Jump to content

கேரளா உணவு வகைகள்


Recommended Posts

கேரளா உணவு வகைகள்

கேரளா சமையற் கலை வரலாறு, புவியியல் மற்றும் இந்த மண்ணின் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு உண்டு. இதனை இரண்டு தரமான தலைப்புகளின் கீழ் அதாவது சைவம் மற்றும் அசைவ உணவுகள் என வகைப்படுத்தலாம். அசைவ உணவுகளில் அதிப்படியான நறுமணப்பொருட்கள் போடப்பட்டிருக்கும் அதே வேளையில் சைவ உணவு வகைகளுக்கு சிறிதளவு நறுமணப் பொருட்கள் இடப்பட்டிருக்கும் அவற்றை பிற இடங்களில் உள்ளவர்களும் எளிதாக சுவைக்கமுடியும்.

 

Bildergebnis für கேரள பெண்கள் படங்கள்

 

Bildergebnis für கேரள பெண்கள் படங்கள்

கூட்டுக் கறி

spacer.png
 
 
கூட்டுக் கறி தயாரிப்பின் வீடியோ காட்சி.

தேவையான பொருட்கள்
  • வேக வைத்த உருளைக் கிழங்கு -2 (சதுரமாக வெட்டப்பட்டது)
  • சின்ன வெங்காயம் (நறுக்கியது) -10
  • இஞ்சி – 1’’ அளவு
  • பூண்டு
  • ஊற வைத்த கடலை பருப்பு (வடை செய்வதற்கு) - ½ கப்
  • பச்சை மிளகாய் – 3
  • மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லித்தூள் – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • தேங்காய் பால் - ½ கப்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்
  • உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடலை பருப்பு விழுது, உப்பு சேர்த்து வடை தயாரிப்பதற்காக அரைத்தது போல (தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைக்கப்பட்டது) அரைத்து போட்டு புரட்டவும். பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நன்கு வெந்ததும் அதை எடுத்து பக்கத்தில் உள்ள கிண்ணத்தில் வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலையைப் போடவும். அது பொரியும் சத்தம் வந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறிவிடவும் இப்போது உருளைக் கிழங்கு போட்டு சிறிது நேரம் வேக விடவும். இப்போது மல்லித்தூள், மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி விடவும்.

இப்போது ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதோடு உப்பு போட்டு கிளறி விடவும். பாத்திரத்தை மூடி நன்கு வேகவிடவும். நீரில் நன்கு வெந்து, நீர் முற்றிலும் வற்றிய பின்னர் தேங்காய் பாலை ஊற்றவும். சற்று நேரம் வேக விடவும். பின்னர் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறவும்.

கூட்டுக்கறியை சூடாகப் பரிமாற வேண்டும். இது சாதத்தோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

https://www.keralatourism.org

 

தொடரும்....

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
சிக்கன் தோரன்

spacer.png
 
 
தேவையான பொருட்கள்
  • சிக்கன் துண்டுகள் (சிறியதாக நறுக்கியது)
  • வெங்காயம் (நறுக்கியது) – 2 கப்
  • பூண்டு (நறுக்கியது) – 2 தேக்கரண்டி
  • இஞ்சி( நறுக்கியது) – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) -8
  • சிக்கன் மசாலா பொடி – 2 தேக்கரண்டி
  • நல்ல மிளகு (பொடி செய்தது) -1கப்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • தேங்காயம் ( துருவியது) – 1 கப்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை - ½ கப்
  • உப்பு
  • எண்ணெய்
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • பிரியாணி  இலை

செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்து சூடு பண்ணவும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். இப்போது நறுக்கி வைத்த பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் (நறுக்கியது) ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும். பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும். இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது 2 கப் நீர் சேர்க்க வேண்டும். அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கவும். நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும். பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

இப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

கேரளா ஃபிஷ் கறி

spacer.png
 
 
இந்த வீடியோ கேரள மீன்(ஃபிஷ்) கறி செய்யும் முறையைக் காட்டுகிறது

ஏதாவது ஒரு மீன் அல்லது இறால் மீன் 500 கிராம் எடுத்து நறுக்கி சுத்தம் செய்து அருகில் வைத்து கொள்ளவும்.

ஒரு அகன்ற அடிப்பகுதி தடிமனான பாத்திரத்தை (மண் பாண்டம் அல்லது நான்-ஸ்டிக்) எடுத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
 இப்போது கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றை வதக்குவதற்குத் தயாராக வைக்கவும்.
  • இஞ்சி – 2’’ (பொடிதாக நறுக்கியது)
  • பூண்டு – 10 – 12 பல் ( பொடியாக நறுக்கியது)
  • பெரிய வெங்காயம் 5  லிருந்து 6
  • கறிவேப்பிலை – சிறிது

இப்போது எண்ணெயில் கடுகு சேர்த்து பொரிந்ததும் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

பின்னர் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து பசையாக அரைத்துக் கொள்ளவும்.

 
  • காஷ்மீரி மிளகாய் வற்றல் தூள் – 4-6 தேக்கரண்டி
  • வெந்தய தூள் - ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி 

இந்த மூன்று தூள்களையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி விழுதுவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அதனை வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் பதம் வரும் வரை கிளறவும். சிறிது உப்பு மற்றும் புளி(கோக்கம்) ஆகியவற்றோடு அரை அல்லது ஒரு கப் நீர் ஊற்றி வேக விடவும்.

இப்போது மசாலாவிற்கு மேல் மீன் துண்டுகளையும் சிறிது கறிவேப்பிலையையும் வைத்து பாத்திரத்தை மூடி விடவும். மசாலா கெட்டியாகும் வரை வேக விடவும். பின்னர் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை மேல் ஊற்றி அடுப்பை அணைத்து விடவும்.

பயன்படுத்துவதற்கு 10-12 மணி நேரத்திற்கு முன்பாக தயார் செய்து வைக்க வேண்டும். உடனடியாக பயன்படுத்தலாம் ஆனால் சுவை அந்த அளவு கூடுதலாக இருக்காது.
Link to comment
Share on other sites

காளன்

spacer.png
 
 
இது கேரள உணவு வகை கறியான காளன் எவ்வாறு சமைக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோ காட்சி

இது கேரள உணவு வகை கறியான காளன் எவ்வாறு சமைக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோ காட்சி.

காளன் மலையாளிகளுக்கு மட்டுமே உரியதென பெருமைப்படத்தக்க பழமையான கூட்டு வகையாகும். இது செய்வதற்கு எளிதாக இருந்தாலும் நன்றாக சமைக்கப்பட்ட காளனுக்கு எப்போதுமே ஈர்ப்பு அதிகம். இன்றைய இளம் தலைமுறையினர் சத்யா (பாரம்பரிய சைவ உணவு) உணவு வகைளில் சிறந்த உணவாக இதனை கருதுகின்றனர்.

தேவையான பொருட்கள்
  • 100 கிராம் சேனைக்கிழங்கு
  • 1 – வாழைக்காய்
  • 1 கப் கடைந்த தயிர்
  • 4 – பச்சை மிளகாய்
  • 4 தேக்கரண்டி நெய்
  • ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • ½ தேக்கரண்டி வெந்தயம்
  • ½ தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 3 மிளகாய் வற்றல்
  • கறிவேப்பிலை

விழுதாக அரைப்பதற்கு
  • 1½ கப் துருவிய தேங்காய்
  • ½ தேக்கரண்டி சீரகம்

செய்முறை
வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கு ஆகியவற்றின் தோலை நீக்கி துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

மிளகுத்தூளை ½ கப் நீரில் கலந்து அதனை ஒரு சுத்தமான துணியால் வடிகட்டி எடுக்கவும்.

வடிகட்டிய அந்த நீரில் காய்களை வேக வைத்து அதோடு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.

தண்ணீர் வற்றியதும் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கி மெதுவாக சூடுபடுத்தவும்

தயிர் வெந்து கெட்டியாகும் போது அரைத்து வைத்த தேங்காய் கலவை மற்றும் வெந்தைய பொடி சேர்த்து கலக்கவும். வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்

ஒரு கடாயில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் அதனை காளனோடு சேர்த்து கலக்கவும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites


நெய்ச்சோறு

spacer.png
 
 
இந்த வீடியோ நெய்ச்சோறு தயாரிப்பு பற்றி காட்டுகிறது.

தேவையான பொருட்கள்
  • பிரியாணி அரிசி – 2 கப்
  • நெய் – 5 லிருந்து 6 தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு - ½ கப்
  • கிராம்பு – 4 முதல் 5 வரை
  • பொடித்த மிளகு – 4 லிருந்து 5
  • உலர்ந்த திராச்சை - ¼ கப்
  • அரைத்த இஞ்சி – 1 தேக்கரண்டி
  • அரைத்த பூண்டு – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சைச் சாறு – சிறிது
  • வெங்காயம் (நறுக்கியது) -2
  • பிரியாணி இலை – 2
  • ஏலம் – 4
  • லவங்கப்பட்டை – 2 கம்புகள்
  • நறுக்கிய கொத்தமல்லி இலை -¼ கப்
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • தண்ணீர் - 3½ கப்

செய்முறை
அரிசியைக கழுவி வடித்து பக்கத்தில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதோடு முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். பின்னர் முந்திரிப் பருப்பை எடுத்து விட்டு அதே போன்று உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்தெடுக்கவும்.

சிறிது நெய் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு படுத்தவும். பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை சிறிது உப்பும் சேர்த்து கிளறவும். இந்த கலவையை வறுத்த முந்திரிப் பருப்பு உலர்ந்த திராட்சை வைத்துள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்.

ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலம், அரைத்த இஞ்சி-பூண்டு விழுதினை சேர்த்து கலக்கவும். இப்போது நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தைப் போட்டு கிளறவும். இப்போது கழுவி பக்கத்தில் வைத்திருந்த அரிசியைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகளைப் போட்டுக் கிளறவும். பின்னர் மறுபடியும் பிரியாணி இலை போட்டு நீர் ஊற்றி மூடி வைத்து விடவும். 5 நிமிடம் வேக விடவும்.

இப்போது மூடியைத் திறந்து சிறிது எலுமிச்சம் சாறு ஊற்றி நன்கு கலக்கவும்.

முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, வறுத்த வெங்காயம் போன்றவற்றைத் தூவி அலங்கரித்து நெய் சோற்றினைச் சூடாகப் பரிமாறவும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

கேரளா பருப்பு பாயாசம்

கேரளாவில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். இந்த பண்டிகையின் ஸ்பெஷல் ரெசிபி பருப்பு பாயாசம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.

ஓணம் ஸ்பெஷல்: கேரளா பருப்பு பாயாசம்
 
தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பால் - அரை கப்
முந்திரி - ஒரு கைப்பிடி
சுக்கு பொடி - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு

201709021514443280_1_Kerala._L_styvpf.jp

செய்முறை :

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீரை கரைய நன்கு கெட்டியாக சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி விசில் போனவுடன் சற்று மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)

பின்பு நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, முந்திரியைத் தூவினால், கேரளா பருப்பு பாயாசம் ரெடி.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகிற திங்கள் ஓணம் பண்டிகை ஈஸ்ட்காம்  மகாலட்சுமி கோவில் பக்கம் இருக்கும் மலையாளிகள் கடைகளில் ஓணம் சாப்பாடு மிஸ் பண்ணக்கூடாது காசு கூடத்தான் ஆனாலும் மரக்கறி வகைகள் யார் கூட வைப்பது என்பதில் போட்டி போடுவார்கள் சில கடைகள் 18 கறிவகை என்று தில்லா எழுதிபோட்டு வியாபராம் நடக்கும் .

Link to comment
Share on other sites

பீஃப் ஃப்ரை

spacer.png
 
 
இந்த வீடியோ பீஃப் ஃப்ரை செய்யும் முறையைக் காட்டுகிறது.

ஒரு கிலோ எலும்பில்லா மாட்டு இறைச்சி பொரித்து எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.

 
  • பொடிதாக நறுக்கிய தேங்காய் - ½ கப்
  • நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கப்
  • கொத்தமல்லித் தூள் - 3 தேக்கரண்டி
  • மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
  • நல்ல மிளகு தூள் – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  • கரம் மசாலா – 2-3 தேக்கரண்டி
  • நறுக்கிய இஞ்சி –  4-5 செ.மி
  • பூண்டு நறுக்கியது – 10 பல்
  • உப்பு – தேவைக்கு ஏற்ப

பீஃப் நன்கு தோல் நீக்கப்பட்டு அதனை 200 மி.லி நீர் ஊற்றி குக்கரில் அது மிருதுவாகும் வரை வேக வைக்கவும் (15 முதல் 20 நிமிடங்கள் வரை). வெந்த பின்னும் நீர் மீதமிருந்தால் மூடியை எடுத்துவிட்டு நீர் முழுவதும் வற்றும் வரை அடுப்பில் வைக்கவும். மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 நடுத்தர அளவு வெங்காயம் துண்டுகள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும். பின்னர் அதோடு வேக வைத்த பீஃப் இறைச்சியை போட்டு மிதமான தீயில் அடுப்பில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்

 

இன்று ஓணம் தினத்தை முன்னிட்டு, கேரள நாட்டு பாரம்பரிய உணவுகளில் ஒன்றான அடை பிரதமன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்
 
தேவையான பொருட்கள் :

அரிசி - 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் - 4 டம்ளர்
வெல்லம் - 2 டம்ளர்
ஏலக்காய் தூள் - சுவைக்கு
பால் - 1 டம்ளர்
நெய் - தேவைக்கு
தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு
முந்திரி - தேவையான அளவு
உலர்திராட்சை - 2 ஸ்பூன்

201709041515023871_1_adapradhaman._L_sty

செய்முறை:

வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி பரிமாறவும்.

தித்திப்பான அடை பிரதமன் தயார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடை பிரதமன் நான் ஒருநாளும் ருசித்ததில்லை...... ஒருமுறை செய்து பார்க்கத்தான் வேணும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இந்த அடை பிரதமன் நான் ஒருநாளும் ருசித்ததில்லை...... ஒருமுறை செய்து பார்க்கத்தான் வேணும்....!  tw_blush:

நான் ருசித்து இருக்கிறன் நல்ல  சுவை ஒருதரம் சுவைத்து  பாருங்கள் பருகுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

நான் ருசித்து இருக்கிறன் நல்ல  சுவை ஒருதரம் சுவைத்து  பாருங்கள் பருகுங்கள் 

எனக்காக நீ அழலாம் வாழ்க்கையில் நடக்கும் 

எனக்காக உணவுண்ண எப்படி நடக்கும் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

எனக்காக நீ அழலாம் வாழ்க்கையில் நடக்கும் 

எனக்காக உணவுண்ண எப்படி நடக்கும் ....!  tw_blush:

உங்க பெயரை சின்ன ஒரு மாற்றம் செய்தால் சுவை வந்திடும் தானே :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யெஸ் ....ஐ லைக் இட் ......!  tw_blush:

Link to comment
Share on other sites

ஓலன்

spacer.png
 
 
இந்த வீடியோ ஓலன் தயாரிப்பினைக் காட்டுகிறது.

தேவையான பொருட்கள்
  • கும்பலங்கா (சாம்பல் பூசணி) -1 நடுத்தர அளவு
  • பூசணி துண்டுகள் – 1 கப்
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) – 6 எண்ணம்
  • தேங்காய் பால் – 1 கப்
  • வான் பயறு (சிவப்பு பீன்ஸ்) - ¼ கப் (வேக வைத்தது)
  • கொடி அவரை
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்து சிவப்பு பீன்ஸ்-ஐ உப்பு சேர்த்து வேக வைக்கவும். கும்பலங்காய் (சாம்பல் பூசணி) மற்றும் பூசணிக்காய் துண்டுகளைப் போடவும். அவற்றோடு கொடி அவரை மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும்.

மூடியை எடுத்த பின்னர் மெதுவாக கிளறவும். இப்போது உப்பு கறிவேப்பிலை போட்டு மறுபடியும் கிளறி விடவும். அதோடு தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கவும். எண்ணெய் ஊற்றி மறுபடியும் கலக்கவும்.

இப்போது ஓலன் சுவைப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

காலை டிபன் கேரளா ஸ்டைல் நேந்திரன் புட்டு

குழந்தைகளுக்கு காலை, மாலை நேர டிபனாக கேரளா ஸ்டைல் பழப்புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
காலை டிபன் கேரளா ஸ்டைல் நேந்திரன் புட்டு
 
தேவையான பொருட்கள் :

புட்டு மாவு - 200 கிராம்,
நேந்திரன் வாழைப்பழம் - ஒன்று,
பலாச்சுளை - 10,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
நெய் -  50 மில்லி,
உலர் திராட்சை  சிறிதளவு.

201709091300515816_1_BananaPuttu._L_styv

செய்முறை :

வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய பழங்களை புட்டு மாவுடன் சேர்க்கவும்.

இதனுடன் உலர் திராட்சை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, நெய் சேர்த்துப் பிசிறி, கொள்ளவும்.

பிசைந்த மாவை புட்டுக் குழலில் அடைத்து, ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

சூப்பரான பழப்புட்டு ரெடி.

குறிப்பு: காய்கறிகளைப் பயன்படுத்தியும் இதே முறையில் புட்டு தயாரிக்கலாம்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

முட்டைகோஸ் இறால் கருவாடு

spacer.png
 
 
தேவையான பொருட்கள்
  • இறால் கருவாடு (சிறிய அளவு) – 1 கப்
  • முட்டைக் கோஸ் (சிறிதாக நறுக்கியது) – 2 கப்
  • வெங்காயம் (சிறியதாக நறுக்கியது) – 1 கப்
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) – 5
  • கரம் மசாலா - ½ தேக்கரண்டி
  • பூண்டு – 4 பல்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி (நறுக்கியது) - ½ தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி இலை

தாளிப்பதற்குத் தேவையான பொருட்கள்
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு (உடைத்தது) – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • மிளகாய் வற்றல் – 3

செய்முறை
ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்து சூடுபடுத்தவும். அதனுள் கடுகினைப் போடவும். கடுகு பெரியத் தொடங்கியதும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை  ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் சீரகப்பொடி பச்சைமிளகாய்,  இறால் கருவாடு, மஞ்சள் தூள் வற்றல் பொடித்த மிளகுத்தூள் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும் பின்னர் சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

இப்போது மூடியைத் திறந்து நறுக்கி வைத்த வெங்காயம், முட்டைக்கோஸ் தேங்காய் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி விடவும். பின்னர் பாத்திரத்தை மூடி மேலும் சில நிமிடங்கள் வரை வேக விடவும். மூடியைத் திறந்து நீர் முழுவதும் வற்றி விட்டதா என பார்த்து நன்கு கிளறி விடவும். மறுபடியும் பாத்திரத்தை மூடி வைத்து சில நிமிடங்கள் வேக விடவும்.

நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்த பின்னர் முட்டைக்கோஸ்  இறால் கருவாடு வறுவலை பரிமாறவும். துக்கலான இந்த மணம் இன்னும் வேண்டும் என கேட்கத் தூண்டும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

கேரளா மீன் குழம்பு

 

sl4931.jpg

என்னென்ன தேவை?

மீன் - 1/2 கிலோ
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10  
தக்காளி - 2  
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  
உப்பு - தேவையான அளவு
புளி கரைசல் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உலர்ந்த கசூரி மேத்தி இலை - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 

 

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் மீன் எடுத்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம், இஞ்சி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தக்காளி, மிளகாய்த்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்த்து கலந்து, புளி கரைசலை ஊற்றவும். ஒரு மூடி கொண்டு மூடி சிறிது நேரம் வேக விடவும். பின் கசூரி மேத்தி இலை தூவி சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான கேரளா மீன் குழம்பு தயார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கேரளா நண்டுக் கறி

தேவையானவை:

 நண்டு - கால் கிலோ
 சின்னவெங்காயம் - 100கிராம்
 பொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம்
 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 2
 தயிர் - அரை கப்
 மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியா) - ஒரு டீஸ்பூன்
 சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 தேங்காய் அரைத்தது - ஒரு கப்
 பட்டை கிராம்பு ஏலக்காய் - 5கிராம்
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய் எண்ணெய் - பொரிக்க‌

aval61f.jpg

செய்முறை:

நண்டை சுத்தமாக கழுவி அதில் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியா), உப்பு, சோம்புத்தூள், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து, நன்கு பிசறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய், தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மீதமுள்ள ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை  போக வதக்குங்கள். இதில் பொடியாக ந‌றுக்கிய த‌க்காளியைப் போட்டு வதக்கி ஊற வைத்த நண்டைச் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு முறை கொதி வர விடுங்கள். கொதி வந்ததும் அரைத்த‌ தேங்காயைச் சேர்த்து மூன்று நிமிடத்தில் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

அருமையான சைடிஷ் கேரளா ஸ்டைல் மட்டன்

ரோஸ்ட்

மட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இது செய்வது மிகவும் ஈஸி. இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
அருமையான சைடிஷ் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்
 
தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 5
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 6 பெரிய பற்கள்.

201710071507298686_1_muttonroastkerala._

செய்முறை :

மட்டனை நீரில் நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்த மட்டனை  ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் அரைத்த விழுதினை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, மிக்ஸியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதனையும் மட்டனுடன் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

பின்னர் குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி, பின் அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

இந்த திரிக்கு நன்றி நவீனன்

எனக்கு கேரளாவில் இருந்து கிடைக்கும் எல்லாமே பிடிக்கும். எல்லாம் நல்ல சுவையாக அருமையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ம்ம் விளங்குது.tw_blush:

1 hour ago, நிழலி said:

இந்த திரிக்கு நன்றி நவீனன்

எனக்கு கேரளாவில் இருந்து கிடைக்கும் எல்லாமே பிடிக்கும். எல்லாம் நல்ல சுவையாக அருமையாக இருக்கும்.

 

இன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து இணைப்பேன்

Link to comment
Share on other sites

கேரள நண்டு மசாலா

 

  • நண்டு - 2
  • காய்ந்த‌ மிளகாய் - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • வெங்காயம் - ஒன்று
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் - முக்கால் தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • தக்காளி - 2
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • கடுகு - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் - அரை கப்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கொத்தமல்லித் தழை - 2 கொத்து
  • எண்ணெய்

 

A12289_01.jpg

நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்றப் பகுதிகளை நீக்கிவிட்டு நன்கு அலசி இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

 
A12289_02.jpg

தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

 
A12289_03.jpg

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் காய்ந்த‌ மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.

 
A12289_04.jpg

கடுகு வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

 
A12289_05.jpg

வாசனை அடங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 
A12289_06.jpg

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

 
A12289_07.jpg

வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

 
A12289_08.jpg

பிறகு தேங்காய், பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்துப் பிரட்டவும்.

 
A12289_09.jpg

சுமார் 2 நிமிடங்கள் பிரட்டிய பிறகு நண்டுகளையும், கறிவேப்பிலையும் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

 
A12289_10.jpg

தீயின் அளவைக் குறைத்து வைத்து அவ்வப்போது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

 
A12289_11.jpg

சுவையான கேரள நண்டு மசாலா தயார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.