Jump to content

புக்கெட் - சிறுகதை


Recommended Posts

புக்கெட் - சிறுகதை

 

அராத்து - ஓவியங்கள்: ரமணன்

 

சின்னச் சின்னச் சண்டை பெரிதாகி, குளிரூட்டப்பட்ட உணவுவிடுதியில்  மன்னிப்பு கேட்டு, அவள் தங்கி இருக்கும் விடுதியின்  வாசலில் செய்வதறியாது காலில் விழுந்தான். நான்கைந்து பெண்கள் வேடிக்கை பார்த்தனர். காலை மெள்ள இழுத்துக்கொண்டு நடந்து உள்ளே சென்றுவிட்டாள். தொழப் பாதமில்லாது, சற்றுநேரம் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்தான். தெருமண்ணை நக்கிப்பார்த்தான். சிறுவயதில் விபூதி சாப்பிட்டது, இப்போது இந்த நகரத்தின் நூற்றாண்டுகால மண் ஒரு விநோதமான சுவையை உணரச்செய்தது. அழுகை வந்தது. அழுகையினூடே சிரிப்பும் வந்தது. மெதுவாக எழுந்தான். வெட்கம், மானம் எல்லாம் எங்கோ போயிருந்தன. தன்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை வெறுமையாகப் பார்த்தான். அவர்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டார்கள். மண்டியிட்டுக் காம விளையாட்டுகளில் காதலுடன் ஈடுபட்ட ஒருத்தியின் காலில் விழுந்தும் தட்டிவிட்டுச் செல்கிறாள். ஆட்டோவை அழைத்தான்.

இந்தச் சம்பவம் முடிந்ததும் அவன் மதுபான விடுதிக்கு வந்தான். இந்தச் சம்பவத்தையும், அவன் மன உணர்வையும் அப்படியே சொன்னான். ஆனால், ஒரு பியர் முடிக்கும்வரை நாங்கள் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு பியர் முடித்ததும் முதல் பத்தியில்  இருப்பதைச்  சொன்னான். நீட்டமாகத்தான் சொன்னான். நான்தான் சுருக்கிக் கொடுத்திருக்கிறேன்.

ஒரு பியர் முடித்ததும், அடுத்தடுத்து வரவழைத்தான். நானும் மூன்று பியர் குடித்துப் போதையாகிவிட்டேன். அதனால் அதற்குமேல் அவன் என்ன பேசினான் என்பது எனக்குத் தெரியாது. இந்தக் கதையையும் என்னால் தொடர முடியாது. மன்னித்துக்கொள்ளுங்கள். நான் விடைபெற்றுக்கொள்கிறேன்.

62p1.jpg

ரக்கடிச்சதால் உண்டான `தலை பாரத்துடன்’ வேலைக்கு வந்தான். வேலையில் ஏதும் ஓடலை. இதை டீ குடிக்கச்சொல்லோ என்கிட்ட சொன்னான். எனக்கும் அவனுக்கும் பெருசா ஃப்ரெண்ட்ஷிப் கிடையாது. எப்பனா பேசுவான். அவனை ஹெச்.ஆரு கூப்பிட்டார். `தம்பி, இன்னியோடு நீ போயிடு’ன்னார். திக்குன்னு இருந்திச்சு அவனுக்கு. அப்டியே மூலையை முறைச்சுப் பார்த்துக்கிட்டே இன் பண்ணியிருந்த சட்டையை வெளியே எடுத்து வுட்டுகிட்டுப் போயிட்டான்.

லோ, என் பேர் கலாதரன். எனக்கு இப்போ மண்டைக்குள்ளே ஒரே குடைச்சலா இருக்கு. சாதாரணமா யாராச்சும் சிரிச்சுப் பேசிக்கிட்டாலே அவங்களைப் பார்த்து வெறியாகுது. என் ஆளும் போயிட்டா. என் வேலையும் போச்சு. ஏதாவது ஜோடியைப் பார்த்தா, உஷ்ணம் ஆகுது. இப்ப எதுக்குடா  சிரிச்சுச் சிரிச்சுக் குலவிக்கிட்டி ருக்கீங்க? இன்னும் கொஞ்சநாள்ல பிரிஞ்சு தவிக்கப்போறீங்கன்னு கறுவிக்கிறேன். ஆனாலும் அவங்களை நினைச்சும் சோகம் ஆகிடுறேன். காலையில தூங்கி எழுந்ததுமே படபடப்பு, பயம் வந்துடுது. ஆக்சுவலா இந்த பயமும் படபடப்பும்தான் என்னை எழுப்பியே விட்டுடுது. தூக்கம் வருமான்னு பயத்தோடத்தான் தூங்கப்போறேன். எந்த உண்மையான பிரச்னையும் இல்லாமலேயே பயமா இருக்கு. பயம் ஏதும் இல்லைன்னு எனக்கே தெரிஞ்சாலும் மூளை, பயத்தை உண்டுபண்ணிகிட்டே இருக்கு. அதெல்லாம் ஒண்ணுமில்லைனு மூளை மூலமா மூளைகிட்டயே சொல்லிக்கிட்டிருக்கேன். இருந்தாலும், படபடப்பா இருக்கு. இந்த ஃபீலிங்ல இருந்து வெளியே போயிடணும்னு இருக்கு. ஆக்சுவலா எனக்கு செத்துடலாம்னு இருக்கு. ஆனா, இப்படித் தோன்றறதுக்குக்  காரணம்  மூளையோட வேதியல் சமமற்றத்தன்மைன்னு எனக்குத் தெரியறதால சாகாமத் தள்ளிப்போட்டுட்டிருக்கேன். இருந்தாலும் மூளையோட இந்த வேதியல் சமமற்றத்தன்மை  எனக்குக் கொடூரமா இருக்கிறதால, `செத்தா தேவலாம்’னு தோணுது. தூங்கி எழுந்தாலே பயம். தூக்கம் வருமான்னு பயம். எல்லாத்துலயும் படபடப்பு. உலகத்துல எல்லோரும் நல்லா இருக்காங்க, எனக்கு மட்டும்தான் பிரச்னைன்னு இருக்கு.நான் முடிவு பண்ணிட்டேன். இந்த வாழ்க்கை வேணாம். செத்துடுறேன். ஆனா, ஜாலியா சாகணும். எனக்குத் தெரிஞ்சு ஆன் அரைவல் விசா வசதி உள்ள பக்கத்து நாடு தாய்லாந்து தான். சுலபமா போலாம். அங்கே போய் யாருக்கும் தெரியாம அநாதைப் பொணமா செத்துடுறேன். அங்கே போனா, மனசு மாறும்னு இல்லை. இந்த வேதனை வேணாம். என்னால தாங்க முடியலை. என் மூளை `இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை’ன்னு சொன்னாலும், நான் சாகத்தான் போறேன். டிசைடட். மாத்திக்கவே மாட்டேன்.

பாங்காக் விமானநிலையத்தில் எல்லோரும் ஜாலியாக இறங்கினார்கள். ஒருவன் மட்டும் எதையோ பறிகொடுத்ததுபோல இறங்கினான். என் விமானப் பணிப்பெண் சர்வீஸில் பாங்காக்கில் இப்படி ஒருவன் இறங்கிப் பார்த்தது இல்லை. அவனுக்கும் முகமன் சொல்லி வாழ்த்துத் தெரிவித்தேன். கண்டுகொள்ளாமல் தளர்வாக நடந்து சென்றுவிட்டான். அவனைப் பார்க்கையில் சுடுகாட்டுப் பிணம், தானே நடந்து போவதுபோல இருந்தது.

பாங்காக் விமானநிலையமே கொண்டாட்ட மாக இருந்தது. ஆனால், என் மனம் தானாக உருவான கொண்டாட்ட மனநிலையையும் எதிர்த்தது. திடீரென குட்டைப்பாவாடை, நிக்கருக்குக் கீழே உள்ள வெண் தொடைகள் மூளை முழுக்க ஆக்கிரமித்தன. வெள்ளைக் கால்களுக்கும் தொடைகளுக்கும் இடையில் நான் பாம்பாக ஊர்ந்துபோவதுபோலத் தோன்றியது. கொஞ்ச நேரம்தான், வெள்ளைத் தொடைகளும் வாளிப்பான கால்களும் பார்பி பொம்மையைப் போல ஆகின. ஆன் அரைவல் விசா எடுத்துக் கொண்டு, புக்கெட் விமானத்தைப் பிடிக்க அதன் வாயிலைத் தேடிச் சென்றேன். விமானத்துக்கு இன்னும் மூன்றுமணி நேரம் இருந்தது. பசித்தது. பசியிலேயே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனாலும் மண்டை `ஏதேனும் செய்... ஏதேனும் செய்’ எனப் பரபரத்துக்கொண்டே இருந்ததால், ஒரு பர்கர் வாங்கிச் சாப்பிட்டேன். அடுத்த பத்தே நிமிடத்தில் அது வயிற்றை அடைத்துக்கொண்டது. நிறைய வாயுவை உருவாக்கிவிட்டது. செயற்கையான ஏப்பத்தை உருவாக்கிக்கொண்டே அமர்ந்திருந்தேன். ஏப்பத்தினூடே இருக்கும்போது கண்ணயர்ந்தேன். மூடிய இமைகளுக்குள் விழித்திருந்தேன். காது மட்டும் தூங்கிவிட்டது என நினைக்கிறேன். ``விமானம் கிளம்பும் அறிவிப்பு’’ என்று ஒருவன் எழுப்பிவிட்டான்.

னக்கு இந்தியர்களே பிடிக்காது. ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பி ஆசியச் சுற்றுலா அடித்துக்கொண்டிருக்கிறேன். புக்கெட் செல்வதற்கு ஜன்னலோர  இருக்கை கிடைத்தது என ஜாலியாக இருந்தால், ஓர் இந்தியன் அநாகரிகமாக  இருக்கைக் கைப்பிடியை ஆக்கிரமித்துக்கொண்டான். அவனுடைய முட்டியால் என்னை இடித்து எரிச்சல் ஊட்டிவிட்டான். அவனுடைய முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. வெறுமை படர்ந்திருந்தது. விமானத்தின் கூரையை உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தான். இவன் புக்கெட்தான் செல்கிறானா? நடுவானில் குதித்து விடுவானா? விமானத்தை கடத்தப்போகிறானா? நான் அவன் பக்கமே திரும்பாமல், ஜன்னல் பக்கம் என் பார்வையைப் பதித்துக்கொண்டேன்.

``ஏய்! உன்னைத்தான்டா, எங்கே போகணும்னுதானே கேட்டேன். அதுக்கு ஏன்டா முறைச்சுப் பார்த்துக்கிட்டே போற? புக்கெட் ஏர்போர்ட்டிலிருந்து எங்கே போகணும் னாலும் டாக்ஸிலதான்டா போகணும்’’ எங்கே போக வேண்டும் என்று கேட்டதற்கு ஏதும் சொல்லாமல் நடந்தே விமானநிலையத்தைவிட்டு வெளியேறுகிறான். இந்தியன், இந்த இந்தியர்களே இப்படித்தான். விசித்திரமானவர்கள். இதோ எனக்கு ஆள்கள் வந்துவிட்டார்கள்; நான் பதாங்க் பீச் வரை ஓட்டிச்செல்ல வேண்டும்.

நான்  இந்த நாட்டில் பிறந்து வளர்ந்ததிலிருந்து, இன்றுதான் ஒருவன் லிஃப்ட் கேட்கிறான். கொடுக்கலாமா, வேண்டாமா? இந்தியன்போல இருக்கிறான். `பெண்கள், இந்தியர்களிடம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். வேண்டாம், ஆக்ஸிலேட்டரை மிதிப்போம்.

ன் நண்பனை விமானநிலையத்தில்  விட்டுவிட்டு பைக்கில் திரும்பச் சென்று கொண்டிருந்தேன். ஒருவன் தளர்ச்சியாக நெடுஞ் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான். வழக்கமாக, நெடுஞ்சாலையில் இங்கு யாரும் நடப்பதில்லை. `யார்ரா இவன்?’ என வேடிக்கையாக யோசித்துக்கொண்டே ரியர்வியூ மிரரில் பார்த்தேன். வாளிப்பாக இருந்தான். என் உடல் சிலிர்த்துக்கொண்டது. பைக்கை வேகமாக ஓட்டி, யூ டர்ன் அடித்துப் பறந்தேன். அவனைப் பக்கவாட்டில் பார்த்தேன். தயங்கி நிற்பதும், மெள்ள நடப்பதுமாக இருந்தான். முறுக்கி அடித்து மீண்டும் ஒரு யூ டர்ன் போட்டு, அவன் அருகில் வந்து நிறுத்தினேன்.

“வேர் யூ வான்ட் டு கோ?”
“பதாங்க் பீச்.’’
“ஐ கேன் டிராப் யூ , கெட் இன்.”

62p2.jpg

ஏறிக்கொண்டான். பின்னால் ஒரு பை மட்டும் மாட்டியிருந்தான். பைக்கில் கொண்டுபோய் பதாங்க் பீச் அருகே இறக்கிவிட்டுவிட்டு, ``எங்கே போக வேண்டும்? எங்கே தங்கப்போகிறாய்?’’ என்றேன். வறட்சியாகச் சிரித்தான்.  ``நோ ப்ளேஸ். ஐ ஸ்டே அட் பீச்’’ என்று சொல்லிச் சிரித்தான்.  எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. அவன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் எனப் புரிந்தது. ``எனக்கு ஓர் அறை இருக்கிறது. என்னுடன் தங்கிக்கொள்கிறாயா?’’ என்று கேட்டேன். `ம்’ எனத் தலையசைத்தான். நான் அவனிடம் நேர்மையாக இருக்க விரும்பினேன். நான் “கே” என்றேன். ``ஓஹோ... ஓகே’’ என்றான். ``ஆனால், நான் `கே’ இல்லை’’ என்றான். ``சரி, உறவு எல்லாம் வேண்டாம்.  ஆனால், பெண்களால்கூட கொடுக்க முடியாத சுகம். நான் உனக்குத் தருவேன்’’ என்றேன். ``ஸாரி பிரதர், ஐ யம் நாட் இன்ட்ரஸ்டட்’’ என்று அவசரமாகக் கூறிவிட்டு, முன் நடக்க ஆரம்பித்தான். பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு விட்டு, அவனை நெருங்கி ``உனக்கு விருப்பம் இருந்தால் என்றுதான் கூறிவிட்டேனே, இதற்கும் நீ என்னுடன் தங்குவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீ என்னுடன் தங்கிக்கொள்ளலாம். நான் உன்னை அந்த வகையில் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன்’’ என்றேன். தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு என்னைப் பின்தொடர்ந்தான். அவனை வீட்டில்விட்டு ரெஃப்ரெஷ் செய்துகொள்ளச் சொன்னேன். மீண்டும் அழைத்துக்கொண்டு போய் பதாங் பீச்சில் விட்டேன். நான் என்னுடைய ரெஸ்டா ரென்ட்டுக்குச் செல்வதாகச் சொன்னேன். ``இங்கேயே சுற்றிக்கொண்டிரு.  இரவு 12 மணிக்கு வந்து அழைத்துக்கொள்கிறேன்’’ என்றேன். தலையசைத்தான். ``பணம் இருக்கிறதா?’’ என்றேன். `இருக்கிறது’ என்பதாகத் தலையை ஆட்டினான். 500 பாட்டை எடுத்து அவன் கையில் திணித்தேன்.  மறுக்காமல் வாங்கிக்கொண்டான். நான் என்னுடைய சிறிய ரெஸ்டாரென்ட்டுக்குப் பறந்தேன். போய்தான் ஆள்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இரவுதான் எனக்கு முக்கியமான வியாபாரம். இரவு மட்டும்தான்.

ஷ்யாவிலிருந்து நேற்று இரவுதான் நானும் என் தோழியும் வந்து இறங்கினோம். இரவு நெடுநேரம் ஆகிவிட்டபடியால் இன்றுதான் பதாங் பீச் வர முடிந்தது. ஓர் இந்தியன் கடலை நோக்கிச் செல்வதைப் பார்த்தேன். என் தோழியை அழைத்துச் சொன்னேன். ``அவன் கடலை நோக்கிச் செல்வது எனக்கு ஏனோ விபரீதமாகப்படுகிறது’’ என்று. அவள் ``அதெல்லாம் ஒன்றுமில்லைடி’’ என்று கூறி, என்னை அங்கிருந்து விலக்கிச் சென்றாள். ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். இரண்டு சீன இளைஞர்கள் எங்களை நெருங்கி `ஹாய்’ சொல்லிப் பேச ஆரம்பித்தார்கள். பணம் செலவழித்து எங்களை மயக்கி, படுக்கைக்கு அழைத்துச் செல்வதுதான் நோக்கமாக இருக்க முடியும். ஆங்கிலம் தெரியாததால், மொபைல் ஆப் மூலம் மொழிபெயர்த்துக் காட்டி கம்யூனிகேட் செய்தபடி இருந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன், கடலை நோக்கிச் சென்றவன் எங்களுக்குச் சற்று அருகே நின்றுகொண்டு எங்களை வெறிக்கப் பார்த்தபடி இருந்தான்.

நான் அவனிடமிருந்து கவனத்தை விலக்கி, சீனர்களின் மொபைலைப் பார்க்க ஆரம்பித்தேன். இரவு குடிப்பதற்கும் டின்னருக்கும் அழைக்கிறார்கள். நான் பேரழகி, நல்ல உடற்கட்டும்கூட. நான் விர்ஜின் இல்லைதான். ஆனால், மொழிகூட தெரியாமல் எப்படிப் பொதுவில் சந்தித்த அன்றே படுக்கைக்கு அழைக்கத் திட்டம் போட முடிகிறது? முகத்தில் ஏதும் பாவங்கள் காட்டாமல், மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ர்ப்பரிப்பு இல்லாத கடலையும், துள்ளலாகத் திரியும் ஜோடிகளையும், ஆர்ப்பாட்டமாகக் கூத்தடிக்கும் இளைஞர்களையும் கண்டதும் என் மனம் சுருங்கத் தொடங்கியது; அழுகை வர ஆரம்பித்தது. அழுதுவிட்டேன். தனி ஆளாக நிற்கிறேன். உல்லாசமான இடத்துக்கு வந்தும் என்னால் உல்லாசமாக இருக்க முடியவில்லை. உலகமே உல்லாசமாக இருக்கிறது. `கடலில் விழுந்து உடனடியாகச் செத்துப்போ’ என, எனக்குள்ளிருந்து உத்தரவு வந்தது. இடுப்பளவு ஆழம்வரை சென்றுவிட்டேன். இன்னும் ஒரு கிலோமீட்டர் உள்ளே போக வேண்டும்போல இருந்தது. யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தால், இரண்டு சீனர்கள் இரண்டு ரஷ்யக்காரிகளை கரெக்ட் செய்துகொண்டிருந்தார்கள். எனக்கு உள்ளம் கொதித்தது. நாட்டுப்பற்றுக் கிளர்ந்து எழுந்தது. நாம் போய்ப் பேச வேண்டும் எனத் தோன்றியது. பிறகு, `கொஞ்சநேரம் கழித்து செத்துக் கொள்ளலாம். எங்கே போய்விடப்போகிறது உயிர்?’ என நினைத்தபடி, அவர்கள் அருகே சென்றேன். அந்த ரஷ்யக்காரி, என்னை ஒரு கணம் பார்த்துவிட்டு சீனர்களிடம் உரையாடலைத் தொடர்ந்தாள். என்னைப் பார்த்துவிட்டாள். அது போதும் எனக் காத்திருந்தேன்.

ந்தச் சீனர்களைத் கழட்டிவிட்டு, நாங்கள் இருவரும் எழுந்துகொண்டோம். இந்தியனைத் தாண்டித்தான் இப்போது நாங்கள் போக வேண்டும். நிச்சயம் அவன் எங்களிடம் பேசுவான்.

62p3.jpg

ஷ்யக்காரிகள் எழுந்துகொண்டனர். என்னை நோக்கித்தான் வருகிறார்கள். நிச்சயம் இவர்களோடு பேச வேண்டும். வாழ்க்கையில் கடைசிக் கடைசியாக இவர்களையாவது கவர முடிகிறதா எனப் பார்ப்போம். குறைந்தபட்சம்  ஒரு டின்னர், கொஞ்சம் ஒத்துவந்தால் இவர்களோடு தங்க முடியுமா எனப் பார்க்க வேண்டும். கரெக்ட். ஆனால், யாருடன் இரவைக் கழிப்பது? இருவருமே அழகாக இருக்கிறார்கள். இருவருடனும் இரவைக் கழிக்கலாம். உலகம் சுற்றும் ரஷ்யக்காரிகளுக்கு இதெல்லாமா பெரிய விஷயம்? ஏதோ எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால், நாளைக் காலைகூட செத்துக் கொள்ளலாம்.

நான் நினைத்ததுபோலவே எங்களிடம் பேசினான். சில கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். இவனும் `டின்னர் சாப்பிடலாமா?’ என்றுதான் தூண்டில் போட்டான். வேறு தீவுக்குப் பயணிக்கப் போவதாகச் சொல்லி மறுத்துவிட்டேன். அடிப்பட்டவன்போல முகம் சுருங்கிவிட்டது. மிகவும் பதற்றமாகக் காணப்பட்டான். பாவமாக இருந்தது. நான் அவனுக்கு ஏதேனும் செய்ய விரும்பினேன். ``யூ ஆர் லுக்கிங் ஸ்மார்ட். வீ ரியலி மிஸ் யூ’’ என்றேன். பிறகு அவனைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்தேன்.

ழகாகப் பேசினாள். அவளது இடையும், அந்த ஹெல்த்தியான தோலின் ஷைனிங்கும், அவளது செக்ஸியான வடிவமும் என்னைப் பாடாய்ப் படுத்தின. `சாவதற்குள் ஒரே ஒருமுறையாவது’ என மனம் தவித்தது. அழகாகப் பதில் அளித்துவிட்டுச் சென்றுவிட்டாள். தளர்ந்து அமர்ந்தேன். பசித்தது. வெகுவாகப் பசித்தது. பசியில் சாவதற்குத் தெம்பு இல்லை. ``முதலில் சாப்பிட லாம்’’ என நகர்ந்தேன். ஓர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டேன். சாப்பிடச் சாப்பிட சோகத்திலும் பதற்றத்திலும் எதுக்களித்துக் கொண்டு வந்தது. தண்ணீர் குடித்துக் குடித்து ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்தேன். பங்களா ஸ்ட்ரீட் வழியாக நடந்து சென்றேன். தெரு முழுக்க உற்சாகம் பொங்கி வழிந்தபடி இருந்தது. செக்ஸ் ஷோக்கள், விதவிதமான பப்கள், பார் அண்ட் ரெஸ்டாரென்ட்டுகள் எனக் களைகட்டியது. தெரு முழுக்க வண்ண விளக்குகளாலும், வண்ண வண்ண மனிதர்களாலும் நிரம்பி வழிந்தது. பல கிளப்களில் இருந்து எழுந்த வேகமான பீட்கள்கொண்ட இசை கலந்துகட்டித் தெரு முழுக்க மயக்கமூட்டியது. லேடி பாய் ஒருத்தி என் கன்னத்தைத் தடவிச் சென்றாள்.

ன்னத்தைத் தடவுவது என் பிசினஸ் டெக்னிக். ஒருவன் ஆர்வமாக இருக்கிறானா இல்லையா என ஒரு செகண்டில் யூகித்துவிடுவேன். இந்த இந்தியன் கன்னத்தைத் தடவியதும், அவன் கண்ணீர் என் கைகளில் பட்டது. இந்த உற்சாகமான பங்களா ஸ்ட்ரீட்டில் ஒரு மனிதன் அழுதுகொண்டு நடக்கிறானா? திடுக்கிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தேன். வேறொருவன் என் இடையைத் தட்டி அழைத்தான். அழுபவனை மறந்து , `ஹாய்’ எனச் சொல்லியவாறு இடையைத் தடவியவனின் கன்னத்தைத் தடவினேன். ``டூ தெளஸண்ட் பாட்’’ என்றேன். ``லேடி பாய்க்கு, இரண்டாயிரம் பாட்டா’’ என்று நக்கல் அடித்தான். ``போடா’’ என அவனைத் துரத்தினேன். `கண்ணீர்விட்டவனைப் பின்தொடர்ந்திருக்கலாமே’ என ஆதங்கப்பட்டபடி, அவனைத் தேட ஆரம்பித்தேன்.

ந்த லேடி பாயின் கை என் கன்னத்தில் பட்டதும்தான், எனக்கே தெரிந்தது நான் அழுதுகொண்டிருக்கிறேன். இந்தக் கொண்டாட்டமான தெருவில் மிகச் சோர்வாக உணர்ந்தேன். மீண்டும் தெருவழியாக நடந்து பீச்சை அடைந்து படுத்துவிட்டேன். பீச்சில் ஜோடியாக அமர்ந்து பியர் குடித்துக்கொண்டிருந்தார்கள். சிணுங்கல்கள், முத்தங்கள். கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டேன். இப்போதே செத்துவிடலாம்தான். இருட்டாக இருக்கிறதே. இருட்டில் எப்படிச் சாவது?

ரெஸ்ட்டாரென்ட்டை உதவி ஆள்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, இந்தியனைத் தேடி பீச்சுக்கு வந்தால் ஆளைக் காணோம். `ஓடியிருப்பான். எதற்கும் பார்க்கலாம்’ என பீச் உள்ளே நடந்தால், தூங்கிக்கொண்டிருக்கிறான். எழுப்பினேன். எழுந்தான். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, விழித்தான். பின் எழுந்துகொண்டான். சோர்வாகப் புன்னகைத்தான். ``ஏதேனும் கிளப்புக்குப் போகலாமா?’’ என்றேன். `வேண்டாம்’ எனத் தலையசைத்தான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துவந்து, ஒரு சிகரெட் கொடுத்தேன். பற்றவைத்துக்கொண்டோம். நான் பைக்கில் சாய்ந்து நின்றுகொண்டேன். அப்போது ஒரு தாய்ப்பெண் பைக்கில் சென்றாள். இவன் அவளை ஆர்வமுடன் உடனே நோக்கினான்.

ரு தாய்ப்பெண் ஸ்டைலாக பைக் ஓட்டிக்கொண்டு சென்றாள். நான் என்னை மீறி அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்துக் கை ஆட்டியதுபோல் இருந்தது. எனக்கான இளவரசியே என்னை நோக்கிக் கை ஆட்டியதுபோல் இருந்தது.

பைக்கில் செல்கையில் ஒரு தாய் ஆளும் ஓர் இந்தியனும் நின்றுகொண்டிருந்தனர். நான் ``சர்வீஸ் வேண்டுமா?’’ என்று கேட்கும்விதமாகக் கையை அவர்களை நோக்கி ஆட்டினேன்.

வள் கையை ஆட்டியதும், ``அந்தப் பொண்ணுகூட போறியா?’’ என்றேன் என் இந்திய நண்பனிடம்.

ரு கணம் இளவரசி கனவு கலைந்து, விலைமாதுவிடமா என்று எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும், ஏனோ அவளின் கை அசைவு அவ்வளவு உற்சாகத்தைத் தந்தது. புக்கெட்டே கலர்ஃபுல்லாக மாறியதுபோலத் தோன்றியது. இரவு 12 மணியிலிருந்து பின்னோக்கிச் சுற்றி இரவு ஒன்பது மணியில் போய் நின்றார்போல இருந்தது. மீண்டும் ஒன்பது மணி முதலான படாங், பங்களா ஸ்ட்ரீட் வாழ்வை வாழலாம்போல இருந்தது. இவனது ரெஸ்ட்டாரென்ட்டிலேயே இணைந்து வேலை செய்யலாம் எனத் தோன்றியது. இன்னொரு ரெஸ்ட்டாரென்ட் போடலாம். இந்திய உணவுகளைச் சமைக்கலாம். நடமாடும் ஊர்தி உணவகங்கள் திறக்கலாம். ஹோட்டலை லீஸுக்கு எடுத்து நடத்தலாம். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பேக்கேஜ் டூர் போடலாம் என்றெல்லாம் எண்ணம் றெக்கை கட்டிப் பறந்தது. தாய் நண்பனிடம், ``போறேன்’’ என்றேன்.

62p4.jpg

வளை அழைத்து இந்திய நண்பனிடம் கைக்காட்டினேன். அவள் இயல்பாக அவனுடன் ஒட்டிக்கொண்டாள். ``லவ் யூ டார்லிங்’’ என்றாள்.

`லவ் யூ டார்லிங்’’ என்று சொல்லி, அவனை இயல்பாக்க முயற்சித்தேன். அவன் இதயத்துடிப்பை உணர முடிந்தது. அளவுக்கு அதிகமாக இருந்தது.

`லவ் யூ டார்லிங்’ என்று அவள் சொன்னது, எனக்கு இதமாக இருந்தது. ஓர் ஒட்டுதல் வந்தது. இவள் அழகாகவும் ஸ்டைலாகவும் இருந்தாள். கால் கேர்ள் இயல்புடன் கமர்ஷியலாக இல்லை. அன்பாக இருந்தாள். `இவள் கால் கேர்ள் இல்லை’ என்று சொல்லிக்கொண்டேன்.

ரண்டு நண்பர்களும் ஏதோ பேசிக்கொண்டனர். எங்கள் நாட்டு ஆள் கொஞ்சம் தாய் `பாட்’டை எடுத்து இந்தியன் சட்டை பாக்கெட்டில் வைத்தான். எனக்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தன. இவர்களை இயல்பாக்க நான் ``முதலில் ஒரு கிளப்புக்குப் போய் பியர் குடிக்கலாமா?’’ என்றேன்.

``இல்லை. நீங்கள் இருவரும் செல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு, நான் என் பைக்கை நோக்கி நடந்தேன்.

தாய் நண்பனை, கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினேன். மனதில் ஏதோ பொங்கியது. அவனை அணைத்து அவன் உதட்டில் ஒரு முத்தமிட்டேன். ``நீயும் வா’’ என்றேன்.

ந்தியன் என் உதட்டில் முத்தமிட்டது, எனக்கு பேரன்பாகப்பட்டது. நாங்கள் மூவரும் ஒரு கி்ளப்புக்குச் சென்றோம்.

தாய்ப்பெண் பைக் ஓட்ட, அவள் பின்னால் அமர்ந்து செல்வது எனக்கு சொர்க்கமாக இருந்தது. மூவரும் ஒரு கிளப்புக்குள் நுழைந்தோம். உற்சாகமான இசை எங்களை வரவேற்றது. தாய்ப்பெண், என் இடையைப் பற்றி மெள்ள ஆடியபடியே நுழைந்தாள். அந்த எனக்கான இரவு ஆரம்பமானதுபோல உணர்ந்தேன். என் தாய் நண்பன் தனியாக ஒரு மேசைக்குச் சென்றான்.

பியர் குடித்துக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது இந்தியனை மென்மையாக முத்தமிட்டேன். என் இடையில் அவனது கையைச் சுற்றிவைத்துக்கொண்டேன். அவனது தலையை எனது மார்பில் சாய்த்துக்கொண்டேன். என் மொபைலைப் பார்த்தான். எடுத்துக் காட்டினேன். என் மூன்று வயது மகள் சிரித்தபடி மொபைல் ஸ்க்ரீனில் இருந்தாள். அவ்வளவு மகிழ்ச்சியுடன் இந்த இந்தியன் என் மகளை முத்தமிட்டான். அவளின் தந்தைகூட இப்படி முத்தமிட்டதில்லை.

வனுக்குத் திடீரென காதலியின் நினைவு வந்தது. உடனே அவளைச் சென்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. `இன்னொருமுறை சமாதானப்படுத்தினால்தான் என்ன?’ எனத் தோன்றியது. உடனே அவளைத் தேடி ஓட வேண்டும். அவளின் கால்களில் சரணடைய வேண்டும். `எனக்கு எல்லாமே நீதான் என அழுதுகொண்டே கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும்’ என்று மனம் அடித்துக்கொண்டது. அவன் என்னுடைய கால்களில் விழுந்தும் உதறிவிட்டு அன்று ஹாஸ்டலுக்குள் வந்துவிட்டேனேயொழிய, இப்போது அவனுக்கு இப்படியெல்லாம் தோன்ற வேண்டும் என மனதுக்குள் ஆசையுடன் ஓட்டிப்பார்த்துக் கொண்டே தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறேன்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
    • "ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2024 தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” "அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார். "இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார். “அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.   பட மூலாதாரம்,ANI சரமாரி கேள்விகள் எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார். "நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார். ”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். "எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார். பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார். இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார். இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார். ”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார். இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.   அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது. தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பாஜக சொல்லும் காரணம் என்ன? அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர். கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.