Jump to content

குழப்பம்!


Recommended Posts

குழப்பம்!
தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள
தமிழக அமைச்சர்கள் இரட்டை இலையை
மீட்க யோசனை கேட்பதில் தடுமாற்றம்
 
 
 

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே அளித்த பிரமாண வாக்குமூலங்களை திரும்பப் பெறு வதா, வேண்டாமாஎன்பது குறித்து, டில்லியில் யாரிடம் யோசனை கேட்பது என்ற குழப்பத் தில், தமிழக அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்.

 

தலைநகர், டில்லி, முகாமிட்டுள்ள, தமிழக அமைச்சர்கள்,குழப்பம்!

கட்சிக்குள் ஏற்பட்டுள்ளஉச்சகட்ட குழப்பத்தை அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்பதில், அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்ட துவங்கியுள்ளனர். தமிழகத் தில், அ.தி.மு.க., வில், தினமும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தேர்தல் ஆணை யத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., என்பது, இன்னும் இரண்டு அணிகளாகவே பார்க்கப்படுகிறது.

சசிகலா தலைமையிலான அம்மா அணி, மற்றொன்று, பன்னீர்செல்வம் தலைமையி லான புரட்சித்தலைவி அம்மா அணி. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது, இப்படித்தான், இரு தரப்பையும்அங்கீகரித்திருந்தது, தேர்தல் ஆணையம்.
 

இருவருமே எதிர்ப்பு


இருதரப்புமே, தாங்கள்தான் உண்மையான, அ.தி.மு.க., என்பதை நிரூபிக்க, லட்சக்கணக் கில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. அவை அனைத்துமே, தேர்தல்ஆணையத்தின், 'அண்டர்கிரவுண்ட்' வளாகத்தில் காகித மூட்டை களாக குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் தான், பழனி சாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. இதன்பின், ஓரளவுக்கு நிலைமை சரியாகும் என நினைத்ததற்கு பதிலாக, குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

துவக்கத்தில், பழனிசாமி, சசிகலாவை ஆதரித் தார்; பன்னீர்செல்வம் எதிர்த்தார். இப்போது நிலைமை மாறி, இருவருமே சசிகலாவை எதிர்க்கின்றனர்.'இரு தரப்பும் இணைந்ததை அங்கீகரிப்பதா வேண்டமா; இவர்கள் கூட்டும் பொதுக்குழு சட்ட ரீதியிலானதா' என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தபின் தான், நிஜமான, அ.தி.மு.க., யார் என்ற

கேள்வியே எழும்.மேலும், தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை,இந்த மூன்று தரப்பை தவிர, நான்காவது தரப்பும் உள்ளது; அது தான் தீபா தலைமையிலான அணி.

பிரச்னை துவங்கியதில் இருந்தே, தீபாவும், தன்னை ஒரு தரப்பாக, தேர்தல் ஆணையத்தில் சேர்த்துள் ளார். எனவே, சட்ட ரீதியில், இவ்வளவு பிரச்னை களுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் எடுக்கப் போகும் முடிவை, யாரும் அவ்வளவு எளிதாக கணித்துவிட இயலாது.

இந்த சூழ்நிலையில்தான், நேற்று தமிழக அமைச்சர் கள்,ஜெயகுமார், சண்முகம், தங்கமணி மற்றும் மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் டில்லி வந்தனர்.தேர்தல் ஆணையத்திற்கு செல்லப் போகின்றனர் என்ற செய்தி பரவிய நிலையில், திடீர் திருப்பம் நடந்தது. இவர்கள் அனைவரும், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமனைச் சந்தித்தனர். அந்த ஆலோ சனைக்கு பின், நேராக, பார்லிமென்ட் விரைந்தனர்.

அங்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட அனைவரும் ஆலோசித்தனர். கீரியும், பாம்பு மாக, பேட்டிகள் தந்து கொண்டிருந்த நிலையில், நீண்டநாட்களுக்கு பின், தம்பிதுரை, ஜெயகுமார் ஆகியோரோடு, மைத்ரேயனையும் பார்த்து, பலரும் ஆச்சரியப்பட்டனர்.
 

முடிவெடுக்க கூடாது


இருப்பினும், 'பிரமாணபத்திரங்களை தற்போதைய சூழ்நிலையில் வாபஸ் வாங்கினால், அது சசிகலா தரப்புக்கு ஆதரவாக திரும்பலாம்' என, சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.எனவே, இதுகுறித்து அரசியல் ரீதியான ஆலோசனைகளைப் பெறவே, மத்திய அமைச்சர்களை, அ.தி.மு.க.,வினர் சந்தித்த தாக தெரிகிறது.இந்த விஷயம் தொடர்பாக, யாரிடம் ஆலோசிப்பது என்ற தடுமாற்றம், தமிழக அமைச்சர் களிடம் உள்ளது.

இதற்கிடையே, தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தியும், முன்னாள் எம்.பி., அன்பழகனும், தேர்தல் ஆணையம் வந்தனர். இவர்கள், 'எங்களைக் கேட்காமல், இரட்டை இலைச் சின்னம் உட்பட, தற்போதுள்ள பிரச்னை குறித்து முடிவெடுக்க கூடாது' என,தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து விட்டுச் சென்றனர்.
 

தீவிரம் ஏன்?


தமிழக அமைச்சர்கள், டில்லியில் முகாமிட்டுள்ளது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டால், தினகரன் அணியில் உள்ளவர்கள், தங்கள் பக்கம் வந்து விடுவர் என, முதல்வர் பழனிசாமியும்,

துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நினைக்கின்றனர்.

பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாதென, தேர்தல் கமிஷன் அறிவித்தால், தினகரன் நியமனமும் செல்லாததாகி விடும்; கட்சிக்கும், சசிகலா குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலை உருவாகி விடும் என்பது, இவர்களது நம்பிக்கை.இதனால், தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி, இரட்டை இலை சின்னத்தை மீட்பதில், தமிழக அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அரசியல்வட்டாரங்கள் தெரிவித்தன.
 

ஜெட்லியுடன் சந்திப்பு


நேற்று மாலை, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லியை, அ.தி.மு.க.,வினர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் பேசிய, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ''தமிழகத்திற்கு கூடுதல் நிதி கேட்டு நிதியமைச்சரை சந்தித்தோம்,'' என்றார்.'

'கையில் ஒரு பேப்பரைக் கூட எடுத்து செல்லா மல், கூடுதல் நிதி கேட்டு, நிதி அமைச்சரை சந்தித்ததாக கூறுகிறீர்களே' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். டென்ஷனான, தம்பிதுரை, ''கோரிக்கை மனுக்களை எல்லாம், முன்பே கொடுத்தாகி விட்டது,'' என்றார்.

'மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்' என, நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த தம்பிதுரை,''அவர், வர்த்தக துறை அமைச்சர்; அதனால், அவரை சந்தித்தோம்,'' என்றார்.இதற்கிடையே, செய்தி யாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஜெயகுமார், ''எங்களை பார்க்க, தேர்தல் ஆணையர், நேரம் ஒதுக்கவில்லை என, ஊடகங்களில் தகவல், தவறானது; அப்படி எதுவும் இல்லை,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1844132

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.