Jump to content

ஷேவாக், கெய்ல், அப்ரிடியின் அதிரடியை மீண்டும் பார்க்கலாம்! #T10Cricke


Recommended Posts

ஷேவாக், கெய்ல், அப்ரிடியின் அதிரடியை மீண்டும் பார்க்கலாம்! #T10Cricke

கிரிக்கெட் போட்டிகளை அடுத்த லெவலுக்கு நகர்த்திச் செல்லும் முன்னெடுப்புகளில் ஒன்றாக, பத்து ஓவர்கள் மட்டுமே கொண்ட 'டி-10 கிரிக்கெட்' போட்டித் தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ் கெய்ல், பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி மற்றும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்கரா ஆகியோர் இப்போட்டிகளுக்கான பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

T10Cricket

தவிர, நால்வருமே களத்திலும் இறங்கி கலக்க இருக்கிறார்கள். ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல வீரர்களை ஒருங்கிணைத்து அறிமுக அணிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஷேவாக், கெய்ல், சங்கக்கரா, அப்ரிடி ஆகியோர் ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்து விளையாட இருக்கிறார்கள். பத்து ஓவர்கள், 90 நிமிடம்... என குறுகிய கால கிரிக்கெட் போட்டியான இத்தொடர், நான்கு நாள்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

 

வருகிற டிசம்பர் இறுதியில் இப்போட்டிகள் நடக்கும். சர்வதேச அளவில் நடைபெற்ற 60 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகள் காலப்போக்கில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியாகவும், 20 ஓவர்கள் கொண்ட போட்டியாகவும் பரிணாமம் அடைந்தது. 10 ஓவர்கள் கொண்ட இந்த போட்டிகள், எதிர்காலத்தில் சர்வதேச அளவிலான 'டி10' போட்டியாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/100176-sehwag-gayle-afridi-sangakkara-to-play-in-first-ever-t10-cricket-league.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
mil அதிரடி நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் உலகைக் கலக்க வரும் T-10 போட்டி
T-10-Cricket.jpg

அதிரடி நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் உலகைக் கலக்க வரும் T-10 போட்டி

TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக ஏற்படும் பல மாற்றங்களால் பாரம்பரிய கிரிக்கெட்டிலிருந்து நவீன கிரிக்கெட் பல முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் பெற்று வருகின்றது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் T-20 போட்டிகளுக்கும் மாற்றம் பெற்ற கிரிக்கெட் தற்போது அதிரடியாக T-10 போட்டிகளை நடாத்த களம் காண ஆயத்தமாகவுள்ளது.

10 ஓவர்கள், 7 அணிகள், 90 நிமிடங்கள் என மிகக் குறுகிய நேர எல்லைக்குள் 4 நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடர், கிரிக்கெட் உலகின் அதிரடி நட்சத்திரங்களான சஹீட் அப்ரிடி, குமார் சங்கக்கார, கிறிஸ் கெயில், விரேந்தர் செவாக் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஐக்கிய அரபு இராட்சியத்தின் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இவ்வருட டிசம்பர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.  

உலகின் தலை சிறந்த 50 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல புதிய வீரர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகவுள்ள இப்போட்டித் தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளது. உலகின் மிக முக்கியமான கிரிக்கெட் தொடர்களை நடாத்திய பெருமையயைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

விறுவிறுப்பான இத்தொடரின் ஒவ்வொறு போட்டியிலும் உலகின் பல்வேறு நாடுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் பங்குபற்றுதலுடன் போட்டிகள் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும். கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாது பிரம்மாண்டமான ஆரம்ப நிகழ்வுகள், நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் என பல மாற்றங்களுடன் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபிஸ், பக்தூன்ஸ், மராத்தா, பங்லாஸ், லங்கன்ஸ், சிந்திஸ் மற்றும் கேரலைடிஸ் என ஏழு அணிகளின் பங்குபற்றுதலுடன் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தருணம் வரை பக்தூன்ஸ் அணியின் தலைவராக சஹீட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பங்லாஸ் அணித் தலைவராக சகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏனைய அணிகளுக்கான வீரர்கள் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ள ஏலத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி

T-10 கிரிக்கெட் தொடரின் தலைவரும் ஐக்கிய அரபு இராட்சிய கிரிக்கெட் சபையின் உறுப்பினருமான சஜீ உல் முல்க் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இப்போட்டிகளை நடாத்துவது குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். T-10 தொடர் கிரிக்கெட்டின் அடுத்த கட்டமாகும். T-20 போட்டிகள் நமக்கு தரும் மகிழச்சியைப் போல T-10 தொடரும் இருக்கும் எனத் தெரிவித்தார்  

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் சஹீர் அப்பாஸ் கருத்துத் தெரிவிக்கையில் இது கிரிக்கெட் உலகின் நேரத்துக்குள் 90 நிமிடங்கள் உள்வாங்கப்பட்ட தருணமாகும். இது கிரிக்கெட்டின் அடுத்த கட்ட நகர்வகும் எனத் தெரிவித்தார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.