Jump to content

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !!


Recommended Posts

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !!

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

பார்ப்பவரின் இதயத்தை உறையவைக்கும் ஒரு நிகழ்வு லக்னோவில் உள்ள புனித ஜான் வியான்னி பள்ளியில் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும் பொழுது பதில் கூறாததால் மாணவனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளார் பள்ளி ஆசிரியை.

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

3 நிமிடத்தில் 40 கன்னத்தில் முறை அறைந்துள்ளார். பின்னர் அவனது மார்பில் கை வைத்து தள்ளி விட்டு, சட்டையின் காலரை பிடித்து இழுத்துள்ளார். காண்போரின் மனதை பதற வைக்கும் இந்த காட்சியானது பள்ளியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

இந்த நிகழ்வை பற்றி மாணவனின் தந்தை கூறுகையில், 'தலைமை ஆசிரியர் அவரை இடை நீக்கம் செய்வேன் என உறுதி அளித்துள்ளதாகவும், மேலும் சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்கும் பொழுது அவர் பதிலளிக்காமல் கோபமாக பேசியதாக தெரிவித்துள்ளார்'.

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

மேலும் அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்பொழுது என்னுடைய மகன் அமைதியாக வந்தான். அருகாமையில் உள்ள மற்ற மாணவர்கள் கூறியதால் தான் தெரிந்தது. அதன் பின்னரே பள்ளிக்கு சென்று அந்த காமிரா பதிவை பார்த்தேன் என கூறியுள்ளார்.

 

https://news.ibctamil.com/ta/world-affairs/lucknow-teacher-slaps-student-40-times

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CCTV புண்ணியம்...

வாங்கினனாங்க தானே.... அந்த மாதிரி... எங்களுக்கு விழுந்த அடிகள் எல்லாம் ..... இப்ப நினைச்சாலும்...

பிள்ளையார் எண்ட பட்ட பெயர் கொண்ட ஒரு பயல் 3 கழுசான் போட்டுக் கொண்டு வருவான். பின் பக்கம் அடி விழுந்தால் தாங்குமாம் என்று. அடி போடுற வாத்தி கண்டால் கதி என, நாம் பதை பதைத்துக் கொண்டிருப்போம்.

4ம் வகுப்பு முழுவதுமே வாத்திக்கு, அந்த விசயம் தெரியாது. ஆனால் ஒழுங்கா அடி தப்பாம விழும்.

5ம் வகுப்பில், மயங்கி விழுந்த பெண் பிள்ளைக்கு தனது பிளாஸ்கில் இருந்து ஊத்திக் கொடுத்த டீயை குடிக்க மறுத்து விடடாள், 
என கோபத்தில் சாத்தோ, சாத்து என்று சாத்தி.... பின்னர் தாய், தகப்பன், ஊர் விதானை என்று வந்து, போலீசுக்கு போக முன்னம், மாவட்டத்திக்கு வெளியே மாறுதல் வாங்கி, மலையகம் ஓடினார் ஒரு வாத்தி.  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கல்வியை வன்முறையூடாகத்தான் கற்பிக்க முடியுமா? 

வீட்டின் அழுத்தங்களை தீர்க்கும் தலைகளாக மாணவர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிவாங்கினது கொஞ்ச நஞ்சமில்லை அதாலை உந்த ரீச்சர் அடிச்சது பெரிசாய் தெரியேல்லை. ஊரிலை ஒருசில வாத்திமார் இருக்கினம்.ஒழுங்காய் படிப்பீக்க/சொல்லிக்குடுக்க மாட்டினம். புற்றூல் மட்டையாலை மொளி பாத்து அடிப்பினம். தங்கடை ஆக்கள் என்ன பிழைவிட்டாலும் நோ பிரொப்பளம்...தட்டிக்குடுப்பினம். திருப்பி ஏதும் கதைச்சால்....ஏதும் சொன்னால் கன்னம் சிவக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடத்தில் 365 நாட்கள்.

அதில் சனி, ஞ<யிறு 100 (அண்ணளவாக).

ஏனைய விடுமுறைகள் 25 (அண்ணளவாக).

பாடசாலை விடுமுறைகள் 100.(தோராதாயமாக).

நான் போகாத நாட்கள் 50.

வாத்தியார் வராத நாட்கள் 25.

மிகுதி 52 நாட்களில் 73 நாளும் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.....! tw_blush:

என் போன்ற அப்பாவிகளை வெளுப்பதற்காகவே முழுக்கை சட்டையை துறந்து அரை கை சட்டையுடன் பிரசன்னமாகி சன்னதமாடும் ஆசிரியர்களை கொண்டவர்கள் நாங்கள் .....!

Image associée

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17.9.2017 at 11:39 PM, குமாரசாமி said:

நான் அடிவாங்கினது கொஞ்ச நஞ்சமில்லை அதாலை உந்த ரீச்சர் அடிச்சது பெரிசாய் தெரியேல்லை. ஊரிலை ஒருசில வாத்திமார் இருக்கினம்.ஒழுங்காய் படிப்பீக்க/சொல்லிக்குடுக்க மாட்டினம். புற்றூல் மட்டையாலை மொளி பாத்து அடிப்பினம். தங்கடை ஆக்கள் என்ன பிழைவிட்டாலும் நோ பிரொப்பளம்...தட்டிக்குடுப்பினம். திருப்பி ஏதும் கதைச்சால்....ஏதும் சொன்னால் கன்னம் சிவக்கும்.

சரியா நொந்துநூலாகிப்போனீங்கள் போலகிடக்கு. என்ன செய்யிறது எங்களுக்கொரு அறிவியல்  ஆசிரியை. அடியோ அடி. பெடியள் தவளை கொண்டரச் சொன்னா பெரிய தவளையாக் கொண்டருவாங்கள் அதுக்கும் அடி. எங்கட வாத்திமைப் பண்பாடு அப்படி. 

On 18.9.2017 at 11:14 AM, suvy said:

ஒரு வருடத்தில் 365 நாட்கள்.

அதில் சனி, ஞ<யிறு 100 (அண்ணளவாக).

ஏனைய விடுமுறைகள் 25 (அண்ணளவாக).

பாடசாலை விடுமுறைகள் 100.(தோராதாயமாக).

நான் போகாத நாட்கள் 50.

வாத்தியார் வராத நாட்கள் 25.

மிகுதி 52 நாட்களில் 73 நாளும் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.....! tw_blush:

என் போன்ற அப்பாவிகளை வெளுப்பதற்காகவே முழுக்கை சட்டையை துறந்து அரை கை சட்டையுடன் பிரசன்னமாகி சன்னதமாடும் ஆசிரியர்களை கொண்டவர்கள் நாங்கள் .....!

Image associée

 

இப்படியானவர்களுக்கு சரியான உளவியலாளரூடாக வகுப்பெடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

சரியா நொந்துநூலாகிப்போனீங்கள் போலகிடக்கு. என்ன செய்யிறது எங்களுக்கொரு அறிவியல்  ஆசிரியை. அடியோ அடி. பெடியள் தவளை கொண்டரச் சொன்னா பெரிய தவளையாக் கொண்டருவாங்கள் அதுக்கும் அடி. எங்கட வாத்திமைப் பண்பாடு அப்படி. 

இப்படியானவர்களுக்கு சரியான உளவியலாளரூடாக வகுப்பெடுக்க வேண்டும்.

தப்பு நொச்சி....! இன்றைக்கு அந்த ஆசிரியர்களை தெய்வமாய் நினைச்சு பார்க்க தோணுது. அவர்கள் பாதம் பட்ட மண்ணை சிரசில் வைக்க மனம் விரும்புது.அவர்கள் சம்பளத்தை மட்டும் நினைத்து வேலை செய்யவில்லை.அவர்களது தனிப்பட்ட வாழ்விலும் ஒழுக்கத்திலும் ஒரு முன்னுதாரனமாகத் திகழ்ந்தார்கள். பணம் வாங்காமல் மாலை நேர வகுப்புகள் எடுத்தார்கள்.இன்னும் எவ்வளவோ சொல்லலாம் .....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பக்கத்தில் இருந்தது கதை கொடுக்க.. எனக்கு சோக்கட்டியால ஒரு ரீச்சர் எறிஞ்சவா. இப்பவும் அது தலைல நோகுது.  இப்பவும் அந்த ரீச்சரை பிடிப்பதில்லை.  *ரீச்சர் - ஆசிரியை tw_blush:

அதுக்காக நியாயமாக பாடம் போதித்த ஆசிரியர்கள் மீது இப்பவும் மதிப்புள்ளது. 

 

Link to comment
Share on other sites

பிள்ளைகளுக்கு வகுப்பில் அடிப்பது அடிப்படையில் மிகவும் தவறு. நல்ல பழக்கங்களை வன்முறையினூடு சொல்லிக் கொடுக்க முடியாது. எம் சமூகம் எடுத்ததுக்கெல்லாம் வன்முறையை கையில் எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
....... ஆயினும் ஆயினும் நானெல்லாம் அடிவாங்காமல் வளர்ந்து இருந்தால் கெட்டு குட்டிச் சுவராகி சீரழிஞ்சு சின்னா பின்னம் ஆகி நாசமாகிப் போயிருப்பன்.  ஒரு முறை இடை நிலை பிரிவின் தலைமை ஆசிரியர் (Middle school head master - Jeevanantham) என் வீட்டுக்கே வந்து அம்மாவுக்கு முறையிட்டு அவருக்கு முன்னாலே பூசை கொடுத்த கதையை எல்லாம் பிற்காலத்தில் என் வரலாறு சொல்லும்

சுவி அண்ணா சொன்ன மாதிரி நல்லா அடிச்ச வாத்திமாரை இப்ப கண்டால் கையெடுத்து கும்பிடச் சொல்லுது. ஊருக்கு போகும் போது எப்படியும் அவர்களை சந்திக்க முயல்வதுண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

பிள்ளைகளுக்கு வகுப்பில் அடிப்பது அடிப்படையில் மிகவும் தவறு. நல்ல பழக்கங்களை வன்முறையினூடு சொல்லிக் கொடுக்க முடியாது. எம் சமூகம் எடுத்ததுக்கெல்லாம் வன்முறையை கையில் எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
....... ஆயினும் ஆயினும் நானெல்லாம் அடிவாங்காமல் வளர்ந்து இருந்தால் கெட்டு குட்டிச் சுவராகி சீரழிஞ்சு சின்னா பின்னம் ஆகி நாசமாகிப் போயிருப்பன்.  ஒரு முறை இடை நிலை பிரிவின் தலைமை ஆசிரியர் (Middle school head master - Jeevanantham) என் வீட்டுக்கே வந்து அம்மாவுக்கு முறையிட்டு அவருக்கு முன்னாலே பூசை கொடுத்த கதையை எல்லாம் பிற்காலத்தில் என் வரலாறு சொல்லும்

சுவி அண்ணா சொன்ன மாதிரி நல்லா அடிச்ச வாத்திமாரை இப்ப கண்டால் கையெடுத்து கும்பிடச் சொல்லுது. ஊருக்கு போகும் போது எப்படியும் அவர்களை சந்திக்க முயல்வதுண்டு

இப்ப இவர் என்ன சொல்லவாறார்? வாத்திமார் அடிச்சு படிப்பீக்கிறது நல்லதெண்டு சொல்ல வாறாரோ? :cool:

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

இப்ப இவர் என்ன சொல்லவாறார்? வாத்திமார் அடிச்சு படிப்பீக்கிறது நல்லதெண்டு சொல்ல வாறாரோ? :cool:

ஐ மீன் ..நான் என்ன சொல்ல வாறன் என்றால் அடிக்கலாம் ...ஆனால் அடிக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரும்பாலும் அடி வாங்கியதில்லை.. ஆனால் ஒருமுறை எப்பொழுதும் வாங்கும் மதிப்பெண்ணைவிட குறைவாக வாங்கியதால் விழுந்த பிரம்படியில் ஈக்கி குத்தி புண்ணாகி காலில் நிரந்தர தழும்பாகிவிட்டது.. இன்னமும் அத்தழும்பை பார்க்கையில் அந்த ஆங்கிலப் பாட ஆசிரியரின் நினவு வந்து செல்லும்.. அவர் போட்டபோடில்தான் பள்ளி இறுதியாண்டு பொதுத்தேர்வில் ஓரளவாவது மதிப்பெண் எடுத்து தேற முடிந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

தப்பு நொச்சி....! இன்றைக்கு அந்த ஆசிரியர்களை தெய்வமாய் நினைச்சு பார்க்க தோணுது. அவர்கள் பாதம் பட்ட மண்ணை சிரசில் வைக்க மனம் விரும்புது.அவர்கள் சம்பளத்தை மட்டும் நினைத்து வேலை செய்யவில்லை.அவர்களது தனிப்பட்ட வாழ்விலும் ஒழுக்கத்திலும் ஒரு முன்னுதாரனமாகத் திகழ்ந்தார்கள். பணம் வாங்காமல் மாலை நேர வகுப்புகள் எடுத்தார்கள்.இன்னும் எவ்வளவோ சொல்லலாம் .....!  tw_blush: 

 

7 hours ago, nedukkalapoovan said:

எனக்கு பக்கத்தில் இருந்தது கதை கொடுக்க.. எனக்கு சோக்கட்டியால ஒரு ரீச்சர் எறிஞ்சவா. இப்பவும் அது தலைல நோகுது.  இப்பவும் அந்த ரீச்சரை பிடிப்பதில்லை.  *ரீச்சர் - ஆசிரியை tw_blush:

அதுக்காக நியாயமாக பாடம் போதித்த ஆசிரியர்கள் மீது இப்பவும் மதிப்புள்ளது. 

 

ஆசான் கடவுளுக்கு சமம். எமக்கு கல்வியை தந்தவர்கள். :100_pray:

அந்த கல்வியை வன்முறையாக திணிப்பதுதான் வேதனையை தருகின்றது. :114_ear:

புலம் பெயர்நாடுகளில் உள்ள பாடசாலை சுதந்திரங்களை பார்க்க இன்னுமொருக்கால் கொப்பி தூக்கிக்கொண்டு போகணும் போல் இருக்கின்றது.<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

 

ஆசான் கடவுளுக்கு சமம். எமக்கு கல்வியை தந்தவர்கள். :100_pray:

அந்த கல்வியை வன்முறையாக திணிப்பதுதான் வேதனையை தருகின்றது. :114_ear:

புலம் பெயர்நாடுகளில் உள்ள பாடசாலை சுதந்திரங்களை பார்க்க இன்னுமொருக்கால் கொப்பி தூக்கிக்கொண்டு போகணும் போல் இருக்கின்றது.<_<

 கு.சா... நீங்கள் தியரியை சொல்கிறீர்கள் நாங்கள் அனுபவத்தையே பேசுகிறோம்.சீதோஷ்ண நிலைகளுக்கு ஏற்றவாறுதான் ஆடை அணிகிறோம். தண்டனைகளும் அப்படியே.அவைகள் கொல்வதற்கல்ல, கோலோச்சுவதற்கானவை.நிழலி ஒப்பேறி  விட்டார்......நானும் ஏதோ கொஞ்சம் ....!

நெடுக்ஸ் : அன்று அந்த ஆசிரியையின் கையில் சோக்கட்டிக்குப் பதில் பேப்பர் வெயிட் இருந்திருந்தால் .....யோசித்து பாருங்கள்...இறைவனின் கருணை புரியும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20.9.2017 at 7:17 PM, suvy said:

 கு.சா... நீங்கள் தியரியை சொல்கிறீர்கள் நாங்கள் அனுபவத்தையே பேசுகிறோம்.சீதோஷ்ண நிலைகளுக்கு ஏற்றவாறுதான் ஆடை அணிகிறோம். தண்டனைகளும் அப்படியே.அவைகள் கொல்வதற்கல்ல, கோலோச்சுவதற்கானவை.நிழலி ஒப்பேறி  விட்டார்......நானும் ஏதோ கொஞ்சம் ....!

நெடுக்ஸ் : அன்று அந்த ஆசிரியையின் கையில் சோக்கட்டிக்குப் பதில் பேப்பர் வெயிட் இருந்திருந்தால் .....யோசித்து பாருங்கள்...இறைவனின் கருணை புரியும்....!  tw_blush:

சீதோஷ்ண நிலைக்கேற்ப தண்டனைகள்??????
ஐயா! அப்படியாயின் ஆசிரியர்கள் மாணவிகளின் பாவாடையை தூக்கி பிரம்பால் அடிப்பதை சரியென்கிறீர்களா? :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.