கா தல்லாவாஸ் அணியிற்கு வழங்கியிருந்தது.

தொடர்ந்து ஜமெய்க்கா அணி சார்பாக துடுப்பாட லென்ட்ல் சிம்மோன்ஸ் மற்றும் கிளேன் பிலிப்ஸ் ஆகியோர் மைதானம் விரைந்தனர்.

போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த லென்ட்ல் சிம்மோன்ஸ் தனது அணி ஜமெய்க்காவிற்கு மோசமான ஆரம்பத்தினைப் தந்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில் மைதானம் விரைந்த இலங்கை அணியின் குமார் சங்கக்கார சமார்த்தியமான தனது துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி ஏனைய ஆரம்ப வீரர் கிளேன் பிலிப்ஸ் உடன் இணைந்து ஓட்டங்கள் சேர்க்க தொடங்கினார்.

முதல் விக்கெட்டுக்காக இரண்டு வீரர்களினாலும் 81 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பெறப்பட்டது. இரண்டாம் விக்கெட்டாக பறிபோன பிலிப்ஸ் ஆப்கானிஸ்தான் வீரர் முஹம்மட் நபியின் பந்துவீச்சில் பிடியொன்றினைக் கொடுத்து 31 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இவரின் விக்கெட்டினை தொடர்ந்து சீரான இடைவெளியில் மூன்றாவது விக்கெட்டினையும் பறிகொடுத்த ஜமெய்க்கா தல்லாவாஸ அணியை சங்கக்கார அரைச்சதம் கடந்து  மேலும் வலுப்படுத்தினார்.

அணியின் நான்காவது விக்கெட்டாக பறிபோன சங்கக்காரவினால் மொத்தமாக 55 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தன.

தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளின் தேசிய அணி வீரர் ரொவ்மேன் பொவேல் இன் அதிரடி காட்ட, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்த ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி 157 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது.

அதிரடியாக ஆடியிருந்த பொவேல் வெறும் 26 பந்துகளிற்கு 3 அபார சிக்ஸர்கள், 2 பெளண்டரிகள் உடன் 46 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியின் பந்து வீச்சு சார்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் செல்ட்டன் கொல்ட்ரல் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 158 ஓட்டங்களினை 20 ஓவர்களில் பெற களமிறங்கிய சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியில் ஆரம்ப வீரரும் அணித்தலைவருமான கிரிஸ் கெயில் ஓட்டம் ஏதுமின்றி ஓய்வறை திரும்பி ஏமாற்றினார்.

எனினும், ஏனைய ஆரம்ப வீரரான ஈவான் லூயிஸ் சிறிது அதிரடி காட்டி அணியினை வெற்றிப்பாதையிற்கு அழைக்க முயற்சித்திருந்தார். அவரின் விக்கெட்டினை பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சமி கைப்பற்ற போட்டியின் முடிவு ஜமெய்க்கா அணியிற்கு சாதமாகியது.

தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அனைவரினையும் வேகப்பந்த்து வீச்சாளர்களான ஒசானே தோமஸ் மற்றும் கிரிஸ்மர் சன்டோக்கி ஆகியோர் விரைவாக ஓய்வறை அனுப்ப முடிவில், 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி 116 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஈவின் லூயிஸ் 40 ஓட்டங்களினை குவித்திருந்தார். எதிரிணியினை பந்து வீச்சில் மிரட்டியிருந்த சன்டோக்கி மற்றும் தோமஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியின் வெற்றி மூலம் கிடைத்த புள்ளிகளினால், தொடரின் புள்ளிகள் இரண்டாம் இடத்திற்கு  முன்னேறிய ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி தொடரின் பிளே ஒப் சுற்றிற்கும் முன்னேறியது.

போட்டியின் சுருக்கம்

ஜமெய்க்கா தல்லாவாஸ் – 157/5 (20) குமார் சங்கக்கார 69, ரொவ்மேன் பொவேல் 43, செல்ட்டன் கொல்ட்ரல் 2/38

சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் – 116 (17.5) ஈவின் லூயிஸ் 40, மொஹமட் ஹபீஸ் 21, கிரிஸ்மர் சன்டோக்கி 3/10, ஒசானே தோமஸ் 3/31

போட்டி முடிவுஜமெய்க்கா தல்லாவாஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றி

Point Table

http://www.thepapare.com/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.