Jump to content

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !!


Recommended Posts

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !!

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

பார்ப்பவரின் இதயத்தை உறையவைக்கும் ஒரு நிகழ்வு லக்னோவில் உள்ள புனித ஜான் வியான்னி பள்ளியில் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும் பொழுது பதில் கூறாததால் மாணவனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளார் பள்ளி ஆசிரியை.

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

3 நிமிடத்தில் 40 கன்னத்தில் முறை அறைந்துள்ளார். பின்னர் அவனது மார்பில் கை வைத்து தள்ளி விட்டு, சட்டையின் காலரை பிடித்து இழுத்துள்ளார். காண்போரின் மனதை பதற வைக்கும் இந்த காட்சியானது பள்ளியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

இந்த நிகழ்வை பற்றி மாணவனின் தந்தை கூறுகையில், 'தலைமை ஆசிரியர் அவரை இடை நீக்கம் செய்வேன் என உறுதி அளித்துள்ளதாகவும், மேலும் சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்கும் பொழுது அவர் பதிலளிக்காமல் கோபமாக பேசியதாக தெரிவித்துள்ளார்'.

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

மேலும் அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்பொழுது என்னுடைய மகன் அமைதியாக வந்தான். அருகாமையில் உள்ள மற்ற மாணவர்கள் கூறியதால் தான் தெரிந்தது. அதன் பின்னரே பள்ளிக்கு சென்று அந்த காமிரா பதிவை பார்த்தேன் என கூறியுள்ளார்.

 

https://news.ibctamil.com/ta/world-affairs/lucknow-teacher-slaps-student-40-times

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CCTV புண்ணியம்...

வாங்கினனாங்க தானே.... அந்த மாதிரி... எங்களுக்கு விழுந்த அடிகள் எல்லாம் ..... இப்ப நினைச்சாலும்...

பிள்ளையார் எண்ட பட்ட பெயர் கொண்ட ஒரு பயல் 3 கழுசான் போட்டுக் கொண்டு வருவான். பின் பக்கம் அடி விழுந்தால் தாங்குமாம் என்று. அடி போடுற வாத்தி கண்டால் கதி என, நாம் பதை பதைத்துக் கொண்டிருப்போம்.

4ம் வகுப்பு முழுவதுமே வாத்திக்கு, அந்த விசயம் தெரியாது. ஆனால் ஒழுங்கா அடி தப்பாம விழும்.

5ம் வகுப்பில், மயங்கி விழுந்த பெண் பிள்ளைக்கு தனது பிளாஸ்கில் இருந்து ஊத்திக் கொடுத்த டீயை குடிக்க மறுத்து விடடாள், 
என கோபத்தில் சாத்தோ, சாத்து என்று சாத்தி.... பின்னர் தாய், தகப்பன், ஊர் விதானை என்று வந்து, போலீசுக்கு போக முன்னம், மாவட்டத்திக்கு வெளியே மாறுதல் வாங்கி, மலையகம் ஓடினார் ஒரு வாத்தி.  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கல்வியை வன்முறையூடாகத்தான் கற்பிக்க முடியுமா? 

வீட்டின் அழுத்தங்களை தீர்க்கும் தலைகளாக மாணவர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிவாங்கினது கொஞ்ச நஞ்சமில்லை அதாலை உந்த ரீச்சர் அடிச்சது பெரிசாய் தெரியேல்லை. ஊரிலை ஒருசில வாத்திமார் இருக்கினம்.ஒழுங்காய் படிப்பீக்க/சொல்லிக்குடுக்க மாட்டினம். புற்றூல் மட்டையாலை மொளி பாத்து அடிப்பினம். தங்கடை ஆக்கள் என்ன பிழைவிட்டாலும் நோ பிரொப்பளம்...தட்டிக்குடுப்பினம். திருப்பி ஏதும் கதைச்சால்....ஏதும் சொன்னால் கன்னம் சிவக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடத்தில் 365 நாட்கள்.

அதில் சனி, ஞ<யிறு 100 (அண்ணளவாக).

ஏனைய விடுமுறைகள் 25 (அண்ணளவாக).

பாடசாலை விடுமுறைகள் 100.(தோராதாயமாக).

நான் போகாத நாட்கள் 50.

வாத்தியார் வராத நாட்கள் 25.

மிகுதி 52 நாட்களில் 73 நாளும் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.....! tw_blush:

என் போன்ற அப்பாவிகளை வெளுப்பதற்காகவே முழுக்கை சட்டையை துறந்து அரை கை சட்டையுடன் பிரசன்னமாகி சன்னதமாடும் ஆசிரியர்களை கொண்டவர்கள் நாங்கள் .....!

Image associée

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17.9.2017 at 11:39 PM, குமாரசாமி said:

நான் அடிவாங்கினது கொஞ்ச நஞ்சமில்லை அதாலை உந்த ரீச்சர் அடிச்சது பெரிசாய் தெரியேல்லை. ஊரிலை ஒருசில வாத்திமார் இருக்கினம்.ஒழுங்காய் படிப்பீக்க/சொல்லிக்குடுக்க மாட்டினம். புற்றூல் மட்டையாலை மொளி பாத்து அடிப்பினம். தங்கடை ஆக்கள் என்ன பிழைவிட்டாலும் நோ பிரொப்பளம்...தட்டிக்குடுப்பினம். திருப்பி ஏதும் கதைச்சால்....ஏதும் சொன்னால் கன்னம் சிவக்கும்.

சரியா நொந்துநூலாகிப்போனீங்கள் போலகிடக்கு. என்ன செய்யிறது எங்களுக்கொரு அறிவியல்  ஆசிரியை. அடியோ அடி. பெடியள் தவளை கொண்டரச் சொன்னா பெரிய தவளையாக் கொண்டருவாங்கள் அதுக்கும் அடி. எங்கட வாத்திமைப் பண்பாடு அப்படி. 

On 18.9.2017 at 11:14 AM, suvy said:

ஒரு வருடத்தில் 365 நாட்கள்.

அதில் சனி, ஞ<யிறு 100 (அண்ணளவாக).

ஏனைய விடுமுறைகள் 25 (அண்ணளவாக).

பாடசாலை விடுமுறைகள் 100.(தோராதாயமாக).

நான் போகாத நாட்கள் 50.

வாத்தியார் வராத நாட்கள் 25.

மிகுதி 52 நாட்களில் 73 நாளும் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.....! tw_blush:

என் போன்ற அப்பாவிகளை வெளுப்பதற்காகவே முழுக்கை சட்டையை துறந்து அரை கை சட்டையுடன் பிரசன்னமாகி சன்னதமாடும் ஆசிரியர்களை கொண்டவர்கள் நாங்கள் .....!

Image associée

 

இப்படியானவர்களுக்கு சரியான உளவியலாளரூடாக வகுப்பெடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

சரியா நொந்துநூலாகிப்போனீங்கள் போலகிடக்கு. என்ன செய்யிறது எங்களுக்கொரு அறிவியல்  ஆசிரியை. அடியோ அடி. பெடியள் தவளை கொண்டரச் சொன்னா பெரிய தவளையாக் கொண்டருவாங்கள் அதுக்கும் அடி. எங்கட வாத்திமைப் பண்பாடு அப்படி. 

இப்படியானவர்களுக்கு சரியான உளவியலாளரூடாக வகுப்பெடுக்க வேண்டும்.

தப்பு நொச்சி....! இன்றைக்கு அந்த ஆசிரியர்களை தெய்வமாய் நினைச்சு பார்க்க தோணுது. அவர்கள் பாதம் பட்ட மண்ணை சிரசில் வைக்க மனம் விரும்புது.அவர்கள் சம்பளத்தை மட்டும் நினைத்து வேலை செய்யவில்லை.அவர்களது தனிப்பட்ட வாழ்விலும் ஒழுக்கத்திலும் ஒரு முன்னுதாரனமாகத் திகழ்ந்தார்கள். பணம் வாங்காமல் மாலை நேர வகுப்புகள் எடுத்தார்கள்.இன்னும் எவ்வளவோ சொல்லலாம் .....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பக்கத்தில் இருந்தது கதை கொடுக்க.. எனக்கு சோக்கட்டியால ஒரு ரீச்சர் எறிஞ்சவா. இப்பவும் அது தலைல நோகுது.  இப்பவும் அந்த ரீச்சரை பிடிப்பதில்லை.  *ரீச்சர் - ஆசிரியை tw_blush:

அதுக்காக நியாயமாக பாடம் போதித்த ஆசிரியர்கள் மீது இப்பவும் மதிப்புள்ளது. 

 

Link to comment
Share on other sites

பிள்ளைகளுக்கு வகுப்பில் அடிப்பது அடிப்படையில் மிகவும் தவறு. நல்ல பழக்கங்களை வன்முறையினூடு சொல்லிக் கொடுக்க முடியாது. எம் சமூகம் எடுத்ததுக்கெல்லாம் வன்முறையை கையில் எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
....... ஆயினும் ஆயினும் நானெல்லாம் அடிவாங்காமல் வளர்ந்து இருந்தால் கெட்டு குட்டிச் சுவராகி சீரழிஞ்சு சின்னா பின்னம் ஆகி நாசமாகிப் போயிருப்பன்.  ஒரு முறை இடை நிலை பிரிவின் தலைமை ஆசிரியர் (Middle school head master - Jeevanantham) என் வீட்டுக்கே வந்து அம்மாவுக்கு முறையிட்டு அவருக்கு முன்னாலே பூசை கொடுத்த கதையை எல்லாம் பிற்காலத்தில் என் வரலாறு சொல்லும்

சுவி அண்ணா சொன்ன மாதிரி நல்லா அடிச்ச வாத்திமாரை இப்ப கண்டால் கையெடுத்து கும்பிடச் சொல்லுது. ஊருக்கு போகும் போது எப்படியும் அவர்களை சந்திக்க முயல்வதுண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

பிள்ளைகளுக்கு வகுப்பில் அடிப்பது அடிப்படையில் மிகவும் தவறு. நல்ல பழக்கங்களை வன்முறையினூடு சொல்லிக் கொடுக்க முடியாது. எம் சமூகம் எடுத்ததுக்கெல்லாம் வன்முறையை கையில் எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
....... ஆயினும் ஆயினும் நானெல்லாம் அடிவாங்காமல் வளர்ந்து இருந்தால் கெட்டு குட்டிச் சுவராகி சீரழிஞ்சு சின்னா பின்னம் ஆகி நாசமாகிப் போயிருப்பன்.  ஒரு முறை இடை நிலை பிரிவின் தலைமை ஆசிரியர் (Middle school head master - Jeevanantham) என் வீட்டுக்கே வந்து அம்மாவுக்கு முறையிட்டு அவருக்கு முன்னாலே பூசை கொடுத்த கதையை எல்லாம் பிற்காலத்தில் என் வரலாறு சொல்லும்

சுவி அண்ணா சொன்ன மாதிரி நல்லா அடிச்ச வாத்திமாரை இப்ப கண்டால் கையெடுத்து கும்பிடச் சொல்லுது. ஊருக்கு போகும் போது எப்படியும் அவர்களை சந்திக்க முயல்வதுண்டு

இப்ப இவர் என்ன சொல்லவாறார்? வாத்திமார் அடிச்சு படிப்பீக்கிறது நல்லதெண்டு சொல்ல வாறாரோ? :cool:

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

இப்ப இவர் என்ன சொல்லவாறார்? வாத்திமார் அடிச்சு படிப்பீக்கிறது நல்லதெண்டு சொல்ல வாறாரோ? :cool:

ஐ மீன் ..நான் என்ன சொல்ல வாறன் என்றால் அடிக்கலாம் ...ஆனால் அடிக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரும்பாலும் அடி வாங்கியதில்லை.. ஆனால் ஒருமுறை எப்பொழுதும் வாங்கும் மதிப்பெண்ணைவிட குறைவாக வாங்கியதால் விழுந்த பிரம்படியில் ஈக்கி குத்தி புண்ணாகி காலில் நிரந்தர தழும்பாகிவிட்டது.. இன்னமும் அத்தழும்பை பார்க்கையில் அந்த ஆங்கிலப் பாட ஆசிரியரின் நினவு வந்து செல்லும்.. அவர் போட்டபோடில்தான் பள்ளி இறுதியாண்டு பொதுத்தேர்வில் ஓரளவாவது மதிப்பெண் எடுத்து தேற முடிந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

தப்பு நொச்சி....! இன்றைக்கு அந்த ஆசிரியர்களை தெய்வமாய் நினைச்சு பார்க்க தோணுது. அவர்கள் பாதம் பட்ட மண்ணை சிரசில் வைக்க மனம் விரும்புது.அவர்கள் சம்பளத்தை மட்டும் நினைத்து வேலை செய்யவில்லை.அவர்களது தனிப்பட்ட வாழ்விலும் ஒழுக்கத்திலும் ஒரு முன்னுதாரனமாகத் திகழ்ந்தார்கள். பணம் வாங்காமல் மாலை நேர வகுப்புகள் எடுத்தார்கள்.இன்னும் எவ்வளவோ சொல்லலாம் .....!  tw_blush: 

 

7 hours ago, nedukkalapoovan said:

எனக்கு பக்கத்தில் இருந்தது கதை கொடுக்க.. எனக்கு சோக்கட்டியால ஒரு ரீச்சர் எறிஞ்சவா. இப்பவும் அது தலைல நோகுது.  இப்பவும் அந்த ரீச்சரை பிடிப்பதில்லை.  *ரீச்சர் - ஆசிரியை tw_blush:

அதுக்காக நியாயமாக பாடம் போதித்த ஆசிரியர்கள் மீது இப்பவும் மதிப்புள்ளது. 

 

ஆசான் கடவுளுக்கு சமம். எமக்கு கல்வியை தந்தவர்கள். :100_pray:

அந்த கல்வியை வன்முறையாக திணிப்பதுதான் வேதனையை தருகின்றது. :114_ear:

புலம் பெயர்நாடுகளில் உள்ள பாடசாலை சுதந்திரங்களை பார்க்க இன்னுமொருக்கால் கொப்பி தூக்கிக்கொண்டு போகணும் போல் இருக்கின்றது.<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

 

ஆசான் கடவுளுக்கு சமம். எமக்கு கல்வியை தந்தவர்கள். :100_pray:

அந்த கல்வியை வன்முறையாக திணிப்பதுதான் வேதனையை தருகின்றது. :114_ear:

புலம் பெயர்நாடுகளில் உள்ள பாடசாலை சுதந்திரங்களை பார்க்க இன்னுமொருக்கால் கொப்பி தூக்கிக்கொண்டு போகணும் போல் இருக்கின்றது.<_<

 கு.சா... நீங்கள் தியரியை சொல்கிறீர்கள் நாங்கள் அனுபவத்தையே பேசுகிறோம்.சீதோஷ்ண நிலைகளுக்கு ஏற்றவாறுதான் ஆடை அணிகிறோம். தண்டனைகளும் அப்படியே.அவைகள் கொல்வதற்கல்ல, கோலோச்சுவதற்கானவை.நிழலி ஒப்பேறி  விட்டார்......நானும் ஏதோ கொஞ்சம் ....!

நெடுக்ஸ் : அன்று அந்த ஆசிரியையின் கையில் சோக்கட்டிக்குப் பதில் பேப்பர் வெயிட் இருந்திருந்தால் .....யோசித்து பாருங்கள்...இறைவனின் கருணை புரியும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20.9.2017 at 7:17 PM, suvy said:

 கு.சா... நீங்கள் தியரியை சொல்கிறீர்கள் நாங்கள் அனுபவத்தையே பேசுகிறோம்.சீதோஷ்ண நிலைகளுக்கு ஏற்றவாறுதான் ஆடை அணிகிறோம். தண்டனைகளும் அப்படியே.அவைகள் கொல்வதற்கல்ல, கோலோச்சுவதற்கானவை.நிழலி ஒப்பேறி  விட்டார்......நானும் ஏதோ கொஞ்சம் ....!

நெடுக்ஸ் : அன்று அந்த ஆசிரியையின் கையில் சோக்கட்டிக்குப் பதில் பேப்பர் வெயிட் இருந்திருந்தால் .....யோசித்து பாருங்கள்...இறைவனின் கருணை புரியும்....!  tw_blush:

சீதோஷ்ண நிலைக்கேற்ப தண்டனைகள்??????
ஐயா! அப்படியாயின் ஆசிரியர்கள் மாணவிகளின் பாவாடையை தூக்கி பிரம்பால் அடிப்பதை சரியென்கிறீர்களா? :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.