Jump to content

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும் திராவிட இயக்கங்களும்


Recommended Posts

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும் திராவிட இயக்கங்களும்
 

“ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.  

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைதான் இது என்றாலும், எட்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது.   

2016, டிசெம்பர் ஐந்தாம் திகதி, ஜெயலலிதா மரணமடைந்தார் என்றாலும், அவர் ‘அப்பலோ’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்தே அனைத்தும் மர்மம் நிறைந்த பரபரப்பூட்டும் காட்சிகள் போல் இருந்தன.  

தமிழக ஆளுநர் ‘அப்பலோ’ மருத்துவமனை சென்றார். மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் ‘அப்பலோ’ மருத்துவமனைக்கு வந்தார்கள்.   

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சென்றார்கள். ஆனால், முதலமைச்சராக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஜெயலலிதாவை யாராலும் பார்க்க முடியவில்லை.   

மருத்துவமனையில் இருந்தபோது, அருகிலிருந்தது சசிகலாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே என்பதால், மற்ற அமைச்சர்கள் கூட ஒதுங்கியே நின்றார்கள்.   

இந்த நிலையில்தான், 75 நாட்களுக்கு மேலான ‘அப்பல்லோ மருத்துவமனை இரகசியம்’ பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள, ‘எய்ம்ஸ்’ மருத்துமனை டாக்டர்களே, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தாலும், சிகிச்சை பெற்ற அவரை யாரும் பார்க்க முடியவில்லை என்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  

டிசெம்பர் ஐந்தாம் திகதி, ஜெயலலிதா மறைந்ததும், இரவோடு இரவாக 
ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் அந்த மர்மத்தின் தொடர்ச்சியாகவே மக்களால் கருதப்பட்டது.   

இந்நிலையில் முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருக்கும் வரை, ஜெ மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வைக்கப்பட்ட பிறகே, “ஜெயலலிதா மரணம் குறித்து, பொறுப்பில் உள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில், ஒரு விசாரணை ஆணைக்குழு அமைத்து, நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.   

குறிப்பாக, ஜெயலலிதா சமாதியில் 45 நிமிடங்கள் தியானம் செய்து விட்டு, இந்த அறிவிப்பை ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். ஆனால், அவரும் அதற்கான உத்தரவைப் பிறப்பிக்கவில்லை.  

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூர் சிறைக்குச் செல்லும் முன்பு, அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகத் தெரிவு செய்தார்.   

அவரும், பெப்ரவரி 2017 இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனே, ‘தர்மயுத்தம்’ தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம், “ஜெ மரணம் குறித்து, சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினார்.   

அதையே, தமிழகம் முழுவதும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் வலியுறுத்தினார். விசாரணை ஆணைக்குழு என்பது, “சி.பி.ஐ விசாரணை வேண்டும்” என்ற கோரிக்கையாக மாறியது.   

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் “ஜெ, மர்ம மரணம் குறித்து, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.   

ஆனால், இது பற்றியெல்லாம் மதுரையில், தினகரன் கூட்டம் நடத்தும் வரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை. மதுரைக் கூட்டத்தில் தினகரனின் ஆதரவு, சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரும் பங்கேற்ற பிறகு, “ஜெ, மர்ம மரணம் குறித்த விசாரணை” பற்றிய கோரிக்கை தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.  

“ஆட்சி என்பது கண்ணாடிப் பாத்திரம் போன்றது. அது உடைந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தான் இருக்கிறது. அ.தி.மு.கவுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கும் சம்பந்தமில்லை” என்று, 
டி.டி.வி தினகரன், கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்தார்.   

அதன்பிறகு, ஓ. பன்னீர்செல்வத்திடம் உள்ள 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்தில், இப்போது விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணைக்குழுவால் அ.தி.மு.கவில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

தினகரனின் எதிர்ப்பைச் சமாளிக்க, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவை நாடியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் முதல்கட்டம்தான், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு. ஆகவே, ஓ.பி.எஸ்ஸும் சரி, இ.பி.எஸ்ஸும் சரி தங்களுக்குச் சோதனை வரும் நேரத்தில்தான், ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுக் கோரிக்கையை கையில் எடுக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.  

இந்த விசாரணை ஆணைக்குழு, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு கலப்படமாக இருக்கிறது. அக்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், “இது வரவேற்கப்பட வேண்டியது. இரு அணிகள் இணைப்பு பற்றிப் பேச வேண்டிய தருணம் வந்து விட்டது” என்று கருத்து தெரிவித்தார்.   

ஆனால், அதே அணியில் உள்ள இன்னொரு முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியோ, “நாங்கள் கேட்டது சி.பி.ஐ விசாரணை” என்று சுருதி மாறிக் கருத்து வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் இரு அணிகளும் இணையுமா என்ற கேள்விக்கு இன்னும் உறுதியாகப் பதில் கிடைக்கவில்லை என்பதுதான் இன்றைய நிலைமை.  

ஆனால், தமிழக அரசியல், அ.தி.மு.கவுக்குள் நடக்கும் உள்குத்துகளாலும் மாநில அரசாங்க நிர்வாக ஆட்சிக்குள் நடக்கும் கூத்துகளாலும் தடம் மாறி நிற்கிறது என்பதுதான் உண்மை.   

அணிகள் இணைப்புக்கு ஓ. பன்னீர்செல்வம் சம்மதித்தால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு விடலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கணக்குப் போட்டுள்ளார்.

ஆனால், முதலமைச்சர் பதவி நமக்கு கிடைக்காமல், இணைப்புக்குச் சம்மதித்தால், என்ன இலாபம் என்று ஓ. பன்னீர் செல்வம் தயங்கி நிற்கிறார்.   

இப்போதைக்கு, ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கட்சிப் பொறுப்பு வழங்கப்படும். குறிப்பாக, அ.தி.மு.கவின் வழி காட்டுக் குழுத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் ஓ. பன்னீர் அணிக்கு, வேறு சில தர்மசங்கடங்கள் கண் கூடாகத் தெரிகின்றன. அப்படி என்ன தர்மசங்கடங்கள்?  

பீஹாரில் ஆட்சிக்கு தலைவராக முதலமைச்சர் நிதிஷ் குமாரும், ஐக்கிய ஜனதா தள கட்சிக்குத் தலைவராக சரத் யாதவும் இருக்கிறார்கள். திடீரென்று அங்கு நடைபெற்ற அரசியல் ‘சுனாமி’யில் லாலு பிரசாத் யாதவின் ஆதரவைக் கழற்றிவிட்டு, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் நிதிஷ் குமார்.   

இப்போது, கட்சித் தலைவராக இருக்கும் சரத் யாதவ், வெளியேற்றப்பட்டு விட்டார். நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த பதவியும் பறிக்கப்பட்டு விட்டது.   

ஐக்கிய ஜனதாத் தள கட்சிக்கும் ஆட்சிக்கும் இப்போது நிதிஷ்குமாரே தலைவராகி, விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப் போகிறார் என்ற தகவலும் வெளிவந்து விட்டது.  

இப்படியொரு, இடியப்பச் சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சம், ஓ. பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது. ஏனென்றால், பன்னீர்செல்வம் போல், தனது, முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்பவர் அல்ல எடப்பாடி பழனிசாமி.   

அவர், தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினையும் எதிர்க்கிறார். ஓ. பன்னீர் செல்வத்தையும் எதிர்த்து இருக்கிறார். இப்போது தன்னைத் தேர்ந்தெடுத்த சசிகலாவையும் வழி நடத்திய டி.டி.வி தினகரனையும் எதிர்த்து விட்டார்.   

அதைவிட, தனக்கு எதிராக இருக்குமோ என்று அஞ்சிய மத்திய அரசாங்கத்திடமே நட்பு பாராட்டும் வகையில் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவுடன் நெருங்கி விட்டார்.   

இவ்வளவு துணிச்சலாக, அரசியல் ரீதியான காய்களை நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருக்கும் நேரத்தில், நாம் கட்சிப் பதவிக்கு செல்வது அரசியல் எதிர்காலத்தைச் சூன்யமாக்கி விடலாம் என்று ஓ. பன்னீர்செல்வம் அஞ்சுகிறார்.   

அந்த அச்சத்தின் விளைவாகவே, ‘ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு குறித்து, உடனடிக் கருத்து எதையும் தெரிவிக்காமல், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்கிறார்.   

ஆகவே, ‘ஜெ, மரணம் குறித்த விசாரணை ஆணைக்குழு’, அ.தி.மு.கவில் உள்ள இரு அணிகளையும் இணைக்குமா என்பது இன்னும் மில்லியன் டொலர் கேள்விகளாகவே இருக்கிறது.   

பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, ஓகஸ்ட் 22,23,24 ஆகிய திகதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்தச் சுற்றுப் பயணத்துக்குள், அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைந்து விட வேண்டும் என்பது அகில இந்திய பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கிறது.  

இந்த விருப்பத்தின் அடிப்படையில்தான், சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்கள் என்ற பேச்சு வலுவாக மையம் கொண்டிருக்கிறது.   

ஆகவே, எடப்பாடி பழனிசாமியின் விசாரணை ஆணைக்குழு அமைக்கும் முடிவுக்கு பா.ஜ.க, எந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறதோ அதன் அடிப்படையில்தான், அ.தி.மு.கவின் இரு அணிகளின் இணைப்பும் அரங்கேறும், என்பதே இன்றைய நிலைமை.   
ஆனால், வலுவான இரு திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.கவில், இன்றைக்கு அ.தி.மு.க இந்த அளவுக்குச் சின்னாபின்னமாகச் சிதறி பல அணிகளாக நிற்பது தமிழகத்தில் திராவிட இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் சோதனை. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜெயலலிதா-மரணம்-பற்றிய-விசாரணை-ஆணைக்குழுவும்-திராவிட-இயக்கங்களும்/91-202575

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.