Jump to content

300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி


Recommended Posts

300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

 
 
300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி
 
கொழும்பு:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ம் ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். 2009-ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனியின், தலைமையில் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது.

மேலும், சர்வதேச தரவரிசைப்பட்டியலிலும் இந்திய அணி பலமுறை முதலிடத்தை பிரித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தோனி, நாளை தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக தோனி நின்றார். 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதை கணக்கில் கொண்டு தோனி தனது பழைய ஆட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக விளையாட்டு நோக்கர்கள் கருதுகின்றனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/30101501/1105220/MS-Dhoni-gears-up-for-300th-ODI-dreams-to-finish-on.vpf

Link to comment
Share on other sites

300 போட்டிகளும் தோனியின் அந்த 10 சாதனைகளும்!

 

நெருக்கடி நேரங்களில் தனக்கே உரிய ஸ்டைலில் அதிரடி காட்டி, அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து பதிலடிகொடுப்பதுதான் தோனியின் வழக்கம். அதை, மீண்டும் இலங்கைத் தொடரில் நிரூபித்துள்ளார் தோனி. இலங்கைத் தொடருக்கு முன்பு, தோனிகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களே கமென்ட் அடித்தார்கள். அவர்கள் அனைவரையும், தனக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய ஒரு சூழலை தோனி ஏற்படுத்திவிட்டார்.

தோனி


300 போட்டிகள் முடிவடைந்த பிறகும், தனது சாதனை வேட்டைகளைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார். மிஸ்டர் கூல்... நேற்றைய போட்டியில் 49 ரன்கள், மூன்று கேட்ச், ஒரு வெற்றிகரமான டி.ஆர்.எஸ் ரிவ்யூ என்று அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, 300-வது போட்டியை ஸ்பெஷலாக்கியுள்ளார். குறிப்பாக, 'எங்களுக்கு எப்போதுமே நீங்கள்தான் கேப்டன்' என்று கோலியே புகழாரம் சூட்டினார். 300 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், கிரிக்கெட்டில் தோனி வசம் உள்ள 10 சாதனைகளின் லிஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

தோனி

* கிரிக்கெட்டில் (உலகக் கோப்பை, 20/20 உலகக் கோப்பை, சாம்பியன் ட்ராபி) என்று மூன்று வகையான ஐ.சி.சி தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே கேப்டன்.

* அனைத்துத் தரப்பு கிரிக்கெட்டிலும், மொத்தம் 331 போட்டிகளில் கேப்டனாக இருந்த ஒரே வீரர்.

*  ஒரு நாள் போட்டியில், வெற்றிகரமான  ரன் சேஸிங்கில் தோனியின் சராசரி 101.84.

* ரன் சேஸிங்கின்போது, ஒன்பது போட்டிகளை சிக்ஸர் மூலம் ஃபினிஷிங் செய்தவர்.

* 6 அல்லது அதற்குக் கீழ் வரிசையில் இறங்கி அதிக ரன்கள் அடித்தது (4,601).

* ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்களைத் தெறிக்கவிட்ட ஒரே இந்திய வீரர்.

* இலங்கையுடன் அவர் அடித்த 183 ரன்தான், தற்போதுவரை ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர்.

* ஒருநாள் கிரிக்கெட்டில், வெற்றிகரமான ரன்சேஸிங்கின்போது, 40 இன்னிங்ஸ்களில் நாட் அவுட்.

* அனைத்துத் தரப்பு கிரிக்கெட்டிலும், அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர்  (737).

* ஒருநாள் கிரிக்கெட்டில், அதிக நாட் அவுட் என்ற சாதனை. நேற்றைய போட்டியையும் சேர்த்து, மொத்தம் 73 போட்டிகளில் தோனி நாட் அவுட்.

 

இன்னும் பல நாட் அவுட்களையும், ஃபினிஷிங்களையும் கொடுக்க வாழ்த்துகள் மிஸ்டர் கூல்..!

http://www.vikatan.com/news/sports/100971-dhonis-10-records-in-cricket.html

Link to comment
Share on other sites

தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட அந்த 2 மாற்றங்கள்! #Dhoni300

 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 300-வது போட்டியில் இன்று களமிறங்கியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. 

Dhoni_16288.jpg


கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியின் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியிருக்கிறார். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் சர்வதேச டெஸ்ட் அரங்கில் நம்பர் ஒன் என தோனியின் கேப்டன்ஷிப் ரெக்கார்டுகள் மற்றெந்த கேப்டனும் எட்டாதது. கேரியர் கிராஃப் உச்சத்தில் இருந்தபோதே, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக ஒரு அவசர அறிவிப்பு தோனியிடமிருந்து வந்தது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தப் போவதாக கூலாகச் சொன்னார் தோனி. களத்தில் நெருக்கடியான நேரங்களானாலும் சரி, கேரியரில் நெருக்கடியான நேரமானாலும் சரி நிதானமாக முடிவெடுப்பவர் அவர். அதுதான், கோரக்பூர் ரயில்நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஒரு ஊழியரை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிஸ்டர் கூல் என்று போற்றப்படும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. 

கடந்த 2014 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது அவருக்கு ஏற்பட்ட அதே நெருக்கடியான சூழல் இலங்கை ஒருநாள் தொடருக்கு முன்னரும் தோனிக்கு ஏற்பட்டது. இங்கிலாந்தில் நடந்துமுடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தோனியின் செயல்பாடு சரியாக இல்லாதது, பெரிய அளவில் விமர்சனங்களுக்குள்ளானது. தோனி சரியாக விளையாடவில்லையென்றால், அவருக்கு மாற்றுவீரரைத் தேட வேண்டி வரும் என்று கூறினார் இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரின் எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்யும் என்றார் இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளர் டிராவிட். பழைய ரெக்கார்டுகளை வைத்துக்கொண்டு மட்டுமே ஒருவர் அணியில் நீடிப்பது என்பது இயலாத காரியம் என்கிற ரீதியில் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பேசியிருந்தார். இது ஒருபுறமிறக்க இந்திய அணியின் வெற்றிக்குத் தோனி இன்னும் பெரிய அளவில் பங்களிப்பு செய்வார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸியிடமிருந்து தோனிக்கு ஆதரவுக் குரலும் எழுந்தது. இந்தநிலையில்தான் இலங்கையில் காலடி எடுத்து வைத்தார் தோனி. முதல் ஒருநாள் போட்டியில் தோனிக்கு வேலை வைக்காமல் இந்திய அணி வென்றது. 

இரண்டாவது போட்டியில் தோனியின் அனுபவமும், பேட்டிங்கும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின. இலங்கை அணி நிர்ணயித்த 237 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஒருகட்டத்தின் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருடன் கைகோத்த தோனி, இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். அந்த போட்டியில் 6-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய தோனி 45 ரன்கள் குவித்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் குவித்ததோ 53 ரன்கள். போட்டிக்குப் பின்னர் பேசிய புவனேஷ்வர் குமார், விக்கெட்டை இழக்காமல் இருந்தாலே வென்று விடலாம். டெஸ்ட் போட்டியைப் போல விளையாடுமாறு தோனி கூறினார். அதையே பின்பற்றினேன் என்று தோனிக்கு கிரடிட் கொடுத்தார். கேப்டன் கோலியும் தோனியின் பங்களிப்பு குறித்து சிலாகித்தார். 

மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் தோனி மின்னினார். இலங்கை அணியின் 217 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த சூழலில் தோனி களமிறங்கினார். தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுடன் கைகோர்த்த தோனி, இந்த முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் ஷர்மா சதமடிக்க, தோனி 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியில் தோனி நீடிப்பது சந்தேகமே என்று கூறி வந்தவர்களை, தனது சிறப்பான ஆட்டத்தால் அமைதிப்படுத்தினார் தோனி.  

இந்த இரண்டு போட்டிகளிலும் தோனியின் பேட்டிங் டெக்னிக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டதை கிரிக்கெட் ஆர்வலர்கள் கண்டிருக்கலாம். ஒன்று தனது ஆஸ்தான மொரான்ட் பேட் (Morrant Pad) எனப்படும் அகலமான பேட்களை மாற்றிவிட்டு, சாதாரண பேட்களுக்கு மாறினார். 36 வயதில், 300-வது போட்டியில் விளையாடப் போகும் சூழலில், இதுபோன்ற ஒரு புது முயற்சியை எடுக்க தனித்தெம்பு வேண்டும். அவரது கேரியரில் முதன்முறையாக இந்த முயற்சிகளை அவர் எடுத்துள்ளார் என்றே கூறலாம். சாதாரண பேட்களை விட, மொரான்ட் பேட்கள் எடையில் 200 கிராம் அளவுக்குக் குறைந்தவை. இதனால் களத்தில் வேகமாக ஓடி ரன் குவிக்க முடியும். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி மற்றும் ரவிச்சந்திர அஷ்வின் ஆகிய ஒருசிலரே இந்த மொரான்ட் பேட்களைப் பயன்படுத்திவுள்ளனர். 

மொரான்ட் பேட்களைப் பயன்படுத்துவதில் ஒரு சின்ன குறை இருக்கிறது. மற்ற சாதாரண பேட்களில் இருப்பதுபோல் இந்த பேட்களில் மூன்று ஸ்ட்ராப்கள் இருக்காது. இரண்டு மட்டுமே இருக்கும். அதிலும் ஒன்று முட்டிக்கு நேர் பின்னால் இருக்கும். இதனால் முன்னங்கால் முட்டியை மடக்கி அடிக்கும் பல்வேறுவிதமான ஷாட்களை ஆடுவது சிரமம். ஆனால், இந்த வயதில் பரிசோதனை முயற்சியாக எடை அதிகமான பேட்களுடன் களமிறங்கியிருக்கிறார் தோனி. பெரும்பாலும், பார்வார்டு ஷாட் எனப்படும் முன்னோக்கிச் சென்று விளையாடுவதிலேயே ஈடுபாடு கொண்ட தோனி, இலங்கை அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பேக்ஃபூட் ஷாட்களையும் (Backfoot Shot) ஆடி அசத்தினார். 

 

தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட இரண்டாவது மாற்றம் ட்ரிக்கர் மூவ்மெண்ட் (trigger movement). பந்துவீச்சாளர்கள் பந்துவீச ஓடிவரும்போது பின்னங்கால் முதலில் லெக்கிலிருந்து ஆஃப் திசையை நோக்கி செல்லும், அதைத் தொடர்ந்து முன்னங்காலும் செல்லும். இவை அனைத்தும் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதற்கு முன்னதாக நிகழ்த்தப்படும். (இதற்கும் பிக்பாஸ் ட்ரிக்கரிங்-க்கும் எந்த தொடர்பும் இல்லை மக்களே!). இதன்மூலம் பந்துவீச்சாளர்களின் கவனத்தை திசைதிருப்பலாம். இதனால், வேகமாக பந்துவீச வேண்டும் என்ற ஒற்றை எண்ணமே பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படுமே தவிர, நேர்த்தியாக வீச வேண்டும் என்பதை பந்துவீச்சாளர்கள் பலரும் யோசிக்கமாட்டார்கள். தனது கேரியரின் பெரும்பாலான சமயங்களில் சேவாக் போன்று, பந்துவீசும்போது எந்தவொரு மூவ்மென்டை தோனி காட்டியதில்லை. பந்துவீச்சாளரின் கையிலிருந்து பந்து வெளிப்பட்ட பின்னரே, அதை எப்படி எதிர்கொள்வது என்பதை தோனி முடிவு செய்து ஆடுவது வழக்கம். சில சமயங்களில் பந்துவீச்சாளரை நோக்கி கிரீஸை விட்டு வெளியே தோனி நடந்து வருவதுண்டு. அது ஃபுல்டாசாக பந்துவீச வேண்டிய கட்டாயத்துக்கு பௌலர்களை ஆளாக்கும். ஆனால், இலங்கைத் தொடரில் இந்த வழக்கத்தையும் தோனி மாற்றிக்கொண்டார். இந்த இரண்டு மாற்றமும் தோனிக்குக் கைகொடுத்தது என்றே கூறலாம். இலங்கை அணிக்கெதிராகக் களமிறங்கிய 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகளில் தோனியின் விக்கெட்டை இலங்கை பந்துவீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. 

http://www.vikatan.com/news/sports/100909-dhoni-changes-his-batting-techniques.html

Link to comment
Share on other sites

தோனியின் 300-வது ஒருநாள் போட்டியில் நெகிழ்ந்த விராட் கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 300-வது ஒருநாள் போட்டியை ஒட்டி, அவருக்கு கேப்டன் கோலி நினைவுப் பரிசு வழங்கினார். 

Dhoni_09545.jpg

 


கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த அந்த போட்டியில், இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின்  300-வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

இதையொட்டி, போட்டிக்கு முன்னதாக பிளாட்டினம் பேட் ஒன்றை தோனிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் கோலி. அப்போது பேசிய கோலி, ’இங்குள்ள 90 சதவிகித வீரர்கள், உங்கள் தலைமையிலேயே சர்வதேச போட்டிகளில் அறிமுகமானோம்.

இந்த நினைவுப் பரிசை உங்களுக்கு அளிப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். நீங்கள்தான் எங்களுக்கு எப்போதுமே கேப்டன்’ என்று கூறி நெகிழ்ந்தார். அந்தப் போட்டியில் களமிறங்கிய தோனி, ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 73 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.  

http://www.vikatan.com/news/sports/100972-you-are-captain-always-says-virat-kohli-on-ms-dhonis-300th-odi-celebration.html

Link to comment
Share on other sites

ஒரே நாளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரனான டோனி

இலங்கை அணிக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில இந்திய அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மகேந்திர சிங் டோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரனாகியுள்ளார்.

dhoni.jpg

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான  4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

நேற்றைய போட்டி டோனியில் 300 ஆவது ஒருநாள் போட்டியாகும்.  இப் போட்டியில்  மகேந்திர சிங் டோனி நிகழ்த்திய சாதனைகள் வருமாறு,

ஒட்டுமொத்தமாக அதிக போட்டிகளில் விக்கெட் காப்பாளராக விளையாடிய வீரராக டோனி திகழ்கிறார். இந்திய அணியின் டோனி 467 போட்டிகள் விளையாடியுள்ளதுடன் தென்னாபிரிக்காவின் பௌச்சர் 466 போட்டிகளிலும் சங்கக்கார 464 போட்களிலும் விக்கெட் காப்பாளராக கடமையாற்றியுள்ளனர்.

இதேவேளை, அதிகமுறை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற பெருமையையும் இப் போட்டியில் பெற்றுள்ளார் டோனி.

இதிலும் இந்திய அணி வென்ற பெரும்பாலான போட்டிகளிலேயே டோனி ஆட்டமிழக்காது இருந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு மட்டும் ஒருநாள் போட்டிகளில் டோனி 500 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அனைத்து விதமான போட்டிகளிலும் விக்கெட் காப்பாளராக எதிரணியின் அதிக ஆட்டமிழப்புக்களை ஏற்படுத்தியவர் என்ற பெருமையையும் டோனி பெற்றுள்ளார். அந்தவகையில் மொத்தமாக 737 ஆட்டமிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை,  300 ஆவது போட்டியில் விளையாடிய 6 ஆவது இந்தியா வீரராக டோனி இடம்பிடித்துள்ளார்.

இதுவரை 99 முறை ஸ்டொம் முறையில் எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ள டோனி ஒரு ஸ்டெம்பிங் செய்தால், ஒருநாள் போட்டிகளில் 100 ஆவது ஸ்டெம்பிங் செய்து சாதனை படைப்பார்.

நேற்றைய போட்டியுடன் சேர்த்து ஒரு நாள் போட்டியில் 73 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து ஒருநாள் போட்டியில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டோனி.

இதேவேளை, ஒருநாள் போட்டி, இருபதுக்கு - 20 போட்டி மற்றும் சாம்பியன்ஸ் கிண்ணம் என மூன்று வகையான உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணித் தலைவர் என்ற பெருமையையும் டோனி படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23867

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.