Jump to content

பிறந்த நாளில் கட்சி துவக்கம்? தீவிர அரசியலில் இறங்குகிறார் கமல்


Recommended Posts

பிறந்த நாளில் கட்சி துவக்கம்?
தீவிர அரசியலில் இறங்குகிறார் கமல்
 
 
 

தன் பிறந்த நாளான, நவ., 7 முதல், தீவிர அரசியலில் இறங்குகிறார், நடிகர் கமல். புது கட்சி துவக்கம் குறித்த அறிவிப்பையும், அவர் அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளார்.

 

பிறந்த நாளில், கட்சி துவக்கம்?, தீவிர, அரசியலில், இறங்குகிறார், கமல்

'தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், ஊழல் மலிந்துள்ளது; இந்த ஆட்சி தானாகவே கலையும்' என, ஆளுங்கட்சியை, கமல் விமர் சித்தார்.அவரது விமர்சனத்திற்கு, அமைச்சர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். தனியார், 'டிவி'யில், கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், அடிக்கடி ஆளுங்கட்சியின்

அரசியலை கேலி,கிண்டல் செய்யும் கருத்துக்களை கூறி வருகிறார்.

'தேர்தல் நேரத்தில், உங்கள் கோபத்தை காட்டுங்கள்' என, 'டிவி' வாயிலாக, கமல்,ஏற்கனவே மறைமுக பிரசாரத்தை துவக்கி விட்டார். எனவே, தீவிர அரசியலுக்கு, கமல் வருவது உறுதி என, அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், கோவையில் நடந்த திருமண நிகழ்ச் சியில், கமல் பேசுகையில், 'அரசியல் சூழலை, இப்படியே விட்டு வைக்காமல், மாற்ற வேண்டியது, நம் கடமை.'கோட்டையை நோக்கிப் புறப்படுவோம். நான், நேரடி அரசியலுக்கு வந்துவிட்டேன்' என்றார்.
இது குறித்து, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: ரசிகர் மன்றத்தை, நற்பணி இயக்கமாக மாற்றி, இதுவரை, 40 கோடி ரூபாய்க்கு மேல், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் செய்வதுடன், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி, கம்ப்யூட்டர்

பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.நவ., 7ல், கமல் பிறந்த நாள். அன்றைய தினம், வழக்கம் போல் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், அதன் அரசியல் பிரவேசத்தையும், கமல் அறிவிக்க உள்ளார்.

அனேகமாக, அன்றே தன் புது கட்சி அறிவிப்பை யும் வெளியிடுவார் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1845651

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:
பிறந்த நாளில் கட்சி துவக்கம்?
தீவிர அரசியலில் இறங்குகிறார் கமல்

ஏன் கமல்சார்? சீமானும் அன்று தொடக்கம் உங்களை விட நல்ல கொள்கைகளைத்தானே சொல்கிறார்.அவருக்கு ஆதரவு கொடுக்கலாமே???? ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே பயமில்லாமல் தன் கருத்தை சொன்னவர். கருணாநிதி சுய அறிவுடன் இருக்கும் போதே தன் நிலைப்பாட்டை சொன்னவர். நீங்களும் ரஜனியும் காற்று இடைவெளியில் புகுர்ந்து வருவது மாதிரியல்லவா இருக்கின்றது? இவ்வளவு காலமும் எங்கே போனீர்கள்?
முடிந்தால் ஜெயலலிதாவின் ஊழலையும் கருணாநிதியின் ஊழலையும் விமர்ச்சியுங்கள் பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

ஏன் கமல்சார்? சீமானும் அன்று தொடக்கம் உங்களை விட நல்ல கொள்கைகளைத்தானே சொல்கிறார்.அவருக்கு ஆதரவு கொடுக்கலாமே???? ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே பயமில்லாமல் தன் கருத்தை சொன்னவர். கருணாநிதி சுய அறிவுடன் இருக்கும் போதே தன் நிலைப்பாட்டை சொன்னவர். நீங்களும் ரஜனியும் காற்று இடைவெளியில் புகுர்ந்து வருவது மாதிரியல்லவா இருக்கின்றது? இவ்வளவு காலமும் எங்கே போனீர்கள்?
முடிந்தால் ஜெயலலிதாவின் ஊழலையும் கருணாநிதியின் ஊழலையும் விமர்ச்சியுங்கள் பார்க்கலாம்?

இல்லை அண்ண...

இவையள் வருவது... திமுகவுக்கு தான் அலுப்பு. அதனால் தான் அவர்கள் வைகோவை, காங்கிரசை இழுக்கிறார்கள்.

ஸ்டாலினின் இந்த பயம் தான்... அதிரடி அரசியல் செய்து, எடப்பாடியை கவுத்து, தேர்தலில் உடனே வர வைக்காமல், இழுத்துக் கொண்டு போக வைக்கிறது.

சீமானின் பாதையில் உள்ளவர்கள், இந்த நடிகர் கூட்டத்தினை நம்பி போகப் போவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.