Jump to content

ஏமாற்றப்படும் கூட்டமைப்பு!


Recommended Posts

ஏமாற்றப்படும் கூட்டமைப்பு!

 

இலங்கையின் சர்வதேச அரசியல் அணுகுமுறையானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.  அந்த வகையில் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா கையில் எடுத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் அறிகுறி தென்படுகின்றது

 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் கையறு நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவே தோன்­றுகின்றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கொண்­டி­ருந்த நம்­பிக்கை அற்றுப் போயி­ருப்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும். 

இந்த அரசின் மீது முழு­மை­யான நம்­பிக்கை வைத்து, முண்டு கொடுத்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையின் முகத்தில் கரி­பூ­சு­கின்ற வகை­யி­லான அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களே  அவரை இந்த நிலை­மைக்கு இட்டுச் சென்­றி­ருக்­கின்­றன. 

அரச தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் மீதும், அவர்­க­ளுக்குப் பின்னால் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முக்­கிய தூணாகக் கரு­தப்­ப­டு­கின்ற முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க மீதும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அள­வற்ற நம்­பிக்கை வைத்து, அர­சியல் ரீதி­யி­லான காய் நகர்த்­தல்­களை மேற்­கொண்டு வந்தார்.    

ஆனால் எதிர்­பார்த்­த­வாறு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் முயற்­சியில் அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்பை அவரால் பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. 

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதன் மூலம்,இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட்­டு­விட வேண்டும் என அவர் விரும்­பி­யி­ருந்தார். அர­சியல் ரீதி­யான விருப்­பத்­திற்கு அப்பால், 2016 ஆம் ஆண்டின் இறு­திக்குள் அர­சியல் தீர்வை எட்­டி­விட முடியும் என்று அவர் நம்­பி­யி­ருந்தார். 

ஆனால் அர­சியல் ரீதி­யான அந்த நம்­பிக்கை படிப்­ப­டி­யாகத் தேய்ந்து, அவரை பெரும் ஏமாற்­றத்­திற்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது. 

இந்த ஏமாற்­ற­மா­னது, அவரை நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது அர­சியல் ரீதி­யாக சீற்றம் கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றது என்றே கூற வேண்டும். அதன் கார­ண­மா­கத்தான், ஐ.நா .செய­லாளர் நாய­கத்­தையும், உலக நாடு­க­ளையும் இலங்கை விவ­கா­ரங்­களில் தலை­யிட்டு, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முன்­வர வேண்டும் என கடி­தங்கள் மூல­மாகக் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார். 

நிபந்­த­னை­யற்ற அர­சியல் ஆத­ரவு 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ யுத்­தத்தில் வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து, தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவோ, அல்­லது நீண்ட கால­மாக, தமிழ் மக்­களை வருத்­திக்­கொண்­டி­ருக்­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தேசிய தலைவர் என்ற ரீதியில் ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கோ அவர் உளப்­பூர்­வ­மாக முயற்­சிக்­கவே இல்லை. 

மாறாக யுத்­தத்தில் அடைந்த வெற்­றியை நீண்­ட­காலம் ஜனா­தி­பதி பத­வியில் ஒட்­டிக்­கொண்­டி­ருப்­ப­தற்­கான ஒரு கரு­வி­யாக அவர் பயன்­ப­டுத்­தினார். அது மட்­டு­மல்­லாமல், யுத்த வெற்­றியை அர­சியல் ரீதி­யாகப் பூதா­க­ர­மாக்கி, அதனை சுய­லாப அர­சி­ய­லுக்குப் பயன்­ப­டுத்தி இருந்தார்.  இது அவரை ஏதேச்­ச­தி­கார வழியில் பய­ணிக்கச் செய்­தி­ருந்­தது. 

அதே­வேளை. தெற்­கா­சிய பிராந்­தி­யத்தில் இந்­தி­யாவின் பாது­காப்பு நலன்­களை சவால்­க­ளுக்கு உட்­ப­டுத்தும் வகையில் அவர் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளுடன் அர­சியல், பொரு­ளா­தார, இரா­ணுவ ரீதி­யி­லான உற­வு­களைப் பேணி­யி­ருந்தார். இது இந்தப் பிராந்­தி­யத்தில் அமெ­ரிக்­காவின் நலன்­க­ளையும் கேள்­விக்கு உள்­ளாக்­கு­வ­தாக அமைந்­தி­ருந்­தது. 

உள்­ளூரில் ஜன­நா­ய­கத்தைத் துவம்சம் செய்து, சர்­வா­தி­காரப் போக்கைக் கடைப்­பி­டித்­த­துடன்,  இந்­தியா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களின், அர­சியல் ரீதி­யான அதி­ருப்­தி­யையும் அவர் சம்­பா­தித்­தி­ருந்தார். அதன் கார­ண­மா­கவே, அவரைப் பத­வியில் இருந்து அகற்­று­வ­தற்­கான முயற்­சி­களில் வெளிச்­சக்­தி­களும் செல்­வாக்கைப் பிர­யோ­கித்­தி­ருந்­தன. 

இந்த செல்­வாக்கே, ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ தோல்­வி­ய­டைந்து, மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய ஜனா­தி­ப­தி­யா­கவும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும், ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்து ஒரு நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் வழி­யேற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதே­நேரம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவின் இரா­ணுவ ரீதி­யி­லான அர­சியல் ஒடுக்­கு­மு­றை­க­ளிலும், மத ரீதி­யி­லான அடக்­கு­மு­றை­க­ளிலும் சிக்கி, வெறுப்­புற்­றி­ருந்த சிறு­பான்மை தேசிய இனங்­க­ளா­கிய தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கங்­களும் புதிய ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்கும், நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் துணை புரிந்­தி­ருந்­தன. 

தமிழ் மக்­களின் சார்பில் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகிய மும்­மூர்த்­தி­களும், அர­சி­யலில் புதிய மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்கு, பேரு­தவி புரிந்­தி­ருந்தார்.   

இந்த நிபந்­த­னை­யற்ற அர­சியல் ஆத­ர­வுக்குப் பதி­லு­ப­கா­ர­மாக, தமிழ் மக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள நாளாந்த எரியும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்றும், புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கலைக் கொண்ட அர­சியல் தீர்வு காணப்­படும் என்றும் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­ன­ருக்கும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கும் இடையில் உடன்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது.

புதிய அரசி­ய­ல­மைப்பும் அர­சியல் தீர்வும் 

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறை­மையே முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ­ஷவை சர்­வா­தி­காரப் போக்­கிற்கு இட்டுச் சென்­றி­ருந்­தது. அத்­த­கைய நிலைமை இனி­மேலும் ஏற்­ப­டாமல் தடுக்­கப்­பட வேண்டும் என்­பது நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­ன­ரு­டைய முக்­கிய நோக்­க­மாக இருந்­தது. 

அதே­வேளை, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக, மித­வாத தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் சிங்­கள தேசிய அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களும், அத­னை­யொட்டி செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­களும் வர­லாற்று ரீதி­யாகத் தோல்­வி­யையே கண்­டி­ருந்­தன. 

எனவே, வெறும் பேச்­சு­வார்த்­தை­க­ளி­னாலும், ஒப்­பந்­தங்­க­ளி­னாலும் அர­சியல் தீர்வு காண முடி­யாது என்ற பட்­ட­றிவை தமிழ் அர­சியல் தலை­வர்கள் பெற்­றி­ருந்­தனர். எனவே, அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்­களைக் கொண்டு வரு­வதன் ஊடா­கத்தான் நிலை­யா­னதோர் அர­சியல் தீர்வை எட்ட முடியும் என்ற தெளிவை அவர்கள் பெற்­றி­ருந்­தனர். 

அத­ன­டிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வர­வேண்டும் என்ற தேவையைக் கொண்­டி­ருந்த நல்­ல­ர­சாங்­கத்­தி­ன­ரு­டைய நிலைப்­பாடு, இனப்­பி­ரச்சி;னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான வழியைத் திறந்­து­விட்­டி­ருந்­தது. 

ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை மட்­டுப்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக பிர­த­ம­ரு­டைய அதி­கா­ரத்தை மேலோங்கச் செய்­வ­தற்கும், தேர்தல் முறையில் மாற்­றங்­களைக் கொண்டு வரு­வ­தற்கும் ஏற்ற வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்­டிய தேவை நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு இருந்­தது. 

எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இனப்­பி­ரச்சினைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான வாய்ப்பை எதிர்­நோக்­கி­யி­ருந்த தமிழ் தரப்­பினர் குறிப்­பாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு முனைந்­தி­ருந்தார். 

அதன் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி ஆட்சி முறையில் மாற்றம், தேர்தல் முறையில் மாற்றம் என்­ப­வற்­றுடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­காரப் பர­வ­லாக்­கத்தின் ஊடாக ஐக்­கிய இலங்­கைக்குள் அர­சியல் தீர்வு காண்­பது என்ற விட­யத்­தையும் உள்­ள­டக்கி புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

நடந்­த­தென்ன?

நிறை­வேற்று அதி­கார பலம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அர­சி­யலில் அதி­யுச்ச அதி­கா­ரங்­களைக் கொண்டு தனிக்­காட்டு ராஜா­வாக அர­சோச்­சிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ எதிர்க்­கட்சித் தலை­வ­ராகக் கூட தலை­யெ­டுக்க முடி­யாத அள­வுக்கு தேர்­தல்­களில் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்தார். 

இந்தத் தோல்­வியை அவரால் எளிதில் ஜீர­ணிக்க முடி­ய­வில்லை. இருந்­தாலும், ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தாலும், இரண்டாம் நிலையில் அவர் பெற்­றி­ருந்த வாக்­கு­களின் அடிப்­ப­டையில் மக்­க­ளு­டைய ஆத­ரவை மேலும் விரி­வு­ப­டுத்தி மீண்டும் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­காக பகீ­ரத  முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தை எப்­ப­டி­யா­வது கவிழ்த்து ஆட்­சியைக் கைப்­பற்ற வேண்டும் என அர­சியல் ரீதி­யாகத் துடித்துக் கொண்­டி­ருந்த மகிந்த ராஜ­பக்­ ஷவுக்கு சிங்­கள மக்கள் மத்­தியில் ஆத­ரவு பெரு­கத்­தக்க வகை­யி­லான எந்­த­வொரு காரி­யமும் தமிழர் தரப்பு அர­சியல் செயற்­பா­டுகளில் இடம்­பெற்­று­விடக் கூடாது என்­பதில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் மற்றும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா சகிதம் மிகத் தீவிர கவனம் செலுத்திச் செயற்­பட்­டி­ருந்தார். 

நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்ற பின்பும், தமிழ் மக்­க­ளு­டைய முக்­கி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் விட­யத்தில் அரச தரப்­பினர் உரிய முன்­னேற்­றத்தைக் காட்­ட­வில்லை. 

பல்­வேறு உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்­ட­னவே தவிர அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதனைச் சுட்­டிக்­காட்டி, அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களும், பாதிக்­கப்­பட்ட பொது­மக்­களும் பல்­வேறு வழி­மு­றை­களில் வற்­பு­றுத்­திய போதிலும், அதற்கு கூட்­ட­மைப்பின் தலைமை இடம் கொடுக்­க­வில்லை. 

தங்­களால் உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்­ப­தற்­கான அர­சியல் நட­வ­டிக்­கைகள், நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இருப்பைப் பாதிக்கத் தக்க வகையில், இன மத ரீதி­யாக துவே­சங்­களைப் பரப்பி, தென்­னி­லங்­கையில் மகிந்த ராஜ­பக்­ ஷவுக்கு ஆத­ர­வான அர­சியல் அலையை ஏற்­ப­டுத்­தி­விடும் என்­பதைச் சுட்­டிக்­காட்டி, கூட்­ட­மைப்பும் தமிழ் மக்­களும் பொறு­மை­யாக  இருக்க வேண்டும், அமைதி காக்க வேண்டும் என அடிக்­கடி அறி­வு­றுத்தி வந்தார். 

நல்­லாட்சி அர­சாங்கம் படிப்­ப­டி­யாக தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்ற நம்­பிக்­கையை கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்கும், தமிழ் மக்­க­ளுக்கும் தொடர்ச்­சி­யாக ஊட்டி வந்தார். இதனை ஒரு வகையில் அர­சாங்­கத்­திற்கு சார்­பா­னதோர் அர­சியல் பிர­சா­ர­மா­கவே அவ­ரு­டைய வழி­ந­டத்­தலில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை முன்­னெ­டுத்து வந்­தது என்றே கூற வேண்டும்.  

மக்கள் முன்­னெ­டுத்த போராட்­டங்கள்

இடம்­பெ­யர்ந்த மக்­க­ளு­டைய காணி­களைக் கைப்­பற்றி அவற்றில் இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டி­ருப்­பதன் கார­ண­மாக யுத்தம் முடி­வுக்கு வந்து பல வரு­டங்­க­ளா­கி­விட்ட போதிலும், இடம்­பெ­யர்ந்­தி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான குடும்­பங்கள் தமது சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற முடி­யாத நிலைமை தொடர்ந்­தது. 

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­களை உள்­ள­டக்­கிய போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்­களை நிறை­வேற்ற வேண்டும் என்ற சர்­வ­தேச அழுத்­தமும் தொடர்ந்­தி­ருந்­தது. 

இந்தப் பின்­ன­ணியில்,  இரா­ணு­வத்­தினால் கைப்­பற்­றப்­பட்ட காணி­களை, அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிக்க வேண்டும், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் பதி­ல­ளிக்க வேண்டும், யுத்தம் முடி­வுக்கு வந்து, முன்னாள் போரா­ளி­களான விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் 12 ஆயிரம் பேருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு உத­வி­னார்கள், அவர்­க­ளுடன் இணைந்து  செயற்­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்டு நீண்ட கால­மாக சிறை­களில் வாடு­கின்ற தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்­கைகளை முன்­வைத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளினால் பல்­வேறு போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

தமது கஷ்­டங்­க­ளையும் துன்­பங்­க­ளையும் நன்கு புரிந்­து­கொண்­டுள்ள நல்­லாட்சி அர­சாங்கம் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு நேர்­மை­யான முறையில் விரைந்து தீர்­வு­களைத் தரும் என்று தமிழ் மக்கள் கொண்­டி­ருந்த எதிர்­பார்ப்­பையும் நம்­பிக்­கை­யையும் நிறை­வேற்­றத்­தக்க வகையில் அர­சாங்கம் செயற்­படத் தவ­றி­யி­ருந்­ததன் கார­ண­மா­கவே மக்கள் தாங்­க­ளா­கவே போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். 

அர­சியல் தலை­மை­யின்றி பாதிக்­கப்­பட்ட மக்கள் தாங்­களே எழுச்சி பெற்று நடத்­திய இந்தப் போராட்­டங்­க­ளுக்குத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு போதிய அளவில் தலை­மைத்­து­வத்தை வழங்­கவோ அவற்றை உரிய முறையில் வழி­ந­டத்தி அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்­ப­தற்கோ முன்­வ­ர­வில்லை. 

நிலை­மாற்றம்

இதனால் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த ஒரு­சிலர் கூட்­ட­மைப்பின் தலைமை மீது எரிச்­சலும் சீற்­றமும் கொண்­டி­ருந்­தார்கள். இந்த எரிச்­சலும், சீற்­ற­முமே கூட்­ட­மைப்பின் தலை­வர்­களை மிகத் தீவி­ர­மான முறையில் கண்­டிக்­கின்ற செயற்­பா­டு­களில் அவர்­களை ஈடு­படத் தூண்­டி­யி­ருந்­தன. 

பாதிக்­கப்­பட்ட மக்­களின் அதி உச்ச கட்­டத்­தி­லான இந்த உணர்ச்சி வெளிப்­பா­டா­னது,  தமி­ழ­ரசுக் கட்­சிக்கு அர­சியல் ரீதி­யாக அப­கீர்த்தி உண்­டாக்கும் வகையில், மேற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மிட்ட உள்­நோக்கம் கொண்ட செயற்­பா­டா­கக்­கூட நோக்­கப்­பட்­டது. 

நல்­லாட்சி அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்குப் பதி­லாகக் காலம் கடத்தி வரு­கின்­றது. மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் தீர்வு காணப்­பட வேண்டும். 

எனவே, காலம் கடத்­து­கின்ற அர­சாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­னது கோரிக்­கையும், பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தீர்வு வேண்டும் என்ற மக்­களின் எதிர்­பார்ப்பும் உரிய முறையில் கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் கவ­னத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. அரசு மீது மக்கள் கொண்­டுள்ள அதி­ருப்தி உணர்வை புரிந்து கொண்டு அதற்­கேற்ற வகையில் கூட்­ட­மைப்பின் தலைமை செயற்­பட்­ட­தாக பாதிக்­கப்­பட்ட மக்­களால் அறிந்து கொள்ள முடி­ய­வில்லை. 

இத்­த­கைய நிலை­மை­யி­லேயே அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்து ஐ.நா. மன்­றத்­தையும் சர்­வ­தேச நாடு­க­ளையும் நோக்கி அபயம் கோரி கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்ளார்.

கேப்­பாப்பு­லவு காணிப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும், கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய இரா.சமப்ந்­த­னிடம் அர­சாங்­கத்­தினால் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த உறு­தி­மொழி மீது நம்­பிக்கை வைத்து உட­ன­டி­யாக காணிப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்று அவர் காணிக்­காக போராட்டம் நடத்தி வரு­கின்ற மக்­க­ளிடம் வாக்­க­ளித்­தி­ருந்தார். ஆனால், அவர் கூறி­ய­வாறு காணி­களைக் கைவி­டு­வ­தற்கு இரா­ணுவம் முன்­வ­ர­வில்லை. 

இந்தக் காணிப்­பி­ரச்­சினை தொடர்­பாக அவர் எழு­திய கடி­தத்­திற்கு அர­சாங்­கத்­திடம் இருந்து பதில் கிடைக்­க­வில்லை. 

அதனால் பொறுமை இழந்த நிலையில் தான் பொறுமை இழந்­தி­ருப்­பதைத் தொனி செய்து மீண்டும் அவர் எழு­திய கடி­தத்­திற்கும் அர­சாங்கம் பதி­ல­ளிக்­க­வில்லை. 

இந்த அர­சாங்­கத்தைப் பத­விக்குக் கொண்டு வரு­வ­தற்­காக வாக்­க­ளித்த தமிழ் மக்கள் பொறுமை இழந்­து­விட்­டார்கள் எனவே, உட­ன­டி­யாகப் பிர்­ச­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என தெரி­வித்து அனுப்­பிய கடி­தங்­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கா­தது மட்­டு­மல்ல. நேர­டி­யான பேச்­சு­வார்த்­தைக்கு நேரம் ஒதுக்கித் தரு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கைக்கும் ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து பதில் கிடைக்­க­வில்லை. 

இதனால், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய தன்­னுடன் அர­சாங்கம் பரா­மு­க­மாக நடந்து கொள்­கின்­றது என்ற உணர்வின் கார­ண­மா­கத்தான், இனி­மேலும் பொறுக்க முடி­யாது என்ற நிலை­யி­லேயே, ஐ.நா. செய­லாளர் நாய­கத்­தையும் சர்­வ­தேச நாடு­க­ளையும் அவர் நாடி­யி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது. 

ஐ.நா.வும் சர்­வ­தே­சமும் உத­விக்கு ஓடி வருமா.....?

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை விவ­காரம் தொடர்பில் மொத்­த­மாக நான்கு பிரே­ர­ணைகள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. அவற்றில் மூன்று பிரே­ர­ணைகள் மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூறு­வ­துடன் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தன.

குறிப்­பாக நான்­கா­வது பிரே­ரணை, பிரே­ர­ணை­களில் சொல்­லப்­பட்ட விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கென மேல­தி­க­மக இரண்டு வரு­டங்கள் கால அவ­காசம் வழங்கி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.  யுத்தம் முடி­வுக்கு வந்த 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து கடந்த எட்டு வரு­டங்­க­ளாக ஐ.நா. மன்றம் இலங்கை விவ­கா­ரத்தில் கவனம் செலுத்தி வந்­துள்ள போதிலும்,, ஐ.நா .மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வதில் அர­சாங்கம் இழுத்­த­டிப்­பான போக்­கையை கடைப்­பி­டித்து வரு­கின்­றது. 

இந்த நிலையில், மனித உரிமை மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுடன் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரிமை உள்­ளிட்ட விட­யங்­களில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்­ப­தற்­காக அர­சாங்­கத்­திற்கு நெருக்­கடி ஏற்­ப­டுத்தும் வகையில் அழுத்­தங்­களை இது­வ­ரையில் பிர­யோ­கித்­தி­ருக்­க­வில்லை.  ஐ.நா. மன்­றத்தின் இந்தப் போக்கில் உட­ன­டி­யாக மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றி­களைக் காண முடி­ய­வில்லை. 

அதே­வேளை சர்­வ­தேச நாடு­களும் நல்­லாட்சி அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்­பதை பல்­வேறு வழி­களில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­ற­னவே தவிர, அர­சாங்­கத்­திற்கு அது­தொ­டர்பில் நேர­டி­யான அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­க­வில்லை என்றே கூற வேண்டும். 

இதற்கு விதி­வி­லக்­காக ஐரோப்­பிய ஒன்­றியம் மாத்­தி­ரமே மனித உரி­மைகள் மேம்­பாடு மற்றும் சிறு­பான்மை மக்கள் விவ­காரம் என்­ப­வற்றை முதன்­மைப்­ப­டுத்தி, ஜி.எஸ்.பி. வரிச்­ச­லுகை விட­யத்தில் நேர­டி­யாக அழுத்­தத்தைப் பிர­யோ­கித்­தி­ருந்­தது. எனவே, இப்­போ­தைய நிலையில் இலங்­கையில் தலை­யீடு செய்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. மன்­றத்­தி­டமும், சர்வதேச நாடுகளிடமும் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்க்கப்படுமா என்பது தெரியவில்லை.

ஐ.நா. மன்றத்திற்கோ அல்லது சர்வதேச நாடுகளுக்கோ இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு உடனடியான காரணங்களோ அல்லது தேவைகளோ இருப்பதாகவும் தெரியவில்லை. 

அதேநேரத்தில் ஐ.நா. மன்றமும், சர்வதேச நாடுகளும் சம்பந்தனின் கோரிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருடைய கோரிக்கையாகவா அல்லது இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருடைய கோரிக்கையாகவா – எந்த வகையில் நோக்கப் போகின்றன என்பதும் தெரியவில்லை. 

கூட்டமைப்பின் தலைவர் என்பதிலும் பார்க்க, எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவருடைய கோரிக்கை நோக்கப்பட்டாலும்கூட, ஐ.நா. மன்றத்திற்கோ அல்லது சர்வதேச நாடுகளுக்கோ தங்களளவில் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அவசரத் தேவை எதுவும் இருப்பதற்கான அறிகுறிகளையும் காண முடியவில்லை.

ஆனால், இலங்கையின் சர்வதேச அரசியல் அணுகுமுறையானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. 

அந்த வகையில் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா கையில் எடுத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் அறிகுறி தென்படுகின்றது. 

ஆயினும், அந்த வகையில் இந்தியா மீண்டும் இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையீடு செய்யுமா என்பது தெரியவில்லை. 

போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வழங்கப்பட்டுள்ள கால வரையறைக்குள் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் செயற்படவில்லை. அதேபோன்று அரசாங்கத்திற்குள்ளேயே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்படுகின்ற ஸ்திரமற்ற நிலைமை,  புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதமும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் மேற்கொண்டு வருகின்ற இழுத்தடிப்பு நிலையும் ஒன்றை மாத்திரம் நிச்சயமாக வெளிப்படுத்தியிருக்கின்றன. 

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக இப்போது நடுத்தெருவில் கொண்டு வந்துவிடப்பட்டிருக்கின்றார்கள் என்பதே அது.

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-19#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.