Jump to content

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து இங்கிலாந்தின் வேய்ன் ரூனே ஓய்வு


Recommended Posts

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து இங்கிலாந்தின் வேய்ன் ரூனே ஓய்வு

இங்கிலாந்தின் நட்சத்திர கால்பந்து வீரரான வேய்ன் ரூனே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து இங்கிலாந்தின் வேய்ன் ரூனே ஓய்வு
 
 
லண்டன்:
 
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்பவர், வேய்ன் ரூனே. இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். 31 வயதான ரூனே உள்ளூர் போட்டிகளில் எவர்டன் அணிக்காக கடந்த 2002 - 2004ல் விளையாடினார். பின்னர் பார்சிலோனா அணிக்காக 2004 - 2017ம் ஆண்டுவரை விளையாடினார். பார்சிலோனா அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இப்போது மீண்டும் எவர்டன் அணிக்காக விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில், ரூனே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இங்கிலாந்து அணி, அடுத்த மாதம், நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் விளையாட உள்ளது. ஓய்வு முடிவை அறிவித்துள்ளதால் அந்த தகுதிச்சுற்று போட்டிகளில் அவர் கலந்து கொள்ளமாட்டார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவரது ஓய்வு முடிவு இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
201708232001450964_1_rooney-everton._L_s
தனது ஓய்வு குறித்து ரூனே வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
இங்கிலாந்து அணியில் நான் திரும்ப விளையாட வேண்டும் என இன்று, அணியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது மிகவும் சிறந்தது. எனினும் நீண்ட ஆலோசனைக்கு பின் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திட்டவட்டமாக கூறிவிட்டேன். இந்த கடின முடிவை எனது குடும்பத்தினர், எவர்டன் அணி மேலாளர் மற்றும் நெருக்கமானவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்துள்ளேன்.
 
இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது எப்பொழுதும் எனக்கு சிறப்பானது. ஒவ்வொரு முறையும் அணி வீரராகவோ, அணித்தலைவராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமையாக இருந்தது. எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. ஆனால் இப்போது நான் விலக வேண்டும் என்பதை நம்புகிறேன்.
 
மான்செஸ்டர் அணியைவிட்டு விலகியது கடினமாக இருந்தது. ஆனால் எனது சொந்த அணிக்காக விளையாட வேண்டும் என சரியான முடிவை எடுத்துள்ளேன். இப்போது அந்த அணியை வெற்றிபெற செய்ய இருக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளேன்.
 
நான், எப்பொழுதும் இங்கிலாந்து அணியின் ரசிகனாகவே இருப்பேன். வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. தற்போது இருக்கும் விரர்கள் அணியின் வெற்றிக்காக கடினமாக உழைத்து வெற்றி பெறுவார்கள் என நான் நம்புகிறேன். ஒருநாள் அந்த கனவு உண்மையாகும், அதுவரை நான் ஒரு ரசிகனாக காத்திருப்பேன்.
 
இவ்வாறு அவர் கூறினார். 
 
இதுவரை, 119 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள ரூனே, 53 கோல்கள் அடித்துள்ளார். மான்செஸ்டர் அணிக்காக 2004 - 2017ம் ஆண்டுவரை 183 கோல்கள் அடித்துள்ளார். 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/23200141/1104087/Wayne-Rooney-retires-from-international-football.vpf

Link to comment
Share on other sites

லெஜண்ட், ஜாம்பவான் இல்லையெனிலும் ரூனி இஸ் கிரேட்! #Rooneyretires #RooneyMara

வெய்ன் ரூனி – இங்கிலாந்து கால்பந்தின் ஈடு இணையற்ற வீரர். சர்வதேச அரங்கில் இங்கிலாந்தை பல முறை வழிநடத்தியவர். பல சர்வதேச சாதனைகளுக்குச் சொந்தக்காரர். கால்பந்து உலகின் மிகப்பெரிய கெளரவங்களில் ஒன்றான இங்கிலாந்து அணியின் அந்த வெள்ளை நிற ஜெர்சிக்கு கெளரவம் சேர்த்தவர். ஆனால் இனி அவர் அந்த உடையை உடுத்தப் போவதில்லை. பிரீமியர் லீக் தொடரில் 200 கோல்கள் என்ற சாதனையைப் படைத்துவிட்டு, அந்தச் செய்தி காற்றில் உலாவும்போதே தனது சர்வதேச ஓய்வையும் அறிவித்துள்ளார் ரூனி. அவரது கால்பந்துப் பயணத்தை…அந்தப் பயணங்களில் அவர் தொடாத இலக்குகளை, அவர் கண்டுணர்ந்த சிகரத்தை அலசுவோம்.

 ரூனி

தன் 17வது வயதில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார் ரூனி. அப்போது மிக இளம் வயதில் இங்கிலாந்து அணிக்காகக் களம் கண்டவர் ரூனி தான். 1966 உலகக்கோப்பைக்குப் பிறகு சர்வதேசத் தொடர்களில் சோபிக்கத் தவறிய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் ஒரு சர்வதேச பதக்கத்தை ரூனி பெற்றுத்தருவார் என்று அப்போதே பலரும் ஆருடம் கூறினார்கள். பீலேவைப் போல், மரடோனாவைப் போல் இங்கிலாந்து மண்ணில் ஒருவன் அவதரித்துவிட்டான் என்றே கருதினர். ரூனியும் அதற்கு ஏற்றார்போல் இளம் சூறாவளியாகவே களத்தில் கலக்கினார். இங்கிலாந்து அணிக்காக இளம் வயதில் கோலடித்தவர் என்ற பெருமையும் இவரின் வசமே.

ஆனால் ரூனியால் அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. பெக்கம், ஜெரார்டு, லாம்பார்டு, டெர்ரி என உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருந்த இங்கிலாந்து அணி ஒவ்வொரு பெரிய தொடரிலும் சொதப்பியது. யூரோ கோப்பைகளில் போராடிய ரூனியும் கூட உலகக்கோப்பைகளில் ஒவ்வொரு முறையும் சரண்டர் ஆகிவிட்டார். அதுவும்  உலகக்கோப்பையில் கோலடிக்க  அவருக்கு 3 தொடர்கள் தேவைப்பட்டன. 2006ல் முடியவில்லை. 2010- உலகக் கோப்பையிலும் போராடிப் பார்த்து தோற்றுப்போனவர், ஒருவழியாய் 2014 பிரேசில் உலகக்கோப்பையில் உருகுவேவிற்கு எதிராய் அந்த தீராக்கனவை தீர்த்துக்கொண்டார். 

இப்படி பெரிய ஏமாற்றங்களைச் சுமந்துகொண்டுதான் ஒவ்வொரு முறையும் அந்த வெள்ளை உடையை உடுத்தியிருந்தார் ரூனி. ஆனால் அவற்றுக்கு நடுவே அவர் செய்த சாதனைகள் அலப்பறியது. சர்வதேச அரங்கில் 50 கோல்கள் என்பதே மிகப்பெரிய மைல்கல். அதுவும் ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த ஒருவீரருக்கு அது இன்னும் கடினமான விஷயம். காரணம் அவர்கள் எதிர்த்து விளையாடும் அணிகள் பெரும்பாலும் பலம் வாய்ந்தவையாக இருக்கும். அந்த மைல்கல்லை கடந்த ஆண்டு அடைந்தார் ரூனி. கிட்டத்தட்ட சுமார் 46 ஆண்டுகள் எந்த இங்கிலாந்து வீரராலும் தொடமுடியாத சாதனையைத் தகர்த்தெறிந்தார் ரூனி. அது சர் பாபி சார்ல்டனின் அதிக கோலடித்த இங்கிலாந்து வீரரென்ற சாதனை. 49 கோல்கள் அடித்து 46 ஆண்டுகளாய் அச்சாதனையைச் சொந்தம் கொண்டாடிவந்தவரின் சாதனையை நெருங்கிய ஒரே ஆள் ரூனி தான். அதை நொறுக்கிய ஒரே ஆளும் ரூனி தான்!

ரூனி

இதுவரை 119 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ரூனி 53 கோல்கள் அடித்துள்ளார். 119 போட்டிகளில் 53 கோல்கள் என்பதொன்றும் மாபெரும் விஷயமல்ல. ஆனால் ரூனி அடித்தது பெரிய விஷயம் தான். காரணம் அவர் தனக்கென்று ஒரு ஆஸ்தான பொசிஷனை வைத்துக்கொண்டு அதில் மட்டுமே ஆடியவர் அல்ல. ஏறக்குறைய முன்களத்திலும் நடுகளத்திலும் இருக்கும் ஒவ்வொரு பொசிஷனிலும் விளையாடியுள்ளார். போர்ச்சுகல், அர்ஜென்டினா அணிகளெல்லாம்  ரொனால்டோவிற்கும், மெஸ்ஸிக்கும் ஏற்றார்போல் தங்கள் அணியின் ஃபார்மேஷன்களை அமைத்துக்கொள்ளும். ஆனால் ரூனி தன் பயிற்சியாளர்களுக்கு மாபெரும் ஆயுதமாகவே இருந்தார். 

தன் அணியில் இன்னொரு ஃபார்வேர்டு வீரர் நல்ல ஃபார்மில் இருந்தால், ‘ஃபால்ஸ் 9’ எனப்படும் இரண்டாவது ஸ்டிரைக்கர் பொசிஷனில் விளையாடுவார். 4-3-3 ஃபார்மேஷனில் விளையாட பயிற்சியாளர் முடிவெடுத்தால் வலது விங்கிலோ, இடது விங்கிலோ ஆடத்தயாராக இருப்பார். நடுகளத்தை பலமாக்க நினைத்தால் பிளேமேக்கராக மாறுவார். அணியின் தடுப்பாட்டம் சற்றுத் தடுமாறும்போது ஹோல்டிங் மிட்ஃபீல்டராகி அணியை நிலைப்படுத்துவார். இப்படி அணிக்காக முழுவதுமாய் வளைந்து கொடுக்கக் கூடியவர் ரூனி. கொஞ்சமும் சுயநலம் இல்லாதவர். இந்தக் குணம்தான் மான்செஸ்டர் யுனைடட் அணியில் இவர் புரிந்த சாதனைகளுக்கும், அந்த அணி ரூனியால் அடைந்த வெற்றிகளுக்கும் காரணம். 

“ரூனிக்கு ஓய்வளிக்க நாங்கள் நினைத்தால், அவரோடு போராட வேண்டியிருக்கும். அவ்வளவு சீக்கிரம் ஓய்வெடுக்க சம்மதிக்கமாட்டார். விட்டால் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் அவர் கால்பந்து விளையாடிக்கொண்டே இருப்பார்” என்று அவரைப் புகழ்ந்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராய் ஹாட்சன். இதுவே ரூனியின் கமிட்மென்டுக்கு உதாரணம்.

ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடட் அணியில் ஆடிய காலத்தில்தான் ரூனியும்  வாங்கப்பட்டார். உலகம் உற்றுப்பார்த்த இரு இளம் வீரர்கள் ஒரே அணியில். கொஞ்சம் ஈகோ தலைதூக்கியிருந்தாலும் இரு வீரர்களுக்கும் பெரும் பின்னடைவாய் இருந்திருக்கும். ஆனால் ரூனி ரொனால்டோவிற்குப் பெரும் பக்கபலமாகவே இருந்தார். சற்றும் சுயநலம் இல்லாது விளையாடக்கூடிய அவரை வெறுக்கும் ரசிகனோ, எதிரணி வீரரோ இருக்கவே முடியாது. களத்தில் அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி சிவப்பு அட்டைகள் வாங்கியிருக்கிறார், அடிக்கடி மஞ்சள் அட்டை வாங்கியிருக்கிறார். ஆனால் யார் மீதும் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்வு கொண்டதில்லை. அப்படியொரு ஜென்டில்மேன் ரூனி.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூனியின் கால்பந்து வாழ்க்கை பாதாளம் நோக்கிப் பயணித்தது என்பதே உண்மை. மான்செஸ்டர் யுனைடட் அணியின் பிளேயிங் லெவனில் தனது இடத்தை இழந்தார். இளம் வீரர்கள் பலரும் துடிப்புடன் ஆட, இங்கிலாந்து அணியிலும் இவரது இடம் கேள்விக்குறியாகவே இருந்தது. “கேப்டனாக இருப்பதனால் தான் அவர் அணியில் இருக்கிறார்” என்று பலரும் குற்றஞ்சாட்டினர். யூரோ’16ல் கத்துக்குட்டி ஐஸ்லாந்திடம் தோற்று இங்கிலாந்து வெளியேறியபோதே இவரது ஓய்வு குறித்து விமர்சனங்கள் உரக்க ஒலித்தன. எங்கு ஒதுக்கப்பட்டு மோசமான தருணத்தில் அவர் வெளியேற வேண்டுமோ என்று ரசிகர்கள் வருந்தினர். ஆனால் தன் நிலையை தானே தலைகீழாய் மாற்றி கெத்தாய் ஒய்வை அறிவித்துள்ளார் ரூனி.
    

வெய்ன் ரூனி

மான்செஸ்டர் அணியில் இடத்தை இழந்த ரூனியின் கால்பந்து எதிர்காலமே சற்று கேள்விக்குறியாகத்தான் இருந்தது. தான் இளம் வயதில் விளையாடிய தன் சொந்த ஊரைச் சேர்ந்த எவர்டன் அணிக்கு மீண்டும் திரும்பினார் ரூனி. ஆனால் அங்கு அவருடைய பங்களிப்பு என்னவாக இருக்குமென்பதும் கேள்வியாகவே இருந்தது. அணியில் இணைந்த முதல் போட்டியிலேயே கோலடித்து அசத்தினார். ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் பெரிதாக சோபிக்காததால் “பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து களமிறக்கப்படுவாரா?” என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதையெல்லாம் உடைக்கும் வகையில் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் கோலடித்து “ஐ ஏம் பேக்” என்று அறைகூவல் விடுத்தார் ரூனி. அந்தப் போட்டியில் அவரது சிங்கிள் கோலே அணிக்கு வெற்றி தேடித்தந்தது. அடுத்த போட்டி கடந்த செவ்வாய் அதிகாலை, தன் முன்னாள் வைரி மான்செஸ்டர் சிட்டி அணியோடு. பலம் வாய்ந்த சிட்டி அணிக்கெதிராக சந்தேகத்திற்கு இடையே தான் களம் கண்டார் ரூனி. இம்முறையும் இந்த ஜாம்பவான்தான் தனது அணிக்காக மீண்டும் கோலடித்தார். அது பிரீமியர் லீக் தொடரில் அவர் அடித்த 200வது கோல்.  பல இளம் நட்சத்திரங்களின் மீதும் புது சூப்பர் ஸ்டார்களின் மீதும் மட்டுமே பார்வை செலுத்திக்கொண்டிருந்த அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார் ரூனி. மீண்டும் பழைய ரூனி வந்துவிட்டாரா என்று அனைவரும் காத்திருக்க, அடுத்த இரண்டாவது நாளில் இந்த அதிர்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார் ரூனி.

அனைவரும் தூற்றிய சமயம் ஓய்வை அறிவித்து சாதாரணமாய்ப் போகாமல், தன்னைத் தூற்றியவரையெல்லாம் வாய்பிளக்க வைத்துவிட்டு, ஓய்வை அறிவித்து அவர்களையே பாராட்டவும் வைத்துள்ளார் இந்த நாயகன். இளம் வீரர்கள் அவரது இடத்தைத் தற்போது நிரப்பிவிட்டாலும் இங்கிலாந்து கால்பந்தின் வரலாற்றில் ஒரு பெறிய வெற்றிடம், நிரப்பமுடியாத ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. “கனவுகள் நனவாகும். அப்படிப்பட்ட ஒன்றுதான் நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது. இங்கிலாந்து உடையணிந்து விளையாடிய ஒவ்வொரு தருணமும் பெருமை வாய்ந்தது” என்று நெகிழ்ந்துள்ளார் அவர். ரூனி கால்பந்தை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனும் நேசிக்கும் ஜென்டில்மேன் ஃபுட்பாலர். 

உங்களுக்கு ரூனி பத்தித் தெரியாதா? அவரோட திறமையைத் தெரிஞ்சிக்க இந்த ஒற்றை வீடியோ போதும்.

 

http://www.vikatan.com/news/sports/100384-wayne-rooney-retires-from-international-football.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.