Jump to content

யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?


Recommended Posts

யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?

 

யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களில் முக்கியமானது கடல்களாகும். என்ன? கடல் ஒன்றுதானே? அது எப்படி கடல்கள் என்று வரும்?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆம், யாழ்ப்பாணத்தைச் சுற்றி கடல் இருக்கிறது என்பதைவிட கடல்கள் இருக்கின்றன என்பதுதான் பொருத்தமானது. யாழ்ப்பாணத்தில் கடல்கள் உள்ளன. அது எப்படி?

யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?

ஒன்றுக்கொன்று வித்தியாசமான பண்புகளைக்கொண்ட கடல்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளன. சேற்றுக்கடல், கல்லுக்கடல், மணற்கடல் என்பனவே அவை. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளைக் கொண்டனவாகும்.

தீவுகள் உள்ளிட்ட குடாநாட்டின் கரையோரங்களைப் பார்க்கின்றபோது, கிளிநொச்சி மாவட்டத்திற்கும் யாழ் மாவட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கடநீரேரி அமைந்துள்ள பகுதி உட்பட கொழும்புத்துறை, குருநகர், பாசையூர், யாழ் நகர், கல்லுண்டாய், அராலி, வேலணை, காரைநகரின் தென்பகுதி அனைத்தும் சேற்றுக்கடலாக விளங்குகின்றன.

பாக்குத் தொடுகடல் அமைந்துள்ள தீவுகளின் மேற்குப் பகுதி, காரைநகரின் மேற்கு-வடக்கு, மாதகல், கீரிமலை, காங்கேசன்துறை, மயிலிட்டி, வல்வெட்டித்துறை வரை கல்லுக் கடலாக விளங்குகின்றது.

பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் வரையான பகுதி மணற் கடலாக விளங்குகின்றது.

இந்த மூன்று வகையான கடல்களும் ஆபத்தானவைதான். சேற்றுக் கடற் பகுதியில் சுரிகள் காணப்படும். இவை ஆழமற்ற பகுதியாக இருந்தாலும் இறங்கி நடப்பவர்களை விழுங்கிவிடும் தன்மை வாய்ந்தவை. நீந்துவதால் உண்டாகும் களைப்பினைவிட இதனுள் இறங்கி நடப்பதால் உண்டாகும் களைப்பு அதிகமானது. யாழ்ப்பாண நகரத்தின் தெற்கே இந்தச் சுரிகள் ஆங்காங்கே நிறைந்துள்ளன. யாழ்ப்பாணக் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியும் சுரிகளால் நிறைந்ததே.

யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?

கல்லுக்கடல் பகுதியும் ஆபத்தானதே, சற்றுச் செல்லச்செல்ல இதன் ஆழத்தை உணரலாம். ஆழ நீரோட்டங்கள் கடற்பாறைகளுடன் மோதுவதால் சுழிகளை உருவாக்குகின்றன. இந்தச் சுழிகள் கரைநோக்கியும் சுழல் கற்றின் பாதைபோல வருகின்றபோது அகப்படுபவர்களை இழுக்கும் சக்தி வாய்ந்தன. இவ்வாறு இழுக்கப்படுபவர்கள் பாறைகளுடன் மோதுவதற்கான நிலைமைகளும் அதிகம்.

யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?

மணற்கடல் சற்று வித்தியாசமானது. இதன் அலைகள் ஆபத்தானவை. ஒரே தூக்கில் கரையை நோக்கித் தள்ளவும் முடியும் உள்ளே இழுக்கவும் முடியும். முறையான நீச்சல் பயிற்சி இல்லாதவர்கள் இந்த அலையுடன் மோதமுடியாது. அதைவிட இதன் ஆழம் என்பது மிகவும் அதிகமானது. கரையிலிருந்து இருபதடி தூரம் ஒருவரை மூழ்கடிக்கும் தன்மையுடையது. மிகச் சடுதியான தரையிறக்கமே இதற்கு காரணம்.

யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?

ஆக சேற்றுக்கடல், கல்லுக் கடல், மணற் கடல் என்பன யாழ்ப்பாணத்தைச் சுற்றிக் காணப்படும் மூன்று வகையான கடல்கள் என்பது புலனாகின்றதல்லவா!

அழகான தீவுகளாலும் குடாக்களாலும் கடநீரேரிகளாலும், பரவைக் கடலாலும் சூழப்பெற்ற யாழ்ப்பாணக் குடாநாட்டின் கடல்வளம் என்பது அபரிமிதமானது. இங்கு பிடிபடும் நண்டுக்கும் இறாலுக்கும் கணவாய்க்கும் மீன்களுக்கும் தனிச்சுவை உண்டு!

இலங்கைத் தீவிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாடு தனித்துவமிக்கதாக விளங்குவதற்கு உள்ள பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

https://news.ibctamil.com

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

 

சேற்றுக் கடற் பகுதியில் சுரிகள் காணப்படும். இவை ஆழமற்ற பகுதியாக இருந்தாலும் இறங்கி நடப்பவர்களை விழுங்கிவிடும் தன்மை வாய்ந்தவை.

சுரிகள் என்றால் என்ன? Quick Sands சை போன்றனவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சுரிகள் என்றால் என்ன? Quick Sands சை போன்றனவா ?

சுரிகள் என்பவை...மணல் பகுதிகளில் இருக்கும்!

மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்! சில வேளைகளில் ஆளை உள்ளிழுத்து விழுங்கி விடும்!

இந்தப் பகுதிகளில் மணல் எப்போதும் நிலத்துக்குக் கீழ் அசைந்த படியே இருக்கும்!

ஆங்கிலத்தில் quicksand என்று சொல்லுவார்கள்!

 

ஒரு அழகிய தேவதை ....செய்யிற வேலையைப் பாருங்கள்!

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.