Jump to content

தினகரன் வலையில் 5 மந்திரிகள்


Recommended Posts

gallerye_002744545_1842756.jpg

 

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள நிலையில், தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

 

தமிழக ,அரசியலில், இன்று முதல் ,அதிரடி, ஆட்டம் ,எதிாபாாப்பு!

.தி.மு.க., தலைமையகத்தில், இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறிக்க, முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், தலைமை செயலகத்தில், சட்டசபை உரிமை குழு கூடி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது. 

இந்த இரு கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகள், தமிழக அரசியலில் புயலை கிளப்ப லாம் என்பதால், ஆளும் கட்சி தொண்டர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும், முடிவுகளை அறிய ஆர்வமாக உள்ளனர். தமிழகத்தில், தற்போது குழப்பமான அரசியல் சூழல் நிலவு கிறது. அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், அவர்களால் ஒதுக்கப்பட்ட தினகரன், தனி அணியாக செயல்பட துவங்கி உள்ளார்.

அவருக்கு, 21 எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு அளித்துள்ளனர். அவர்களில், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவ தாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
 

சந்திப்பு


எனவே, 'சட்டசபையை கூட்டி, பெரும்பான் மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தர விட வேண்டும்' என, கவர்னருக்கு எதிர்க்கட்சி கள் கடிதம் அனுப்பி உள்ளன. சட்டசபை எதிர்க் கட்சி துணைத் தலைவர், துரைமுருகன் தலைமையில், எதிர்க்கட்சி பிரதிநிதிகள், கவர்னரை நேற்று சந்தித்து, இது தொடர்பாக கடிதம் அளித்தனர்.

அதனால், கவர்னர் என்ன முடிவெடுக்கப் போகி றார் என, அனைத்து கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.அதே நேரத்தில் பழனிசாமிக்கு ஆதரவான எம்.எல்.ஏ.,க்களில்

சிலர், 'ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தலை சந்திக்கலாம்' என, வலியுறுத்த துவங்கி உள்ளனர்.
 

முக்கிய முடிவு


இந்த சூழ்நிலையில், இன்று காலை, 9:30 மணிக்கு, அ.தி.மு.க., - எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.இதில், தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.,க்கள் பங்கேற்பரா என, தெரியவில்லை.

இக்கூட்டத்தில், கட்சி பொதுக்குழுவை கூட்டு வது; மன்னார்குடி கும்பலை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும்வகையில், சசிகலாவின் கட்சி பதவியை பறிப்பது; கட்சியிலிருந்து அவரை நீக்குவது உட்பட, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.பின், அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்; இரட்டை இலையை மீட்க, தேர்தல் கமிஷனில் கொடுக்க வேண்டிய ஆவணங்கள் போன்றவை குறித்தும் முடிவெடுக்கப்படுகிறது.இதில், எடுக்கப்படும் முடிவை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, தினகரன் மற்றும் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே போல, சட்டசபை உரிமைக்குழு கூட்டமும், இன்று தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. தடை செய்யப்பட்ட, போதை பாக்குகளை, தி.மு.க.,வினர் சட்ட சபைக்கு எடுத்து வந்த விவகாரம், விவாதிக்கப் பட உள்ளது. இதில், எடுக்கப் போகும் முடிவும், அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு கூட்டங்களிலும், எடுக்க உள்ள முடிவுகள், தமிழக அரசியலில் பெரும் மாற் றத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆளுங்கட்சி யினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும், கூட்ட முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
 

தினகரன் வலையில் 5 மந்திரிகள்


இன்று நடக்கும், அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட் டத்தில், சசிகலா, தினகரன் இருவரையும், கட்சி யின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 

நீக்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதை அறிந்த தினகரன், முதல்வர் பழனிசாமி வகித்த, சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியை நேற்று பறித்துள்ளார். மேலும், தினகரன் விரித்த வலையில், ஐந்து அமைச்சர்கள் சிக்கி உள்ளனர்.

'சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி னால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்' என, அவர் கள், தினகரன் ஆதரவாளர்களிடம் கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

மோதல் ஏற்படும் அபாயம்


'பழனிசாமியை நீக்கிவிட்டு, சபாநாயகருக்கு, முதல்வர் பதவி வழங்கினால், சமரசத்திற்கு தயார்' என, திவாகரன் தரப்பினர் அறிவித்தி ருந்தனர். ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த, 25 எம்.எல்.ஏ.,க் களும், இந்த கோரிக்கையை வலியுறுத்தவும், சசிகலாவை நீக்கினால், எதிர்ப்பு தெரிவிக்கவும், திட்ட மிட்டுள்ளனர்.இதனால், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில்,மோதல் சம்பவங்கள் நடக்குமோ என்ற அச்சம், கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 

தாவும் எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி அதிர்ச்சி


அ.தி.மு.க.,வின் அணிகளும் இணைந்த பின், தினகரன் அணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் தாவி வருவதால், முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தினகரன் அணியில், 19 எம்.எல். ஏ.,க்கள் மட்டுமே, முதலில், புதுச்சேரிக்கு சென்று தங்கினர். பின், அறந்தாங்கி ரத்ன சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும், தினகரனுக்கு ஆதரவு அளித்தனர். நேற்று, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ், தேனியில் தினகரனை சந்தித்து ஆதரவு அளித்தார். பின், 'நான் முதல்வர் பழனிசாமி அணியில்தான் இருக்கிறேன்' என, பல்டி அடித்தார்.

ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., சந்திரபிரபா, தினகரன் அணியிலிருந்து, பழனிசாமி அணிக்கு தாவினார். தற்போது, மீண்டும் தினகரன் அணிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி, எந்த நேரத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் பிடித்து விடுவரோ என்ற குழப்பம் நீடிப்பதால், முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1842756

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.