Jump to content

காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார்


Recommended Posts

காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார்
 

image_fbcd3a231e.jpg

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின் பேரில் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை, இன்று (20) திறந்து வைத்தார்.

மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சராக இருந்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின், சிறப்பு அதிதிகளாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் கலபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய கட்டடத்தின் நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வை, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

image_2f75125488.jpgimage_74fb4c443b.jpgimage_ac8bd06607.jpgimage_e2c193e489.jpg

  •  

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/காத்தான்குடி-நகர-சபையின்-புதிய-கட்டடத்தை-பிரதமர்-திறந்து-வைத்தார்/73-202550

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.