Jump to content

ஆண்ட்ராய்டு 8.0 பெயர் வெளியானது: ஆகஸ்டு 21-இல் அறிமுகம்


Recommended Posts

ஆண்ட்ராய்டு 8.0 பெயர் வெளியானது: ஆகஸ்டு 21-இல் அறிமுகம்

கூகுளின் புதிய இயங்குதளம் ஆகஸ்டு 21-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பின் பெயர் வெளியாகியுள்ளது. புதிய இயங்குதளத்தில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

 
ஆண்ட்ராய்டு 8.0 பெயர் வெளியானது: ஆகஸ்டு 21-இல் அறிமுகம்
 
புதுடெல்லி:
 
கூகுளின் புதிய இயங்குதளம் சார்ந்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து கூகுள் வெளியிட்டுள்ள டீசரில் இயங்குதளத்தின் பெயர் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஆண்ட்ராய்டு மென்பொருள் ஆண்ட்ராய்டு ஒரியோ என அழைக்கப்படும். 
 
கூகுள் பிளஸ் தளத்தில் கூகுள் வெளியிட்டுள்ள நான்கு நொடி விடீசரில் ஆகஸ்டு 21-ம் தேதி மற்றும் ஆண்ட்ராய்டு ஒ என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. டீசர் தலைப்பில் கூகுள் ஒரியோ டீசர் என இடம்பெற்றிருப்பது இயங்குதளத்தின் பெயரை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
கூகுளின் புதிய அப்டேட் சார்ந்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், ஒரியோ சர்வதேச அளவில் அறியப்படும் பெயர் என்பதால் இந்த பெயர் சூட்டப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கூகுள் ஆண்ட்ர்யாடு ஒ இயங்குதளத்தின் வெளியீடு ஆகஸ்டு 21, மதியம் 2.40 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.  
 
மற்ற கூகுள் விழாக்களை போன்றே புதிய இயங்குதளத்தின் அறிமுக நிகழ்வும் சர்வதேச அளவில் நேரலை செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி சூரிய கிரகன தினத்தில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/19102625/1103158/Googles-next-Android-update-gets-a-name-its-Android.vpf

Link to comment
Share on other sites

ஆண்ட்ராய்டு 8.0 அறிமுகம்: புதிய இயங்குதளத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

 

 
 

ஆண்ட்ராய்டு 8.0 மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கிய சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

 
 
 
 
ஆண்ட்ராய்டு 8.0 அறிமுகம்: புதிய இயங்குதளத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
 
சான்பிரான்சிஸ்கோ:
 
நூற்றாண்டிற்கு பின் அமெரிக்காவில் நிகழ்ந்த சூரிய கிரகண தனத்தன்று கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு 8.0 ஏற்கனவே அதிகம் எதிர்பார்க்கப்பட்டதை போன்றே ஓரியோ என அழைக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு டெவலப்பர்களுக்கு மார்ச் மாதம் முதல் பிரீவியூ வழங்கப்பட்ட புதிய இயங்குதளத்திற்கான அப்டேட்கள் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்பட்டது.
 
புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு புதிய அம்சங்கள் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அம்சங்களில் ஐகான் வடிவங்கள், நோட்டிபிகேஷன்களுக்கு புள்ளிகள், அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள், ஆட்டோஃபில் சேவை, ஸ்மார்ட் டெக்ஸ்ட் செலக்ஷன் மற்றும் பிக்சர்-இன்-பிக்சர் மோட் உள்ளிட்டவை இருக்கிறது. சில அம்சங்கள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. 
 
 
யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் அனுபவம்:
 
 
புதிய இயங்குதளத்தில் வாடிக்கையாளர்கள் கஸ்டம் சேனல்களில் நோட்டிபிகேஷன்களை தனித்தனியாக செட் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் நோட்டிபிகேன்களின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப 0 முதல் 4 வரையிலான அளவுகளை செட் செய்து கொள்ள முடியம். இத்துடன் படிக்கப்படாத நோட்டிபிகேஷன்களின் செயலியில் சிறிய புள்ளி மூலம் படிக்க வேண்டியதை உணர்த்தும். 
 
ஒவ்வொரு நோட்டிபிகேஷன்களுக்கும் தனித்தனி பேக்கிரவுண்டு நிறத்தை டெவலப்பர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். இதேபோல் நோட்டிபிகேஷன் டைம்அவுட் உருவாக்க முடியும், இது பயனுள்ள நோட்டிபிகேஷன்களை தவற வடாமல் செய்யும். இத்துடன் குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்தால், நோட்டிபிகேஷன்கள் தானாக அழிந்து போகும்படி செய்ய முடியும். இதேபோல் நோட்டிபிகேஷன்கள் சிறிது நேரத்திற்கு ஸ்னூஸ் செய்து கொள்ளும் வசதியும், அதன்பின் திரையில் தோன்றும் படி செய்ய முடியும்.  
 
201708221046088024_1_Oreo-Notification._
 
ஆட்டோஃபில் ஃபிரேம்வொர்க் எனும் அம்சம் வாடிக்கையாளரை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்ளும். ஸ்மார்ட்போனில் அடிக்கடி பதிவு செய்யும் தகவல்களை (புதிய சேவை, கிரெடிட் டெபிட் கார்டு எண் உள்ளிட்டவை) நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த முறை பதிவு செய்யும் போது தகவல்களை பரிந்துரை செய்யும். வாடிக்கையாளர்கள் ஆட்டோஃபில் ஃபிரேம்வொர்க் சேவையை செட் செய்து கொண்டு அனைத்து செயலிகளிலும் பயன்படுத்த முடியும்.
 
ஆண்ட்ராய்டு டிவியில் வழங்கப்படும் பிக்சர்-இன்-பிக்சர் மோட் புதிய இயங்குதளத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு மற்ற செயலிகளை பயன்படுத்திக் கொண்டே வீடியோக்களையும் பார்க்க முடியும். இதேபோன்ற அம்சம் முதலில் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்ட்டது. இந்த செயலியில் வீடியோ கால்களின் போது வழங்கப்பட்டது. எனினும் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.   
 
புதிய இயங்குதளத்தின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக அடாப்டிவ் ஐகான் அம்சம் இருக்கிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய யூசர் இன்டர்ஃபேசில் ஐகான் வடிவங்களை பிரத்தியேகமாக தேர்வு செய்ய முடியும். ஒவ்வொரு மாடலிலும் வெவ்வேறு வடிவம் கொண்ட ஐகான்களை செட் செய்ய முடியும். 
 
கேச்சி பட்ஜெட்:
 
ஸ்மார்ட்போனில் உள்ள ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனி கேச்சி பட்ஜெட் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது அதிக கேச்சி கொண்டிருக்கும் செயலிகளில் முதற்கட்டமாக கேச்சி மெமரி அழிக்கப்படும். 
 
201708221046088024_2_Oreo-logo._L_styvpf
 
திரையில் புதிய தகவல்களை தெரியப்படுத்த செயலிகளுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தரவுகளையும் புதியதாக அப்டேட் செய்யும், இதற்கென வாடிக்கையாளர்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. ஸ்மார்ட்போனில் பயன்படுத்தாமல் பின்னணியில் இயங்கும் செயலிகள் தானாக இயங்க விடாமல் செய்து விடும். இதற்கென புதிய இயங்குதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
 
மீடியா பிளேபேக்:
 
ஆண்ட்ராய்டு ஓரியோவின் மீடியா பிளேயர் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் ஸ்ட்ரீமிங் செய்யும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் செயலிகள் பல்வேறு ஆடியோ மற்றும் வீடியோ டிராக்களை ஒரே சமயம் இயக்க முடியும். கேம் பிளே வீடியோக்களை இயக்கும் போது இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.  
 
 
கனெக்டிவிட்டி மற்றும் செக்யூரிட்டி:
 
 
இம்முறை வைபை அவேர் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் குறைந்த மின்திறன் கொண்டு வைபை ஹாட்ஸ்பாட் அல்லது இண்டர்நெட் இணைப்பு இன்றி சப்போர்ட் கொண்ட ஹார்டுவேர் ஒவ்வொன்றுடன் சாட் செய்யும். இத்துடன் புதிய ப்ளூடூத் லோ எனர்ஜி 5.0 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 
 
201708221046088024_3_Android-Oreo._L_sty
 
இத்துடன் ஸ்மார்ட் ஷேரிங் அம்சம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் புகைப்படத்தின் தரத்தை ஆய்வு செய்து, அதனை சரியாக இயக்கும் செயலியை பரிந்துரை செய்யும். ஒவ்வொரு முறை புகைப்படம் எடுக்கப்படும் போதும் ஸ்மார்ட் ஷேரிங் அம்சம் துல்லியமாக அறிந்து கொண்டு சிறப்பான பரிந்துரைகளை வழங்கும். இதேபோல் ஸ்மார்ட் காப்பி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஸ்மார்ட்போனில் காப்பி செய்யப்படும் வார்த்தைகளுக்கு ஏற்ற செயலியை பரிந்துரை செய்யும். 
 
ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் பல்வேறு ஆப்ஷன்கள் டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்கள் ஆபத்து நிறைந்தவையாகவும் இருக்கிறது. கூகுள் சேஃப் பிரவுசிங் API மூலம் பிரவுசிங் மேலும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.
 
அக்டோபர் 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தை மிஞ்சும் ஆண்ட்ராய்டு ஓரியோ முதற்கட்டமாக ஒன்பிளஸ் 5, ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதேபோல் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு ஓரியோ வழங்கப்படுவதை எச்எம்டி குளோபல் உறுதி செய்துள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/22104606/1103730/major-updates-in-Android-80-Oreo-the-newest-operating.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.