Jump to content

"இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றுவோம்" - சீனா உறுதி


Recommended Posts

"இலங்­கையை மற்­று­மொரு சிங்­கப்­பூ­ராக மாற்­றுவோம்" - சீனா உறுதி

 

இலங்­கையின் நலனில் சீனா அக்­க­றை­யுடன் உள் ளது. எதிர்­வரும் 15 ஆண்டு­க­ளுக்குள் இலங்­கையை மற்­று­மொரு சிங்­கப்­பூ­ராக அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஏற்ற வகையில் சீனா செயற்­ப­டு­கின்­றது. இதற்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் தொடர்ந்தும் வழங்­குவோம்  என  இலங்­கைக்­கான சீன தூதுவர் யூ ஷியான்­லியாங் தெரி­வித்தார். 

சீன உதவி திட்­டத்தின் கீழ் ஆயிரம் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு1.8 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பாட­சாலை உப­க­ர­ணங்­களை வழங்கும் நிகழ்வு தங்­கா­லையில் நடைப்­பெற்­றது. இதன் போது உரை­யாற்றும் போதே சீன தூதுவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில் ,

இலங்கை சீனாவின் மிகச் சிறப்­பான நண்­ப­ராகும். இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நட்பு 70 ஆண்­டு­க­ளுக்கும் மேலான பழை­மை­யான ஒன்­றாகும். இரு நாடு­களின் நீண்­ட­கால உற­விற்கு கார­ண­மா­கிய இறப்பர்- அரிசி ஒப்­பந்­தத்தை  இரண்டு நாடு­களின் மக்­களும் நன்­றாக அறி­வார்கள். இந்த நட்பின் அடை­யா­ள­மாக கடந்த பல ஆண்­டு­க­ளாக சீனா தனது அனைத்­து­லக உதவி திட்­டத்தில் அதி­கூ­டிய பங்கை இலங்­கைக்கு வழங்கி வரு­கின்­றது. இலங்­கையின் அபி­வி­ருத்தி மற்றும் இந்த மக்கள் மீது சீனா­விற்கு தனிப்­பட்ட அக்­க­றையும் பொறுப்பும் உள்­ளது.

தற்­போ­தைய சூழலில் இலங்­கைக்கு அபி­வி­ருத்தி என்­பது மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான ஒன்­றாகும். ஆகவே நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அர­சாங்­கத்­துடன் மக்­களும் ஒத்­து­ழைக்க வேண்டும். இலங்­கையின் தென்­ப­கு­தியில் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்தை ஆரம்­பிக்க சீனா ஒத்­து­ழைப்பு வழங்கும். இந்த பகுதி வாழ் இளை­ஞர்­களின் தொழில்­நுட்ப ஆற்­றலை விருத்தி செய்தல் , மீன்­பிடி மற்றும் ஏனைய துறை­களில் தொழில்­நுட்ப வச­தி­களை அதி­க­ரித்தல் போன்ற விட­யங்­க­ளுக்கு சீனா உதவு உள்­ளது. 

சீன - இலங்கை நட்­பு­றவு சங்­கத்தின் மூலம், 1300 இலங்கை மாண­வர்­க­ளுக்கு சீனா புல­மைப்­ப­ரிசில் வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளது.  இது எதிர்­கா­லத்தில் 2000 ஆக அதி­க­ரிக்­கப்­ப­தற்கு சீன அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இவ்­வாறு பல­வேறு திட்­டங்கள் தொடர்பில் சீனா மிகவும் ஈடுப்­பா­டுடன் செயற்­ப­டு­கின்­றது. குறிப்­பாக தென்­ப­கு­தியில் உள்ள மீன­வர்­க­ளுக்­கான வீடு­களை அமைத்துக் கொடுப்­ப­தற்­கான திட்­டத்தை ஆரம்­பிக்­கவும் உத்­தே­சித்­துள்­ளது. 

சீனாவின் ஷங்காய் நக­ரத்தைப் போன்று இலங்­கையின் தென்­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சீனா தொடர்ந்தும் தேவையான  உதவிகளை வழங்கும். அடுத்த 15 ஆண்டுகளில் இலங்கை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவதற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் . இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/23457

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

சீனாவின் ஷங்காய் நக­ரத்தைப் போன்று இலங்­கையின் தென்­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சீனா தொடர்ந்தும் தேவையான  உதவிகளை வழங்கும். அடுத்த 15 ஆண்டுகளில் இலங்கை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவதற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் . இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

கிந்தியாக்காரர் வடபகுதியை இப்பிடித்தான் முன்னேற்றி வைப்பினம்....

Ähnliches Foto

சீனாக்காரன் அப்பிடி இப்பிடி முன்னேற்றுவம் எண்டாவது சொல்லுறான்....ஆனால் இதுகளை பாருங்கோ.... தோட்டக்காணியள்ளை சமாதி கட்டிக்கொண்டு திரியுதுகள்.....

DHlH4DZXsAAh4to.jpg

DHlHt8SW0AADxSP.jpg

 

Link to comment
Share on other sites

சிங்கப்பூராக இலங்கை மாறினால் அங்கு தமிழனுக்கும் ஒர் இடமிருக்கும்... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

சிங்கப்பூராக இலங்கை மாறினால் அங்கு தமிழனுக்கும் ஒர் இடமிருக்கும்... :grin:

இலங்கை சிங்கப்பூராக மாறினால் அதில் தமிழனின் உழைப்பு அதிகமிருக்கும்....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் சிங்கப்பூராக மாற்றட்டும் வடக்கு கிழக்கை யார் மாற்றப்போகிறோம் என்று வரப்போகிறார்களோ தெரியாது  ஆனால் வருபவனையும் விடமாட்டோம் என்று கொஞ்சம் கங்கணம் கட்டிக்கொண்டு திரியுது அரசியல் வட்டாரத்தில் 

எல்லாத்துக்கும் கமிஷன் கேட்கிற கூட்டமும் இருக்கு  இன்னும்  பின்ன வட கிழக்கு எப்ப அபிவிருத்தி காணும் யுத்தம்  முடிந்த காலம் தொடக்கம்  வெளிநாட்டில் வசிக்கும் எத்தனையோ பேர் கட்டியெழுப்ப நினைத்திருந்தால் இந்த நேரம் வடகிழக்கு தனி ஓர்  அலகாக தெரியும் இலங்கையில்  ஆனால் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனி ஒருவன் said:

அவன் சிங்கப்பூராக மாற்றட்டும் வடக்கு கிழக்கை யார் மாற்றப்போகிறோம் என்று வரப்போகிறார்களோ தெரியாது  ஆனால் வருபவனையும் விடமாட்டோம் என்று கொஞ்சம் கங்கணம் கட்டிக்கொண்டு திரியுது அரசியல் வட்டாரத்தில் 

எல்லாத்துக்கும் கமிஷன் கேட்கிற கூட்டமும் இருக்கு  இன்னும்  பின்ன வட கிழக்கு எப்ப அபிவிருத்தி காணும் யுத்தம்  முடிந்த காலம் தொடக்கம்  வெளிநாட்டில் வசிக்கும் எத்தனையோ பேர் கட்டியெழுப்ப நினைத்திருந்தால் இந்த நேரம் வடகிழக்கு தனி ஓர்  அலகாக தெரியும் இலங்கையில்  ஆனால் இல்லை 

முதலில் வடகிழக்கில் தேவையில்லாமல் குந்தியிருக்கும் ராணுவம் வெளியேறட்டும் போலிஸ் என்பவர்கள் சாதி வளர்ப்பிலும் ,சமூக விரோதிகளையும் ,கஞ்சா விற்பவர்களையும் பாதுகாப்பது மாறி மக்களுக்கு சேவை செய்பவர்களாக மாறனும் இவ்வளவும் நடக்க வக்கில்லை அரசியல் வாதிகள் மாறட்டும் என்று கிண்டி விளையாட வேண்டாம் மேல் சொன்னது நடந்தாலே புலம்பெயர் கூட்டம் தானாகவே தாங்கி பிடிக்கும் வடகிழக்கை ஆனால் நடப்பது என்ன போலிஸ் உதவியுடன் யாழில்  உள்ள பாடசாலைகளுக்கு  கஞ்சா விப்பது முஸ்லிம் நபர் அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும் தெரிந்தும் நல்லாஅழியட்டும் தமிழன் எனும் இனவாத போக்கு இருக்கும் மட்டும் இலங்கை சிங்கபூர் ஆவது கனவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் வடகிழக்கில் தேவையில்லாமல் குந்தியிருக்கும் ராணுவம் வெளியேறட்டும் போலிஸ் என்பவர்கள் சாதி வளர்ப்பிலும் ,சமூக விரோதிகளையும் ,கஞ்சா விற்பவர்களையும் பாதுகாப்பது மாறி மக்களுக்கு சேவை செய்பவர்களாக மாறனும் இவ்வளவும் நடக்க வக்கில்லை அரசியல் வாதிகள் மாறட்டும் என்று கிண்டி விளையாட வேண்டாம் மேல் சொன்னது நடந்தாலே புலம்பெயர் கூட்டம் தானாகவே தாங்கி பிடிக்கும் வடகிழக்கை ஆனால் நடப்பது என்ன போலிஸ் உதவியுடன் யாழில்  உள்ள பாடசாலைகளுக்கு  கஞ்சா விப்பது முஸ்லிம் நபர் அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும் தெரிந்தும் நல்லாஅழியட்டும் தமிழன் எனும் இனவாத போக்கு இருக்கும் மட்டும் இலங்கை சிங்கபூர் ஆவது கனவுதான்.

இன்னும் எத்தினை வருஷம் வரைக்கும் சொல்ல போறியள் பொலிஸிம் இருக்கும் நீங்கள் இப்படி இன்னும் பல வ்வருடம் பல்லவி பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான் பிறகு காத்தான்குடி அபிவிருத்தி அடையுது அவன் கள்ளக்காணீ பிடிக்கான் என்று இன்னும் கத்திக்க்பொண்டும் திரியலாம் 

யாராவது வெளிநாட்டு தமிழன் அல்லாத எவனாவது வந்து ஏதாவது தொழிற்சாலைகளை அமைத்தால் தான் உண்டு தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தியாவது காணும் காடாய் இருக்கிற நிலம் கட்டிடமாகவாவது மாறும் 

அப்ப கஞ்சா விற்பது பொலிசா இதென்ன புது  புரளி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனி ஒருவன் said:

இன்னும் எத்தினை வருஷம் வரைக்கும் சொல்ல போறியள் பொலிஸிம் இருக்கும் நீங்கள் இப்படி இன்னும் பல வ்வருடம் பல்லவி பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான் பிறகு காத்தான்குடி அபிவிருத்தி அடையுது அவன் கள்ளக்காணீ பிடிக்கான் என்று இன்னும் கத்திக்க்பொண்டும் திரியலாம் 

யாராவது வெளிநாட்டு தமிழன் அல்லாத எவனாவது வந்து ஏதாவது தொழிற்சாலைகளை அமைத்தால் தான் உண்டு தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தியாவது காணும் காடாய் இருக்கிற நிலம் கட்டிடமாகவாவது மாறும் 

அப்ப கஞ்சா விற்பது பொலிசா இதென்ன புது  புரளி tw_blush:

தனி 
எது காலியாகாட்டிலும் பரவாயில்லை,  ஆனால் ஊழல் என்பது கட்டாயமாக காலியாக்கப்பட வேண்டிய விடயம் ,மாகாண சபையாக இருந்தாலும் சரி ,நாட்டு முழுமைக்கும் என்றாலும் சரி ஊழல் என்பது நாட்டின் சொத்தாக இருக்கும் இக்காலகட்டத்தில் புலம் பெயர் உறவுகளை இங்கே அழைத்து அபிவிருத்தி செய்ய சொல்வது ,அவர்கள் சிறுக சிறுக சேர்த்தவற்றை  ஊழல் முதலைகளுக்கு தின்னக்கொடுப்பதாகவே அமையும், சிங்கப்பூர் என்பது வாயால் வடை சுட்டு உருவாகிய நாடில்லை அங்கே அதிகபட்ச தண்டனை  பொருளாதார குற்றத்திற்கே (Economical Offence)
 வழங்கப்படும் . ஏனென்றால் இந்தக்குற்றம் மற்றைய எல்லக்குற்றங்களையும் துணைக்கு அழைத்துவரும் (இங்கேயும் தங்களது ஊழல்களை மறைக்க  இனவாதம் தூண்டப்படுவதை  போன்று)     
 எனவே புலம் பெயர் உறவுகளை இங்கே  அழைத்து பிறகு சிவாஜி போன்று ஒத்தை ரூபாயுடன் திருப்பி அனுப்ப வேண்டாமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உருப்படியான தொழிலை தொடங்கி வெற்றிகரமாக அதை நடத்த.. அந்தத் தொழிலுக்கான இடம் எடுப்பதில் இருந்து.. அதன் இலாபத்தில்.. ஒரு பங்கு வரை.. சிங்கள ஆட்சியாளர்களுக்கும்.. நிர்வாகிகளுக்கும்.. அடிவருடிகளுக்கும் பகிரப்பட்டால் தான் சொறீலங்காவில்.. தொழில் செய்து பிழைக்கலாம். 

இப்படியான ஒரு சூழலில்... எந்த வெளிநாட்டு மானத் தமிழன்.. அங்க முதலிடுவான். முதலிட்டுள்ள எல்லாருமே..  பக்கா கள்ளன்கள். விலாங்கு மாதிரி.. நடந்து கொண்டிருக்கிறார்கள்.  அது எல்லோருக்கும் அமையாது.  இது தான் அங்குள்ள பிரச்சனையே...

சீனா தலைகீழாக நின்று முயற்சித்தாலும்... சொறீலங்கா சிங்கப்பூர் ஆக முடியாது. காரணம்.. சொறீலங்காவின் ஆட்சி.. மற்றும் நிர்வாக முறைமைகள் அதற்கு உதவாது. 

மாத்தளனில் இருந்து.. சொறீலங்காவுக்காக சற்றலைட் விட்டது வரை என்ன நடந்தது என்று.. பார்க்கிறமில்ல. tw_blush: அதுக்கு அப்புறமும்.. இதை நம்பிறமென்றால்.. நாங்கள் படு முட்டாள்கள். 

அதுவும் தமிழர் நிலத்தில் இராணுவத் தலையீடு இல்லாத நிர்வாகம் என்பது அடுத்த சில தசாப்தங்களுக்கு கண்ணுக்குத் தெரிவதாக இல்லை. இந்த இலச்சணத்தில்.. சொறீலங்கா சிங்கப்பூர் ஆகும்..??! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனி ஒருவன் said:

யாராவது வெளிநாட்டு தமிழன் அல்லாத எவனாவது வந்து ஏதாவது தொழிற்சாலைகளை அமைத்தால் தான் உண்டு தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தியாவது காணும் காடாய் இருக்கிற நிலம் கட்டிடமாகவாவது மாறும்

வடகிழக்கில் அதுவும் வடக்கு போன்ற இடங்களில் நீர் ஆதாரம் அங்குஉள்ளவர்களுக்கே காணாது இந்த லட்சனத்தில் ஒரு தொழில் சாலை அமைப்பது குறுகிய சிந்தனை உள்ளவர்களுக்கு மட்டுமே சரியாகும் ஏனென்றால் மறைநீர் விரயம் என்பது உலக நாடுகளில் பாரிய விடயமாக பார்க்கபடுகிறது அச்சுறுத்தும் விடயமும் கூட அதை விட தொழில்நுட்பசார்பு அறிவியல் என்பது படிச்ச மேதாவிகளுக்கு கூட இருகின்றதா என்பது சந்தேகமே உதாரணம் மின்பிறப்பாக்கியின் கழிவு ஒயிலை நிலத்துக்குள் ஊத்தி ஒரு தலை முறைக்குரிய நீர் ஆதாரத்தை இல்லாமல் பண்ணி விட்டினம் அதுக்கு வரிஞ்சு கட்டிக்கொண்டு அறிக்கைகள் விட்டினம் பாருங்க அதுதான் கொடுமையின் உச்சம் .

போர் முடிந்தபின் கோல் சென்ரர் போன்ற நுண் அறிவு சார்பு நிறுவனம்கள் யாழில் தொடங்க போகினம் என்று செய்தித்தாள்களில் காணக்கூடியதாக இருந்தது பின் அந்த கதையே இல்லாமல் போய்விட்டது ஏன் தமிழனை காசில் மிதக்கவிடுவான் எனும்  குறுகிய  நோக்கமோ தெரியவில்லை இங்கு நம்மவர்களின் கோல்சென்ரர்களும் பங்களூரில் இருந்து இயங்குகின்றது காரணம் தெரியவில்லை ஒரு சிலரிடம் விசாரித்த போது அங்குள்ள பாதுகாப்பு பெண்பிள்ளைகளை இரவு ஆறுமணிக்கு பின் வெளியில் நடமாட விடுவது தற்கொலைக்கு சமமானது என்கின்றனர் இப்ப சொல்லுங்கள் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் வைத்திருக்க இந்த அரசாங்கமும் காரணம் தங்கடை ஆட்களுக்கு வெட்டுவிழும்போது மட்டுமே நித்திரையால் எழும்பி ஓடித்திரிகிணம் இவ்வளவு நாட்களா இயல்பு வாழ்க்கை இல்லாமல் சனம் கஷ்ட்டப்பட்டபோது இதே நடவடிக்கைகளை எடுத்து இருக்கலாமே ?

இந்த கேட்டுகுள்ளை சிங்கப்பூராவது ஜப்பானாவது முதலில் இந்த நாடுகளின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இருக்கா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

தனி 
எது காலியாகாட்டிலும் பரவாயில்லை,  ஆனால் ஊழல் என்பது கட்டாயமாக காலியாக்கப்பட வேண்டிய விடயம் ,மாகாண சபையாக இருந்தாலும் சரி ,நாட்டு முழுமைக்கும் என்றாலும் சரி ஊழல் என்பது நாட்டின் சொத்தாக இருக்கும் இக்காலகட்டத்தில் புலம் பெயர் உறவுகளை இங்கே அழைத்து அபிவிருத்தி செய்ய சொல்வது ,அவர்கள் சிறுக சிறுக சேர்த்தவற்றை  ஊழல் முதலைகளுக்கு தின்னக்கொடுப்பதாகவே அமையும், சிங்கப்பூர் என்பது வாயால் வடை சுட்டு உருவாகிய நாடில்லை அங்கே அதிகபட்ச தண்டனை  பொருளாதார குற்றத்திற்கே (Economical Offence)
 வழங்கப்படும் . ஏனென்றால் இந்தக்குற்றம் மற்றைய எல்லக்குற்றங்களையும் துணைக்கு அழைத்துவரும் (இங்கேயும் தங்களது ஊழல்களை மறைக்க  இனவாதம் தூண்டப்படுவதை  போன்று)     
 எனவே புலம் பெயர் உறவுகளை இங்கே  அழைத்து பிறகு சிவாஜி போன்று ஒத்தை ரூபாயுடன் திருப்பி அனுப்ப வேண்டாமே 

ஊழல் என்பது நமது ஆசியா நாட்டில் ஒன்றையொன்றை பார்த்து கொடுத்து வந்தது இதை  தடுப்பதென்பது முடியாத காரியம்  இலங்கையில் அதற்க்கான சட்ட நடவடிக்கை என்பது எடுக்க இயலாத ஒன்று ஒரு வர் இன்னொருவரை மாட்டுவார் அவர் இன்னொருவரை மாட்டுவார் இப்படி கோர்வையாக தொடர்ந்தே செல்லும்  அதை ஊக்குவித்தது என்னவோ அடிமட்டத்திலானவரே ஒரு காரியம் ஆக வேண்டுமானால் அவருக்கு கையூட்டல் வழங்குவது சிறு  தொகை பெருந்தொகையாகி பெரு முதலாளிகள் கூட செய்கிறார்கள் உங்களுக்கு தெரியாததா என்ன ஒரு பில்டிங் வந்தால் அதன் பங்குகள் யார் யாருக்கெல்லாம் செல்லும் என்பது  இப்படி இருக்க சிவாஜி போல பெரும் முதலீடு செய்து  இடச்சொல்லவில்லை நமக்கு அதாவது இன்று அடுத்த சமூகம் வளர்ர்சியடைகிறது நாமும் குற்றம் சாட்டுகிறோம் அவர்கள் வளர்ச்சியடைகிறார்கள் என்று அது அவர்கள் முயற்ச்சி  இன்று காத்தான் குடி மருதமுனை என்ற பிரதேசங்களுகுள் சென்று பார்த்தால் தெரியும் ஓவ்வொரு வீடும் ஒரு தொழிற்சாலை  நீங்கள் பார்த்திருப்பீர்களோ தெரியாது நான் சொல்ல வந்தது இதைத்தாம்ன் .

ஆடைக்கான துணியை எடுத்து வருகிறார்கள் அதை சேட்டாகவும்  சகல உடுப்புத்தேவைகளியும் செய்கிறார்கள் , தறிகள் சகலரது வீட்டிலும் இருக்கிறது சாரன் நெய்கிறார்கள் , பாட்டா ( செருப்பு ) காத்தான் குடிக்குள்ள நான் போன போது அங்கே பல தமிழ் பெண்கள் வேலைகிறார்கள் வெட்டுவது ஒட்டுவது  இப்படி ஒவ்வொரு பொருளையும் அவர்கள் மொத்தமாக சிறு தொகை பணத்திற்கு இறக்கி அதை பலருக்கு பிரித்து உழைகிரார்கள் அதனால் அவர்கள் அவர்கள் சமூகம் வளர்ச்சி அடைகிறது பொருளாதாரத்தில் நாம் இப்படியே குற்றம் கண்டு பிடித்து காலத்தை கழிக்கிறோம் 

4 hours ago, பெருமாள் said:

வடகிழக்கில் அதுவும் வடக்கு போன்ற இடங்களில் நீர் ஆதாரம் அங்குஉள்ளவர்களுக்கே காணாது இந்த லட்சனத்தில் ஒரு தொழில் சாலை அமைப்பது குறுகிய சிந்தனை உள்ளவர்களுக்கு மட்டுமே சரியாகும் ஏனென்றால் மறைநீர் விரயம் என்பது உலக நாடுகளில் பாரிய விடயமாக பார்க்கபடுகிறது அச்சுறுத்தும் விடயமும் கூட அதை விட தொழில்நுட்பசார்பு அறிவியல் என்பது படிச்ச மேதாவிகளுக்கு கூட இருகின்றதா என்பது சந்தேகமே உதாரணம் மின்பிறப்பாக்கியின் கழிவு ஒயிலை நிலத்துக்குள் ஊத்தி ஒரு தலை முறைக்குரிய நீர் ஆதாரத்தை இல்லாமல் பண்ணி விட்டினம் அதுக்கு வரிஞ்சு கட்டிக்கொண்டு அறிக்கைகள் விட்டினம் பாருங்க அதுதான் கொடுமையின் உச்சம் .

போர் முடிந்தபின் கோல் சென்ரர் போன்ற நுண் அறிவு சார்பு நிறுவனம்கள் யாழில் தொடங்க போகினம் என்று செய்தித்தாள்களில் காணக்கூடியதாக இருந்தது பின் அந்த கதையே இல்லாமல் போய்விட்டது ஏன் தமிழனை காசில் மிதக்கவிடுவான் எனும்  குறுகிய  நோக்கமோ தெரியவில்லை இங்கு நம்மவர்களின் கோல்சென்ரர்களும் பங்களூரில் இருந்து இயங்குகின்றது காரணம் தெரியவில்லை ஒரு சிலரிடம் விசாரித்த போது அங்குள்ள பாதுகாப்பு பெண்பிள்ளைகளை இரவு ஆறுமணிக்கு பின் வெளியில் நடமாட விடுவது தற்கொலைக்கு சமமானது என்கின்றனர் இப்ப சொல்லுங்கள் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் வைத்திருக்க இந்த அரசாங்கமும் காரணம் தங்கடை ஆட்களுக்கு வெட்டுவிழும்போது மட்டுமே நித்திரையால் எழும்பி ஓடித்திரிகிணம் இவ்வளவு நாட்களா இயல்பு வாழ்க்கை இல்லாமல் சனம் கஷ்ட்டப்பட்டபோது இதே நடவடிக்கைகளை எடுத்து இருக்கலாமே ?

இந்த கேட்டுகுள்ளை சிங்கப்பூராவது ஜப்பானாவது முதலில் இந்த நாடுகளின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இருக்கா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது நல்லது .

சீனன் வாங்கிய  காணியை அபிவிருத்தி செய்த பின்  பார்ப்பீர்கள் ஆனால் நாம் யாழ் களத்தில் சொல்ல்வதெல்லாம் நடப்பதில்லை நடந்த பிறகு  வந்து சத்தம் போடுவோம் அவன் அடுத்த கட்ட வேலைக்கு போய்டுவான் அண்ணை  சிறிலங்கா மீதும் எனக்கு அக்கறை இல்லை ஆனால் இங்க இருக்கிற சனம் மீது கொஞ்சம்  (தமிழ்) அக்கறை அவ்வளவுதான்  நீங்க வெட்கப்பட்டாலும்  இங்க எங்களுக்கு பாஸ்போட் அவிங்க தான் தரவேணும் நாட்டை விட்டு ஓடுறதெண்டாலும் 

சீனன் போட்ட பாதைகளே தற்போது வட கிழக்கில் பயணம் செய்ய கூடியாதாக இருக்கிறது  அது மகிந்த காலத்தில் 

 

நான் சொல்ல வந்தது இதைத்தான் .

ஆடைக்கான துணியை எடுத்து வருகிறார்கள் அதை சேட்டாகவும்  சகல உடுப்புத்தேவைகளியும் செய்கிறார்கள் , தறிகள் சகலரது வீட்டிலும் இருக்கிறது சாரன் நெய்கிறார்கள் , பாட்டா ( செருப்பு ) காத்தான் குடிக்குள்ள நான் போன போது அங்கே பல தமிழ் பெண்கள் வேலைகிறார்கள் வெட்டுவது ஒட்டுவது  இப்படி ஒவ்வொரு பொருளையும் அவர்கள் மொத்தமாக சிறு தொகை பணத்திற்கு இறக்கி அதை பலருக்கு பிரித்து உழைகிரார்கள் அதனால் அவர்கள் அவர்கள் சமூகம் வளர்ச்சி அடைகிறது பொருளாதாரத்தில் நாம் இப்படியே குற்றம் கண்டு பிடித்து காலத்தை கழிக்கிறோம் 

பெரிய தொழிற்ச்ச்லைக்கே உடனே இறங்குவது இல்லை இப்படியும் செய்யலாம்  

5 hours ago, nedukkalapoovan said:

ஒரு உருப்படியான தொழிலை தொடங்கி வெற்றிகரமாக அதை நடத்த.. அந்தத் தொழிலுக்கான இடம் எடுப்பதில் இருந்து.. அதன் இலாபத்தில்.. ஒரு பங்கு வரை.. சிங்கள ஆட்சியாளர்களுக்கும்.. நிர்வாகிகளுக்கும்.. அடிவருடிகளுக்கும் பகிரப்பட்டால் தான் சொறீலங்காவில்.. தொழில் செய்து பிழைக்கலாம். 

இப்படியான ஒரு சூழலில்... எந்த வெளிநாட்டு மானத் தமிழன்.. அங்க முதலிடுவான். முதலிட்டுள்ள எல்லாருமே..  பக்கா கள்ளன்கள். விலாங்கு மாதிரி.. நடந்து கொண்டிருக்கிறார்கள்.  அது எல்லோருக்கும் அமையாது.  இது தான் அங்குள்ள பிரச்சனையே...

சீனா தலைகீழாக நின்று முயற்சித்தாலும்... சொறீலங்கா சிங்கப்பூர் ஆக முடியாது. காரணம்.. சொறீலங்காவின் ஆட்சி.. மற்றும் நிர்வாக முறைமைகள் அதற்கு உதவாது. 

மாத்தளனில் இருந்து.. சொறீலங்காவுக்காக சற்றலைட் விட்டது வரை என்ன நடந்தது என்று.. பார்க்கிறமில்ல. tw_blush: அதுக்கு அப்புறமும்.. இதை நம்பிறமென்றால்.. நாங்கள் படு முட்டாள்கள். 

அதுவும் தமிழர் நிலத்தில் இராணுவத் தலையீடு இல்லாத நிர்வாகம் என்பது அடுத்த சில தசாப்தங்களுக்கு கண்ணுக்குத் தெரிவதாக இல்லை. இந்த இலச்சணத்தில்.. சொறீலங்கா சிங்கப்பூர் ஆகும்..??! :rolleyes:

சீனன் செய்து காட்டட்டும் நாம் ஏன் குத்தி முறிவான்  உன்மையில் வட கிழக்கை கொடுத்தால் செய்த்து காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

நமக்கு அதாவது இன்று அடுத்த சமூகம் வளர்ர்சியடைகிறது நாமும் குற்றம் சாட்டுகிறோம் அவர்கள் வளர்ச்சியடைகிறார்கள் என்று அது அவர்கள் முயற்ச்சி  இன்று காத்தான் குடி மருதமுனை என்ற பிரதேசங்களுகுள் சென்று பார்த்தால் தெரியும் ஓவ்வொரு வீடும் ஒரு தொழிற்சாலை  நீங்கள் பார்த்திருப்பீர்களோ தெரியாது நான் சொல்ல வந்தது இதைத்தாம்ன் .

ஆடைக்கான துணியை எடுத்து வருகிறார்கள் அதை சேட்டாகவும்  சகல உடுப்புத்தேவைகளியும் செய்கிறார்கள் , தறிகள் சகலரது வீட்டிலும் இருக்கிறது சாரன் நெய்கிறார்கள் , பாட்டா ( செருப்பு ) காத்தான் குடிக்குள்ள நான் போன போது அங்கே பல தமிழ் பெண்கள் வேலைகிறார்கள் வெட்டுவது ஒட்டுவது  இப்படி ஒவ்வொரு பொருளையும் அவர்கள் மொத்தமாக சிறு தொகை பணத்திற்கு இறக்கி அதை பலருக்கு பிரித்து உழைகிரார்கள் அதனால் அவர்கள் அவர்கள் சமூகம் வளர்ச்சி அடைகிறது பொருளாதாரத்தில் நாம் இப்படியே குற்றம் கண்டு பிடித்து காலத்தை கழிக்கிறோம் 

  தனி 
 இதனைச்செய்ய புலம்பெயர் தமிழர் எதற்கு , நமது மக்களே செய்யலாமே ...? முன்னேறவேண்டும் என்ற கொள்கை இருந்தால் 
ஆயிரம் வாய்ப்புகள் உண்டே ...நம்மவர்கள் சோம்பேறிகள் ,சமீபத்தில் முகநூலிலும் முஸ்லிம் ஒருவர் முடிந்தால் தமிழன் ஒருவன் மட்டக்களப்பில் உடுப்புக்கடை ஒன்றை திறந்து 
அதற்க்கு என்று வாடிக்கையாளர்களை தொடர்ந்து பேணிக்காட்டுங்கள் என்று நேரடி சவால் விடுத்துள்ளார் . ஏற்கனவே மாகாநதிக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் 
தமிழ்ப்பற்று இருக்கலாம் அதற்காக யானை விலை குதிரை விலைக்கு மூக்கால் அழுதுகொண்டு பொருட்களை வாங்க முடியாது. இன்றும் கல்முனை தமிழ்ப்பகுதியில் தரமான தமிழ் சாப்பாட்டுக்கடை இல்லை 
எல்லாவற்றிற்க்கும் மருதமுனை இல்லாவிட்டால் கல்முனைக்குடிக்கு ஓட வேண்டும். பெருமெடுப்போடு திறக்கப்பட்ட கடைகள் எல்லாம் சில மாதங்களே இயங்கின ,அவர்கள் செத்தைக்குள் இயங்கினாலும் 
அவர்கள் முயற்ச்சியில் ,தொழிலில் கவனமாக இருக்கிறார்கள். தமிழர்களின் கடைகளில் வியாபாரம் அதிகரிக்க தரம் குறைவது அப்படியே கண்கூடாக தெரியும் 
அவர்கள் முயற்ச்சித்து முன்னேறுகிறார்கள் ,நாம் மற்றவர்களை எதிர்பார்க்கிறோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.