Jump to content

இந்திய இராணுவத்திற்கு யாழில் அஞ்சலி: தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கடும்கண்டனம்


Recommended Posts

இந்திய இராணுவத்திற்கு யாழில் அஞ்சலி: தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கடும்கண்டனம்

யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ அதிகாரியுடைய சமாதிக் கல்லறையொன்றை 30வருடங்களின் பின்னர் மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கை இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந் நிலையில்இவ்வாறு அவசர அவசரமாக புனரமைக்கப்பட்ட குறித்த சமாதியில் இன்று யாழ்ப்பாணம் வந்திருந்த இந்திய இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளமையை தமிழ்த் தேசியப்பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினரும், தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.நிஷாந்தன் இன்று பிற்பகல் விடுத்துள்ள கண்டனச் செய்தியில்,

30 வருடங்களுக்கு முன்னர் அமைதிப்படை என்ற பெயரில் யாழ்ப்பாணம் வந்த இந்தியஇ ராணுவம் எமக்கு உதவி செய்வதாக கூறி பின்னர் அவர்கள் எம் மக்களையே படுகொலை செய்தனர்.

கிட்டத்தட்ட 25000 த்திற்கும் மேற்பட்ட எம் பொது மக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்ததை எம் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.

அதுமட்டுமின்றி இன்றுவரை 30 வருடங்கள் கடந்தும் அக்காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை இந்திய அரசோ, இலங்கை அரசோ மேற்கொள்ளவில்லை.

மிக முக்கியமாக அந்த படுகொலைகள் தொடர்பான எந்த விதமான விசாரணைகளும் மனித உரிமை பேரவையிலோ ஐ.நா சபையிலோ இடம்பெறவில்லை என்பதே வலுவான உண்மையாக இருக்கின்றது.

இதன் பின்னர் கடந்த- 2009 ம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இந்திய இராணுவம் நேரடியாக இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது மட்டுமின்றி களத்திலும் நின்று எமது அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றதில் முக்கிய பங்கு வகித்தநிலையில் எவ்வாறு?

யாருடைய துணிவில் இங்கு இரகசியமாக வந்து அஞ்சலி செய்யமுடிந்தது?, இதன் பின்ணணி தான் என்ன?

மேலும், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக மே- 17 இயக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து இன்று வரை அடைத்து வைத்திருக்கும் நிலையில் எவ்வாறு இந்திய இராணுவத்தினர் மிக இரகசியமாக வந்து தங்களது உயிரிழந்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செய்தனர்?

இன்று நடந்த இந்த நிகழ்வையும், இதற்கு மறைமுகமாக உதவி செய்த யாழ் இந்தியத் தூதரகத்தையும் அக்காலப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில்தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/community/01/155759?ref=home-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக மே- 17 இயக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து இன்று வரை அடைத்து வைத்திருக்கும் நிலையில் எவ்வாறு இந்திய இராணுவத்தினர் மிக இரகசியமாக வந்து தங்களது உயிரிழந்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செய்தனர்?

இதிலை குந்தியிருக்கிறவையை கேட்டால் ஏதும் சொல்லுவினம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், பலர் அமர்ந்துள்ளனர், மேஜை மற்றும் உட்புறம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 10 பேர், தாடி

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்க தருணத்தில் மிகவும் கனகச்சிதமாக முக்கியமாக ஹிந்தியாவிட்கும் மற்றும்  சிங்களத்திட்கும் கனவை கலைக்கும் விதத்தில் கொடுக்கப்பட்ட பதிலடியும் சவாலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு விடையத்தக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் அனந்தி அவர்கள் இப்போது இந்திய உயர் இஸ்தானிகர் ஒழுங்குசெய்யும் எல்லா நிகழ்சிகளிலும் காணப்படுகிறார். கூடிய விரைவில் நல்ல இடத்துக்கு வருவார். 

தவிர யாழுக்கான இந்திய துணைத்தூதர்தான் யாழ்குடாவின் இந்திய மத்திய அரசின் அறிவிக்கப்படாத ஆளுனர்.

Link to comment
Share on other sites

On 8/20/2017 at 4:15 PM, Elugnajiru said:

இதில் ஒரு விடையத்தக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் அனந்தி அவர்கள் இப்போது இந்திய உயர் இஸ்தானிகர் ஒழுங்குசெய்யும் எல்லா நிகழ்சிகளிலும் காணப்படுகிறார். கூடிய விரைவில் நல்ல இடத்துக்கு வருவார். 

தவிர யாழுக்கான இந்திய துணைத்தூதர்தான் யாழ்குடாவின் இந்திய மத்திய அரசின் அறிவிக்கப்படாத ஆளுனர்.

ஹிந்திய பயங்கரவாதிகள் அனந்தியை வளைத்துப்போட முனைவதில் ஆச்சரியம் இல்லை!

அனந்தி மிகவும் ஆபத்தானவர் என்பதை ஹிந்திய பயங்கரவாதிகள் அறிவர்.

முன்பு சம்பந்தர், சங்கரி, மாவை, சித்தார்த்தன், உமாமகேஸ்வரன், சுரேஷ், பத்மநாப, டக்ளஸ் போன்றவர்களை தமது கைக்கூலிகளாக ஹிந்திய பயங்கரவாதிகளால் மாற்றியது போல அனந்தியை மடக்க முடியாது என்பதை ஹிந்திய பயங்கரவாதிகள் அறிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் அனந்தி மிகவும் ஆபத்தானவர்  அணுஆயுதங்கள் உட்பட பல பயங்கர விளைவிகளை உண்டாக்கும் ஆயுதங்கள் வைத்திருக்கிறார். சும்மா போங்க போல், இந்திய அரசின் அகராதியில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விலை இருக்கு.

Link to comment
Share on other sites

On 8/23/2017 at 1:51 PM, Elugnajiru said:

ஆம் அனந்தி மிகவும் ஆபத்தானவர்  அணுஆயுதங்கள் உட்பட பல பயங்கர விளைவிகளை உண்டாக்கும் ஆயுதங்கள் வைத்திருக்கிறார். சும்மா போங்க போல், இந்திய அரசின் அகராதியில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விலை இருக்கு.

காலம்தான் பதில்சொல்ல வேண்டும்!
பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் என்பது  வட கிழக்கே அதன் உன்மையை  அறிந்தவர்கள் இவர்களே உள் நோக்கம் இல்லாமலா இருக்கும்  போனதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பம் ஒட்டு மொத்தமா போயிரிக்கினும் நல்ல ஒற்றுமை  தமிழன் படுற கஸ்ரத்திலெல்லாம் பங்கெடுக்காத ஒற்றுமை ஒன்று வந்துள்ளது இதில் அப்போதே யோசித்து இருக்க வேண்டும் யாருடைய மொம்மைகள் என்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையெல்லாம் மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டிய நிலையில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது..நேரம் விரயமாக்காமலே இருந்து விடத் தோன்றுகிறது😇.
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.   எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.   சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.   அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.   இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.   திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.   மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.   'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.   காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.   தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.   (தொடரும்..........)    
    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.