Jump to content

கேரளா உணவு வகைகள்


Recommended Posts

மத்தி மீன் கேரள வறுவல்

தேவையான பொருள்கள்:

மத்தி மீன்...1 /2 கிலோ
மிளகு..10 தேக்கரண்டி
சீரகம்......1 தேக்கரண்டி
சோம்ப.......1 /2 தேக்கரண்டி
இஞ்சி... 2 இன்ச் நீளம்
பூண்டு..... 20 பல்
எலுமிச்சை சாறு....1 தேக்கரண்டி
தயிர்..1 /2 தேக்கரண்டி
உப்பு...தேவையான அளவு
எண்ணெய் ....200 மில்லி
கறிவேப்பிலை ....அலங்கரிக்க

செய்முறை:

1.மீனை நன்கு சுத்தம் செய்யவும். மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும்.

2. இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி,பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, தயிர் + உப்பு போட்டு நன்கு கலந்து, அதனை கழுவிய மீனில் நன்கு தடவி வைக்கவும்.

3.தேவையானால் மஞ்சள் பொடி சேர்க்கலாம். இதனை குளிர்சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 3 -4 மணி நேரம் வைக்கலாம்.

4.அதன்பின், அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாதி எண்ணெய் ஊற்றி சூடானதும்,மசாலா பிசறிய 10மீனை மெதுவாக அடுக்கி வைத்து, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும்.

5.அதனை கொஞ்ச நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் மெதுவாக புரட்டிவிடவும்.

6.எண்ணெய் போதவில்லை என்றால் ஊற்றவும். அடுத்த பக்கமும் வெந்ததும், மீனை உடையாமல் புரட்டவும்.

7.இரு பக்கமும் மீன் மொறு மொறு என வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து கறிவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.

Bild könnte enthalten: Essen
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 59
  • Created
  • Last Reply

கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது

 
அ-அ+

நாக்கை ஊறவைக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த மீன் குழம்பை சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

 
 
 
 
கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது
 
தேவையான பொருட்கள்

மீன் - அரை கிலோ,
வெங்காயம் - 2,
சின்ன வெங்காயம் - 10,
இஞ்சி - 2 மேசைக்கரண்டி,
தக்காளி - 2,
பூண்டு - 10 பல்,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி,
மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி,
ஊறவைத்த குடம் புளி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை,வெந்தயம் - தாளிக்க.

201806291505434391_1_Meen-mulakittathu-curry._L_styvpf.jpg

செய்முறை

சின்ன வெங்காயம், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும். மசாலா நன்றாக சேர்ந்து வரும் போது அதனுடன் மீனை சேர்க்கவும்.

அத்துடன் ஊற வைத்த குடம் புளிச் கரைசலைச் சேர்க்கவும்.

பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும்.

15 நிமிடங்கள் கழித்து திறந்து கறிவேப்பிலை தூவி இறக்கிவிடவும்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கேரளா ஸ்பெஷல் சூப்பரான சிக்கன் தோரன்

 
அ-அ+

தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சிக்கன் தோரன் அருமையாக இருக்கும். இன்று இந்த சிக்கன் தோரனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
கேரளா ஸ்பெஷல் சூப்பரான சிக்கன் தோரன்
 
தேவையான பொருட்கள்

சிக்கன் துண்டுகள் - அரை கிலோ (சிறியதாக நறுக்கியது),
வெங்காயம் - 2 கப்,
பூண்டு - 2 தேக்கரண்டி,
இஞ்சி - 2 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 8,
சிக்கன் மசாலா பொடி - 2 தேக்கரண்டி,
நல்ல மிளகு பொடி -1 கப்,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தேங்காயம் (துருவியது) - 1 கப்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - ½ கப்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி,
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
பிரியாணிஇலை - சிறிதளவு.

201807091420349976_1_chicken-thoran._L_styvpf.jpg

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும்.

பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.

இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது 2 கப் நீர் சேர்த்து., அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வேக வைக்கவும்.

நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும்.

பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

இப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கேரளா ஸ்பெஷல் வாழை இலை மீன் வறுவல்

 
அ-அ+

கேளராவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். இன்று சூப்பரான இந்த வாழை இலை மீன் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
கேரளா ஸ்பெஷல் வாழை இலை மீன் வறுவல்
 
தேவையான பொருட்கள் :

மீன்  - அரை கிலோ
சின்ன வெங்காயம்  - 10
மிளகாய் பொடி  - ஒரு ஸ்பூன்
கரம்மசாலா பொடி   - 2 ஸ்பூன்
பூண்டு   - 4
இஞ்சி - சிறிது
புதினா, கொத்தமல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை  - 2 ஆர்க்கு
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்   - 2 ஸ்பூன்

201807211511498802_1_Meen-Pollichathu._L_styvpf.jpg

செய்முறை :

மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழைஇலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான வாழை இலை மீன் வறுவல் ரெடி.

குறிப்பு - மீனை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சோத்து கலந்து 5 நிமிடம் தோசை கல்லில் போட்டு வறுத்து அதன் பின்னர் மசாலா சேர்த்து செய்யலாம். மீனை தோசை கல்லில் போட்டு வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்தும் செய்யலாம். டயட்டில் இருப்பவர்கள். வயதானவர்கள் இவ்வாறு செய்து சாப்பிடலாம்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாரம்பரிய கேரள மீன் குழம்பு / Traditional Kerala Fish Curry

 
 
 
kerala+fish+curry.jpg
தேவையான பொருட்கள்:

மீன் – அரைக்கிலோ

தேங்காய் எண்ணெய் – 2 – 3 டீஸ்பூன்

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி துருவல் அல்லது இடித்தது – 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 12 நறுக்கியது

தக்காளி நறுக்கியது – 1

குடம்புளி ஊறவைத்தது – 2 அல்லது சாதாரண புளி – எலுமிச்சையளவு

மிளகாய்த்தூள் – 1 1/2 – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் ஒரு கப் அரைக்கவும் அல்லது தேங்காய்ப்பால் –ஒரு கப்

உப்பு – தேவைக்கு

கருவேப்பிலை – 2 இணுக்கு.

download.jpg
செய்முறை:

முதலில் மண் சட்டியில் தேங்காய் எண்ணை காயவைத்து வெந்தயம் சேர்த்து சிவந்ததும் இஞ்சி சேர்த்து பிறகு வெங்காயம், பச்சை மிள்காய் சேர்த்து சிவக்க வறுத்து அதில் தக்காளி சேர்க்கவும்.

 மேலும் 3 நிமிடம் வதக்கி மஞ்சள்,மிளகாய் தூள் சேர்த்து 30 செகண்ட் வதக்கியதும்,தேவைக்கு புளி தேங்காய் அரைத்த விழுது சேர்த்து தேவைக்கு, தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதி வந்ததும் மீனை சேர்க்கணும்.

பிறகு மூடி போட்டு தீயை குறைத்து ஐந்தே நிமிடம் தான் கடைசியாக தீயை அணைத்து விட்டு கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமா சேர்க்கணும்.

மூடி வைக்கவும்.எண்ணெய் எல்லாம் மேலே வந்து விடும்.
 
இது சுலபமான பாரம்பரிய கேரளா மீன் குழம்பு.சுவை அருமையா இருக்கும்.
காலையில் செய்து வைத்து விட்டால் மதியத்துக்குள் புளி இறங்கிடும் பின் புளியை தூக்கி போட்டுடலாம்.கொடம்புளி இல்லையென்றால் தேவைக்கு சாதாப்புளியும் கரைத்து செய்யலாம்.

http://asiyaomar.blogspot.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்

 
அ-அ+

கேரளா கோயில்களில் வழங்கப்படும் பிரத்யேகப் பிரசாதம், இந்தப் பாயாசம். இந்த அரவணப் பாயாசத்தை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 
தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 200 கிராம் (சின்ன அரிசியாக இருக்க வேண்டும்)
வெல்லம் - 1 கிலோ
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - 250 மில்லி
ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.
 
201808121513339778_1_aravana-payasam._L_styvpf.jpg

செய்முறை :

புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

வடிகட்டிய பாயாசத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.

இத்துடன் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.. அதிகம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக்கொள்ளவும்.

அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பார்ப்பதற்கு வேகாதது போல இருக்கும் இந்தப் பாயசம் சாப்பிடும் போது கரகரவென்றிருக்கும்.
 
சூப்பரான அரவணப் பாயாசம் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

கேரளா ஸ்பெஷல் காளன் செய்வது எப்படி?

 
அ-அ+

கேரளா விசேஷங்களில் செய்யப்படும் உணவுகளில் காளன் முக்கியமானது. நேந்திரங்காய் கொண்டு செய்யும் இந்த காளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
கேரளா ஸ்பெஷல் காளன் செய்வது எப்படி?
 
தேவையான பொருட்கள் :

நேந்திரங்காய் - 2
சேனைக்கிழங்கு - 250 கிராம்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
தயிர் - கால் கப்
உப்பு - தேவையான அளவு

அரைக்க:

துருவிய தேங்காய் - முக்கால் கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - 5 இலைகள்
 
201808201208302902_1_kerala-special-kalan-a._L_styvpf.jpg

செய்முறை:

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

நேந்திரங்காய், சேனைக்கிழங்கை தோல் நீக்கி கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

வெட்டிய காய்கறிகளை பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிக குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

தண்ணீர் இருந்தால், அடுப்பில் மீண்டும் வைத்து, தண்ணீரை வற்ற விடவும். அடுப்பை அணைத்து காய்கறிகளை லேசாக மசித்துக் கொள்ளவும்.

மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் சிம்மில் வைத்து தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.

அடுத்து அதில் வேக வைத்த காய்களை போட்டு அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலக்கி, சில நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.
 
அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றை, தாளித்து கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/20120830/1185067/kerala-special-kalan.vpf

Link to comment
Share on other sites

 

 

 

``கேரள மக்களால் கொண்டாடப்படும் பாரம்பர்ய சிறப்புமிக்கப் பண்டிகை ஓணம். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்படும் இந்த வைபவத்தின்போது, கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அத்தப்பூ என்கிற பூக்கோலம் அழகுசேர்க்கும். ஓணம் ஸத்யா எனப்படும் சிறப்பு விருந்தில் இடம்பெறும் 21 வகை உணவுகளும் சிறப்புமிக்கவை.

p11a_1533027709.jpg

p11aa_1533027733.jpg

ஓலன் என்கிற பூசணிக்காய், காராமணி, தேங்காய்ப்பால் கலந்த கூட்டு, காளன் எனப்படும் சேனைக்கிழங்கில் தயாராகும் ஒருவித தொடுகை, பலவிதமான காய்கறிகளைத் தேங்காய் கலந்து வேகவைத்து தயிர் கலந்து தயாரிக்கப்படும் அவியல், இஞ்சிப்புளி, ஊறுகாய், தக்காளிப் பச்சடி, பொரியல்கள், வெல்லம் கலந்த சிப்ஸ், பருப்பு, சாம்பார், ரசம், மோர், பப்படங்கள் ஆகியவற்றோடு, அடை, பருப்பு, தேங்காய்ப்பால் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் பாயசங்களும் தலைவாழை இலையில் இடம்பிடிக்கும். அறுசுவையையும் அள்ளித் தரும் ஓண ஸத்யா விருந்தை நம் வீட்டிலும் பரிமாற அழகிய படங்களுடன் வழிகாட்டுகிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் அகிலா விமல்.
ஓணாஸம்சகல்!

- அகிலா விமல்

ஸத்யா பரிமாறும் முறை

p11aaa_1533027723.jpg

த்யாவில் இடம்பெற வேண்டியவையும் அவற்றை பரிமாறும் முறையும்...

1. ஷக்கரவரட்டி
2. உப்பேரி
(நேந்திரம் சிப்ஸ்)
3. சேன மெழுக்குவரட்டி
4. அப்பளம்/பப்படம்
5. உப்பு
6. இஞ்சிப்புளி
7. பச்சடி
8. ஓலன்
9. எரிசேரி
10. தோரன்
11. அவியல்
12. சாம்பார்
13. காளன் / புளிசேரி (ஏதேனும் ஒன்று)
14. ரசம்
15. பிரதமன் (ஏதேனும் ஒருவகை)
16. காய்ச்சிய மோர்
17. சாதம், நெய்
18. பூவன்பழம்


p11b_1533027744.jpg

ஷக்கரவரட்டி

தேவையானவை:

 பெரிய வாழைக்காய் - 4
 வெல்லத்தூள் - முக்கால் கப்
 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
 சுக்குத்தூள் - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
 பொடித்த சர்க்கரை - சிறிதளவு

செய்முறை:

வாழைக்காயைத் தோல் சீவி ஒரு செ.மீ கனத்துக்கு அரை வட்டங்களாக நறுக்கி, தட்டில் பரப்பி 10 நிமிடங்கள் உலரவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, சத்தம் அடங்கும் வரை பொறுமையாக பொரித்தெடுக்கவும் (நீண்ட நேரம் ஆகும்). எண்ணெயை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் சூடான வெந்நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்கவைத்து ஒரு கம்பிப் பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு வாழைக்காய் சிப்ஸுடன் சேர்த்துக் கலக்கவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, பொடித்த சர்க்கரையைத் தூவிப் புரட்டிவிடவும். ஸத்யாவில் மிக முக்கியமானது இந்த ஷக்கரவரட்டி.

குறிப்பு:

வாழைக்காய் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். ஒரு துண்டை எடுத்து உடைத்துப்பார்த்தால் ‘டக்’ கென்று உடைய வேண்டும்.


p11bb_1533027756.jpg

இஞ்சிப்புளி

தேவையானவை:

 தோல் சீவிய இஞ்சி - 200 கிராம்
 புளி - 50 கிராம்
 தண்ணீர் - அரை கப்
 நல்லெண்ணெய் - 1/3 கப்
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 சின்ன வெங்காயம் - 6
 பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன்
 வெல்லத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சியை மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கொரகொரவென அரைத்தெடுக்கவும். புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவைத்து, கலவை நன்கு சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும். அதனுடன் வெல்லத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு வாரம் வரையில் ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.


p11bbb_1533027787.jpg

சேன மெழுக்குவரட்டி

தேவையானவை:

 சேனைக்கிழங்கு - அரை கிலோ (தோல் சீவி, ஒரு இன்ச் கனத்துக்கு சதுரத் துண்டுகளாக்கவும்)
 சின்ன வெங்காயம் - 15
 பூண்டு - 6 பல்
 கடுகு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
 தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சின்ன வெங்காயத்துடன் பூண்டு, சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும். சேனைக்கிழங்குத் துண்டுகளை ஆவியில் முக்கால் வேக்காடு  பதத்துக்கு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சோம்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு சேனைக்கிழங்கை சேர்த்து, மிதமான தீயில் நன்றாக ரோஸ்ட் செய்து எடுக்கவும். மேலே  கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


p11c_1533027798.jpg

கோஸ் தோரன்

தேவையானவை:

 சிறிய முட்டைகோஸ் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

அரைக்க:

 தேங்காய்த் துருவல் – கால் கப்
 பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தாளிக்க:

 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 3 (கிள்ளவும்)
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் கோஸ், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்து, மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும். அதனுடன் அரைத்த கலவை சேர்த்துக் கிளறி, மேலும் 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.


p11cc_1533027809.jpg

மாம்பழப் புளிசேரி

தேவையானவை:

 நன்கு பழுத்த பெரிய மாம்பழம் - ஒன்று     (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்)
 மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
 தண்ணீர் - ஒரு கப்
 தயிர் - அரை கப்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளவும்)
 கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க:

 தேங்காய்த் துருவல் - 1/3 கப்
 பச்சை மிளகாய் - ஒன்று
 சீரகம் - அரை டீஸ்பூன்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும். மாம்பழத் துண்டுகளுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மிருதுவாக வேகவிடவும் (குழையக் கூடாது).

அதனுடன் அரைத்த கலவை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும். பிறகு தயிர் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாம்பழக் கலவையுடன் கலந்து பரிமாறவும்.


p11ccc_1533027820.jpg

அவியல்

தேவையானவை:

 உருளைக்கிழங்கு - 2 (தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும்)
 வாழைக்காய் - ஒன்று (தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும்)
 கேரட் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)
 பீன்ஸ் - 5 (நீளவாக்கில் நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 புளி விழுது - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

அரைக்க:

 தேங்காய்த் துருவல் - அரை கப்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பூண்டு, பச்சை மிளகாய் - 2 பல்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். காய்கறிகளுடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். அதனுடன் அரைத்த விழுது, புளிக்கரைசல் சேர்த்துக் கலவை கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். பிறகு தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: 

காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கினால் பார்க்க அழகாக இருக்கும்.


p11d_1533027833.jpg

மத்தங்கா எரிசேரி

தேவையானவை:

 பறங்கிக்காய் - கால் கிலோ (தோல் சீவி, துண்டுகளாக்கவும்)
 பச்சை மிளகாய் - 3
 சீரகம் - அரை டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - கால் கப்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளவும்)
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
 சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

பறங்கிக்காயுடன் உப்பு, 2 பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து மசிக்கவும். மீதமுள்ள ஒரு பச்சை மிளகாயுடன் தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதைப் பறங்கிக் கலவையில் ஊற்றி, கெட்டியாகும் வரை கொதிக்கவைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுத்துப் பறங்கிக் கலவையில் சேர்த்துப் பரிமாறவும்.


p11dd_1533027852.jpg

பழப் பிரதமன்

தேவையானவை:

 நேந்திரம் பழம் - 4 (சிறிய துண்டுகளாக்கி, வேகவைத்து மசிக்கவும்)
 ஜவ்வரிசி - 1/3 கப்
 நெய் - 3 டேபிள்ஸ்பூன்
 காய்ச்சிய பால் - ஒரு கப்
 வெல்லத்தூள் -  ஒன்றரை கப்
 கெட்டித் தேங்காய்ப்பால் - அரை கப்
 ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
 வறுத்த முந்திரி - சிறிதளவு

செய்முறை:

ஜவ்வரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, தனியாக வேகவிடவும். வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டுச் சூடாக்கி, மசித்த பழத்தைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த ஜவ்வரிசி சேர்த்துக் கிளறவும். பிறகு வெல்லக் கரைசலை ஊற்றி, கொதிக்கவிட்டு இறக்கவும். அதனுடன் பால், தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:

விரும்பினால் மெல்லிதாக சீவிய தேங்காய்ப் பற்களை வறுத்தும் சேர்க்கலாம்.


p11ddd_1533027862.jpg

மிளகு ரசம்

தேவையானவை:

 மிளகு - அரை டீஸ்பூன்
 சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்
 தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 புளி - எலுமிச்சை அளவு
 தண்ணீர் - 2 கப்
 நெய் - 2 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 கடுகு - கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா,  ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் நெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், ஒரு காய்ந்த மிளகாய்,   கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் புளிக்கரைசல், மஞ்சள்தூள், அரைத்த பொடி, உப்பு சேர்த்து
3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்


p11e_1533027873.jpg

ஓலன்

தேவையானவை:

 பூசணிக்காய் - கால் கிலோ (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்)
 சிவப்பு காராமணி - கால் கப் (8 மணி நேரம் ஊறவைத்து, வேகவிடவும்)
 பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)
 முதல் தேங்காய்ப்பால் - அரை கப்
 இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப்
 தண்ணீர் - அரை கப்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்)
 காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளவும்)

செய்முறை:

பூசணித் துண்டுகளுடன் தண்ணீர், இரண்டாம் தேங்காய்ப்பால், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். அதனுடன் காராமணி சேர்த்துக் கிளறி இறக்கி, முதல் தேங்காய்ப்பாலை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து பூசணிக் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.


p11ee_1533027887.jpg

வெள்ளரிக்காய் காளன்

தேவையானவை:

 வெள்ளரிக்காய் - கால் கிலோ (தோல் சீவி, துண்டுகளாக்கவும்)
 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 தயிர் - இரண்டரை கப்
 உப்பு - தேவையான அளவு

அரைக்க:

 தேங்காய்த் துருவல் – கால் கப்
 பச்சரிசி - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்

தாளிக்க:

 எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் ஒன்று (கிள்ளவும்)
 பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:

வெள்ளரித் துண்டுகளுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு வேகவிடவும். பச்சரியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதை வெள்ளரிக் கலவையுடன் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி ஆறவிடவும். அதனுடன் தயிர் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து வெள்ளரிக் கலவையுடன் சேர்க்கவும்.  இதை வெதுவெதுப்பாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.

குறிப்பு:

வெள்ளரிக்காய்க்குப் பதிலாக வெள்ளைப் பூசணி, வாழைக்காய் - சேனைக்கிழங்கு கலவை பயன்படுத்தலாம்.


p11eee_1533027899.jpg

பாலடை பிரதமன்

தேவையானவை:

 அரிசி பாலடை (கடைகளில் கிடைக்கும்) - 100 கிராம்
 காய்ச்சாத பால் - ஒன்றரை லிட்டர்
 சர்க்கரை - ஒரு கப்
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
 தேங்காய்ப்பால் - அரை கப்
 முந்திரி - 25 கிராம்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பொங்கி வரும்போது பாலடையைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். நன்றாக வெந்ததும்  சர்க்கரை சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பாலடை பிரதமனுடன் முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:

அனைத்து ரெசிப்பிகளிலும்  எண்ணெய் எனக் குறிப்பிடப்படுவது தேங்காய் என்ணெயே ஆகும். தேங்காய் எண்ணெயை உபயோகிக்க விருப்பமில்லையெனில் சாதாரண எண்ணெயை உபயோகிக்கலாம்.


p11f_1533027911.jpg

கேரளத்துச் சாம்பார்

தேவையானவை:

 துவரம்பருப்பு - அரை கப் (வேகவைத்து மசிக்கவும்)
 நறுக்கிய கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் கலவை - ஒரு கப்
 வெங்காயம் - ஒன்று (மெல்லியதாக நறுக்கவும்)
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 புளி - எலுமிச்சை அளவு (அரை கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும்)
 பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பூண்டு - 2 பல் (தட்டவும்)

வறுத்து அரைக்க:

 எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 3
 தனியா (மல்லி) - 2 டேபிள்ஸ்பூன்
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிக்கலவை சேர்த்து  நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும். அதனுடன்  பருப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,  மூன்று விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து வெந்த காய்கறி - பருப்புக் கலவையுடன் புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்த பொடி தூவி மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி, சூடாகப் பரிமாறவும்.


p11ff_1533027921.jpg

வெண்டைக்காய் பச்சடி

தேவையானவை:

 வெண்டைக்காய் - கால் கிலோ (கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 கெட்டித் தயிர் - 3/4 கப்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெண்டைக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வறுத்தெடுக்கவும். பாத்திரத்தில் தயிருடன் உப்பு, வறுத்த வெண்டைக்காய் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.


p11fff_1533027931.jpg

காய்ச்சிய மோர்

தேவையானவை:

 கெட்டித் தயிர் - ஒரு கப் (கடையவும்)
 தண்ணீர் - ஒரு கப்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளவும்)
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிருடன் தண்ணீர் கலந்து நன்கு கடையவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு கடைந்த தயிரை ஊற்றி லேசாகச் சூடு செய்து (கொதி வரும் முன்பே) இறக்கவும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி

அ-அ+

கடலைக் கறியை சப்பாத்தி, புட்டு, ஆப்பம், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறலாம். இன்று கேரளா ஸ்பெஷல் கடலைக்கறியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
 
தேவையான பொருட்கள் :

சின்ன கொண்டைக்கடலை - 2 கப்
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் -  2
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
துருவிய தேங்காய் - முக்கால் கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டீஸ்பூன்
கேரளா கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 8 இலைகள்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 
201808221226346710_1_kadala-curry._L_styvpf.jpg

செய்முறை :

சின்ன கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காயைச் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற விட்டு, மிக்ஸியில் விழுதாக தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அடுத்து இதில் வேக வைத்த கடலையை தண்ணீரோடு சேர்த்து, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து சில நிமிடம் வேக விடவும்.

இதில் இருந்து சிறிதளவு கொண்டைக்கடலையை எடுத்து, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்துக் கிளறவும்.

இத்துடன் கரம் மசாலாத் தூளைச் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை வேக விடவும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கிரேவியில் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை சேர்த்துத் தூவி இறக்கவும்.

சூப்பரான கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/22122634/1185596/kerala-kadala-curry.vpf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சூப்பரான கேரளா மத்தி மீன் சாறு

 
அ-அ+

கேரளாவில் மத்தி மீன் சமையல் மிகவும் பிரபலம். இன்று மத்தி மீனை வைத்து சூப்பரான மத்தி மீன் சாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான கேரளா மத்தி மீன் சாறு
 

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 4,

தக்காளி - 4,
பச்சைமிளகாய் - 6,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
மத்தி மீன் - 1/2 கிலோ,
தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
உப்பு, மிளகுத்தூள், பெருங்காயம் - சிறிதளவு,
கொத்தமல்லித்தழை - சிறிது.

தாளிக்க...

கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 50 மி.லி.
 
201809031213316377_1_fish-curry._L_styvpf.jpg

செய்முறை :

கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து அதில் தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்கவிடவும்.  

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மத்தி மீன், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து மீன் குழம்பில் கொட்டி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கும் பொழுது கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 
சூப்பரான கேரளா மத்தி மீன் சாறு ரெடி.

https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/03121331/1188562/kerala-mathi-fish-saaru.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.