Jump to content

கேரளா உணவு வகைகள்


Recommended Posts

கேரளா உணவு வகைகள்

கேரளா சமையற் கலை வரலாறு, புவியியல் மற்றும் இந்த மண்ணின் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு உண்டு. இதனை இரண்டு தரமான தலைப்புகளின் கீழ் அதாவது சைவம் மற்றும் அசைவ உணவுகள் என வகைப்படுத்தலாம். அசைவ உணவுகளில் அதிப்படியான நறுமணப்பொருட்கள் போடப்பட்டிருக்கும் அதே வேளையில் சைவ உணவு வகைகளுக்கு சிறிதளவு நறுமணப் பொருட்கள் இடப்பட்டிருக்கும் அவற்றை பிற இடங்களில் உள்ளவர்களும் எளிதாக சுவைக்கமுடியும்.

 

Bildergebnis für கேரள பெண்கள் படங்கள்

 

Bildergebnis für கேரள பெண்கள் படங்கள்

கூட்டுக் கறி

spacer.png
 
 
கூட்டுக் கறி தயாரிப்பின் வீடியோ காட்சி.

தேவையான பொருட்கள்
  • வேக வைத்த உருளைக் கிழங்கு -2 (சதுரமாக வெட்டப்பட்டது)
  • சின்ன வெங்காயம் (நறுக்கியது) -10
  • இஞ்சி – 1’’ அளவு
  • பூண்டு
  • ஊற வைத்த கடலை பருப்பு (வடை செய்வதற்கு) - ½ கப்
  • பச்சை மிளகாய் – 3
  • மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லித்தூள் – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • தேங்காய் பால் - ½ கப்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்
  • உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடலை பருப்பு விழுது, உப்பு சேர்த்து வடை தயாரிப்பதற்காக அரைத்தது போல (தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைக்கப்பட்டது) அரைத்து போட்டு புரட்டவும். பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நன்கு வெந்ததும் அதை எடுத்து பக்கத்தில் உள்ள கிண்ணத்தில் வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலையைப் போடவும். அது பொரியும் சத்தம் வந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறிவிடவும் இப்போது உருளைக் கிழங்கு போட்டு சிறிது நேரம் வேக விடவும். இப்போது மல்லித்தூள், மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி விடவும்.

இப்போது ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதோடு உப்பு போட்டு கிளறி விடவும். பாத்திரத்தை மூடி நன்கு வேகவிடவும். நீரில் நன்கு வெந்து, நீர் முற்றிலும் வற்றிய பின்னர் தேங்காய் பாலை ஊற்றவும். சற்று நேரம் வேக விடவும். பின்னர் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறவும்.

கூட்டுக்கறியை சூடாகப் பரிமாற வேண்டும். இது சாதத்தோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

https://www.keralatourism.org

 

தொடரும்....

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
சிக்கன் தோரன்

spacer.png
 
 
தேவையான பொருட்கள்
  • சிக்கன் துண்டுகள் (சிறியதாக நறுக்கியது)
  • வெங்காயம் (நறுக்கியது) – 2 கப்
  • பூண்டு (நறுக்கியது) – 2 தேக்கரண்டி
  • இஞ்சி( நறுக்கியது) – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) -8
  • சிக்கன் மசாலா பொடி – 2 தேக்கரண்டி
  • நல்ல மிளகு (பொடி செய்தது) -1கப்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • தேங்காயம் ( துருவியது) – 1 கப்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை - ½ கப்
  • உப்பு
  • எண்ணெய்
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • பிரியாணி  இலை

செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்து சூடு பண்ணவும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். இப்போது நறுக்கி வைத்த பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் (நறுக்கியது) ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும். பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும். இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது 2 கப் நீர் சேர்க்க வேண்டும். அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கவும். நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும். பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

இப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

கேரளா ஃபிஷ் கறி

spacer.png
 
 
இந்த வீடியோ கேரள மீன்(ஃபிஷ்) கறி செய்யும் முறையைக் காட்டுகிறது

ஏதாவது ஒரு மீன் அல்லது இறால் மீன் 500 கிராம் எடுத்து நறுக்கி சுத்தம் செய்து அருகில் வைத்து கொள்ளவும்.

ஒரு அகன்ற அடிப்பகுதி தடிமனான பாத்திரத்தை (மண் பாண்டம் அல்லது நான்-ஸ்டிக்) எடுத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
 இப்போது கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றை வதக்குவதற்குத் தயாராக வைக்கவும்.
  • இஞ்சி – 2’’ (பொடிதாக நறுக்கியது)
  • பூண்டு – 10 – 12 பல் ( பொடியாக நறுக்கியது)
  • பெரிய வெங்காயம் 5  லிருந்து 6
  • கறிவேப்பிலை – சிறிது

இப்போது எண்ணெயில் கடுகு சேர்த்து பொரிந்ததும் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

பின்னர் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து பசையாக அரைத்துக் கொள்ளவும்.

 
  • காஷ்மீரி மிளகாய் வற்றல் தூள் – 4-6 தேக்கரண்டி
  • வெந்தய தூள் - ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி 

இந்த மூன்று தூள்களையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி விழுதுவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அதனை வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் பதம் வரும் வரை கிளறவும். சிறிது உப்பு மற்றும் புளி(கோக்கம்) ஆகியவற்றோடு அரை அல்லது ஒரு கப் நீர் ஊற்றி வேக விடவும்.

இப்போது மசாலாவிற்கு மேல் மீன் துண்டுகளையும் சிறிது கறிவேப்பிலையையும் வைத்து பாத்திரத்தை மூடி விடவும். மசாலா கெட்டியாகும் வரை வேக விடவும். பின்னர் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை மேல் ஊற்றி அடுப்பை அணைத்து விடவும்.

பயன்படுத்துவதற்கு 10-12 மணி நேரத்திற்கு முன்பாக தயார் செய்து வைக்க வேண்டும். உடனடியாக பயன்படுத்தலாம் ஆனால் சுவை அந்த அளவு கூடுதலாக இருக்காது.
Link to comment
Share on other sites

காளன்

spacer.png
 
 
இது கேரள உணவு வகை கறியான காளன் எவ்வாறு சமைக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோ காட்சி

இது கேரள உணவு வகை கறியான காளன் எவ்வாறு சமைக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோ காட்சி.

காளன் மலையாளிகளுக்கு மட்டுமே உரியதென பெருமைப்படத்தக்க பழமையான கூட்டு வகையாகும். இது செய்வதற்கு எளிதாக இருந்தாலும் நன்றாக சமைக்கப்பட்ட காளனுக்கு எப்போதுமே ஈர்ப்பு அதிகம். இன்றைய இளம் தலைமுறையினர் சத்யா (பாரம்பரிய சைவ உணவு) உணவு வகைளில் சிறந்த உணவாக இதனை கருதுகின்றனர்.

தேவையான பொருட்கள்
  • 100 கிராம் சேனைக்கிழங்கு
  • 1 – வாழைக்காய்
  • 1 கப் கடைந்த தயிர்
  • 4 – பச்சை மிளகாய்
  • 4 தேக்கரண்டி நெய்
  • ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • ½ தேக்கரண்டி வெந்தயம்
  • ½ தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 3 மிளகாய் வற்றல்
  • கறிவேப்பிலை

விழுதாக அரைப்பதற்கு
  • 1½ கப் துருவிய தேங்காய்
  • ½ தேக்கரண்டி சீரகம்

செய்முறை
வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கு ஆகியவற்றின் தோலை நீக்கி துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

மிளகுத்தூளை ½ கப் நீரில் கலந்து அதனை ஒரு சுத்தமான துணியால் வடிகட்டி எடுக்கவும்.

வடிகட்டிய அந்த நீரில் காய்களை வேக வைத்து அதோடு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.

தண்ணீர் வற்றியதும் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கி மெதுவாக சூடுபடுத்தவும்

தயிர் வெந்து கெட்டியாகும் போது அரைத்து வைத்த தேங்காய் கலவை மற்றும் வெந்தைய பொடி சேர்த்து கலக்கவும். வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்

ஒரு கடாயில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் அதனை காளனோடு சேர்த்து கலக்கவும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites


நெய்ச்சோறு

spacer.png
 
 
இந்த வீடியோ நெய்ச்சோறு தயாரிப்பு பற்றி காட்டுகிறது.

தேவையான பொருட்கள்
  • பிரியாணி அரிசி – 2 கப்
  • நெய் – 5 லிருந்து 6 தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு - ½ கப்
  • கிராம்பு – 4 முதல் 5 வரை
  • பொடித்த மிளகு – 4 லிருந்து 5
  • உலர்ந்த திராச்சை - ¼ கப்
  • அரைத்த இஞ்சி – 1 தேக்கரண்டி
  • அரைத்த பூண்டு – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சைச் சாறு – சிறிது
  • வெங்காயம் (நறுக்கியது) -2
  • பிரியாணி இலை – 2
  • ஏலம் – 4
  • லவங்கப்பட்டை – 2 கம்புகள்
  • நறுக்கிய கொத்தமல்லி இலை -¼ கப்
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • தண்ணீர் - 3½ கப்

செய்முறை
அரிசியைக கழுவி வடித்து பக்கத்தில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதோடு முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். பின்னர் முந்திரிப் பருப்பை எடுத்து விட்டு அதே போன்று உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்தெடுக்கவும்.

சிறிது நெய் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு படுத்தவும். பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை சிறிது உப்பும் சேர்த்து கிளறவும். இந்த கலவையை வறுத்த முந்திரிப் பருப்பு உலர்ந்த திராட்சை வைத்துள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்.

ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலம், அரைத்த இஞ்சி-பூண்டு விழுதினை சேர்த்து கலக்கவும். இப்போது நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தைப் போட்டு கிளறவும். இப்போது கழுவி பக்கத்தில் வைத்திருந்த அரிசியைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகளைப் போட்டுக் கிளறவும். பின்னர் மறுபடியும் பிரியாணி இலை போட்டு நீர் ஊற்றி மூடி வைத்து விடவும். 5 நிமிடம் வேக விடவும்.

இப்போது மூடியைத் திறந்து சிறிது எலுமிச்சம் சாறு ஊற்றி நன்கு கலக்கவும்.

முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, வறுத்த வெங்காயம் போன்றவற்றைத் தூவி அலங்கரித்து நெய் சோற்றினைச் சூடாகப் பரிமாறவும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

கேரளா பருப்பு பாயாசம்

கேரளாவில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். இந்த பண்டிகையின் ஸ்பெஷல் ரெசிபி பருப்பு பாயாசம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.

ஓணம் ஸ்பெஷல்: கேரளா பருப்பு பாயாசம்
 
தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பால் - அரை கப்
முந்திரி - ஒரு கைப்பிடி
சுக்கு பொடி - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு

201709021514443280_1_Kerala._L_styvpf.jp

செய்முறை :

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீரை கரைய நன்கு கெட்டியாக சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி விசில் போனவுடன் சற்று மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)

பின்பு நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, முந்திரியைத் தூவினால், கேரளா பருப்பு பாயாசம் ரெடி.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகிற திங்கள் ஓணம் பண்டிகை ஈஸ்ட்காம்  மகாலட்சுமி கோவில் பக்கம் இருக்கும் மலையாளிகள் கடைகளில் ஓணம் சாப்பாடு மிஸ் பண்ணக்கூடாது காசு கூடத்தான் ஆனாலும் மரக்கறி வகைகள் யார் கூட வைப்பது என்பதில் போட்டி போடுவார்கள் சில கடைகள் 18 கறிவகை என்று தில்லா எழுதிபோட்டு வியாபராம் நடக்கும் .

Link to comment
Share on other sites

பீஃப் ஃப்ரை

spacer.png
 
 
இந்த வீடியோ பீஃப் ஃப்ரை செய்யும் முறையைக் காட்டுகிறது.

ஒரு கிலோ எலும்பில்லா மாட்டு இறைச்சி பொரித்து எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.

 
  • பொடிதாக நறுக்கிய தேங்காய் - ½ கப்
  • நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கப்
  • கொத்தமல்லித் தூள் - 3 தேக்கரண்டி
  • மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
  • நல்ல மிளகு தூள் – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  • கரம் மசாலா – 2-3 தேக்கரண்டி
  • நறுக்கிய இஞ்சி –  4-5 செ.மி
  • பூண்டு நறுக்கியது – 10 பல்
  • உப்பு – தேவைக்கு ஏற்ப

பீஃப் நன்கு தோல் நீக்கப்பட்டு அதனை 200 மி.லி நீர் ஊற்றி குக்கரில் அது மிருதுவாகும் வரை வேக வைக்கவும் (15 முதல் 20 நிமிடங்கள் வரை). வெந்த பின்னும் நீர் மீதமிருந்தால் மூடியை எடுத்துவிட்டு நீர் முழுவதும் வற்றும் வரை அடுப்பில் வைக்கவும். மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 நடுத்தர அளவு வெங்காயம் துண்டுகள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும். பின்னர் அதோடு வேக வைத்த பீஃப் இறைச்சியை போட்டு மிதமான தீயில் அடுப்பில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்

 

இன்று ஓணம் தினத்தை முன்னிட்டு, கேரள நாட்டு பாரம்பரிய உணவுகளில் ஒன்றான அடை பிரதமன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்
 
தேவையான பொருட்கள் :

அரிசி - 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் - 4 டம்ளர்
வெல்லம் - 2 டம்ளர்
ஏலக்காய் தூள் - சுவைக்கு
பால் - 1 டம்ளர்
நெய் - தேவைக்கு
தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு
முந்திரி - தேவையான அளவு
உலர்திராட்சை - 2 ஸ்பூன்

201709041515023871_1_adapradhaman._L_sty

செய்முறை:

வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி பரிமாறவும்.

தித்திப்பான அடை பிரதமன் தயார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடை பிரதமன் நான் ஒருநாளும் ருசித்ததில்லை...... ஒருமுறை செய்து பார்க்கத்தான் வேணும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இந்த அடை பிரதமன் நான் ஒருநாளும் ருசித்ததில்லை...... ஒருமுறை செய்து பார்க்கத்தான் வேணும்....!  tw_blush:

நான் ருசித்து இருக்கிறன் நல்ல  சுவை ஒருதரம் சுவைத்து  பாருங்கள் பருகுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

நான் ருசித்து இருக்கிறன் நல்ல  சுவை ஒருதரம் சுவைத்து  பாருங்கள் பருகுங்கள் 

எனக்காக நீ அழலாம் வாழ்க்கையில் நடக்கும் 

எனக்காக உணவுண்ண எப்படி நடக்கும் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

எனக்காக நீ அழலாம் வாழ்க்கையில் நடக்கும் 

எனக்காக உணவுண்ண எப்படி நடக்கும் ....!  tw_blush:

உங்க பெயரை சின்ன ஒரு மாற்றம் செய்தால் சுவை வந்திடும் தானே :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யெஸ் ....ஐ லைக் இட் ......!  tw_blush:

Link to comment
Share on other sites

ஓலன்

spacer.png
 
 
இந்த வீடியோ ஓலன் தயாரிப்பினைக் காட்டுகிறது.

தேவையான பொருட்கள்
  • கும்பலங்கா (சாம்பல் பூசணி) -1 நடுத்தர அளவு
  • பூசணி துண்டுகள் – 1 கப்
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) – 6 எண்ணம்
  • தேங்காய் பால் – 1 கப்
  • வான் பயறு (சிவப்பு பீன்ஸ்) - ¼ கப் (வேக வைத்தது)
  • கொடி அவரை
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்து சிவப்பு பீன்ஸ்-ஐ உப்பு சேர்த்து வேக வைக்கவும். கும்பலங்காய் (சாம்பல் பூசணி) மற்றும் பூசணிக்காய் துண்டுகளைப் போடவும். அவற்றோடு கொடி அவரை மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும்.

மூடியை எடுத்த பின்னர் மெதுவாக கிளறவும். இப்போது உப்பு கறிவேப்பிலை போட்டு மறுபடியும் கிளறி விடவும். அதோடு தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கவும். எண்ணெய் ஊற்றி மறுபடியும் கலக்கவும்.

இப்போது ஓலன் சுவைப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

காலை டிபன் கேரளா ஸ்டைல் நேந்திரன் புட்டு

குழந்தைகளுக்கு காலை, மாலை நேர டிபனாக கேரளா ஸ்டைல் பழப்புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
காலை டிபன் கேரளா ஸ்டைல் நேந்திரன் புட்டு
 
தேவையான பொருட்கள் :

புட்டு மாவு - 200 கிராம்,
நேந்திரன் வாழைப்பழம் - ஒன்று,
பலாச்சுளை - 10,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
நெய் -  50 மில்லி,
உலர் திராட்சை  சிறிதளவு.

201709091300515816_1_BananaPuttu._L_styv

செய்முறை :

வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய பழங்களை புட்டு மாவுடன் சேர்க்கவும்.

இதனுடன் உலர் திராட்சை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, நெய் சேர்த்துப் பிசிறி, கொள்ளவும்.

பிசைந்த மாவை புட்டுக் குழலில் அடைத்து, ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

சூப்பரான பழப்புட்டு ரெடி.

குறிப்பு: காய்கறிகளைப் பயன்படுத்தியும் இதே முறையில் புட்டு தயாரிக்கலாம்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

முட்டைகோஸ் இறால் கருவாடு

spacer.png
 
 
தேவையான பொருட்கள்
  • இறால் கருவாடு (சிறிய அளவு) – 1 கப்
  • முட்டைக் கோஸ் (சிறிதாக நறுக்கியது) – 2 கப்
  • வெங்காயம் (சிறியதாக நறுக்கியது) – 1 கப்
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) – 5
  • கரம் மசாலா - ½ தேக்கரண்டி
  • பூண்டு – 4 பல்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி (நறுக்கியது) - ½ தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி இலை

தாளிப்பதற்குத் தேவையான பொருட்கள்
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு (உடைத்தது) – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • மிளகாய் வற்றல் – 3

செய்முறை
ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்து சூடுபடுத்தவும். அதனுள் கடுகினைப் போடவும். கடுகு பெரியத் தொடங்கியதும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை  ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் சீரகப்பொடி பச்சைமிளகாய்,  இறால் கருவாடு, மஞ்சள் தூள் வற்றல் பொடித்த மிளகுத்தூள் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும் பின்னர் சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

இப்போது மூடியைத் திறந்து நறுக்கி வைத்த வெங்காயம், முட்டைக்கோஸ் தேங்காய் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி விடவும். பின்னர் பாத்திரத்தை மூடி மேலும் சில நிமிடங்கள் வரை வேக விடவும். மூடியைத் திறந்து நீர் முழுவதும் வற்றி விட்டதா என பார்த்து நன்கு கிளறி விடவும். மறுபடியும் பாத்திரத்தை மூடி வைத்து சில நிமிடங்கள் வேக விடவும்.

நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்த பின்னர் முட்டைக்கோஸ்  இறால் கருவாடு வறுவலை பரிமாறவும். துக்கலான இந்த மணம் இன்னும் வேண்டும் என கேட்கத் தூண்டும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

கேரளா மீன் குழம்பு

 

sl4931.jpg

என்னென்ன தேவை?

மீன் - 1/2 கிலோ
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10  
தக்காளி - 2  
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  
உப்பு - தேவையான அளவு
புளி கரைசல் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உலர்ந்த கசூரி மேத்தி இலை - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 

 

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் மீன் எடுத்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம், இஞ்சி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தக்காளி, மிளகாய்த்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்த்து கலந்து, புளி கரைசலை ஊற்றவும். ஒரு மூடி கொண்டு மூடி சிறிது நேரம் வேக விடவும். பின் கசூரி மேத்தி இலை தூவி சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான கேரளா மீன் குழம்பு தயார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கேரளா நண்டுக் கறி

தேவையானவை:

 நண்டு - கால் கிலோ
 சின்னவெங்காயம் - 100கிராம்
 பொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம்
 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 2
 தயிர் - அரை கப்
 மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியா) - ஒரு டீஸ்பூன்
 சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 தேங்காய் அரைத்தது - ஒரு கப்
 பட்டை கிராம்பு ஏலக்காய் - 5கிராம்
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய் எண்ணெய் - பொரிக்க‌

aval61f.jpg

செய்முறை:

நண்டை சுத்தமாக கழுவி அதில் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியா), உப்பு, சோம்புத்தூள், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து, நன்கு பிசறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய், தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மீதமுள்ள ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை  போக வதக்குங்கள். இதில் பொடியாக ந‌றுக்கிய த‌க்காளியைப் போட்டு வதக்கி ஊற வைத்த நண்டைச் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு முறை கொதி வர விடுங்கள். கொதி வந்ததும் அரைத்த‌ தேங்காயைச் சேர்த்து மூன்று நிமிடத்தில் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

அருமையான சைடிஷ் கேரளா ஸ்டைல் மட்டன்

ரோஸ்ட்

மட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இது செய்வது மிகவும் ஈஸி. இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
அருமையான சைடிஷ் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்
 
தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 5
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 6 பெரிய பற்கள்.

201710071507298686_1_muttonroastkerala._

செய்முறை :

மட்டனை நீரில் நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்த மட்டனை  ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் அரைத்த விழுதினை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, மிக்ஸியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதனையும் மட்டனுடன் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

பின்னர் குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி, பின் அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

இந்த திரிக்கு நன்றி நவீனன்

எனக்கு கேரளாவில் இருந்து கிடைக்கும் எல்லாமே பிடிக்கும். எல்லாம் நல்ல சுவையாக அருமையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ம்ம் விளங்குது.tw_blush:

1 hour ago, நிழலி said:

இந்த திரிக்கு நன்றி நவீனன்

எனக்கு கேரளாவில் இருந்து கிடைக்கும் எல்லாமே பிடிக்கும். எல்லாம் நல்ல சுவையாக அருமையாக இருக்கும்.

 

இன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து இணைப்பேன்

Link to comment
Share on other sites

கேரள நண்டு மசாலா

 

  • நண்டு - 2
  • காய்ந்த‌ மிளகாய் - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • வெங்காயம் - ஒன்று
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் - முக்கால் தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • தக்காளி - 2
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • கடுகு - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் - அரை கப்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கொத்தமல்லித் தழை - 2 கொத்து
  • எண்ணெய்

 

A12289_01.jpg

நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்றப் பகுதிகளை நீக்கிவிட்டு நன்கு அலசி இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

 
A12289_02.jpg

தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

 
A12289_03.jpg

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் காய்ந்த‌ மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.

 
A12289_04.jpg

கடுகு வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

 
A12289_05.jpg

வாசனை அடங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 
A12289_06.jpg

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

 
A12289_07.jpg

வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

 
A12289_08.jpg

பிறகு தேங்காய், பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்துப் பிரட்டவும்.

 
A12289_09.jpg

சுமார் 2 நிமிடங்கள் பிரட்டிய பிறகு நண்டுகளையும், கறிவேப்பிலையும் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

 
A12289_10.jpg

தீயின் அளவைக் குறைத்து வைத்து அவ்வப்போது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

 
A12289_11.jpg

சுவையான கேரள நண்டு மசாலா தயார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.