Jump to content

மாலிங்கவின் ஆட்டம் குறித்து நிக் போத்தாஸ் மற்றும் கோஹ்லி ஆகியோரின் கருத்து


Recommended Posts

மாலிங்கவின் ஆட்டம் குறித்து நிக் போத்தாஸ் மற்றும் கோஹ்லி ஆகியோரின் கருத்து

Lasith Malinga
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

அண்மைய காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருக்கும் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிக் போத்தாஸ் மற்றும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

மாலிங்க பற்றி பேசியிருந்த போத்தாஸ், இந்த வருடம் அவரின் பந்து வீச்சு மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்த 9 பிடியெடுப்புக்கள்த வறவிடப்பட்டிருந்ததையும், அவர் ஒரு நாள் அணிக்கு நீண்ட கால ஓய்வின் பின்னர் திரும்பி 7 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியிருந்தது பற்றியும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்.

“நாங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்த போட்டியின் போக்கை தீர்மானிக்க கூடிய இலங்கை அணியின் முக்கிய புள்ளிகள் எனக் குறிப்பிடும்படியான சில வீரர்களை கடந்த காலத்தில் இழந்து விட்டோம். அத்தோடு, தற்போது போட்டியின் போது தலைவர்களாக இருக்க கூடிய சில தலைவர்களையும் இழந்து விட்டோம். அவ்வாறாக ஒரு போட்டியின் போது தலைவராக இருக்க கூடிய வீரரே மாலிங்க ஆவார். நாங்கள் அவரை ஒரு தூயநோக்கோடும், அவரால் பந்தை கொண்டு செய்யக்கூடிய விடயங்களையும் தற்போது நாம் பார்ப்பதில்லை. அத்தோடு, அவர் தற்போது அணியில் இருக்கும் இளம் பந்து வீச்சாளர்களுக்காக என்ன செய்திருக்கின்றார் என்பதையும் பார்ப்பதில்லை. அணியில் இருக்கும் ஏனைய ஒவ்வொரு வீரருக்கும் மாலிங்க எவ்வளவு பெறுமதியான வீரர் என்பது தெரியும். அவரது அண்மைய பதிவுகள் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வைத்திருந்த பதிவுகள் போன்று சற்று திருப்திகரமானதாக அமையாது இருப்பினும், மாலிங்கவின் பெறுமதி அளவிட முடியாத ஒன்றாகும்”

என நிக் போத்தாஸ் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கு முன்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

 

33 வயதாகும் மாலிங்கவின் அண்மைய ஆட்டங்களில் எதுவும் குறிப்பிட்டு சொல்லும்படி அமைந்திருக்காவிடினும், இலங்கை கிரிக்கெட் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மிகச்சிறந்த வீரர்களில் அவரும் ஒருவராவார். வரலாற்றில் மாலிங்கவினால் மாத்திரமே ஒரு நாள் போட்டியொன்றில், (தென்னாபிரிக்க அணிக்கெதிராக 2007ஆம் ஆண்டு உலக கிண்ணத்தின் போது) தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

“(மாலிங்க) அவர் பந்து வீசும் முறையும், அவர் அதன் மூலம் நீண்ட காலமாக பெற்றுக்கொண்டிருந்த சிறந்த அடைவுகளும் மிகவும் பாராட்டத்தக்கது. அவர் பந்து வீசும் போது வெளிப்படும் உடற் பொறிமுறை யாருக்கும் அவ்வளவு எளிதாக இயற்கையில் அமைந்துவிடாது. அவர் இதுவரை காலமாக இலங்கை கிரிக்கெட்டிற்காக செய்தவை அனைத்தும் சிறப்பானதாக அமைந்திருந்தன. மாலிங்காவினாலேயே கடந்த காலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை அணி மிகவும் அச்சுறுத்தல் தரும் ஒரு அணியாக காணப்பட்டிருந்தது. அவர் விளையாடிய டெஸ்ட் போட்டிகளிலும், மிகவும் முக்கியமான ஒருவராகவே காணப்பட்டிருந்தார். அவர் இப்போதைய காலங்களில் முன்னர் போன்று பந்து வீசுவது கிடையாது என இலகுவாக கூறினாலும், குறிப்பிட்ட காலத்திற்கே அவ்வாறு இருக்கப் போகின்றது. அவரால், மீண்டும் துல்லியமான யோர்க்கர் பந்துகள் மூலமாகவும், அவரிற்கே உரிய பாணியிலான மெதுவான சில பந்துகளின் மூலமாகவும் மீண்டும் விக்கெட்டுகளை சீராக சாய்க்க முடியும் எனின், இந்தப்பேச்சுக்கு இடமே இருக்காது. மேலும் அவரது உடல் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. அவரது உடல் பற்றி சரியாக அவருக்கு மாத்திரமே தெரியும். அவரோடு நாங்கள் எப்போதெல்லாம் விளையோடுவோமோ, அப்போதெல்லாம் அவரது ஆற்றல்களுக்கு மதிப்பளிப்போம். அத்தோடு, போட்டியின் போக்கை திருப்ப அவர் எதைக்கொண்டு வருகின்றார் என்பதையும் அவதானித்து செயற்படுவோம். நாங்கள் எப்போதும், அவரோடு இப்படியாகவே விளையாடுவோம். கடந்த காலங்களிலும் அப்படியே விளையாடியிருந்தோம். அவர் இலங்கை அணிக்காக விளையாடும் வரை அப்படியே தொடர்ந்தும் விளையாடுவோம்“

என இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி மாலிங்க பற்றி பேசியிருந்தார்.

2009ஆம் ஆண்டிலிருந்து, மாலிங்கவும் கோஹ்லியும் 22 போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளனர். இதில், ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் மாத்திரமே மாலிங்கவினால் இந்திய அணியின் தலைவர் ஆட்டமிழக்க செய்யப்பட்டிருக்கின்றார். ஒரு சாதாரண துடுப்பாட்ட வீரராக அறியப்பட்டிருந்த கோஹ்லி இலங்கை அணிக்கெதிராகவே, அசுர ஆட்டத்தினை வெளிக்காட்டி ஒரு சிறப்பான துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார். இலங்கை அணிக்கெதிராக 21 போட்டிகளில் விளையாடி 80 ஓட்ட சராசரியைக் கொண்டிருக்கும் கோஹ்லி, (இலக்கை தொடும்) இரண்டாம் துடுப்பாட்டத்திலேயே அதிகமாக ஆடி, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 66 ஓட்ட சராசரியைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

“சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வகைப் போட்டிகளிலும், இலங்கை அணிக்காக அவர் செய்த விடயங்களை நோக்கும் போது, ஒரு வரலாற்று நாயகனாக மாலிங்க பார்க்கப்பட வேண்டியவர். அவருக்கு தற்போது கொஞ்சம் வயது போய் விட்டது. அவரது பந்து வீச்சுக்குரிய காலமும் போய்விட்டது. அதனாலேயே, அவரது பந்துவீச்சிற்கு துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக எதிர்தாக்குதல் தருகின்றனர் என நினைக்கின்றேன். இது இயற்கையான ஒரு விடயமே, ஏனெனில் போதிய அளவைவிட மாலிங்க அதிமாக கிரிக்கெட் விளையாடிவிட்டார். இது ஒரு சுழற்சி சக்கரம், வாழ்க்கையும் ஒரு சுழற்சி சக்கரம்“

என முதலாவது ஒரு நாள் போட்டியின் பின்னர் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவான் கூறி மாலிங்க இனி ஓய்வுபெற வேண்டும் என்னும் விதத்தில் அறிவுரை வழங்கியிருந்தார்.

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.