Jump to content

சிம்பு சிக்குவாரா


Recommended Posts

சிம்பு சிக்குவாரா

நயன்தாராவும் சிம்புவும் காதலித்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி பெரிய பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இதனால் சிம்புவுடன் பழகிய மற்ற நடிகைகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

சிம்புவும் நயன்தாராவும் நெருங்கி உறவாடும் இந்தப் படம் துபாயில் எடுக்கப்பட்டிருக்கிறது. துபாயில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தெலுங்கு பிரபலங்களும் தமிழ் பிரபலங்களும் போயிருந்தார்கள். அப்போது சிம்புவின் ஆட்டத்தை ரசிக்க நயன்தாராவும் போயிருந்தார். அங்கு தங்கியிருந்த இடத்தில் தான் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுத்தது யார்?

இந்தக் கேள்விக்கு விடை தேடி கோலிவுட்டை துளாவினோம்.

சினிமாக் காரர்கள் யாரும் இந்த சூடான காட்சியை படம் பிடிக்கவில்லை. அப்படிப் படம் பிடித்திருந்தால் அது அப்போதே வெளியுலகத்திற்கு தெரிய வந்திருக்கும். இந்த அந்தரங்க காட்சிகளை படம் பிடித்தது சிம்புவுக்கு மிக நெருக்கமான நடராஜ் என்கிற நண்பர்தானாம்.

இப்படி... காதலித்தபோது எடுத்த படங்களை பிரிவு வந்தபோது பழிவாங்கும் விதமாக வெளியிடுவது சட்டப்படி குற்றம்தான். அதிலும் விஞ்ஞான ரீதியாக இந்தப் படங்களை வெளியிட்டிருப்பது "சைபர் க்ரைம்" பிரிவின்படி பெரிய குற்றம்தான். இதனால்தான் சிம்புமேல் புகார் கொடுக்க நயன்தாராவுக்கு ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பூதம் கிளம்பியதுபோல் மேலும் மேலும் பல படங்கள் வரக்கூடும் என்பதால் தர்மசங்கடத்தோடு மறுத்திருக்கிறார் நயன்தாரா.

சிம்பு மேல் நயன்தாரா புகார் கொடுக்காவிட்டாலும் பொதுநல நோக்கில் யாராவது புகார் கொடுத்தால் அவர்மீது நடவடிக்கை பாயுமா? என காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.

"சிம்புவுக்கு ஆளுங்கட்சி தரப்பில் செல்வாக்கு இருப்பதால் முதலில் நடவடிக்கை எடுப்பதே கஷ்டம். அப்படியே அவர்மீது யாராவது புகார் கொடுத்தால் கூப்பிட்டு விசாரிக்கலாமேயொழிய அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. காரணம் இது இந்தியாவில் இருந்து வெளியிடப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. நான் எடுத்து வைத்திருந்த புகைப்படங்கள் எப்படியோ எனக்குத் தெரியாமல் வெளிநாட்டிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது என சிம்பு வாதம் செய்தால் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான். எனவே சிம்பு மீதும் நடவடிக்கை எடுப்பது என்பது இயலாத காரியம்தான்" என்றார்கள்.

சிம்புவின் இந்த நடவடிக்கையால் ஒட்டுமொத்த கோலிவுட்டும் அதிர்ச்சியாகியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.