Jump to content

இலங்கை பெற்றோருக்கு பெருமை சேர்த்த கனேடிய தமிழன்!


Recommended Posts

இலங்கை பெற்றோருக்கு பெருமை சேர்த்த கனேடிய தமிழன்!

இலங்கையில் தனது பெற்றோர் பயன்படுத்திய கார் போன்று, பல வருட முயற்சியின் பயனாக மீளவும் கனேடிய தமிழர் ஒருவர் தயாரித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஸ்ரீ இராமலிங்கம் என்பவரே பழமை வாய்ந்த காரை தற்போது தயாரித்துள்ளார்.

கனடாவில் இன்று நடைபெறும் தமிழர் திருவிழாவின் போது அந்த காருடன் இராமலிங்கம் பெருமையாக அங்கே வந்து நிற்பார் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் Austin மோட்டார் வாகன நிறுவனத்தினால் இளம் பச்சை நிறத்திலான A40 Somerset என்ற இந்த 1950ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

இராமலிங்கத்தின் சிறுவனாக இருக்கும் போது, இதே போன்றதொரு காரை அவரது பெற்றோர் இலங்கையில் பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது கனடாவில் வசிக்கும் இராமலிங்கம் கனேடிய வானொலி ஒன்றுக்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.

அந்த செவ்வியில், எனக்கு 6 அல்லது 7 வயதிருக்கும் போது எனது பெற்றோர் இதே போன்றதொரு காரை பயன்படுத்தினார்கள். நான் அப்போது அந்த காரின் வேகமானியை பிடித்து கொள்வேன்.

ஒரு நாள் இந்த ரக கார் ஒன்று உடைந்த நிலையில் வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அவதானித்தேன். நான் அங்கு சென்று இந்த காரை விற்பனை செய்வீர்களா என்று கேட்டேன்.

அந்த காருக்கான முற்பணத்தை செலுத்தி விட்டு உடனடியாக அந்த காருக்கு பொருத்தமான பாகங்களை தேடி சென்றேன். Scarborough பகுதியில் கார் சேவை வியாபாரத்தை மேற்கொள்ளும் எனக்கே அது கடினமாக ஒரு விடயமாக இருந்தது.

நான் நினைக்கின்றேன் 1998ஆம் ஆண்டு இந்த காரை கனடாவுக்கு கொண்டு வந்தேன். அந்த காலப் பகுதியில் இதற்காக பாகங்களை பெற்றுக் கொள்வதென்பது மிகவும் கடினமாக இருந்தது.

பிரித்தானியா சென்ற போது இந்த காருக்கான சில பாகங்களை கொண்டு வந்தேன். பின்னர் நான் மீளவும் இலங்கை சென்றேன். அங்கு இருந்து சில பாகங்களை கொண்டு வந்தேன். நான் இலங்கை செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு பாகங்களை கொண்டு வருவேன்.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக, நானும் எனது ஊழியர்களும் காரை அதன் தற்போதைய நிலைக்கு மீட்டெடுக்க பணியாற்றினோம்.

எனது பெற்றோரின் காருக்கு ஒத்த வகையில் இலங்கை வாகன உரிம தகட்டுடன் வாகன தயாரிப்பு பணிகள் நிறைவுக்கு வந்ததென இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/canada/01/156502

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன பெருமைஎன்று விளங்கவில்லை.....கனடாவில் பழைய கார் நிறைய இருக்கு....இந்த  தெருவிழாவில் ...எல்லாமெ அதிமேதாவித்தனம்......அகதி வந்திறங்கின கப்பலையும் ஆட்களையும் பிரதமருக்கு அறிமுகம்  செய்கையில் ..ஒருவர் குடும்பம் ...கடசியாகப்போய்  ஆமிக்கொமாண்டரையும்..பிக்குவையும் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினவர்.....இவர் அகதியாம்...பிரதமருக்கு காட்டினம்......கோடைகால இறுதி நாட்டகள்...சனம் ஒரு தொகை இந்த இடத்திலை மாவை கோஸ்டியை கொண்டு வந்து ஒரு குழு கனடாச் சனமே உங்கடை பக்கமெண்டு பெயின்ற் அடிக்குத்து ஒரு குழு.......வாடிப்போன நுங்கையும் கரும்பையும் கொண்டுவந்து காசடிக்குது இன்னுமொரு குழு....அய்யா தாங்கமுயலை சாமி...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.