Jump to content

இன்று ஆரம்பிக்கிறது ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ்


Recommended Posts

இன்று ஆரம்பிக்கிறது ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ்
 

image_121197d266.jpg

உலகில் இடம்பெறும் டென்னிஸ் கிரான்ட் ஸ்லாம் தொடர்களில், ஆண்டின் இறுதி கிரான்ட் ஸ்லாம் தொடரான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது.

அதிகளவில் காயங்களாலும் வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் உலகம், இந்தத் தொடரில் யார் வெல்வார்க் என்பதை எதிர்வுகூற முடியாத நிலையில் காணப்படுகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீரர்களான அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ஸ்டான் வவ்றிங்கா, கீ நஷிகோரி, மிலோஸ் றாவோனிஸ் ஆகியோர், காயம் காரணமாக விலகியுள்ளனர். ஏற்கெனவே பலர் விலகியிருந்த நிலையில், அன்டி மரேயும், போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் இருக்கையில், தனது விலகலை அறிவித்திருந்தார்.

இதனால், தற்போதைய முதல்நிலை வீரரான ரபேல் நடாலுக்கும், விம்பிள்டன் சம்பியனான ரொஜர் பெடரருக்கும் இடையிலேயே, பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், இருவருமே அரையிறுதிப் போட்டியிலேயே சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த அரையிறுதிப் போட்டியை வெல்பவர், தொடரை வெல்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், செரினா வில்லியம்ஸ், விக்டோரியா அஸரெங்கா ஆகியோர், இத்தொடரில் பங்குபற்றவில்லை. குழந்தை பிறக்கவுள்ள காரணத்தால் செரினாவும், குழந்தையின் பாதுகாப்புக்கான கட்டுப்பாட்டை, தனது முன்னாள் துணைவரிடமிருந்து பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளின் காரணமாக அஸரெங்காவும், இத்தொடரில் பங்குபற்றவில்லை.

இதனால், இத்தொடரை யார் கைப்பற்றுவர் என்பதில், தெளிவற்ற நிலைமை காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, இந்தச் சம்பியன் பட்டத்தை வென்று, ஆண்டின் இறுதியில், முதல்நிலை வீராங்கனையாகும் வாய்ப்பு, 8 வீராங்கனைகளுக்குக் காணப்படுகிறது.

இவர்களைத் தவிர, வைல்ட் கார்ட் மூலமாக இத்தொடரில் விளையாட அனுமதிபெற்றுள்ள, முன்னாள் முதல்நிலை வீராங்கனையான மரியா ஷரபோவா, அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். தடைசெய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியமையின் காரணமாகத் தடைசெய்யப்பட்ட பின்னர் அவர் பங்குபற்றும் முதலாவது கிரான்ட் ஸ்லாம் தொடர் இதுவாகும்.

எது எவ்வாறாக இருந்தாலும், செப்டெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்தத் தொடர், சுவாரசியமான தொடராக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இன்று-ஆரம்பிக்கிறது-ஐ-அமெரிக்க-பகிரங்க-டென்னிஸ்/44-202913

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி- 5 செட்களில் போராடி வெற்றி பெற்றார் பெடரர்

 

 
31CHPMUROGERFEDERER

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் பிரான்செஸ் டியாபோவுக்கு எதிராக பந்தை திருப்பும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர்.   -  படம்: ஏஎப்பி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 5 செட்களில் போராடி தோல்வியில் இருந்து தப்பித்தார்.

நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆடவர்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 3-ம் நிலையில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 70-ம் நிலை வீரரான அமெரிக்காவை சேர்ந்த 19 வயது வீரரான பிரான்செஸ் டியாபோவை எதிர்த்து விளையாடினார். 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள பெடரருக்கு, டியாபோ கடும் நெருக்கடி கொடுத்தார்.

முதல் செட்டை பெடரர் 4-6 என இழந்த நிலையில் அடுத்த இரு செட்களையும் 6-2, 6-1 என கைப்பற்றினார். 4-வது செட்டை டியாபோ 6-1 என கைப்பற்ற வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பானது. இந்த செட்டை பெடரர் 6-4 என தனதாக்கினார். இதனால் முதல் சுற்றுடன் வெளியேறுவதில் இருந்து அவர், தப்பித்தார். கடைசியாக பெடரர், 2003-ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரில் முதல் சுற்றில் வீழ்ந்திருந்தார்.

டியாபோவுக்கு எதிராக சுமார் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் பெடரர் 4-6, 6-2, 6-1, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் 3-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துக்கு குறிவைத்துள்ள 36 வயதான பெடரர், தனது 2-வது சுற்றில் ரஷ்யாவின் மிஹைல் யுஸ்னி அல்லது சுலோவேனியாவின் பிளஸ் காவிச்சை எதிர்கொள்வார்.

 

கெர்பர் தோல்வி

மற்றொரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 7-6 (8-6), 6-2, 6-2 என்ற நேர் செட்டில் 85-ம் நிலை வீரரான செர்பியாவின் டசன் லஜோவிக்கை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். நடால், 2-வது சுற்றில் ஜப்பானின் டரோ டேனியல் அல்லது அமெரிக்காவின் டாமி பாலை எதிர்கொள்வார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும் 6-ம் நிலை வீராங்கனையுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 19 வயதான நவோமி ஒசாகாவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒசாகா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கெர்பரை எளிதாக வீழ்த்தினார். தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள வீராங்கனையை ஒசாகா வீழ்த்துவது இதுவே முதன்முறை.

முதல் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 72-ம் நிலை வீராங்கனையான போலந்தின் மேக்டா லினெட்டையும், 23-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா 6-1, 6-3 என்ற நேர் செட்டில் ஜப்பானின் மிசாகி டுவையும், 15-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ் 6-3, 7-6 (8-6) என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் மெர்டென்ஸையும், 12-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஒஸ்டபென்கோ 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் லாரா அராபரேனாவையும் வீழ்த்தி 2-வது சுற்றில் கால்பதித்தனர். 2-வது நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் 55 ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

http://tamil.thehindu.com/sports/article19592472.ece

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், பில்ஸ்கோவா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பெடரர், பில்ஸ்கோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 
 
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், பில்ஸ்கோவா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
 
 
வாஷிங்டன்: 
 
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், டோம்னிக் தெயிம் ஆகியோர் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
 
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் மூன்றாம்நிலை வீரரான ரோஜர் பெடரர், ரசியாவின் மிக்கேல் யூஷ்னியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெடரர், 6-1, 6-7, 4-6, 6-4, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.
 
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆறாம்நிலை வீரரான டோம்னிக் தெயிம், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை 6-4, 6-4, 4-6, 7-5 என்ற செட்கணக்கில் வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.
201709010547242509_1_Dominic-Thiem._L_st
இதுதவிர மோன்பில்ஸ், கோஃபின் ஆகியோரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
 
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாம் சுற்று போட்டியில் முதல்நிலை வீராங்கனையான பில்ஸ்கோவா, அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸை 2-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் விழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.
201709010547242509_2_pliskova._L_styvpf.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியன்ஸும், பிரான்ஸின் டோடினும் பலப்பரிட்சை செய்தனர். இப்போட்டியில், 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.
201709010547242509_3_venus._L_styvpf.jpg
 

http://www.maalaimalar.com

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முகுருஜா, ஷரபோவா வெற்றி

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முகுருஜா, ஷரபோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் பிரிவில் முன்னணி வீரர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

 
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முகுருஜா, ஷரபோவா வெற்றி
 
நியூயார்க்:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முகுருஜா, ஷரபோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் பிரிவில் முன்னணி வீரர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 3-வது நாளில் ஜெர்மனியின் இளம் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அண்மையில் ரோஜர் பெடரை தோற்கடித்து ரோஜர்ஸ் கோப்பையை வென்றவரும், உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளவருமான ஸ்வெரேவை 61-ம் நிலை வீரர் போர்னா கோரிச் (குரோஷியா) 3-6, 7-5, 7-6 (1), 7-6 (4) என்ற செட் கணக்கில் சாய்த்தார். இந்த ஆட்டம் 3 மணி 25 நிமிடங்கள் நீடித்தது.

12-ம் நிலை வீரர் சோங்காவுக்கும் (பிரான்ஸ்) அதிர்ஷ்டம் இல்லை. அவர் 4-6, 4-6, 6-7 (3) என்ற செட் கணக்கில் 18 வயதான தகுதிநிலை வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் (கனடா) அடங்கிப்போனார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) 2-6, 7-6 (5), 1-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோவாவின் சவாலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்தார். 40-ம் நிலை வீராங்கனையான மகரோவா, வோஸ்னியாக்கிக்கு எதிராக 8 ஆட்டங்களில் விளையாடி அதில் பதிவு செய்த முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 10-ம் நிலை வீராங்கனை டொமினிகா சிபுல்கோவாவும் (சுலோவக்கியா) 2-வது சுற்றுடன் நடையை கட்டினார். அவரை அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-2, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

15 மாத கால தடையை அனுபவித்த பிறகு முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அடியெடுத்து வைத்திருக்கும் ரஷியாவின் மரிய ஷரபோவா 2-வது சுற்றில் 6-7 (4), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் டைமியா பபோசை வீழ்த்தினார். 12 ஏஸ் சர்வீஸ் வீசிய ஷரபோவா இந்த வெற்றியை சுவைக்க 2 மணி 19 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-0 என்ற நேர் செட்டில் டுவான் யிங்-யிங்கையும் (சீனா), செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா 6-1, 6-2 என்ற நேர் செட்டில் அலிஸி கார்னெட்டையும் (பிரான்ஸ்), முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் ஓசியானி டோடினையும் (பிரான்ஸ்) பந்தாடியதுடன் 3 -வது சுற்றையும் உறுதி செய்தனர். 

 

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 
 
 
 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
 
வாஷிங்டன்:

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முன்னனி வீரரான ரோகன் போபண்ணா, பெண்கள் இரட்டையர் பிரிவில் வீராங்கனை சானியா மிர்சா இரண்டாம் சுற்றிற்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் போபண்ணா மற்றும் பாப்லோ ஜோடி அமெரிக்க ஜோடியான பெரேட்லி க்ளான், ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 1-6 6-3 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் இந்த ஜோடி இத்தாலியின் சிமோன் போல்லி மற்றும் பபியோ ஃபோக்னி ஜோடியை எதிர்கொள்கிறது.

அதே போல், பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் சீனாவின் சுயாய் பெங் ஜோடி முதல் சுற்றில் குரோஷிய ஜோடியான பெட்ரா மாட்ரிக் மற்றும் டோனா வேகிக்கை எதிர்கொண்டது. இதில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அடுத்த சுற்றில் மிர்சா ஜோடி ஸ்லோவாக்கியா ஜோடியை எதிர்கொள்கிறது.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - கிரிகோர் டிமிட்ரோவ், குஸ்நெட்சோவா அதிர்ச்சி தோல்வி

 
02CHPMUNADAL2

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் டேனியலுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்.   -  படம்: ஏஎப்பி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 121-ம் நிலை வீரரான ஜப்பானின் டேனியலை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை 4-6 என நடால் இழந்தார். எனினும் அடுத்த 3 செட்களையும் 6-3, 6-2, 6-2 எனக் கைப்பற்றினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் நடைபெற்றது. 3-வது சுற்றில் நடால், 59-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் லியானார்டோ மேயரை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ரஷ்யாவின் மிகைல் யூஸ்னியை எதிர்கொண்டார். இதற்கு முன்னர் யூஸ்னிக்கு எதிராக 16 ஆட்டங்களில் மோதி அனைத்திலும் பெடரர் வெற்றி பெற்றிருந்ததால் இம்முறை எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெடரருக்கு வெற்றி எளிதாக அமையவில்லை. 5 செட்கள் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் சுமார் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் போராடிய பெடரர் 6-1, 6-7, 4-6, 6-4, 6—2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

36 வயதான பெடரர், முதல் சுற்றிலும் 5 செட்கள் வரை சென்றே வெற்றி பெற்றிருந்தார். அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் 5 செட்கள் விளையாடி 3-வது சுற்றுக்கு பெடரர் செல்வது இதுவே முதன்முறையாகும். 3-வது சுற்றில் பெடரர், ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸை எதிர்த்து விளையாட உள்ளார். அவர், தனது 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த பெர்னாண்டடோ வெர்டஸ்கோவை 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

 

டிமிட்ரோவ் வெளியேற்றம்

7-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், 53-ம் நிலை வீரரான 19 வயதான ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவிடம் 5-7, 6-7, 3-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதேபோல் 15-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் 6-3, 1-6, 6-7, 2-6 என்ற செட் கணக்கில் 64-ம் நிலை வீரரான உக்ரைனின் அலெக்சாண்ட் டோல்கோபோலோவிடம் தோல்வியடைந்தார்.

மற்ற ஆட்டங்களில் 18-ம் நிலை வீரரான பிரான்சின் மோன்பில்ஸ் 6-3, 6-7 (3/7), 6-4, 2-6, 7-5 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் டோனால்டு யங்கையும், 11-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட் 6-1, 6-3, 7-6 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் டஸ்டின் பிரவுனையும், 6-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 6-4, 6-4, 4-6, 7-5 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

 

குஸ்நெட்சோவா தோல்வி

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் நிக்கோலே கிப்ஸையும், 27-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷூய் ஷாங் 6-0, 6-3 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ரிசா ஒசாகியையும், 10-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் கஜகஸ்தானின் யுலியா புதின்செவாவையும், 4-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் இவ்ஜெனியா ரோடினாவையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

8-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் சுவெட்லனா குஸ்நெட்சோவா 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் குருமி நராவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்ற ஆட்டங்களில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ், லத்வியாவின் ஜெலினா ஒஸ்டபென்கோ, ரஷ்யாவின் கஸட்கினா, எஸ்டோனியாவின் கனேபி, ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 

நீண்ட நேர ஆட்டம்

62-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செல்பி ரோஜர்ஸ்7-6 (8-6), 4-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் போராடி 25-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கவ்ரிலோவாவை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 33 நிமிடங்கள் நடைபெற்றது. இதன் மூலம் அமெரிக்க ஓபன் வரலாற்றில் மகளிர் பிரிவில் அதிக நேரம் நடைபெற்ற ஆட்டம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடரில் இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா - ஸ்பெயினின் கார்பைன் முகுருசா மோதிய ஆட்டம் 3 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்றிருந்தது.

 

சானியா அசத்தல்

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷூய் பெங் ஜோடி, குரோஷியாவின் பெட்ரா மார்டிக், டோனா வெகிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. 2-வது சுற்றில் சானியா ஜோடி, சுலோவேக்கியாவின் ஜனா செப்லோவா, மெக்டலினா ரைபரிகோவா ஜோடியை எதிர்கொள்கிறது.

 

2-வது சுற்றில் போபண்ணா

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பப்லோ குயவாஸ் ஜோடி, அமெரிக்காவின் பிராட்லி, ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. போபண்ணா ஜோடி 2-வது சுற்றில் இத்தாலியின் சைமோன் போலேலி, பேபியோ போக்னி ஜோடியுடன் மோதுகிறது.

http://tamil.thehindu.com/sports/article19608131.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.