Jump to content

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருடன் நாளை சந்திப்பு: பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்துகின்றனர்


Recommended Posts

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருடன் நாளை சந்திப்பு: பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்துகின்றனர்

 

 
ramnath%20kovind

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.   -  படம். | பிடிஐ.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை (ஆகஸ்ட் 31) சந்திக்க இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். முரசொலி பவள விழா மலரை அவர்களுக்கு ஸ்டாலின் வழங்கினார். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

நடவடிக்கை இல்லை

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

அதிமுகவின் 19 எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்பப் பெற்றதால் முதல்வர் கே.பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதினோம். நேரிலும் வலியுறுத்தினோம். ஆனாலும், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். 31-ம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால், சந்திப்புக்கான நேரம் உறுதி செய்யப்படவில்லை. எப்படியும் 31-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்திப்பார்கள். அப்போது அவரிடம் தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்து முறையிடுவார்கள்.

 

உரிமைக் குழு நோட்டீஸ்

புற்றுநோய் வருவதற்கு காரணமான குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறை அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து இவை விற்கப்பட்டு வருகின்றன. இதை ஆதாரத்தோடு நிரூபிப்பதற்காக சட்டப்பேரவையில் நாங்கள் காண்பித்தது உண்மைதான்.

ஆனால், அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, 40 நாட்களுக்குப் பிறகு உரிமைக் குழு கூடி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இன்றுகூட குட்கா விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

 

19 எம்எல்ஏக்கள் வாபஸ்

அதிமுக அணிகள் இணைந்த பிறகு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர். அவர்கள் ஆளுநரை சந்தித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கடிதம் அனுப்பியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, காங்கிரஸ் கொறடா எஸ்.விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபூபக்கர் ஆகியோர் கடந்த 27-ம் தேதி ஆளுநரைச் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல, ஆளுநரை நேற்று காலை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

இந்தச் சூழலில் திமுக மட்டுமல்லாது காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், ஆளுநரின் தாமதம் குறித்தும் முறையிட இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

இடைநீக்கம் செய்ய வாய்ப்பு

கடந்த ஜூலை 19-ம் தேதி சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, பான்மசாலா பாக்கெட்களை ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் காண்பித்தனர். 40 நாட்களுக்குப் பிறகு இப்பிரச்சினையை பேரவை உரிமைக் குழு நேற்று முன்தினம் விசாரித்து ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேருக்கும் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டால் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் இது பழனிசாமி அரசுக்கு சாதகமாக அமையும். இது தொடர்பாகவும் குடியரசுத் தலைவரிடம் திமுக எம்.பி.க்கள் புகார் தெரிவிக்க உள்ளனர்.

 

ஆளுநருடன் இன்று சந்திப்பு

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர். அப்போது தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் குறித்து பேசுவதுடன், பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்த உள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19585661.ece?homepage=true

Link to comment
Share on other sites

'தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது'- எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்

'சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைமீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

வித்யாசாகர் ராவ்


அ.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளநிலையில், முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இது தொடர்பாக, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஏற்கெனவே ஆளுநரைச் சந்தித்த நிலையில், இன்று  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர்.

எதிர்க்கட்சிகள்

 

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், "பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், 'தற்போதைய சூழலில் இந்த விவகாரத்தில் சட்டப்படி தலையிட முடியாது. என்னால் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 19 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-விலிருந்து விலகினால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இரு குழுக்களாகப் பிரிந்துள்ள நிலையில், கட்சி விவகாரத்தில் நான் ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறினார். ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியுள்ளதால், அடுத்தகட்டமாக ஜனாதிபதியைச் சந்தித்து முறையிடத் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/100763-governor-rejects-opposition-parties-request-over-floor-test-issue.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.