Jump to content

பேரறிவாளன் பரோலில் செல்ல அனுமதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதிப்பதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி பேரறிவாளனின் தாயாரின் கோரிக்கையை ஏற்று இவரை ஒரு மாதம் பரோலில் செல்ல தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதற்கான அரசாணை தற்போது வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனது மகனுக்கு பரோல் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேரறிவாளனின் தாயார் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தன.

அந்த வகையில் தற்போது பேரறிவாளனுக்கு 26 வருடங்களுக்குப் பிறகு ஒருமாத காலம் பரோல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு மாதகாலம் அவர் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

தாயகத்தில் வைத்தியர்கள், தாதிகள், நோயாளர்கள்,மாணவ மாணவிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த இந்திய படைகளை அனுப்பியவரான ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் பற்றரி வித்தமைக்காக தண்டனை பெற்று 26 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வரும் 7 பேர்களில் ஒருவரான பேரரிவாளனுக்கு ஒரு மாத பரோல் கிடைத்து இருப்பது சந்தோசம். .


இந்த தற்காலிக விடுவிப்பு நிரந்தர விடுதலையாக மாற வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லாதிக்க சக்திகளிடமிருந்து நீதியைப்பெறுதலென்பது முயற்க்கொம்பே. தொடர் போராட்டமூடே கிடைத்த விடுமுறை நிரந்தர விடுதலையானால் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

பேரறிவாளன் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் விடுவிப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன்  26 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 

பேரறிவாளன்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பேரறிவாளன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார்.

26 ஆண்டுகளாக சிறையில் இருந்து பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையை பிறப்பித்தும், வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது . இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவரை காவல்துறை வேனில் போலீசார் திருப்பத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

 

திருப்பத்தூரில் உள்ள அவருடைய வீட்டில்தான் தங்கியிருக்க வேண்டும். பத்திரிகை, டிவிகளுக்கு பேட்டி கொடுக்க கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

http://www.vikatan.com/news/tamilnadu/100269-perarivalan-release-by-parole.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் கற்காலத்தில் வசிக்கும் கிந்தியர்களுக்கு ஞாயதர்மம் புரியாது ..... பேரறிவாளனின் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள் கொடிய அரக்கர்கள். 

Link to comment
Share on other sites

 

26 வருடங்கள் இழந்த சிரிப்பு மீண்டும் இந்த அம்மாவில். இது நிரந்தரமாக வேண்டும்.

Image may contain: 1 person, smiling, eyeglasses and closeup

Link to comment
Share on other sites

'பேட்டி கொடுக்கக் கூடாது' - வீட்டுக்குச் சென்று பேரறிவாளனிடம் கையெழுத்து வாங்கியது போலீஸ்

 

perarivalan_5_11381.jpg

தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கக் கூடாது என்று பேரறிவாளனுக்குக் காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது. ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டுக்கு இன்று சென்ற காவல்துறையினர் அவரிடம் கையெழுத்து வாங்கிச் சென்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
26 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பேரறிவாளன், தன்னை பரோலில் விடுவிக்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். இதை தமிழக அரசு பரிசீலனை செய்துவந்தது. சுமார் ஒரு மாதத்துக்கு மேல் கோரிக்கை நிலுவையிலிருந்த நிலையியில் நேற்றிரவு பேரறிவாளனை தமிழக அரசு ஒரு மாதம் பரோலில் விடுவித்தது. தமிழக உள்துறை செயலாளர், வேலூர் சிறைத்துறை டி.ஜ.ஜி-க்கு இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்தார்.

இதையடுத்து, பேரறிவாளன் நேற்றிரவு பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவரைத் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்கக் கட்டியணைத்து வரவேற்றார். இதனிடையே, பேரறிவாளனுக்கு தமிழக காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. முக்கியமாகத் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் தலைமையில் காவல்துறையினர் இன்று காலை ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, பேரறிவாளனிடம் காவல்துறையினர் கையெழுத்து வாங்கிச் சென்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/100291-police-banned-perarivalan-to-appear-before-media.html

பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்..! தாயார் அற்புதம்மாள் உருக்கம்

பேரறிவாளன் பரோலுக்கு பாடுபட்ட ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 

ARPUTHAMMAL_09300.jpg


முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சுமார் 26 ஆண்டுகளாக சிறையிலிருந்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுந்துவருகிறது. இந்தநிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்ப்பதற்கு ஒரு மாதகாலம் பரோலில் விடுதலை செய்யவேண்டும் என்று பேரறிவாளன் தமிழக அரசுக்கு கோரிக்கைவைத்திருந்தார். நீண்ட காலத்துக்கு பின்னர் பேரறிவாளனை நேற்று ஒரு மாத கால பரோலில் தமிழக அரசு விடுவித்தது.

இந்த நிலையில் பேரறிவாளன் பரோலில் விடுதலையானதில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அவரது தாய் அற்புதத்தம்மாள் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கூறிய அவர், 'பேரறிவாளனின் பரோல் தற்காலிக மகிழ்ச்சியைத் தருகிறது. பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும்.  பேரறிவாளன் விடுதலைக்கு காரணமாக இருந்த ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி. பேரறிவாளனுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறேன்' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு பெண் பார்க்கும் பணியில் அவரது தாயார் அற்புதம்மாள் ஈடுபட்டுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/100285-perarivalans-mother-arputhammal-thanks-media-and-political-leaders-who-all-are-the-reason-of-perarivalans-parol.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குவாண்டனாமாவில் இருந்த விடுதலையானவனுக்கே...பேட்டி கொடுக்கவோ....புத்தகம் எழுதவோ..தடையேதும் இல்லை!

ஆனால்...பேரறிவாளனுக்கோ..தடை..!

ஏனெனில்... இந்திய அரசின் மடியில் அவ்வளவு.....கனம்!

அற்புதம் அம்மாவுக்கு  வாழ்த்துக்கள்!

இவ்வளவு தூரம்...வந்ததே.. ஒரு அற்புதம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அப்பாவிகளின் விடுதலை நிரந்தரமாவதோடு.. ராஜீவ் காந்தி என்ற தமிழினப் படுகொலையாளன்.. போர்க்குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரும்.. சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு... முழுமையாக விசாரிக்கப்பட்டு.. தண்டிக்கப்படுவதோடு.. பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கும் மண்ணுக்கும்.. ஹிந்திய பிராந்திய வல்லாதிக்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும்.  நீதி கிடைக்கப் பெற வேண்டும். 

இவரின் விடுதலையை எப்போதும் வலியுறுத்தி வந்த.. நாம் தமிழர் கட்சிக்கும்.. அண்ணன் சீமானுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட வேண்டும். இவர்களின் விடுதலையை நிரந்தரமாக்க தொடர்ந்து அவர்கள் குரல் தர வேண்டும். 

அண்மையில்.. கூட இவருக்கு பரோ வழங்க முடியாது என்று சொன்ன போது.. தான் ஆட்சிக்கு வந்தால்.. முதல் வேலை இவர்களை விடுதலை செய்வது தான் என்று பகிரங்கமாகவே சீமான் செய்தியாளர்களிடம் சொன்னதோடு.. பரோ வழங்க முடியாது என்ற அறிவிப்பை கடுமையாகச் சாடி இருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு திரும்பினார் பேரறிவாளன்! வரவேற்ற மக்கள் கூட்டம்! பொலிஸார் குவிப்பு! நிபந்தனைகள் விதிப்பு

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

ஜோலார்ப்பேட்டையில் பேரறிவாளன் வீடு உள்ளது. வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்ப்பேட்டை அழைத்து வரப்பட்டார்.

இதனையடுத்து இரவு 9 மணியளவில் பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

ஜோலார் பேட்டை எல்லையில் மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது சொந்த ஊரான ஜோலார் பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார் பேரறிவாளன்.

பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன், சகோதரி உறவினர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

26 ஆண்டுகாலம் சிறையில் கழித்த மகன் முதன் முறையாக பரோலில் வந்ததை அடுத்து உணர்ச்சி பெருக்கோடு காணப்பட்டார் அற்புதம்மாள்.

பேரறிவாளனுக்கு உறவினர்கள் ஆரத்தி எடுத்து உச்சி மோர்ந்து வரவேற்றனார்.

பேரறிவாளன் வருகையைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

தந்தை உடல்நலம் கவனித்துக் கொள்ள பேரறிவாளனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு மாத காலம் பரோல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜோலார் பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் பேரறிவாளன் தினசரியும் கையெழுத்து போட வேண்டும்.

வேலூர் சிறையில் அளித்துள்ள முகவரியில்தான் பேரறிவாளன் தங்க வேண்டும்.

மேலும் வீட்டை விட்டு வெளியே செல்ல தடையுள்ளது.

இந்த 30 நாட்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது.

மேலும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தரக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பேரறிவாளனை தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 26 ஆண்டுகள் கழித்து 46 வயதில் வெளியே அதுவும் பரோலில் வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

திட்டமிட்டு போலியாக புனையப்பட்ட வழக்கில் பலிக்கடா ஆகிய பேரறிவாளனுக்கு கிடைத்தது அற்ப நிவாரணம் மட்டுமே!
தர்மம் இன்னமும் விழித்துக்கொள்ளவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  அதிமுகவிற்கு ஆதரவா?

பேரறிவாளனின் தாயார்,  மறைந்த  முதல்வர்  ஜெயலலிதாவை இரண்டு,  மூன்று  முறை   சந்தித்து,
தனது மகனை... விடுவிக்கும் படி, கும்பிட்டு கேட்டார்.  
மறைந்த.... முதல்வர் முயற்சி செய்தாரா... இல்லையா என்று தெரியவில்லை.

ஆனால்.... கட்டுமரம் கருணாநிதி, அன்னை சோனியாவுடன்... "லாலி பாப்"  தின்ற   நேரத்தில், 
இலகுவாக முடிந்திருக்க வேண்டிய விடயம். கட்டு மரத்துக்கு... செய்ய மனமில்லை.

இப்போ... நடந்திருப்பது, பேரறிவாளனின்  தாயார்   அற்புதம்மாளுக்கு கிடைத்த சந்தோசம், 
அந்த மகிழ்ச்சியில்..உலகத்  தமிழர் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தற்காலிக பரீட்சார்த்த நடவடிக்கை மூலம் கிந்தி மோடி அரசு தமிழகத்தை நாடிபிடித்து பார்க்கின்றது. தனக்கு தலையாட்டும் தற்போதைய அதிமுக ஆட்சியை அளவுகோல் பார்க்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


26 வருடங்கள்.

என்ன ஒரு கேவலமான‌ உலகம் நாடு இது.

எத்தனையே பெரிய குற்றவாளிகள் வெளியே இருக்க ஓர் அப்பாவி இப்படி  சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாக்கப்பட்டு கயவர்கள் கைகளினால் உபாதிக்கப்ப்டுகின்றார். 

கூடிய சீக்கிரம் வெளிவர பிரார்த்திகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.