Jump to content

அமெரிக்கா- தென்கொரியா ராணுவ ஒத்திகை: மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்


Recommended Posts

அமெரிக்கா- தென்கொரியா ராணுவ ஒத்திகை: மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஃபோல் ஈகிள் பயிற்சியில், கடற்கரையிலிருந்து தாக்குதல் நடத்துவது குறித்து இரு நாட்டு வீரர்களும் ஒத்திகையில் ஈடுபடும் புகைப்படம்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஃபோல் ஈகிள் பயிற்சியில், கடற்கரையிலிருந்து தாக்குதல் நடத்துவது குறித்து இரு நாட்டு வீரர்களும் ஒத்திகையில் ஈடுபடும் புகைப்படம்.

மீண்டும் வட கொரியாவை கோபமூட்டும் வகையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பயிற்சிதான் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் குவாம் தீவுகளின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்த வட கொரியா, பின்னர் அந்த முடிவிலிருந்து பின் வாங்கியது. ஆனால் தொடர்ந்து அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக அந்நாடு தெரிவித்திருந்தது.

இந்த கூட்டுப்பயிற்சிகள் `எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல` என ஏற்கனவே வடகொரியா எச்சரித்திருந்தது.

ஆனால், இது வழக்கமான பயிற்சிதான் எனவும், வடகொரியா இதனை போருக்கான பயிற்சியாக பார்க்கிறது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த கூட்டு ராணுவ ஒத்திகையில் 17,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த பயிற்சி 10 நாட்கள் நடைபெறும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு , குவாம் தீவுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா வார்த்தைப் போரில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த கூட்டுப்பயிற்சி வடகொரியாவை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் அமையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

`இந்த ராணுவ பயிற்சிகள், கொரிய தீபகற்பத்தில் இருக்கும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும். கட்டுப்படுத்த முடியாத அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும்` என வட கொரியாவின் அரச செய்தித்தாளான ரோடாங் சின்முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ராணுவ ஒத்திகையில் என்ன நடக்கிறது?

ஆண்டுக்கு இரண்டு முறை, மிக அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவத்தினர் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

`ஃபோல் ஈகிள் அல்லது கீ ரிசால்வ் ` என பெயரிடப்பட்ட ராணுவ ஒத்திகையானது வசந்த காலத்திலும், `உல்ச்சி ஃபிரீடம் கார்டியன்` என பெயரிடப்பட்ட ராணுவ ஒத்திகையானது இலையுதிர்காலத்திலும் நடைபெறும்.

இந்த ஒத்திகையானது நிலம், நீர் மற்றும் ஆகாயம் மற்றும் கணினி செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். தென்கொரியாவில் நடைபெறும் இந்த ஒத்திகையில், பயங்கரவாத மற்றும் இரசாயன தாக்குதலை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஆண்டு நடைபெற்ற உல்ச்சி ஃபிரீடம் கார்டியன் கூட்டுப்பயிற்சியில், இரசாயன தாக்குதலை எதிர்கொள்ளும் ஒத்திகையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகடந்த ஆண்டு நடைபெற்ற உல்ச்சி ஃபிரீடம் கார்டியன் கூட்டுப் பயிற்சியில், இரசாயன தாக்குதலை எதிர்கொள்ளும் ஒத்திகையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள்.

இந்த பயிற்சியில் பொதுவாக தென் கொரியா 50,000 வீரர்களையும், அமெரிக்கா 25,000 முதல் 50,000 வீரர்களை ஈடுபடுத்தும்.

சில நேரங்களில் இந்த இரு நாடுகளின் கூட்டாளி நாடுகளும் இந்த ராணுவ ஒத்திகையில் பங்கேற்கும். கடந்த ஆண்டு உல்ச்சி ஃபிரீடம் கார்டியன் பயிற்சியில் அமெரிக்கா, தென் கொரியா தவிர ஒன்பது நாடுகள் கலந்து கொண்டன.

ஆனால் இந்த ராணுவ ஒத்திகையானது, போருக்கான முன்னேற்பாடு என வட கொரியா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதே போல 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ ஒத்திகையின் போது, `அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள் அமைதியை குலைப்பவர்கள். இந்த நிலத்தில் போர் ஏற்பட விரும்பும் யுத்த வெறியர்கள்` என வட கொரியா விமர்சித்திருந்தது.

இது போன்ற சூழலின் போது, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் செயல்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என அடிக்கடி தெரிவிக்கும் வட கொரியா, இதனை பிரதிபலிக்கும் வகையில் ஏவுகணை சோதனைகள் நடத்துவது அல்லது படைகளை இடமாற்றம் செய்வது போன்ற செயல்கள் ஈடுபடும்.

ராணுவ வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது குறித்த ஒத்திகைபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionராணுவ வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது குறித்த ஒத்திகை

1953-ஆம் ஆண்டு கையெழுத்தான பரஸ்பர ராணுவ ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இந்த பயிற்சி நடத்தப்படுவதாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூறுகின்றன.

வெளியில் இருந்து தாக்குதல் நடைபெறும் போது, அதனை சமாளிக்க தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய இது போன்ற பயிற்சிகள் அவசியம் என அந்நாடுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் ராணுவ பயிற்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதா?

அரசியல் சூழலை பொறுத்து, சில நேரங்களில் இது போன்ற ராணுவ பயிற்சிகள் இரு தரப்பிற்கிடையே பிரச்சனையை அதிகரிக்கலாம்.

கடந்த 2015-ஆம் ஆண்டு உச்சகட்ட பதட்டம் நிலவிய நிலையில் நடைபெற்ற உல்ச்சி ஃபிரீடம் கார்டியன் பயிற்சியினால், தென் மற்றும் வட கொரிய நாடுகள் தங்கள் எல்லைகளை தாண்டி பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டன.

வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே அவசர பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, முன் எப்போதும் இல்லாத வகையில் ராணுவ பயிற்சியை அதிகாரிகள் அப்போது ஒத்தி வைத்தனர். பின்னர் பல நாட்களுக்கு பிறகு இந்த பயிற்சியானது மீண்டும் நடைபெற்றது.

http://www.bbc.com/tamil/global-40997406

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.