Jump to content

இந்தி தேசிய மொழி அல்ல; ஆகவும் முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா சிறப்பு பேட்டி


Recommended Posts

siddaramaiah

கர்நாடக மாநிலத்துக்குத் தனிக்கொடி கோரும் முதலமைச்சர் சித்தராமையா, இந்தி என்பது தேசிய மொழி அல்ல, தேசிய மொழியாக ஆகவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.

'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) அவர் அளித்த சிறப்பு பேட்டி:

இந்திய அரசுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரோ பலகைகளிலும் அறிவிப்புகளிலும் உள்ள இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள். சுதந்திர தின உரையின் போதுகூட இந்தித் திணிப்பை எதிர்த்துப் பலமாக குரல் எழுப்பினீர்களே?

இந்தியை யாராலும் திணிக்க முடியாது. மக்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப இந்தி கற்க விட்டுவிட வேண்டும். இந்தி தேசிய மொழி அல்ல. தேசிய மொழியாகவும் ஆக முடியாது. அது நாட்டின் பல்வேறு மொழிகளில் ஒன்று, அவ்வளவுதான்.

நான் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. இந்தியோ, தமிழோ அல்லது வெளிநாட்டு மொழிகளோ அதை வலுக்கட்டாயமாகத் திணிக்காதீர்கள்.

மத்திய அரசு இந்தியைத் திணிக்க திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொள்கிறது என்கிறீர்களா?

ஆம், அப்படித்தான் உணர்கிறேன். உதாரணத்துக்கு நம்ம மெட்ரோவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியைப் பயன்படுத்துமாறு அவர்கள் கடிதம் அளித்துள்ளனர். அதைத் தமிழ்நாடு பின்பற்றவில்லை. ஆனால் கேரளா பின்பற்றுகிறது. இது நம்முடைய தேர்வாகத்தான் இருக்க வேண்டுமே தவிர அவர்களால் அதைத் திணிக்கமுடியாது. அந்தக் கடிதத்துக்கு, கன்னட மக்களின் உணர்வுகளுக்கு இது எதிராக இருக்கிறது என்று பதிலளித்துவிட்டேன்.

மாநிலத்துக்கான தனிக்கொடியை வடிவமைக்க ஒரு குழுவை அமைத்துள்ளீர்கள். இந்திய ஒருமைப்பாட்டுக்கு இது பங்கம் விளைவிக்கக் கூடும் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

மாநிலத்துக்கென தனிக்கொடி இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதல்ல என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. யுஎஸ்ஸில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக்கொடி அல்லது தனி தேசிய கீதம் இருக்கிறது. மாநிலக் கொடி எப்போதும் தேசியக்கொடிக்குக் கீழே தான் இருக்கும். மேலே பறப்பது தேசியக் கொடியாகத்தான் இருக்கும். பிராந்திய மொழியின் பெருமை பேசுவதும், மாநிலக் கொடியை வைத்திருப்பதும் அரசியல் சாசனத்துக்கோ, இந்திய ஒருமைப்பாட்டுக்கோ எதிரானதல்ல.

இந்த செயல்முறைகள் அனைத்தும் ஏன் கர்நாடகத் தேர்தலை ஒட்டியே அமைந்துள்ளன? பாஜகவின் தேசியவாதத்தை, மாநில உணர்வுகள் கொண்டு வெற்றிகொள்ள காங்கிரஸ் முயல்கிறதா?

மாநில உணர்வுகள் எப்போதும் இருக்கின்றன. ஆனால் அவை தேசப்பற்றுக்கு எதிரானவை அல்ல. எல்லோரும் தேசபக்தியாளர்கள்தான். நானும் நாட்டுப்பற்றாளனே. இந்தியை எதிர்ப்பதாலோ, மாநிலக் கொடி கேட்பதாலோ நான் தேச பக்தியற்றவன் அல்ல. இங்கே போட்டி என்பது மதச்சார்பின்மைக்கும் வகுப்புவாதத்துக்கும் இடையில் நடப்பதாகும்.

ஆனால் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்தையே சிதைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டை தேர்தல் நேரத்தில் சுமத்துகிறீர்கள். ஆனால் இதில் அரசியல் நோக்கம் தெளிவாகத் தெரிகிறதே....

எதிர்பாராத விதமாக, எல்லாம் ஒரே நேரத்தில் வருகிறது. ஆனால் எங்களின் நோக்கம் அதுவல்ல. இந்தித் திணிப்பு எதிர்ப்பை, மத்திய அரசுக்கு எதிராக பதிலடி இல்லை என்று சொல்லமாட்டேன். எந்தத் திணிப்புக்கும் இங்கே எதிர்ப்பு இருக்கும்.

அப்படியெனில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பீர்களா?

தேவையில்லை. காங்கிரஸ் தனியாகவே போரிட்டு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

தேர்தலை முன்னிட்டு ஒரு தலைவரை முன்னிறுத்துவது காங்கிரஸில் பெரும்பாலும் நடப்பதில்லை. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் உங்கள் தலைமையின் கீழேதான் போராடிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸின் பலம், மாநிலத் தலைவர்களான உங்களைப் போன்றவர்களிடம் வந்துவிட்டதாக எண்ணுகிறீர்களா?

இல்லை. உயர் மட்டத்தில் இருந்து, மாநிலத்துக்கு எந்தப் பகிர்வும் நடக்கவில்லை. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வலிமையான மாநிலத் தலைமை அவசியம். அதே நேரத்தில் அதனால் உயர் மட்டத் தலைமை வலிமையற்றதாகவும், மாநிலத் தலைமை வலிமை வாய்ந்தது என்றும் எண்ணக்கூடாது. நான் முதல்வராக இருப்பதால், என்னுடைய தலைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவே!

உங்களின் அரசு ஊழலில் ஈடுபட்டதால் மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பதவி விலக வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் தொடுத்துள்ள வழக்கு அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் எனவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளதே...

எடியூரப்பா மீதான வழக்குக்குக் காரணம் அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்தான். சட்டம் தன் கடமையைச் செய்யும்.

டி.கே.சிவக்குமாரின் விவகாரத்தைப் பொறுத்தவரையில், யாரின் மேலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஏன் எப்பொழுதும் காங்கிரஸ் ஆட்களே சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்? எதனால் பாஜக உட்பட பிற கட்சிக்காரர்கள் மீது வருமான வரித்துறை, தன் சோதனையை மேற்கொள்வதில்லை?

சிவக்குமாரின் ராஜினாமாவை நீங்கள் கோருவீர்களா?

ஏன்? அதை நாங்கள் ஏன் செய்யவேண்டும் என்று கூறுங்கள். வருமான வரித் துறை எதையும் வெளிப்படுத்தவில்லை. அவர்களின் நோட்டீஸுக்கு சிவக்குமார் முறையாக பதிலளிக்கிறார். அதனால் அவர் குற்றம் இழைத்திருக்கிறார் என்று அர்த்தமா?

தேர்தல்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் நடக்குமா அல்லது முன்னரே நடத்தத் திட்டமிட்டிருக்கிறீர்களா?

தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திட்டமிட்டபடி நடக்கும். தேர்தலில் எங்களின் வெற்றி குறித்து உறுதியாக இருக்கிறோம்.

http://tamil.thehindu.com/india/article19545535.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின்... தெற்கு அரசியல், மிகவும் ..... உணர்ச்சி பூர்வமானது.  
அதனை... வடக்கு  அரசியல், அடிமைப் படுத்த நினைத்தால்...
முடிவு... வேறாக, இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, போல் said:

siddaramaiah

கர்நாடக மாநிலத்துக்குத் தனிக்கொடி கோரும் முதலமைச்சர் சித்தராமையா, இந்தி என்பது தேசிய மொழி அல்ல, தேசிய மொழியாக ஆகவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.

...

http://tamil.thehindu.com/india/article19545535.ece

 

ஒவ்வொரு மாநிலமும் இப்படி கிளர்ந்தெழ வேண்டும்..விரைவில் விடியல் கிட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி தேசிய மொழி அல்ல; ஆகவும் முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா ....

அப்பிடி போடு அரிவாளை...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

இந்தி தேசிய மொழி அல்ல; ஆகவும் முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா ....

அப்பிடி போடு அரிவாளை...:cool:

இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது :- தமிழக மக்கள் ஜே ஹிந்த் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியைத் தேசியமொழியாக்க  அரசியலமைப்புச்சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டியிருக்கும்.  தற்போதுள்ள நிலையில் இந்தியை எதிர்க்கும் மாநிலங்கள் பல உள்ளதால் பாராளுமன்றத்தில் மூன்றில் இருண்டு பெரும்பான்மையை ஆளும் கட்சி பெறுவது சாத்தியமில்லை. இந்தியை எதிர்க்கும் மாநிலங்கள் ஓர் கூட்டமைப்பின்கீழ் இயங்கி இந்த இந்தித் திணிப்பு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளியிட வேண்டும்.   தற்போது இந்திய மத்திய அரசு சமஸ்கிரதத்தை முன் நிலைப்படுத்தி  தேசிய ஒற்றுமையை வலுவடையச் செய்யலாமென்று பார்க்கிறது.  அதுவும் வெற்றி பெறுமோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழரசு said:

இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது :- தமிழக மக்கள் ஜே ஹிந்த் 

தமிழ்நாடு போற போக்கை பார்த்தால் ஜெய்ஹிந் இல்லை கோவிந்தா போலை எல்லே கிடக்கு...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாடு போற போக்கை பார்த்தால் ஜெய்ஹிந் இல்லை கோவிந்தா போலை எல்லே கிடக்கு...:grin:

உண்மைதான்போல்தெரிகிறது. 

பலமான ஒரு அரசுத்தலைமையான ஜெயலலிதா அவர்களின் மறைவு(மறைவா) பாதகமானதொரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. மோடியைத் தரிசிக்கும் மோட்டுக்கூட்டமாக மாறிவிட்ட தமிழகத் தலைமைகள் இருக்கும்வரை தமிழைத்தவிர அனைத்துமொழிகளையும் திணித்துவிடலாம். கிந்தி எதிர்ப்பைவெளியிடும் மானிலங்கள்  ஒன்றிணைவதே  தத்தமது மொழியையும் தொழில்களையும் பாதுகாக்க வழியாகும் இணைவார்களாயின் மட்டுமே மத்திய அரசு பறிக்கமுனையும் உரிமைகளைத் தக்க வைக்கமுடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.