Jump to content

பிரீமியர் லீக் முதல் இரண்டு வார முடிவில் கழகங்களின் நிலை


Recommended Posts

பிரீமியர் லீக் முதல் இரண்டு வார முடிவில் கழகங்களின் நிலை

Premiur League Results after week 2
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்தின் மிகப் பெரிய தொடரான 2017/18ஆம் பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் தொடக்கம் முதலே சூடு பிடித்துள்ளதை இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் முடிவுகள் தெரியப்படுத்துகின்றன. புதுமுக வீரர்களுடன் களமிறங்கியுள்ள கழகங்கள் தொடக்கம் முதல் சவால் விடுப்பதை புள்ளிப் பட்டியல் காட்டுகின்றது.  

மொத்தம் 20 அணிகள் பங்கு கொள்ளும் இந்த சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 11ஆம் திகதி மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியுடன் ஆரம்பமானது. ஆதரவாளர்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலேயே இப்பருவகாலத் தொடர் ஆரம்பமாகியுள்ளது.

இத்தாலி நாட்டின் ஒய்வு பெற்ற கால்பந்து வீரரான அண்டோனியோ கொன்டேயின் (Antonio Conte) பயிற்றுவிப்பின் கீழ் இயங்கும் செல்ஸி கால்பந்துக் கழகம் (Chelsea FC) கடந்த பருவகால சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

இதுவரை ஒவ்வொரு அணியும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. (11-08-2017 முதல் 23-08-2017 வரை). அந்த அடிப்படையில் கடந்த வருடம் ஆறாவது இடத்தைக் கைப்பற்றிய ஜோஸே மோரிய்னோவின் (Jose Mourinho) பயிற்றுவிப்பின் கீழ் விளையாடும் மென்செஸ்டர் யுனைடட் கழகம்(Manchester United) ஆறு புள்ளிகளுடன் தற்போது புள்ளிப் பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.

அக்கழகம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கடந்த வருடம் முதல் இக்கழகத்தின் முக்கிய ஒரு வீரராக கருதப்பட்டு வரும் ஸல்டன் இப்ராஹிமொவிக் (Zlatan Ibrahimovic) இப்போட்டிகளில் விளையாடாத நிலையிலே இவ்வெற்றியை இவர்கள் பதிவு செய்தனர். அவருக்குப் பதிலாக பெல்ஜிய வீரர் ரொமேலோ லுகாகு களமிறங்கினார். ரொமேலோ லுகாகு மற்றும் சேர்பிய வீரர் நிமேந்ஜா மெடிக்(Nemanja Matic) ஆகியோர் இப்பருவகாலம் முதல் மென்செஸ்டர் யுனைடட் கழகத்திற்காக விளையாட கைச்சாத்திட்டுள்ளனர்.

டேவிட் வேக்னரின் பயிற்றுவிப்பின் கீழ் இயங்கும் ஹடஸ்பிய்ல்ட் டவுன்(Huddersfield town) கழகமும் ஆறு புள்ளிகளுடன் உள்ளது. எனினும் மென்செஸ்டர் யுனைடட் கழகத்தை விட மொத்தமாக நான்கு கோல்களை குறைவாகப் பெற்றதால் புள்ளிப் பட்டியலில் அவ்வணி இரண்டாவது இடத்திலுள்ளது.

அதேபோன்று, மூன்றாவது இடத்தை வெஸ்ட்ஹாம் புரும்வீச் அல்பியன் கழகம் பெற்றுள்ளது. அவ்வணி பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று ஆறு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலான கோல்களை பெற்றதன் மூலம் மூன்றாவது இடத்திலுள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் இக்கழகத்தின் பயிற்றுவிப்பாளராக வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்தோனி ரிசர்ட் புலிஸ்(Anthony Richard Pulis) கடமையாற்றி வருகிறார்.

கடந்த வருடம் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய செல்ஸி கழகமானது டோடன்கம் ஹோட்ஸ்பேர்(Tottenham Hotspur) கழகத்துடன் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் பெர்ன்டன் (Brighton) கழகத்துடன் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இக்கழகத்தை வலுவூட்டுவதற்காக ஸ்பெய்ன் வீரர் அல்வாரோ மொரோடா இப்பருவகாலம் முதல் விளையாடி வருகிறார்.

அன்டோனியோ கொன்டேயின் பயிற்றுவிப்பின் கீழ் இயங்கும் செல்ஸி கழகமானது புள்ளிப் பட்டியலில் மூன்று புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளது. ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேர்ஜன் கொலப் பயிற்றுவிக்கும் லீவர்பூல் கழகமானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த ஒரு போட்டியின் மூலமும் (Watford 3 – Liverpool 3) வெற்றிபெற்ற ஒரு போட்டியின் மூலமும்(Liverpool 1 – C.Palace 0) ஆறாவது இடத்திலுள்ளது. இவ்வருடம் முதல் இவ்வணியின் புது முக வீரராக எகிப்து வீரர் ஸலாஹ் விளையாடி வருகின்றார்.

பெப் கார்டீயோலாவின்(Pep Guardolia) மென்செஸ்டர் சிடி(Manchester City) கழகம் நான்கு புள்ளிகளினால் புள்ளிப் பட்டியலில் ஜந்தாவது இடத்திலுள்ளது. பரய்டன்(Brighton) கழகத்துடன் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியதுடன், எவர்டன் கழகத்துடன் 1-1 என போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது.

பென்ஜமீன் மென்டீ, பெர்னாடோ சில்வா மற்றும் டனிலோ போன்ற பிரபலங்கள் இவ்வருடம் மென்செஸ்டர் சிடியுடன் இணைத்துள்ளனர். மென்செஸ்டர் சிடி கழகமானது கடந்த வருடம் மூன்றாவது இடத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

புள்ளிப் பட்டியலில் 11வது இடத்திலுள்ள ஆர்ஸனல் அணி, செஸ்டர் சிடியுடன் வெற்றி பெற்றாலும் அதிக கோல்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்த காரணத்தாலும், ஸ்டோக் சிடியுடனான போட்டியில் தோல்வியுற்றதாலும், புள்ளிப் பட்டியலில் தற்போது சற்று பின்னிலை அடைந்துள்ளது.

ஆர்ஸனல் அணி கடந்த வருடம் 75 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் காணப்பட்டது. ஆர்ஸன் வென்கர் கடந்த 21 வருடங்களாக இக் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்றமை சிறப்பம்சமாகும்.

மேலும், பிரபல வீரர் வெய்ன் ரூனி புதிதாக இணைந்துள்ள எவர்டன் கழகம் 8வது இடத்தையும், லெஸ்டர் சிடி 9வது இடத்தையும், டோடன்கம் ஹொட்ஸ்பர் 10வது இடத்தையும் தக்க வைத்துக்கொண்டுள்ளன.

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.