Jump to content

அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் "இயேசுவின்" உருவத்தை கண்டதாகக் கூறும் தம்பதி


Recommended Posts

அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் "இயேசுவின்" உருவத்தை கண்டதாகக் கூறும் தம்பதி

கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படத்தில் இயேசு கிறிஸ்துவை பார்க்க முடிவதாக ஒரு அமெரிக்க தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்கேன் படம்படத்தின் காப்புரிமைFACEBOOK

அந்த ஸ்கேன் படத்தின் இடது ஓரத்தில் முள்முடி கிரிடத்தோடு, நீண்ட அங்கி அணிந்திருக்கும் ஒருவர், குழந்தையை பார்த்து கொண்டிருப்பது தெரிகிறது என்று பென்சில்வேனியாவை சேர்ந்த இந்த தம்பதியர் தெரிவிக்கின்றனர்.

"இந்தப் படம் என்னிடம் வழங்கப்பட்டபோது, தனக்கு அது இயேசு என்று தெரிந்தது" என்று தாயான அலிசியா ஸீக் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

முந்தைய இரண்டு மகப்பேற்றில் இருந்த சிக்கல்களுக்கு பின்னர் இந்த அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆறுதலை அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த தம்பதியருக்கு ஏற்கெனவே பிறந்திருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் பிறப்பு குறைபாடுகளோடு பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் மூத்த மகள் ஒரு கையில் இரண்டு கட்டைவிரல் இருக்கும் குறைபாடோடும், இரண்டாவது குழந்தை அண்ணப்பிளவோடும் (மேல் உதட்டில் பிளவு) பிறந்ததாக ஃபாக்ஸ்43 செய்தி நிறுவனத்திடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  •  

இந்த குடும்பம் பெரிய அளவு பயபக்தி உடைய குடும்பமாக இல்லாமல் இருந்தாலும், இந்த ஸ்கேன் படத்தை விண்ணகத்திலிருந்து வந்திருக்கும் அறிகுறியாக கருதுவதாக தந்தை ஸசாரி ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.

"வானத்தூதர் அல்லது கடவுள் அல்லது இயேசு என எப்படி வேண்டுமானாலும், நீங்கள் கூறலாம். நான் இதனை எனக்கு கிடைத்திருக்கும் ஆசீர்வாதமாக பார்க்கிறேன்" என்று ஸ்மித் கூறியுள்ளார்.

"நான் அதனை பார்த்தபோது, ஏறக்குறைய அழுதுவிட்டேன். பேச்சற்றுப்போனேன். என்னால் இதனை நம்ப முடியவில்லை" என்று தன்னுடைய உணர்வை அவர் பகிர்ந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை குழந்தை பிரியல்லா பிறந்துள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-41061373

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.